கேரம் போர்டிற்காக முத்தலாக்: கணவர் மீது வழக்கு

கேரம் போர்டிற்காக முத்தலாக்: கணவர் மீது வழக்கு

ராஜஸ்தானில் கேரம் போர்டை எடுத்துச் செல்லாத மனைவிக்கு முத்தலாக் கூறி விவாகரத்து செய்த கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராஜஸ்தானின் பாரன் மாவட்டத்தில் உள்ள அன்டா பகுதியை சேர்ந்தவர் ஷப்ரூநிஷா (24). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த இவர், மகனுடன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ஷப்ரூநிஷா, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த அவரது கணவர் ஷாகில் அகமது வழிமறித்துள்ளார். தங்கள் மகனுக்காக கேரம் போர்டை எடுத்துச் செல்லும்படி கூறி உள்ளார். அதற்கு மறுத்த ஷப்ரூநிஷாவை, ஷாகில் அகமது அடித்து துன்புறுத்தியதுடன், அந்த இடத்திலேயே முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார். இது தொடர்பாக அக்.,1 அன்று மாலை கணவர்…

Read More

முதல் டெஸ்ட் போட்டி: ரோகித் சதம் விளாசல்; இந்திய அணி 179/0 (54.0 ஓவர்கள்)

முதல் டெஸ்ட் போட்டி: ரோகித் சதம் விளாசல்; இந்திய அணி 179/0 (54.0 ஓவர்கள்)

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான முதல் டெஸ்ட் ஆட்டம் விசாகப்பட்டினம் நகரில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தது. இதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் விளையாட தொடங்கினர். இதில் உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 91 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா (5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள்) 84 பந்துகளில் அரை சதம் பூர்த்தி செய்துள்ளார். இதன்பின் இந்திய அணி 35.3 ஓவர்களில் 100 ரன்களும் 47.5 ஓவர்களில் 150 ரன்களும் எடுத்திருந்தது. இந்நிலையில்,…

Read More

அமெரிக்க தேர்தலில் டிரம்புக்கு மோடி பிரசாரமா?

அமெரிக்க தேர்தலில் டிரம்புக்கு மோடி பிரசாரமா?

சமீபத்தில், ஹூஸ்டன் நகரில் நடந்த, அமெரிக்க வாழ் இந்தியர்கள் கூட்டத்தில், பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் பங்கேற்றார். ‘இனி டிரம்ப் அரசு’ என, மோடி பேசினார். அமெரிக்க விவகாரத்தில் தலையிடும் வகையில், மோடியின் பேச்சு இருந்ததாக, காங்., உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது குறித்து, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக, பிரதமர் மோடி பேசவில்லை. அவருடைய பேச்சு தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஒருவருடைய பேச்சை திரித்துக் கூறுவது சரியல்ல. ‘கடந்த அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, ‘இனி டிரம்ப் அரசு’ என, அமெரிக்க வாழ் இந்தியர்கள் இடையே, டிரம்ப் பிரசாரம் செய்தார்’ என்று தான், மோடி கூறினார். அமெரிக்காவின்…

Read More

கனடா உதயன் பெருமையுடன் வழங்கிய அழகியதும் நேர்த்தியானதும், சிறப்பானதுமான பல்சுவைக் கலைவிழா

கனடா உதயன் பெருமையுடன் வழங்கிய அழகியதும் நேர்த்தியானதும், சிறப்பானதுமான பல்சுவைக் கலைவிழா

“ பிறைசூடி” ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களைப் பிரதம ஆசிரியராகக் கொண்ட கனடாவின் முன்னணித் தமிழ்ப் பத்திரிகையான “கனடா உதயன்” தனது 24 வது ஆண்டில் மிகவும் பெருமையுடனும், அழகாகவும், நேர்த்தியாகவும் எவ்வித குறையும் இன்றி பல் சுவைக் கலை விழாவினை 28-09-2019 சனிக்கிழமை அன்று டொரோண்டோ ஆர்மினியன் இளைஞர் கலை மண்டபத்தில் நடத்தியது. மண்டபத்தை ஓரளவு நிறைத்த பார்வையாளர்கள். சிறப்பு விருந்தினர்கள், அரசியல் பிரமுகர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், சிறப்புக் கலைஞர்கள், பேச்சாளர்கள். ஊடக, புகைப்பட, வீடியோ நிபுணர்கள் என்று சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் வருகை தந்து சிறப்பித்தனர். உதயன் பிரதம ஆசிரியர் அவர்கள் மற்றவர்களது செயற்பாட்டில் இருந்து வேறுபட்டு எப்போதுமே தனது நிகழ்ச்சிகளை நடத்துபவர்….

Read More

அமெரிக்காவுடன் அக்.5 -ல் பேச்சுவார்த்தை : வடகொரியா தகவல்

அமெரிக்காவுடன் அக்.5 -ல் பேச்சுவார்த்தை : வடகொரியா தகவல்

வடகொரியாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் ராணுவ படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டன. இதனால் அமெரிக்கா-வட கொரியா இடையிலான உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதற்கு மத்தியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அணுஆயுத பிரச்சினையால் முடங்கியிருக்கும் இருதரப்பு உறவை புதுப்பிக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் துணிச்சலான ஒரு முடிவை எடுக்க வேண்டுமென வடகொரியா தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், அணுஆயுத சோதனை அழிப்பு தொடர்பாக அமெரிக்கா – வடகொரியா இடையே அக்டோபர் 5 ஆம் தேதி பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளதாக வடகொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read More

உத்தர பிரதேசத்தில் சட்டவிரோதமாக வசிக்கும், வங்கதேசத்தவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களை வெளியேற்ற அரசு முடிவு

உத்தர பிரதேசத்தில் சட்டவிரோதமாக வசிக்கும், வங்கதேசத்தவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களை வெளியேற்ற அரசு முடிவு

உத்தர பிரதேசத்தில் சட்டவிரோதமாக வசிக்கும், வங்கதேசத்தவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களை அடையாளம் காண மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்களை வெளியேற்ற அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக உயர் அதிகாரிகள் கூறுகையில், போக்குவரத்து மையங்கள், மாவட்ட புறநகர்களில் உள்ள சேரி பகுதிகளில் வசிக்கும் சந்தேக நபர்களை, போலீசார் கண்டுபிடித்து, அவர்களின் ஆவணங்களை சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. உ.பி.,யில் சட்டவிரோதமாக வசிக்கும் வங்கதேசத்தவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களை கண்டுபிடிக்க வேண்டும். அவர்கள் சட்டவிரோதமாக ஆவணங்கள் பெற உதவிய அரசு அலுவலர்களையும் கண்டுபிடிக்க வேண்டும். சட்டவிரோதமாக வசிக்கும் வங்கதேசத்தவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களின் கைரேகை மற்றும் அடையாளங்களை பதிவு செய்ய வேண்டும். கட்டுமான நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் அடையாளங்களை வைத்திருப்பது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பொறுப்பு….

Read More

கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாவது தமிழர்களுக்கு நன்மையே – விக்னேஸ்வரன்

கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாவது தமிழர்களுக்கு நன்மையே – விக்னேஸ்வரன்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக சத்திய பிரமாணம் செய்துக் கொள்ளும் பட்சத்தில் அது தமிழர்களுக்கு நன்மையே தவிர தீமை கிடையாது என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரன், தமிழர்கள் அச்சப்படுகின்ற அளவிற்கு அவர் நடந்துக்கொள்ள மாட்டார் என கூறியுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவதை இந்தியா மற்றும் அமெரிக்கா விரும்பாது என விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறு கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதிவரும் பட்சத்தில், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தமிழ் மக்களுக்கு சார்பாக நடவடிக்கை எடுக்க வேண்டியதொரு நிலைக்குத் தள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவிற்கும், கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் கள்ள உறவு…

Read More

சிதம்பரத்திற்கு ஜாமின் கொடுத்தால் வெளியே வந்து சாட்சிகளை அழித்து விடுவார்

சிதம்பரத்திற்கு ஜாமின் கொடுத்தால் வெளியே வந்து சாட்சிகளை அழித்து விடுவார்

‘ஐ.என்.எக்ஸ். மீடியா’ முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமின் மனுவை டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. மும்பையைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அன்னிய முதலீடு பெறுவதற்கு 2007ல் காங். தலைமையிலான ஐ.மு. கூட்டணி ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டது. காங். மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான சிதம்பரத்தின் மகன் கார்த்தியின் தலையீட்டால் இந்த அனுமதி வழங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை தனித் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டில்லி ஐகோர்ட் கடந்த ஆக., மாதம் தள்ளுபடி…

Read More

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: ஓய்வுபெற்ற இரண்டே மாதத்தில் அரசியலில் நுழையும் முன்னாள் ராணுவ தளபதி

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: ஓய்வுபெற்ற இரண்டே மாதத்தில் அரசியலில் நுழையும் முன்னாள் ராணுவ தளபதி

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் வேட்பாளராக முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க களமிறங்கியுள்ளார். தேசிய மக்கள் இயக்கம் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக மகேஷ் சேனாநாயக்க களமிறங்குவதாக இன்று அறிவிக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு ஜுன் மாதம் 27ஆம் தேதி முதல் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி வரை இலங்கை ராணுவத்தின் 22ஆவது தளபதியாக ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க கடமையாற்றியிருந்தார். நாடு முழுவதும் இருக்கும் பல்வேறு துறைசார்ந்தவர்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்த இயக்கமாக தேசிய மக்கள் இயக்கம் அமைந்துள்ளது. கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்விலேயே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது. முன்னாள் கணக்காய்வாளர்…

Read More

கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை உயரும்; சவுதி அரேபியா எச்சரிக்கை

கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை உயரும்; சவுதி அரேபியா எச்சரிக்கை

சவுதி அரசின் எண்ணெய் நிறுவனமான அரம்கோ மீது கடந்த 14ஆம் தேதி அன்று வான்வழித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் காரணமாக, எண்ணெய் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என்று அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் ஏமனில் இருந்து தான் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது. அரம்கோ மீதான தாக்குதலால் ஈரான் – சவுதி அரேபியா இடையேயான பகை முற்றத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின்…

Read More
1 168 169 170 171 172 425