பாகிஸ்தானுக்கு சகுனம் பிழைக்கவேண்டும் என்பதற்காக இந்தியா தனது மூக்கை வெட்ட வேண்டுமா?
இந்தியாவின் காஷ்மீரி மாநிலத்தின் புல்வாமா பகுதியில் மத்திய றிசர்வ் பொலிஸ் படையைச் சேர்ந்த 40 வீரர்களைப் பலியெடுத்த படுமோசமான தற்கொலைக்குண்டு தாக்குதலையடுத்து இந்தியா பெரும்பதற்றமடைந்திருப்பதுடன் வஞ்சம் தீர்க்க வேண்டுமென்ற எண்ணமே சகலரிடமும் இருப்பதையும் விளங்கிக்கொள்ளமுடியும். பயங்கரவாதத்துக்கு அனுசரணை வழங்குகின்றமைக்காக பாகிஸ்தானுக்கு எவ்வாறு பதிலடி கொடுப்பதென்பது குறித்து இந்திய அரசாங்கம் யோசித்துக்கொண்டிருக்கும் அதேவேளை, பாகிஸ்தானுடன் எஞ்சியிருக்கும் சொற்பமான விளையாட்டுத்துறை உறவுகளையும் கூட துண்டித்துவிடவேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்துவருகின்றன. அதற்கு நச்சுத்தனமான பிரசாரங்களை முடுக்கிவிட்டிருக்கும் ஒரு சில தொலைக்காட்சி சேவைகள் திட்டமிட்டவகையில் ஊக்கம் கொடுத்துக்கொண்டிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. இந்திய – பாகிஸ்தான் முரண்நிலை தீவிரமடைகின்ற எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இருநாடுகளுக்கும் இடையிலான விளையாட்டுத்துறை உறவுகள் குறிப்பாக, கிரிக்கெட் உறவுகளே முதலில்…
Read More








