இனப்படுகொலையை மறப்போம், மன்னிப்போம் எனக் கூறுவது வேடிக்கையானது என்கிறார் அனந்தி சசிதரன்
யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்களாகியும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியையோ வழங்கத் தயாரில்லாத அரசாங்கம் தற்போது இனப்படுகொலையை மறப்போம், மன்னிப்போம் எனக் கூறுவது வேடிக்கையானது. பிரதமரின் இக்கூற்றை தமிழ் மக்கள் ஏற்கத் தயாரில்லை எனவும் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இனப்படுகொலையை மறப்போம், மன்னிப்போம் என பிரதமர் கூறிய போது அங்கிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மௌனமாக இருந்துவிட்டு இப்போது மக்கள் முன் நாடகமாடுவதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் அமைந்துள்ள தனது இல்லத்தில் கடந்த வாரம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அச்…
Read More









