பாகிஸ்தானுக்கு சகுனம் பிழைக்கவேண்டும் என்பதற்காக இந்தியா தனது மூக்கை வெட்ட வேண்டுமா?

பாகிஸ்தானுக்கு சகுனம் பிழைக்கவேண்டும் என்பதற்காக இந்தியா தனது  மூக்கை வெட்ட வேண்டுமா?

இந்தியாவின் காஷ்மீரி மாநிலத்தின் புல்வாமா பகுதியில் மத்திய றிசர்வ் பொலிஸ் படையைச் சேர்ந்த 40 வீரர்களைப் பலியெடுத்த படுமோசமான தற்கொலைக்குண்டு தாக்குதலையடுத்து இந்தியா பெரும்பதற்றமடைந்திருப்பதுடன் வஞ்சம் தீர்க்க வேண்டுமென்ற எண்ணமே சகலரிடமும் இருப்பதையும் விளங்கிக்கொள்ளமுடியும். பயங்கரவாதத்துக்கு அனுசரணை வழங்குகின்றமைக்காக பாகிஸ்தானுக்கு எவ்வாறு பதிலடி கொடுப்பதென்பது குறித்து இந்திய அரசாங்கம் யோசித்துக்கொண்டிருக்கும் அதேவேளை, பாகிஸ்தானுடன் எஞ்சியிருக்கும் சொற்பமான விளையாட்டுத்துறை உறவுகளையும் கூட துண்டித்துவிடவேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்துவருகின்றன. அதற்கு நச்சுத்தனமான பிரசாரங்களை முடுக்கிவிட்டிருக்கும் ஒரு சில தொலைக்காட்சி சேவைகள் திட்டமிட்டவகையில் ஊக்கம் கொடுத்துக்கொண்டிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. இந்திய – பாகிஸ்தான் முரண்நிலை தீவிரமடைகின்ற எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இருநாடுகளுக்கும் இடையிலான விளையாட்டுத்துறை உறவுகள் குறிப்பாக, கிரிக்கெட் உறவுகளே முதலில்…

Read More

இந்திய குண்டுவீச்சு விமானங்கள் தீவிரவாதிகளின் முகாம்களை அழிக்கவில்லை என கிராம மக்கள் கூறுகின்றனர்

இந்திய குண்டுவீச்சு விமானங்கள் தீவிரவாதிகளின் முகாம்களை அழிக்கவில்லை என கிராம மக்கள் கூறுகின்றனர்

பாகிஸ்தானின் வடகிழக்கில் உள்ள பலகொட் கிராமத்தை சேர்ந்தவர்கள் கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை பூகம்பம் போன்ற சத்தத்தினால் உறக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்தனர்.எனினும் பின்னர் அவர்களிற்கு அது இந்திய விமானப்படையின் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட சத்தம் என்பது தெரியவந்தது.இந்திய அதிகாரிகள் இந்த தாக்குதல் காரணமாக காஸ்மீரில் 40 படையினர் கொல்லப்படுவதற்கு காரணமான தீவிரவாத அமைப்பின் முகாமை அழித்துவிட்டதாக தெரிவிக்கின்றனர். 1971ற்கு பின்னர் பாக்கிஸ்தானில் உள்ள பகுதியொன்றில் இந்தியா முதல்தடவையாக மேற்கொண்ட விமானதாக்குதலில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என இந்திய வெளிவிவகார செயலாளர் குறிப்பிட்டுள்ளார்எனினும் இந்த தாக்குதலில் ஒருவரே காயமடைந்துள்ளார் என குறிப்பிடும் கிராமத்தவர்கள் எவரும் உயிரிழக்கவில்லை எனவும் தெரிவிக்கின்றனர். அருகில் தீவிரவாத அமைப்பினால் நடத்தப்படும் மத்ரசா ஒன்று உள்ளது…

Read More

போதைப்பொருள் பயன்பாடு – அமைச்சரிடம் விசாரணை

போதைப்பொருள் பயன்பாடு – அமைச்சரிடம் விசாரணை

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் கொக்கேன் போதைப்பொருளை பயன்படுத்தி வருவதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியினால் நியமிக்கப்பட்ட குழுவினால், ராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்றைய தினம் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தன. இதன்போது, ரஞ்ஜன் ராமநாயக்க, கொக்கேன் போதைப்பொருளை பயன்படுத்துவதாக கூறப்படும் அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்களை குறித்த குழுவின் முன்னிலையில் சமர்ப்பித்துள்ளார். இந்த விசாரணைகள் தொடர்பான அறிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளதாக விசாரணை குழுவின் தலைவர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். விசாரணைகள் தொடர்பான தகவல்களை தற்போதை நிலைமையில் வெளியிட முடியாது…

Read More

அமெரிக்க படைகள், பாகிஸ்தானுக்குள் புகுந்து ஒசாமா பின் லேடனை கொன்றது போல் தற்போதைய சூழலில்

அமெரிக்க படைகள், பாகிஸ்தானுக்குள் புகுந்து ஒசாமா பின் லேடனை கொன்றது போல் தற்போதைய சூழலில்

அமெரிக்க படைகள், பாகிஸ்தானுக்குள் புகுந்து ஒசாமா பின் லேடனை கொன்றது போல் தற்போதைய சூழலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இந்தியா – பாக்., இடையே எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தற்போது நிலவும் பதற்றமான சூழல் குறித்து பேட்டி அளித்துள்ள அருண் ஜெட்லி, இன்றைய சூழலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அமெரிக்க படைகள் பாக்.,கிற்குள் புகுந்து ஒசாமா பின் லேடனை அழித்தது போன்று எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஒட்டுமொத்த நாடும் எங்களுக்கு ஆதரவாக உள்ளது. உரிய நேரத்தில் எதுவும் நடக்க வாய்ப்புள்ளது என்றார். இந்திய எல்லைக்குள் அத்துமீறி…

Read More

அபிநந்தன் தைரியம்: பாக்., ராணுவம் வியப்பு

அபிநந்தன் தைரியம்: பாக்., ராணுவம் வியப்பு

பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளின் விசாரணையின் போது, தான் வந்த விமானத்தின் பெயரையும், எதற்காக வந்தேன் என்பதையும் தெரிவிக்க முடியாது என அபிநந்தன் கூறியுள்ளார். அவரது தைரியத்தை பார்த்த பாகிஸ்தான் வீரர்கள் வியந்தனர். இது குறித்த வீடியோவை பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ளது. மிக் 21 பைசன் போர் விமானத்தில் சென்ற விமானி அபிநந்தன் என்பவர் மாயமானார். அவரை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் கூறி சில புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளது. இது குறித்து ஆய்வு செய்வதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம், அபிநந்தன் பேசியது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவின் உறுதித்தன்மை உறுதிபடுத்தப்படவில்லை. அந்த வீடியோவில், பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கேள்வி எழுப்புவதும், அதற்கு…

Read More

இலங்கை போர்க்குற்றம்: “ரணில் நாட்டைக் காட்டிக்கொடுத்துவிட்டார்” – மஹிந்த ராஜபக்ஷ

இலங்கை போர்க்குற்றம்: “ரணில் நாட்டைக் காட்டிக்கொடுத்துவிட்டார்” – மஹிந்த ராஜபக்ஷ

இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றதாக கூறி சர்வதேச சமூகத்திடம் ரணில் விக்கிரமசிங்க நாட்டைக் காட்டிக்கொடுத்துவிட்டார் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் முன்னணியின் 22 ஆவது பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்:- போர்க் காலகட்டத்தில் எந்தச் சந்தர்ப்பத்திலும் போர்க்குற்றம் என்று எதுவும் இடம்பெறவில்லை. ஒரு சில சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட நபர்களால் சில குற்றங்கள் இடம்பெற்றிருப்பின் அதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆனால் இவை போர்க் குற்றம் அல்ல. இவ்வாறான நிலையில் வடக்கில் சென்று தமிழ் மக்கள் மத்தியில் போர்க்குற்றம் இடம்பெற்றதாக பிரதமர் ரணில் கூறியமை எமது நாட்டை சர்வதேச சமூகத்திடம்…

Read More

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகியோர் சந்தித்து பேசும் 2-வது உச்சிமாநாடு

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகியோர் சந்தித்து பேசும் 2-வது உச்சிமாநாடு

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகியோர் சந்தித்து பேசும் 2-வது உச்சிமாநாடு வியட்நாமின் ஹனோய் நகரில் வருகிற 27, 28 தேதிகளில் நடக்கிறது. இதற்காக கிம் ஜாங் அன், 24 ஆம் தேதி மாலை தலைநகர் பியாங்காங்கில் இருந்து தனக்கான சிறப்பு ரெயிலில் வியட்நாமுக்கு புறப்பட்டார். இரண்டரை நாள்கள் பயணம் செய்த கிம் ஜாங் அன், சீனா வழியாக இன்று வியட்நாம் வருகை தந்தார். சந்திப்பு நடைபெறும் ஹனோய் நகருக்கு, கார் மூலமாக பயணம் மேற்கொண்டார். கிம் ஜாங் அன்னுடன் அவரது சகோதரி கிம் யோ ஜாங், உதவியாளர் கிம் யோங் சோள் உள்பட உயர் அதிகாரிகள் சென்றனர். இந்நிலையில்,…

Read More

பாக்.,பயங்கரவாதிகள் மீது இந்தியா அதிரடி தாக்குதல்

பாக்.,பயங்கரவாதிகள் மீது இந்தியா அதிரடி தாக்குதல்

காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து, எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் தாக்கி அழித்தது. கடந்த பிப் 14 ல் இந்திய ராணுவ வீரர்கள் சென்ற கான்வாயில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணமடைந்தனர். இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்தியா இன்று மற்றொரு சர்ஜிக்கல் தாக்குதலை நடத்தியுள்ளது என்றே கூறலாம். இந்த தாக்குதலுக்கு தேச பற்றுடன் அனைத்து தரப்பினரும் பாராட்டி வீரர்களுக்கு சல்யூட் அடித்து வருகின்றனர். கடந்த 14ம் தேதி, காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வாகனங்கள் மீது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய கொடூர தாக்குதலில் 40 வீரர்கள்…

Read More

மனிதனின் சமூக நடத்தையை தீர்மானிப்பது கல்வி அறிவு

மனிதனின் சமூக நடத்தையை தீர்மானிப்பது கல்வி அறிவு

ஆதிகாலத்தில் இருந்து கல்வியானது மனித குலத்தில் பின்னிப்பிணைந்து வளர்ச்சி கண்டு வருகின்றது. மனிதனது கூட்டுவாழ்க்கை, வளர்ச்சி,செயன்முறை ஆகிய அனைத்திலும் கல்வி செல்வாக்குச் செலுத்துகின்றது. இன்று உலக அரங்கில் பழைமையில் பெருமளவு ஊறியிருந்து நவீனமாக்கிக் கொள்ளும் செயன்முறைக்கு கல்வி பெருமளவு செல்வாக்குச் செலுத்துகின்றது. இவை அனைத்தும் கல்வியின் சமூக செயலாகவே அமைகின்றன. சமூகத்தில் பல பிரச்சினைகளுக்கும் கல்வி விடைகாணும் தன்மை கொண்டது. அதன்படி கல்வியில் மாணாக்கரை முழுமையான இயல்புடையவர்களாக உருவாக்குவதே கல்வியின் தலையாய நோக்கமாகும். கல்வியும் சமூகமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன என்பதனை ஜே.எம்.கில்டர் என்பவர் முதன் முதலில் வெளிப்படுத்தினார். இதனை மையமாகக் கொண்டு தற்கால கல்வித் திட்டங்கள் அமைந்துள்ளன. கல்வியினால் சமுதாயத்தை சிறப்பாக உருவாக்க முடியும்….

Read More

தமிழ்மொழியின் உரிமைக்காக தனித்துநின்று போராடிய கோடீஸ்வரன்

தமிழ்மொழியின்  உரிமைக்காக தனித்துநின்று போராடிய கோடீஸ்வரன்

தமிழ் மொழியுரிமைப் போராட்ட வரலாற்றில் தடம் பதித்த வரலாற்று நாயகன் செல்லையா கோடீஸ்வரன் தனது 85வது வயதில் அமரத்துவம் அடைந்து விட்டார். தென்னிலங்கையில் உள்ள வத்தேகமவில் பிறந்த அவர் யாழ். மீசாலையைப் பூர்வீகமாகக் கொண்டவர். அரச சேவையில் எழுதுவினைஞராக இணைந்து கொண்ட அவர், தமிழ்மொழி மீதும், தமிழ் சமூகம் மீதும் தீவிர பற்றுக் கொண்டவராக விளங்கினார். தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டு, ‘அரச சேவையிலிருந்த தமிழ் அலுவலர்கள் சிங்கள மொழியில் தேர்ச்சியடைய வேண்டும். தவறினால் படி, பதவி உயர்வுகள் மறுக்கப்படுவதுடன் சேவையிலிருந்து எதுவித இழப்பீடுகளும் இன்றி நீக்கப்படுவார்கள்’ என்று அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. அப்போது கேகாலை கச்சேரியில் பணிபுரிந்து கொண்டிருந்த கோடீஸ்வரன் குறித்த விதிக்கெதிராக நீதிமன்றில் வழக்குத் தொடுத்தார்….

Read More
1 206 207 208 209 210 425