டிரக்கில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 39 பேரும் சீனர்கள்

டிரக்கில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 39 பேரும் சீனர்கள்

இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகே உள்ள எசெக்ஸ் நகரில் இருக்கும் தொழிற்பூங்காவுக்கு நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 1.40 மணிக்கு பல்கேரியா நாட்டில் இருந்து கண்டெய்னர் லாரி ஒன்று வந்தது. அந்த கண்டெய்னரை தொழிற்பூங்கா காவலாளிகள் சோதனை செய்தனர். அப்போது கண்டெய்னருக்குள் பலர் பிணமாக கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ந்து போனார்கள். ஒரு சிறுவன் உள்பட 39 பேர் கன்டெய்னருக்குள் இறந்து கிடந்தனர். இதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் 39 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இங்கிலாந்தை அதிர்ச்சி அடையச் செய்த, இச்சம்பவம் தொடர்பாக, வடக்கு அயர்லாந்தை சேர்ந்த 25…

Read More

திமுக கட்சி நாளிதழான முரசொலி செயல்படும் இடம் பஞ்சமி நிலமாக இருந்தால் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்

திமுக கட்சி நாளிதழான முரசொலி செயல்படும் இடம் பஞ்சமி நிலமாக இருந்தால் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்

திமுக கட்சி நாளிதழான முரசொலி செயல்படும் இடம் பஞ்சமி நிலமாக இருந்தால் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 44,551 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாங்குநேரி தொகுதியில் அதிமுக.,வின் நாராயணன் 32,333 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி கூறியதாவது: இடைத்தேர்தலில் மக்கள் அமோக வெற்றியை கொடுத்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலினும், அவரின் கூட்டணி கட்சியினரும் பொய்யான வாக்குறுதிகளை அளித்ததை மக்கள் இப்போது உணர்ந்துள்ளனர். அதனால், இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியினர் வெற்றி பெற்ற தொகுதியில் கூட அதிமுக.,வுக்கு மக்கள்…

Read More

கனடா நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரான கெரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்

கனடா நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரான கெரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக அந்நாட்டு எம்பியாகியுள்ளார் இலங்கை தமிழரான கெரி ஆனந்தசங்கரி. ஆளும் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட கெரி ஆனந்த சங்கரி, இந்த தேர்தலில் 62.3 சதவீத வாக்குகள் பெற்று வென்றுள்ளார். அவரை எதிர்த்து கன்சவேடிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட லெஸ்லின் லூயிஸ் மற்றும் கனேடிய தமிழரான என்.டி.பி கட்சி வேட்பாளர் காந்தரட்ணம் சாந்தகுமார் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கெரி ஆனந்தசங்கரி, 34.8 வீத வாக்குகளை பெற்று வெற்றியை தன்வசப்படுத்திக் கொண்டார். யார் இந்த கெரி ஆனந்தசங்கரி? இலங்கையின் மூத்த தமிழ்…

Read More

இந்திய பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் போட்டோ பதிவிட்ட பாக்., பாடகி

இந்திய பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் போட்டோ பதிவிட்ட பாக்., பாடகி

இந்திய பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் போட்டோ பதிவிட்ட பாக்., பாடகியை டுவிட்டரில், இந்திய நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். பாக்.,நாட்டு பாடகியான ரபி பிர்சதா (Rabi Pirzada) என்பவர் தனது உடல் முழுவதும் வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு தற்கொலைப்படை தாக்குதலுக்கு தயாராக இருப்பது போன்ற போட்டோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன், மோடியை ஹிட்லர் என விமர்சித்து கருத்து பதிவிட்டிருந்தார். இவர் இதனை பதிவிட்ட சிறிது நேரத்திலேயே, இந்திய இணையதள பயன்பாட்டாளர்கள் அவரை கிண்டல் செய்து சரமாரியாக கருத்து பதிவிட துவங்கினர். இதில் ஒருவர், இது பாக்.,கின் தேசிய உடை என்றும், மற்றொருவர் பயங்கரவாதத்திற்கு பாக்., முழு ஆதரவு அளிப்பது…

Read More

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாரை சந்தித்த, காங்., இடைக்கால தலைவர் சோனியா ஆறுதல்

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாரை சந்தித்த, காங்., இடைக்கால தலைவர் சோனியா ஆறுதல்

கட்சி எப்போதும் உங்களுடன் இருக்கும். விரைவில் போராடி இதில் இருந்து வெளியே வருவோம் என டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாரை சந்தித்த, காங்., இடைக்கால தலைவர் சோனியா ஆறுதல் கூறி உள்ளார். வருமான வரித்துறை நடத்திய சோதனையின் அடிப்படையில் செப்., மாதம் சிவக்குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். பண மோசடி வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், 23 வயதாகும் சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யாவிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. 2013 ல் ரூ.1 கோடியாக இருந்த ஐஸ்வர்யாவின் சொத்து மதிப்பு 2018 ல் ரூ.100 கோடிக்கும் மேலாக அதிகரித்தது எப்படி என…

Read More

வெள்ளை மாளிகையில் தீபாவளி அதிபர் டிரம்ப் பங்கேற்பு

வெள்ளை மாளிகையில் தீபாவளி அதிபர் டிரம்ப் பங்கேற்பு

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப், நாளை தீபாவளி கொண்டாடுகிறார். தீபாவளி பண்டிகை, அக். 27ல், நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பராக் ஒபாமா, அமெரிக்க அதிபராக பதவி வகித்தபோது, 2009 முதல், வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வழக்கத்தை துவங்கினார்.இதையடுத்து, அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப், 2017 – 18களில், தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். கடந்த ஆண்டு நடந்த தீபாவளி கொண்டாட்டங்களின் போது, அமெரிக்காவுக்கான இந்திய துாதர் நவ்ஜீத் சிங்கை, அதிபர் டிரம்ப் அழைத்தார்.இம்முறை மூன்று தினங்கள் முன்னதாக, நாளை நடைபெறவுள்ள தீபாவளி கொண்டாட்டத்தில், யார் யார் பங்கேற்கவுள்ளனர் என்பது பற்றி, தகவல் வெளியிடப்படவில்லை. அன்றைய தினம்,…

Read More

இலங்கை அதிபர் தேர்தலை கண்காணிக்கிறது ஐரோப்பிய யூனியன் குழு

இலங்கை அதிபர் தேர்தலை கண்காணிக்கிறது ஐரோப்பிய யூனியன் குழு

இலங்கையில் வரும் நவம்பர் 16 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபய ராஜபக்சேவுக்கும் ஆளும் கட்சியின் தலைவர் சஜித் பிரமதேசாவுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. இலங்கை அதிபர் தேர்தலில் மொத்தம் 35 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர். 15 மில்லியன் வாக்களர்கள், வாக்களித்து தங்கள் நாட்டு அதிபரை தேர்வு செய்ய உள்ளனர். இந்த நிலையில், இலங்கை அதிபர் தேர்தலை கண்காணிக்க ஐரோப்பிய யூனியன் குழுவினர் கடந்த 11 ஆம் தேதி அந்நாட்டுக்கு சென்றுள்ளனர். ஐரோப்பிய யூனியன் பாராளுமன்றத்தின் உறுப்பினரான போர்சுகலைச்சேர்ந்த மரிசா மதியாஸ் இக்கண்காணிப்பு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை தேர்தலை 6–வது முறையாக ஐரோப்பிய யூனியன்…

Read More

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரண்டாவது முறையாக கனடா பிரதமராகிறார்

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரண்டாவது முறையாக கனடா பிரதமராகிறார்

கனடாவின் 43ஆவது மக்களவை பொதுத் தேர்தலின் முடிவுகள் வெளிவர தொடங்கிய நிலையில், அந்நாட்டின் தேசிய ஊடகமான சிபிசி ஊடகத்தின் கணிப்பின்படி அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரண்டாவது முறையாக பிரதமராக வெல்லக்கூடும் என்ற நிலையில், அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. லிப்ரல் கட்சியின் ஆதரவாளர்கள் இதனை விமரிசையாக கொண்டாட தொடங்கியுள்ளனர். நிலப்பரப்பில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடாக விளங்கும் கனடாவில் நடந்த மக்களவை தேர்தல் முடிவுகளை உலகம் உன்னிப்பாக கவனித்துவரும் வேளையில், மீண்டும் ஜஸ்டின் ட்ரூடோ வென்றால் அது சிறுபான்மை ஆட்சியாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் முடிவுகள், ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு சாதகமாக வருவதை அறிந்தவுடன், மத்திய கனடாவில்…

Read More

நீண்ட தூரம் பயணிக்கும் விமானம்: குவாண்டாஸ் நிறுவனத்தின் உலக சாதனைப் பயணம்

நீண்ட தூரம் பயணிக்கும் விமானம்: குவாண்டாஸ் நிறுவனத்தின் உலக சாதனைப் பயணம்

ஆஸ்திரேலியாவின் கேரியர் குவாண்டாஸ் விமான போக்குவரத்து சேவை இடைவிடாது மிக நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகள் விமானத்தின் சோதனையை முடித்துள்ளது. இந்த சோதனையில் பயணிகள், விமான ஓட்டுனர்கள்,மற்றும் பணியாளர்களின் பயணம் எந்த விதத்தில் பாதிக்கிறது என்பது குறித்து கண்டறியப்பட்டுள்ளது. போயிங் 787-9 ரக விமானம் 49 பயணிகளுடன் 19 மணிநேரம் 16 நிமிடங்கள் நியூயார்கில் இருந்து சிட்னி வரை 16,200 கிலோ மீட்டர் தூரம் பயணித்துள்ளது. அடுத்த மாதம் இதே நிறுவனம் லண்டனில் இருந்து சிட்னி வரை இடைவிடாமல் விமானத்தை இயக்கும் சோதனையில் ஈடுபடவுள்ளது. 2019 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இடைவிடாது இயங்கும் விமான சேவையை துவங்குவது குறித்து குவாண்டாஸ் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது….

Read More

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 7 சதவீதமாக உயரும் – பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 7 சதவீதமாக உயரும் – பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத்

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும் என ஏற்கனவே ஐஎம்எஃப் கூறியிருந்தது. தற்போதுள்ள மந்தநிலை சுழற்சி முறையில் ஏற்படக் கூடியதுதான். இந்தியாவில் பல துறைகள் பாதிக்கப்பட்டிருப்பதால், பொருளாதார வளர்ச்சி விகித முன்கணிப்பை 6.1 சதவீதமாகக் குறைத்துள்ளது. ஊரக வருவாய் வளர்ச்சி பலவீனமாக உள்ளதோடு, வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட் துறைகளில் பாதிப்புகள் உள்ளன. இந்த காரணிகள் முதலீடு, நுகர்வு ஆகிய இரு அம்சங்களிலும் உள்நாட்டு பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அரசு அறிவித்த கார்ப்பரேட் வரி விகித குறைப்பு மற்றும் பல்வேறு கொள்கை முடிவுகள் சரியான திசையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று கூறியுள்ளார்.

Read More
1 164 165 166 167 168 425