திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு, செல்லும் இடங்களில் எல்லாம், எதிர்ப்பு வலுத்து வருகிறது

திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு, செல்லும் இடங்களில் எல்லாம், எதிர்ப்பு வலுத்து வருகிறது

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை, பகவான் கிருஷ்ணருடன் ஒப்பிட்டு, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு, செல்லும் இடங்களில் எல்லாம், எதிர்ப்பு வலுத்து வருகிறது. இச்சூழலில், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, வீரமணி, ஊர் ஊராக பிரசாரம் செய்து வருகிறார். இதனால், தங்கள் கூட்டணிக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுகளும் விழாமல் போகும் ஆபத்து உள்ளதாக, தி.மு.க.,வினர் புலம்பி வருகின்றனர். அவர்கள் கூறியதாவது: எங்கள் கட்சி பெயரில், ‘திராவிடம்’ இருந்தாலும், நாங்களும் கடவுள் பக்தி கொண்டவர்கள் தான். மறைந்த கருணாநிதியே, வயதான காலத்திற்கு பின், ‘சென்டிமென்டாக’ மஞ்சள் துண்டை அணிந்து இருந்தார். தற்போதைய தலைவர் ஸ்டாலின், சோளிங்கர் பொதுக்கூட்டத்தில், ‘நாங்கள் ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. என்…

Read More

அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்

அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்

அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர், ஜோ பிடென் (வயது 76). இவர் 1973-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை 35 ஆண்டு காலம் செனட் சபை எம்.பி. பதவி வகித்தவர். ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது, 2009-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டுவரை துணை ஜனாதிபதி பதவி வகித்தார். அடுத்த ஆண்டு அங்கு நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்க பரிசீலித்து வருகிறார். இந்த நிலையில், நெவேடா மாகாண சட்டசபையின் முன்னாள் உறுப்பினரான லூசி புளோரஸ் (39) என்ற பெண் சமீபத்தில் ஜோ பிடென் மீது பரபரப்பு செக்ஸ் புகார் எழுப்பினார். இது குறித்து அவர் அங்கு…

Read More

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நிரந்தர சட்டமாக்க முயற்சி – மஹிந்த குற்றச்சாட்டு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நிரந்தர சட்டமாக்க முயற்சி – மஹிந்த குற்றச்சாட்டு

இலங்கையில் அமலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சரத்துக்களை நிரந்தரமான சாதாரண சட்டமாக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஊடக நிறுவனங்களின் தலைமை ஆசிரியர்களை இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியபோது, மஹிந்த ராஜபக்ஷ இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். அரசாங்கத்தால் புதிதாக கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமானது, மிகவும் பாரதூரமானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த சட்டம் அமல்படுத்தப்படும் பட்சத்தில், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்ற அதேவேளை, ஊடக சுதந்திரத்தையும் கட்டுப்படுத்துகிற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அரசாங்கத்தால் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டு வரப்படுமானால், தாம் ஆட்சிப்பீடம் ஏறியவுடன், அந்த…

Read More

செக் மோசடி வழக்கு; பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் மோகன் பாபுவுக்கு ஒரு வருட சிறை தண்டனை

செக் மோசடி வழக்கு; பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் மோகன் பாபுவுக்கு ஒரு வருட சிறை தண்டனை

தெலுங்கு திரைப்பட உலகில் பிரபல நடிகராக இருப்பவர் மோகன் பாபு. திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் ஸ்ரீலட்சுமி பிரசன்னா பிக்சர்ஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார். இவரது படநிறுவனத்தின் தயாரிப்பில் சலீம் என்ற தெலுங்கு படம் உருவானது. இதில் மஞ்சு விஷ்ணு, இலியானா டி குரூஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு டிசம்பரில் படம் வெளியானது. இதனை இயக்கியவர் தேவதாசு பட புகழ் இயக்குநர் ஒய்.வி.எஸ். சவுத்ரி. இவருக்கு சேர வேண்டிய சம்பள தொகை ரூ.1.60 கோடிக்கு பதிலாக ரூ.1.10 கோடி பணம் தரப்பட்டு உள்ளது. ரூ.40.50 லட்சம் தொகைக்கு மோகன் பாபு காசோலை தந்துள்ளார். ஆனால்…

Read More

திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்

திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்

திரைப்பட இயக்குநர் மகேந்திரன் இன்று (ஏப்.2 ) காலமானார். அவருக்கு வயது 79. சிவாஜி முதல் இன்றைய தலைமுறை நடிகர்கள் வரை படங்களை இயக்கியும், நடித்தும் வந்தவர் மகேந்திரன். அவரது மறைவுக்கு திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எம்.ஜி.ஆர்., மூலமாக சினிமா துறைக்குள் வந்தவர் மகேந்திரன். திரைக்கதை மற்றும் வசனகர்த்தாவாக திரைப்பயணத்தை தொடங்கி, முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர். விஜய்யின் தெறி, ரஜினியின் பேட்ட, நிமிர், மிஸ்டர் சந்திரமவுலி, சீதக்காதி, பூமராங் என பல படங்களில் நடித்துள்ளார். சிறுநீரக கோளாறு காரணமாக சமீப காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த மகேந்திரன் இன்று காலமானார் என்பதை அவரது மகன் ஜான்மகேந்திரன்…

Read More

‘தமிழர்களுக்கு ஐ.நா தீர்மானம் ஏமாற்றத்தை அளித்துள்ளது’ – சி.வி. விக்னேஸ்வரன்

‘தமிழர்களுக்கு ஐ.நா தீர்மானம் ஏமாற்றத்தை அளித்துள்ளது’ – சி.வி. விக்னேஸ்வரன்

இலங்கையின் அரசியல் அமைப்பின் பிரகாரம் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை அமைக்க முடியாது என்ற அரசாங்கத்தின் கூற்று பொருத்தமற்றது. நீதியரசர் பகவதி தலைமையிலான சர்வதேச சுயாதீன குழுவை உதாரணமாக கொண்டு கலப்பு நீதிமன்றம் அமைக்க முடியும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் ஜெனீவா மனித உரிமை அமர்வு தொடர்பில் அவர் கருத்தை வெளியிடும் போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில், ஐக்கிய நாடுகள் சபையில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு மேலும் இரண்டு ஆண்டு காலம் வழங்கி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் கடந்த மார்ச் 21 அன்று உறுப்பு நாடுகள்…

Read More

ஐ.பி.எல் கிரிக்கெட்: 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி

ஐ.பி.எல் கிரிக்கெட்: 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி

டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணியின் சார்பில் கே.எல். ராகுல், சாம் குர்ரான் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். அதில் கே.எல். ராகுல் 15 ரன்களும், சாம் குர்ரான் 20 ரன்களும், அடுத்து களமிறங்கிய மயாங்க் அகர்வால் 6 ரன்களும் எடுத்து வெளியேறினர். அடுத்ததாக சர்பிராஸ் அகமது உடன் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தால் ரன் ரேட் மெதுவாக உயர்ந்தது. அதில் சர்பிராஸ் அகமது 39 ரன்களும், டேவிட் மில்லர் 43 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியினர் சொற்ப ரன்னில் வெளியேற அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20…

Read More

வருமான வரித் துறையினர் விரித்த வலையில் சிக்கிய துரைமுருகன்

வருமான வரித் துறையினர் விரித்த வலையில் சிக்கிய துரைமுருகன்

வருமான வரித் துறையினர் விரித்த வலையில் சிக்கிய துரைமுருகன், அதில் இருந்து மீண்டு வர வழி தேடிக்கொண்டிருக்கிறார்.வேலுாரில், தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மார்ச், 20ல் நடந்நது. அதில் பேசிய துரைமுருகன், ‘வேலுார் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, ஆறு சட்டசபை தொகுதி களில், எந்த தொகுதியில், தி.மு.க.,வினர் அதிக ஓட்டுகள் வாங்கி தருகின்றனரோ, அந்த நிர்வாகிகளுக்கு, 50 லட்சம் ரூபாய், என் தனிப்பட்ட பணத்தில் இருந்து தருகிறேன்’ என்றார். இந்த பேச்சு தான், வருமான வரித்துறையினர், வேலுார் தொகுதி மீது, தனி கவனம் செலுத்த வழி ஏற்படுத்தி கொடுத்தது. தீவிர கண்காணிப்பில், இருந்த வருமான வரித்துறையினர், தங்களுக்கு கிடைத்த நம்பிக்கையான தகவலின் அடிப்படையில்,…

Read More

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக விரைவில் அலுவலகம்: வடக்கு மாகாணத்தின் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக விரைவில் அலுவலகம்: வடக்கு மாகாணத்தின் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்

வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் காணமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை விரைவில் அமைக்கவுள்ளதாக வடக்கு மாகாணத்தின் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரவித்துள்ளார். காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதிகோரி தொடர்சியாக போராடி வரும் நிலையில் காணமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே சுரேன் ராகவன் இதனை தெரிவித்தார். மேலும், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் பணி விரைவாக நடைபெற வேண்டும். அது எவ்வளவு சீக்கிரம் நடக்க வேண்டுமோ அவ்வளவு சீக்கிரமாக நடைபெற வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் வழக்குத் தாக்கல் செய்யலாம். குற்றம் செய்தவர்களை நீதிக்கு முன்னால் கொண்டு வரலாம். அந்த அளவுக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு வலுமை உண்டு என்று அவர் கூறினார். செப்டம்பர் மாதம் முடியும் முன் வடக்கின் ஐந்து…

Read More

எங்கள் அணியினரை வயதானவர்கள் என்று விமர்சிப்பதா? சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பிராவோ ஆவேசம்

எங்கள் அணியினரை வயதானவர்கள் என்று விமர்சிப்பதா? சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பிராவோ ஆவேசம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தி 2–வது வெற்றியை ருசித்தது. இதில் ஷிகர் தவானின் அரைசதத்தின் (51 ரன், 47 பந்து) உதவியுடன் டெல்லி அணி நிர்ணயித்த 148 ரன்கள் இலக்கை சென்னை அணி 19.4 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. ஷேன் வாட்சன் 44 ரன்களும், சுரேஷ் ரெய்னா 30 ரன்களும், கேப்டன் டோனி 32 ரன்களும் (நாட்–அவுட்) எடுத்தனர். இந்த ஆட்டத்தில் 3 முன்னணி விக்கெட்டுகளை கைப்பற்றிய சென்னை அணியின் ஆல்–ரவுண்டரான 35 வயதான வெய்ன் பிராவோ நிருபர்களை…

Read More
1 200 201 202 203 204 425