இலங்கையில் 1800 மில்லியன் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பிடிபட்டது

இலங்கையில் 1800 மில்லியன் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பிடிபட்டது

கொழும்பின் புறநகர் பகுதியான மொறட்டுவை பகுதியிலிருந்து சுமார் 1800 மில்லியன் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. போலிஸ் விசேட அதிரடி படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின் போதே இந்த ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. மொறட்டுவை – ராவதாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றை சோதனைக்கு உட்படுத்திய சமயத்தில் இந்த ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சுமார் 150 கிலோகிராமிற்கும் அதிக எடையை கொண்ட ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலிஸார் தெரிவிக்கின்றனர். அத்துடன், குறித்த வீட்டிலிருந்து ரி-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படுகின்ற 3000கும் அதிகமான துப்பாக்கி ரவைகளும், கைத்துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலிஸார் தெரிவிக்கின்றனர். பேலியகொடை குற்றத் தடுப்பு பிரிவினரால் கடந்த 4ஆம் திகதி கைது…

Read More

கருஞ்சிறுத்தையுடன் ‘செல்பி’ – பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

கருஞ்சிறுத்தையுடன் ‘செல்பி’ – பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

இளைஞர்கள் மத்தியில் மையம் கொண்டுள்ள செல்பி மோகம் அவர்களுடைய உயிருக்கே பல நேரங்களில் உலை வைக்கிறது. இது தெரிந்தும் செல்பியால் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போது அமெரிக்காவில் பெண் ஒருவர் கருஞ்சிறுத்தையுடன் செல்பி எடுக்க முயன்று கையில் காயத்தை வாங்கியுள்ளார்.  அரிசோனா மாகாணத்தின் தலைநகர் பீனிக்சில் உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவை சுற்றிப்பார்ப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் வந்தார். அங்கு கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த கருஞ்சிறுத்தையுடன் ‘செல்பி’ படம் எடுப்பதற்காக பார்வையாளர்கள் நுழையக்கூடாது என்பதற்காக வைக்கப்பட்டிருந்த தடுப்பையும் தாண்டி கூண்டு அருகே சென்றார். பின்னர் அவர் கூண்டை உரசியபடி நின்று கருஞ்சிறுத்தையுடன் தனது செல்போனில் ‘செல்பி’ படம்…

Read More

காஷ்மீருக்கு மட்டும் தேர்தல் அறிவிக்காதது ஏன்?

காஷ்மீருக்கு மட்டும் தேர்தல் அறிவிக்காதது ஏன்?

 லோக்சபா தேர்தலுடன் சேர்த்து காஷ்மீர் தவிர்த்து மற்ற 4 மாநிலங்களுக்கு மட்டும் சட்டசபை தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டது ஏன் என காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பரூக் அப்துல்லா அளித்துள்ள பேட்டியில், லோக்சபா தேர்தலுக்கு சேர்த்து மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துவதில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த ஆதரவு தெரிவிக்கிறோம். லோக்சபா தேர்தல் நடத்துவதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ள போது, காஷ்மீரில் மாநில தேர்தலை நடத்த மட்டும் ஏற்ற சூழ்நிலை இல்லையா? உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளதால். போதிய அளவில் பாதுகாப்பு படைகள் உள்ளன. அப்படி இருந்தும் காஷ்மீரில்…

Read More

ராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்

ராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்

காஷ்மீரில் உள்ள புலவாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3–வது ஒரு நாள் போட்டியின் போது இந்திய கிரிக்கெட் வீரர்கள் ராணுவ வீரர்களுக்குரிய தொப்பியை அணிந்து விளையாடினர். ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களுக்கும் அந்த விசே‌ஷ தொப்பியை விக்கெட் கீப்பர் டோனி வழங்கினார். ராணுவத்தில் கவுரவ பொறுப்பு வகிக்கும் டோனியின் யோசனையின் பேரில் இந்த ஆட்டத்தை ராணுவ வீரர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் பயன்படுத்திக் கொண்டனர். ராணுவ தொப்பி அணிந்து மிடுக்குடன் வலம் வந்த இந்திய கேப்டன் விராட் கோலி, ‘இந்த ஆட்டத்தில் பங்கேற்பதன் மூலம் கிடைக்கும் போட்டி கட்டணத்தை, நாங்கள் தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்குகிறோம்….

Read More

காஷ்மீரில் ராணுவ வீரரை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றனர்

காஷ்மீரில் ராணுவ வீரரை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றனர்

காஷ்மீரில் ராணுவ வீரரை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றனர். காஷ்மீரின் புட்காம் மாவட்டம் குவாஸிப்போரா பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் முகம்மது யாசின், விடுமுறையை கழிக்க தனது சொந்த ஊருக்கு வந்தார். இன்று இரவு அவரை பயங்கரவாதிகள் சிலர் வீடு புகுந்து துப்பாக்கிமுனையில் அடர்ந்த காட்டுப்பகுதிக்கு கடத்திச் சென்றனர். தகவலறிந்த உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More

நாக்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வென்றது

நாக்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வென்றது

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளிடையே செவ்வாயன்று நாக்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வென்றது, இந்தியக் கிரிக்கெட் வரலாற்றிலேயே முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாகும். இந்த வெற்றிக்கு, தமிழக வீரர் விஜய் சங்கரின் அபார பந்துவீச்சும் ஒரு முக்கிய காரணமாகும். இந்த வெற்றி மூலம் 500 போட்டிகளில் வென்ற இரண்டாவது அணி எனும் பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் விளையாடியது இந்தியா. 1974ஆம் ஆண்டு, ஜூலை 13 தொடங்கி நேற்று வரை 963 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா விளையாடியுள்ளது. வெற்றிபெற்ற 500 போட்டிகளைத் தவிர, 414 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது இந்தியா. ஒன்பது போட்டிகளில்…

Read More

மஹிந்த ராஜபக்ஷ: “யுத்தம் நிறைவடைந்த தருணத்திலேயே, நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டது”

மஹிந்த ராஜபக்ஷ: “யுத்தம் நிறைவடைந்த தருணத்திலேயே, நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டது”

இந்தியாவின் உதவியுடன் யாழ்ப்பாணம் – பலாலியில் புனரமைக்கப்படவுள்ள விமானம் நிலையம், சர்வதேச விமான நிலையம் என அரசாங்கம் போலியான தகவல்களை வெளியிட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் வர்த்தக சமூகத்தினரை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய சந்தர்ப்பத்திலேயே அவர் இந்த கருத்தை வௌியிட்டுள்ளார். தமது ஆட்சிக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை – மத்தள சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய முடியாத அரசாங்கத்தினால், மற்றுமொரு சர்வதேச விமான நிலையத்தை நிறுவுவதற்கான திறன் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், 1988 – 1989 காலப் பகுதியில் நாட்டிற்குள் ஏற்பட்ட வன்முறையுடனான காலப் பகுதியொன்று மீண்டும் நாட்டில் உருவாகி வருவதாக மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்….

Read More

தாயகத்தில் தவிக்கும் எமது மூத்தோர்களான பெரியோர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கிய MSS அறக்கட்டளை

தாயகத்தில் தவிக்கும் எமது மூத்தோர்களான பெரியோர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கிய MSS அறக்கட்டளை

யாழ் குடாநாட்டின் கைதடி அரச முதியோர் இல்லத்திற்கான அவசர மருந்துப்பொருட்கள ஆளுளுஅறக்கட்டளையினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.இந்த முதியோர் இல்லத்திற்கு அவசரமாக பல மருந்துகள் இல்லாது பல நோயாளர்கள் அவதியுறுவதாகவும் அந்த மருந்துப்பொருட்களை தந்துதவுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனை ஏற்று யாழ் பல்கலைக்கழக முன்னைநாள் பேராசிரியர் குகபாலன் அவர்கள் முன்னின்று ஒரு தொகுதி மருந்துப்பொருட்களை கொள்வனவு செய்து இன்றைய தினம் பொறுப்பதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். இந்த நிகழ்வில் வடமாகாண சமூக சேவை பிரதிப்பணிப்பாளர் திருமதி. வனஜா செல்வரட்ணம், வைத்திய கலாநிதி அருள்நேசன் ஆகியோர் பங்குபற்றிச் சிறப்பித்ததுடன் ஒரு தொகுதி மருந்துப்பொருட்களை முதியோர் இல்லம் சார்பாக பெற்றுக்கொண்டார்கள். அறக்கட்டளையின் சார்பாக ஆளுளு இலங்கை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் குகபாலன், உதவி ஒருங்கிணைப்பாளர் சந்திரா…

Read More

உரிமையாளர் குடும்பத்தினை காப்பாற்ற நாகபாம்புடன் சண்டையிட்ட வளர்ப்பு நாய் உயிரிழப்பு

உரிமையாளர் குடும்பத்தினை காப்பாற்ற நாகபாம்புடன் சண்டையிட்ட வளர்ப்பு நாய் உயிரிழப்பு

குர்டா நகரில் ஜாத்னி என்ற பகுதியை சேர்ந்தவர் அமன் ஷெரீப்.  இவர் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் ஒன்றாக வசித்து வருகிறார்.  தனது வீட்டில் டைசன் என பெயரிட்ட ஒன்றரை வயது கொண்ட டால்மேசியன் வகை நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நாயானது இரவில் தொடர்ந்து குரைத்துள்ளது.  இதனால் ஷெரீப் ஓடி சென்று என்னவென்று கவனித்துள்ளார்.  அவர்கள் வீட்டு வாசலில் நாகபாம்பு ஒன்று இறந்து கிடந்துள்ளது.  அதன் அருகில் நின்றிருந்த டைசன் ஒரு சில நிமிடங்களில் சரிந்து விழுந்துள்ளது.  அதனை பரிசோதித்த ஷெரீப் வாலிலும் முகத்திலும் நாகபாம்பு கடித்த காயத்தினை கண்டுள்ளார். அவர் உடனடியாக கால்நடை மருத்துவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.  ஆனால் அங்கு யாரும்…

Read More

ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோவுக்கு ஒன்றை மட்டுமே ஒதுக்கி மூக்கறுப்பு செய்துள்ளது தி.மு.க. தலைமை

ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோவுக்கு ஒன்றை மட்டுமே ஒதுக்கி மூக்கறுப்பு செய்துள்ளது தி.மு.க. தலைமை

தி.மு.க. கூட்டணியில் நான்கு லோக்சபா தொகுதிகள் வரை எதிர்பார்த்த ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோவுக்கு ஒன்றை மட்டுமே ஒதுக்கி மூக்கறுப்பு செய்துள்ளது தி.மு.க. தலைமை. கடந்த 2016ல் நடந்த சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின் மக்கள் நலக் கூட்டணியை விட்டு வெளியேறினார் வைகோ. அவரைத் தொடர்ந்து இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வெளியேறின. பின் இந்த நான்கு கட்சிகளும் தி.மு.க.வின் தோழமை கட்சிகளாகவே செயல்பட துவங்கின.அதனால் லோக்சபா தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இக்கட்சிகள் இடம் பெறும் என முன்னரே எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இக்கட்சிகள் வேறு எந்த சிந்தனையும் இன்றி தி.மு.க.வுடன் பேச்சை தொடர்ந்தன. அதில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரு…

Read More
1 204 205 206 207 208 425