வருமான வரித்துறை அதிகாரிகளை வைத்து ரெய்டு நடத்துவது தான் மோடியின் உண்மையான சர்ஜிக்கல் ஸ்டிரைக் : கர்நாடக முதல்வர் குமாரசாமி

வருமான வரித்துறை அதிகாரிகளை வைத்து ரெய்டு நடத்துவது தான் மோடியின் உண்மையான சர்ஜிக்கல் ஸ்டிரைக் : கர்நாடக முதல்வர் குமாரசாமி

வருமான வரித்துறை அதிகாரிகளை வைத்து ரெய்டு நடத்துவது தான் மோடியின் உண்மையான சர்ஜிக்கல் ஸ்டிரைக் என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் வீடுகளில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இதனையடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்ட குமாரசாமி, தேர்தல் சமயத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக மத்திய அரசு, அரசு இயந்திரங்களை பயன்படுத்தினால் மம்தாவின் யுக்திகளை தானும் கையாள வேண்டி இருக்கும் என எச்சரித்திருந்தார். இந்நிலையில் இன்று (மார்ச் 28) காலை குமாரசாமி, வருமானவரித்துறையை வைத்து நடத்தும் சோதனைகள் தான் பிரதமர் மோடியின் உண்மையான…

Read More

குழந்தை பெற்ற 26 நாட்களில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த கர்ப்பிணி

குழந்தை பெற்ற 26 நாட்களில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த கர்ப்பிணி

வங்காளதேசத்தின் ஜெஸ்சூர் நகரில் சர்சா பகுதியில் ஷியாம்லாகாச்சி கிராமத்தில் வசித்து வருபவர் ஆரிபா சுல்தானா இதி.  கடந்த பிப்ரவரி 25ந்தேதி இவருக்கு குல்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குறைமாத நிலையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இதன்பின் கடந்த 22ந்தேதி அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது.  இதனை அடுத்து உடனடியாக ஆத் தின் என்ற மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.  அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை வழியே பெண் மற்றும் ஆண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன. இதுபற்றி மருத்துவமனையின் தலைமை மருத்துவரான ஷீலா பொடார் கூறும்பொழுது, இதிக்கு இரு கருப்பைகள் உள்ளன.  இதில் முதல் குழந்தை ஒரு கருப்பை வழியே பிறந்துள்ளது.  மற்றொரு கருப்பை…

Read More

3 மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார் நவாஸ் ஷெரீப்

3 மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார் நவாஸ் ஷெரீப்

அல்-அஜீஸியா இரும்பாலை ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப், லாகூரின் கோட் லக்பத் சிறையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் அடைக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு இருதய நோய் பாதிப்பு உள்ளிட்டவை அதிகமானதால், சிறை வளாகத்திலேயே மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று, நவாஸ் ஷெரீபின் மகள் மரியம் நவாஸ், அவரது தனிப்பட்ட மருத்துவர் உள்ளிட்டோர், கடந்த 22-ஆம் தேதி ஷெரீபைச் சிறையில் சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது, அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மரியம் நவாஸ் வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கோரி, நவாஸ்…

Read More

‘மிஷன் சக்தி’ எந்த நாட்டிற்கும் எதிரானது இல்லை

‘மிஷன் சக்தி’ எந்த நாட்டிற்கும் எதிரானது இல்லை

இந்தியாவின் ‘மிஷன் சக்தி’ சோதனை எந்த நாட்டிற்கும் எதிரானது அல்ல என வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: விண்ணில் செயற்கைகோளை ஏசாட் ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கும் சோதனை என்பது எந்த நாட்டிற்கும் எதிரானது அல்ல. விண்வெளி துறையில், இந்தியா பெற்றுள்ள திறன், எந்த நாட்டையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அச்சுறுத்தாது. அதேநேரத்தில் நாட்டின் பாதுகாப்பையும் உறுதி செய்வதும், தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் சவாலை முறியடிப்பதும் அரசின் கடமையாகும். விண்ணில் பல செயற்கைகோள்களை இந்தியா செலுத்தி வருகிறது. அவற்றிற்கு நீண்ட தூர ஏவுகணை மூலம், ஆபத்து வந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. டிஆர்டிஓ தலைவர் ஜி. சதீஷ்ரெட்டி…

Read More

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற டெல்லி அணி, முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் பிரித்வி ஷாவும், ஷிகர் தவானும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். அதில் பிரித்வி ஷா 24 ரன்களில் வெளியேறினார். அடுத்து இறங்கிய ஷ்ரேயஸ் அய்யர் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பாண்ட் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து…

Read More

இலங்கை கடலில் மிதந்த 33 பெரிய பொதிகளை கைப்பற்றியது கடற்படை

இலங்கை கடலில் மிதந்த 33 பெரிய பொதிகளை கைப்பற்றியது கடற்படை

உடப்பு கடலில் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது 33 பெரிய பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிடுகின்றனர். இந்த பொதிகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை மீட்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. கைப்பற்றப்பட்ட பொதிகள் மீட்கப்பட்டு, கடற்படையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன . இதன்போது, குறித்த பொதிகளிலிருந்து ஒரு தொகை புகையிலை கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிடுகின்றனர். சுமார் 33 பொதிகளில் பொதியிடப்பட்ட, சுமார் 1232.5 கிலோகிராம் எடையுடைய புகையிலை மீட்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு வருவதற்காக குறித்த புகையிலை பொதியிடப்பட்டு, கடலில் மிதக்கவிடப்பட்டிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் வெளியிடுகின்றனர். இவ்வாறு மீட்கப்பட்ட புகையிலை பொதிகள், புத்தளம் – சின்னபாடு சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில்…

Read More

பிரபலமாகிறது தேர்தல் சுற்றுலா : இந்தியா வர ஏராளமான வெளிநாட்டினர் ஆர்வம்

பிரபலமாகிறது தேர்தல் சுற்றுலா : இந்தியா வர ஏராளமான வெளிநாட்டினர் ஆர்வம்

உலகின் மிகப் பெரிய தேர்தல் நடைமுறையாக கருதப்படும், லோக்சபா தேர்தல், இரண்டு மாதங்களுக்கு மிகப் பெரிய திருவிழாவாகவே நடக்க உள்ளது. 90 கோடி பேர் ஓட்டளித்து, லோக்சபாவுக்கு, 543 பேரை அனுப்ப உள்ளனர்.ஆயிரக்கணக்கான வேட்பாளர்கள், 400க்கும் மேற்பட்ட கட்சிகள் என, மிக பிரமாண்டமான இந்தத் தேர்தல் திருவிழா, சுற்றுலா பயணியரையும் சுண்டி இழுக்கிறது. இதற்காக, சிறப்பு, தேர்தல் சுற்றுலா திட்டங்களை, பல்வேறு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.வழக்கமான சுற்றுலா திட்டங்களில், ஒரு குறிப்பிட்ட மாநிலம் அல்லது குறிப்பிட்ட சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்வர். பயண திட்டம், தங்கும் வசதி, உணவு வசதி போன்றவை, சுற்றுலா திட்டங்களில் அடங்கி இருக்கும். வழக்கமான இந்த திட்டங்களுடன், தற்போது, தேர்தல் சுற்றுலா…

Read More

ஐ.நாவின் தீர்மானம் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புக்கு எதிரானது என்கிறது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

ஐ.நாவின் தீர்மானம் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புக்கு எதிரானது என்கிறது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

ஐ.நாவின் தீர்மானம் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புக்கு எதிரானது : என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றுத. இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறை வேற்றப்பட்டுள்ள தீர்மானமானமானது, பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளுக்கு மாறாக நாடுகளின் நலன் சார்ந்து நிறைவேற்றப்பட்டுள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர் கருத்து வெளியிட்டுள்ளார். தமிழினத்தின் மீதான் போர்குற்றங்களுக்கும், இனப்ப்படுகொலைக்கும் இலங்கையை பொறுப்புக்கூற வைக்க அனைத்துலக குற்றவியல் நீதிமன்றதோ அல்லது அதற்கு சமனான அனைத்துலக தீர்பாயங்களே பொருத்தம் என்றும், அதுதான் தமது நிலைப்பாடும் எதிர்பார்பும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் மாணிக்கவாசகர், அதனை நோக்கிய தமது செயற்பாடு இருக்கும் எனக்குறிப்பிட்டுள்ளார். ஈழத்தமிழர்களின்…

Read More

போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று ஜெனிவாவில் “கொக்கரித்த” திலக் மாரப்பன

போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று ஜெனிவாவில் “கொக்கரித்த” திலக் மாரப்பன

போர்க்குற்றச்சாட்டுக்களை நிராகரித்த இலங்கை அரசு, அவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஐ.நா.மனித உரிமைகள் சபையின் 40ஆவது கூட்டத்தொடரில் நேற்று முன் தினம் புதன் கிழமையன்று இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் உரையைத் தொடர்ந்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உரையாற்றினார்.  இதன்போதே அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார். இலங்கைப் போரில் இராணுவத்தினர் போர்க்குற்றங்களை இழைக்கவில்லை. ஐ.நா. நிபுணர்கள் குழுவின் விசாரணைஅறிக்கையில் குறிப்பிட்டவாறு இறுதிப்போரில் பெருந்தொகையான மக்கள் கொல்லப்படவில்லை. அத்துடன், இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பில் உள்ளக நீதி விசாரணைப் பொறிமுறை அமைக்கப்படும். அதில் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது….

Read More

போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று ஜெனிவாவில் “கொக்கரித்த” திலக் மாரப்பன

போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று ஜெனிவாவில் “கொக்கரித்த” திலக் மாரப்பன

போர்க்குற்றச்சாட்டுக்களை நிராகரித்த இலங்கை அரசு, அவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 40ஆவது கூட்டத் தொடரில் நேற்று முன்தினம் புதன் கிழமையன்று இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  ஐ.நா.  மனித உரிமைகள் ஆணையாளரின் உரையைத் தொடர்ந்து இலங்கை வெளி விவகார அமைச்சர் திலக் மாரப்பன உரையாற்றினார்.  இதன் போதே அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார். இலங்கைப் போரில் இராணுவத்தினர் போர்க்குற்றங்களை இழைக்கவில்லை. ஐ.நா.  நிபுணர்கள் குழுவின் விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டவாறு இறுதிப்போரில் பெருந்தொகையான மக்கள் கொல்லப்படவில்லை. அத்துடன், இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பில் உள்ளக நீதி விசாரணைப் பொறிமுறை அமைக்கப்படும். அதில்…

Read More
1 201 202 203 204 205 425