கோவா முதல்வராக பிரமோத் சாவந்த்

கோவா முதல்வராக பிரமோத் சாவந்த்

கோவாவின் புதிய முதல்வராக, பா.ஜ., மூத்த தலைவர், பிரமோத் சாவந்த், 46, நேற்றிரவு பதவியேற்றார். கூட்டணி கட்சிகளான, மஹாராஷ்டிரவாதி கோமாந்தக் கட்சியின் சுதீன் தவாலிகர், கோவா பார்வர்டு கட்சியை சேர்ந்த விஜய் சர்தேசாய் ஆகியோருக்கு,துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கோவாவில், முதல்வர் மனோகர் பரீக்கர் தலைமையில், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்த பரீக்கர், நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து, கோவாவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.கோவா சட்டசபைக்கு, 2017ல் நடந்த தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள, 40 தொகுதிகளில், 14 இடங்களை பிடித்து, தனிப்பெரும் கட்சியாக, காங்., உருவெடுத்தது. எனினும், 12 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த,…

Read More

குறளரசன் பெயரில் அவதூறு டி.ராஜேந்தர் கண்டனம்

குறளரசன் பெயரில் அவதூறு டி.ராஜேந்தர் கண்டனம்

லட்சிய தி.மு.க தலைவர் டி.ராஜேந்தர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். நானும், எனது மகன் குறளரசனும் டுவிட்டர், முகநூல் போன்ற சமூக வலைத்தளத்தில் இல்லை. ஆனால் குறளரசன் பெயரில் போலி கணக்கை உருவாக்கி அதில் தவறான செய்தியை பதிவிட்டுள்ளனர். குறளரசனுக்கும், அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. அவர் படங்களுக்கு இசையமைக்கும் பணியில் இருக்கிறார். ஆனால் அவர் சொன்னதுபோன்று டுவிட்டரில் போலியான செய்தியை அவதூறாக பதிவிட்டுள்ளனர். இந்த செயலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்படி சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க இருக்கிறேன். லட்சிய தி.மு.க.வை பயன்படுத்தி குறளரசன் மீது அரசியல் சாயம் பூசுவது கண்டிக்கத்தக்கது. 234 சட்டமன்ற தொகுதிகளிலும், 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று நான்…

Read More

நெருக்கடியான சூழ்நிலையில் தமக்கு உதவியதற்காக சகோதரர் அனில் அம்பானிக்கு , முகேஷ் அம்பானி நன்றி தெரிவித்தார்

நெருக்கடியான சூழ்நிலையில் தமக்கு உதவியதற்காக சகோதரர் அனில் அம்பானிக்கு , முகேஷ் அம்பானி நன்றி தெரிவித்தார்

எரிக்சன் நிறுவன வழக்கில், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, 459 கோடி ரூபாய் செலுத்தி, சிறை செல்வதை தவிர்த்தார், அனில் அம்பானி.அனில் அம்பானியின், ‘ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்’ நிறுவனம், தொலை தொடர்பு சாதனங்களை கொள்முதல் செய்த வகையில், ஸ்வீடனைச் சேர்ந்த, எரிக்சன் நிறுவனத்திற்கு, 550 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளது. இத்தொகையை, உறுதி அளித்தபடி, அனில் அம்பானி தரவில்லை.அதனால், எரிக்சன் நிறுவனம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.அதில், ‘ஏற்கனவே கோர்ட்டில் டிபாசிட் செய்த, 118 கோடி ரூபாய் தவிர்த்து, நான்கு வாரங்களில், எரிக்சன் நிறுவனத்திற்கு, 459 கோடி ரூபாய் வழங்க தவறினால், அனில் அம்பானி மூன்று மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்’ என, பிப்., 20ல் உச்ச…

Read More

இலங்கையில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் – அதிர்ச்சியில் மக்கள்

இலங்கையில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் – அதிர்ச்சியில் மக்கள்

இலங்கையின் பல பகுதிகளில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக காவல் நிலையங்களில் முறைபாடுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. நாட்டின் பல பகுதிகளில் சில குள்ள மனிதர்கள், மக்கள் மீது இரவு வேளைகளில் தாக்குதல் நடத்துவதாக போலிஸ் முறைபாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சில பகுதிகளில் மக்கள் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி, தமது உடலில் காயங்களையும் காட்டியுள்ளதாக போலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு பதிவாகியுள்ள பல முறைபாடுகள் குறித்து போலிஸார் விசாரணைகளை நடத்திய போதிலும், சம்பவம் தொடர்பில் எந்தவித ஆதாரங்களையும் போலிஸாரினால் திரட்டிக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில், இலங்கையின் தென் மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்தில் நேற்றைய தினம் குள்ள மனிதர்களினால் தாக்கப்பட்டதாக சிலர் போலிஸ் நிலையத்தில் முறைபாடொன்றை…

Read More

இலங்கையில் கல்வி நடவடிக்கைகள் முற்றிலும் பாதிப்பு

இலங்கையில் கல்வி நடவடிக்கைகள் முற்றிலும் பாதிப்பு

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சுகயீன விடுமுறை போராட்டத்தினால் இலங்கை முழுவதிலும் உள்ள பெரும்பாலான பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று (புதன்கிழமை) முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதன்கிழமை சுகயீன விடுமுறை போராட்டத்தை நடத்தியிருந்தனர். கடந்த 22 வருடங்களாக அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பள பிரச்சனைக்கு இதுவரை தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. 1994ஆம் ஆண்டு காலப் பகுதி வரை, தாம் சிறந்த முறையில் சம்பளத்தை பெற்ற போதிலும், 1994ஆம் ஆண்டு பெரேராவின் சம்பள ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பாரிய சம்பள முரண்பாடுகளை எதிர்நோக்கியுள்ளதாகவும்…

Read More

பாலியல் அத்துமீறல்: ஆஸ்திரேலிய கார்டினல் ஜார்ஜ் பெல்லுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை

பாலியல் அத்துமீறல்: ஆஸ்திரேலிய கார்டினல் ஜார்ஜ் பெல்லுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை

கத்தோலிக்க திருச்சபையின் மூத்த பாதிரியாரான ஜார்ஜ் பெல் மீது சிறார்களுக்கு எதிராக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 1990 -ன் பிற்பகுதிகளில், 13 வயது சிறுவர்கள் 2 பேரிடம் பாலியல் ரீதியாக  தவறான முறையில் நடந்து கொண்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு விக்டோரியா மாகாணத்தில் உள்ள கவுண்டி நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிவுற்ற நிலையில்,  கர்டினல் பெல் மீதான  குற்றச்சாட்டு நிரூபணம் ஆனதை அடுத்து, கார்டினல் பெல்லுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போப் பிரான்ஸிசின் முன்னாள் நிதி அமைச்சரான கார்டினல் பெல், குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் 8 மாதங்கள் சிறை தண்டனை பெற்ற பிறகே பரோல்…

Read More

30 சதவீத பா.ஜ., எம்.பி.,க்களுக்கு தேர்தலில் மீண்டும் போட்டியிட அக்கட்சி ‛சீட்’ தராது

30 சதவீத பா.ஜ., எம்.பி.,க்களுக்கு தேர்தலில் மீண்டும் போட்டியிட அக்கட்சி ‛சீட்’ தராது

பா.ஜ., எம்.பி.,க்களில் 30 சதவீதம் பேரை புறக்கணிக்க கட்சி எண்ணி உள்ளது. சீட் மறுக்கப்படுவோரின் எண்ணிக்கை இதைவிட அதிகரிக்குமே தவிர, குறையாது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். ‛‛நான் மத்திய அமைச்சர், நான் மூத்த தலைவர்” என்றெல்லாம் கூறிக்கொண்டு யாரும் இனி சீட் கேட்க முடியாதாம். யாராக இருந்தாலும் வெற்றி பெற மாட்டார் என கருதப்படும் நபருக்கு நிச்சயமாக மீண்டும் போட்டியிட சீட் கிடைக்காதாம்.2014 தேர்தலில் பா.ஜ.,வுக்கு 282 எம்.பி.,க்கள் கிடைத்தனர். இவர்களில் 160 பேர், மோடி அலையை பயன்படுத்தி முதன்முறையாக எம்.பி., ஆனவர்கள். இந்த 160 பேரில் பலருக்கு அவரவர் தொகுதியில் சரியாக செயல்படவில்லை. பா.ஜ., சார்பில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.மோடி…

Read More

இலங்கையில் இந்து ஆலயம் புத்தமயமாகிறது: இராஜசிங்க மன்னன் நிர்மாணித்தது

இலங்கையில் இந்து ஆலயம் புத்தமயமாகிறது: இராஜசிங்க மன்னன் நிர்மாணித்தது

இந்து சமயம் இலங்கையின் ஆதி காலம் முதலே காணப்பட்டது என்பதற்கான சாட்சியங்கள் இன்றும் காணப்படுகின்றன. நாட்டை ஆட்சி செய்த பல மன்னர்கள், பல இந்து ஆலயங்களை நிர்மாணித்து, வழிபாடுகளை நடத்தியமைக்கான சாட்சியங்கள் இன்றும் காணப்படுகின்றன. குறிப்பாக மன்னர்கள் சிவ வழிபாட்டிலேயே ஈடுபட்டிருந்ததாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், முதலாம் இராஜசிங்க மன்னனால் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படும் இந்து ஆலயமொன்று சிதைவடைந்த நிலையில், இலங்கை தொல்பொருள் திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆலயம் கொழும்பின் புறநகர்ப் பகுதியான அவிசாவளையில் அமைந்துள்ளது. மன்னார் மனிதப் புதைகுழியின் காலத்தைக் கண்டுபிடித்த ஆய்வு கொழும்பிலிருந்து சிங்கப்பூருக்கு முற்றிலும் பெண்களே இயக்கிய சர்வதேச விமானம் அவிசாவளை நகரிலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில்…

Read More

தாதா 87 – விமர்சனம்

தாதா 87 –   விமர்சனம்

வட சென்னை பகுதியில் வசிக்கும் இளைஞர் ஆனந்த் பாண்டிக்கு பார்க்கும் பெண்கள் மீதெல்லாம் ஆசை. வயதான நல்ல தாதா சாருஹாசன் விருப்பம் இல்லாத பெண்களை தொட்டால் வெட்டுவேன் என்று வெறியோடு இருக்கிறார். சாதிக்கு எதிராகவும் குரல் கொடுக்கிறார். அதே பகுதியில் மணிமாறன் போதை பொருள் கடத்துகிறார். பாலாசிங் சட்டவிரோத செயல் செய்கிறார். இவர்களுக்கு எதிரியாக இருக்கிறார் எம்.எல்.ஏ மனோஜ்குமார். இந்த குடியிருப்பு பகுதிக்கு ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற ஜனகராஜ், மகள் ஸ்ரீபல்லவியுடன் குடி வருகிறார். ஆனந்த் பாண்டிக்கு ஸ்ரீபல்லவியை பார்த்ததும் காதல் வருகிறது. பின்னால் சுற்றி காதலை ஏற்கும்படி நிர்ப்பந்திக்கிறார். ஒரு கட்டத்தில் ஸ்ரீபல்லவியும் காதலை ஏற்கிறார். அப்போது தான் யார் என்ற ஒரு ரகசியதை…

Read More

அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு பொது விடுமுறை?

அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு பொது விடுமுறை?

இந்தியா முழுவதும் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு, இரண்டு மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில், பொது விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நடைமுறை 2015ம் ஆண்டு, செப்.,ல் அமலுக்கு வந்தது. இதையடுத்து, மாதத்தின் அனைத்து சனிக்கிழமையும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என, வங்கி ஊழியர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இது தொடர்பாக, நடந்த பேச்சில் சுமுக நிலை ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது: வங்கிகளுக்கு மாதத்தில் இரண்டு சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுவாக நிதி துறை சார்ந்த நிறுவனங்களுக்கு, அனைத்து சனிக்கிழமையும் விடுமுறைதான். ஆனால், வங்கிகள் மட்டும் சனிக்கிழமைகளில் செயல்படுகின்றன. இதனால், அனைத்து சனிக்கிழமையும் பொது விடுமுறை அளிக்க வலியுறுத்தி கோரிக்கை வைத்து வந்தோம்….

Read More
1 203 204 205 206 207 425