திருமதி கலைவாணி பாலசுந்தரம் அவர்களின் தமிழ்க் கற்பித்தல்

திருமதி கலைவாணி பாலசுந்தரம் அவர்களின் தமிழ்க் கற்பித்தல்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பட்டதாரியும் முன்னாள் ஆசிரியையும் கனடாவில் கடந்த 13வருடங்களாக பிளமிங்டன் தமிழ்க் கல்வி நிலையத்தை வெற்றிகரமாக நடத்திய வண்ணம் நல்ல தமிழ் மொழி அறிவைப் பெற்றுக் கொண்ட பல மாணவ மாணவிகளை உருவாக்கிவருகின்றவருபவருமான திருமதி கலைவாணி பாலசுந்தரம் அவர்களின் தமிழ்க் கற்பித்தல் பயணத்தில் இன்று ஒரு பொன்னான நாளை அனைவரும் தரிசித்தோம். அவரது பிளமிங்டன் தமிழ்க் கல்வி நிலையத்தின் 13வது ஆண்டு நிறைவு விழா இன்று ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள கனடா கந்தசாமி ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. பிரதம விருநதினராக முன்னாள விரிவுரையாளர் திரு கணபதிப்பிள்ளை கலந்து சிறப்பித்தார்.அருட்கவி திரு ஞானகணேசன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். கனடா உதயன் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம்…

Read More

Christmas Mixer, presented by Canadian Tamil Chamber of Commerce

Christmas Mixer, presented by Canadian Tamil Chamber of Commerce

This year`s Christmas Mixer, presented by Canadian Tamil Chamber of Commerce, took place today at Princes Banquet Centre in Scarborough. The President of Canadian Tamil Chamber of Commerce, Mrs Dilani Gunarajah, associated with other Directors and members must have worked hard, in order to organize this event. Many Business Institutions sponsored the event. All the Gifts, given to Children, were sponsored by Mr. Raj Nadaraja, a Prominent Realtor. This was a very remarkable event for…

Read More

“பிறைசூடி” சந்திரசேகரனின் தாயார் திருச்சியில் காலமானார்

“பிறைசூடி” சந்திரசேகரனின் தாயார் திருச்சியில் காலமானார்

கனடாவில் “பிறைசூடி” என்னும் பெயரில் கட்டுரைகளை எழுதி வருகின்றவரும் கடந்த பல ஆண்டு காலமாக கனடாவில் வாழ்ந்து வருகின்றவருமாகிய திரு சந்திரசேகரனின் தாயார் திருமதி பாப்பு அம்மாள் திருச்சியில் காலமானார் என்ற செய்தியை அவரது நண்பர்களின் அறிதலுக்காக இங்கே பதிவு செய்கின்றோம். இலங்கையில் மலையகத்தில் நுவரேலியா மாவட்டம் ராகலையில் வாழ்ந்து வந்த பாப்பு அம்மாள் பின்னர் திருச்சிக்கு இடம்பெயர்ந்து சென்றார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் திருச்சியில் இடம்பெற்றன. அனுதாபம் தெரிவிக்க விரும்புவோர் திரு சந்திரசேகரனை 416 996 4366 என்னும் இலக்கத்தில் அழைக்கலாம்.

Read More

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உள் முரண்பாடுகளைத் தீர்க்க ரணிலுக்கு என்ன தேவை உள்ளது?

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உள் முரண்பாடுகளைத் தீர்க்க ரணிலுக்கு என்ன தேவை உள்ளது?

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடந்த பல பொதுத் தேர்தல்களிலும் முதன் முதலாக நடத்தப்பெற்ற வட மாகாண சபைக்கான தேர்தலிலும் அமோக வெற்றி பெற்று பாராளுமன்றத்தையும் வடக்கு மாகாண சபையையும் அதன் அங்கத்தவர்கள் மிகவும் கம்பீரமாக அலங்கரித்து வந்தார்கள். வடக்கில் வாழும் மக்களும் வன்னியில் வா(டு)ழும் மக்களும் தங்கள் பிரச்சனைகள் அனைத்திற்குN மநல்ல தீர்வு வரப்போகின்றது என்று காத்திருந்தார்கள். ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் போக்கு திசை மாறிச் சென்றதை மக்களும் சில தலைவர்களும் நன்கு அவதானித்தார்கள். அந்தத் தலைவர்களில் ஒருவர்தான் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் நீதிபர் விக்கினேஸ்வரன் அவர்கள். மைத்திரிபால சிறிசேனாவை ஜனாதிபதி ஆக்கவும் ரணிலைப் பிரதமராக்கவும் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற…

Read More

உடைந்த கூட்டணி: இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஆபத்தா?

உடைந்த கூட்டணி: இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஆபத்தா?

தமிழர் விடுதலை கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தின் புதிய கூட்டணியொன்று இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நாச்சியார்மடம் பகுதியிலுள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில், கூட்டணி உருவாக்கத்திற்கான உடன்படிக்கை இன்று கையொப்பமிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியுள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழர் விடுதலை கூட்டணி, ஜனநாயக தமிழரசு கட்சி, ஈழவர் ஜனநாயக முன்னணி, புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் ஆகியன இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் உதய சூரியன் சின்னத்தின் கீழ் இந்த கூட்டணி களமிறங்கவுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து டெலோ அமைப்பு நேற்றிரவு…

Read More

பரோல் வழங்கினால் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்வேனா?- உயர் நீதிமன்றத்தில் நளினி மறுப்பு

பரோல் வழங்கினால் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்வேனா?- உயர் நீதிமன்றத்தில் நளினி மறுப்பு

பரோல் வழங்கினால் வெளிநாடு தப்பிச் சென்று விடுவார் என தமிழக அரசின் குற்றச்சாட்டை மறுத்து நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமனு தாக்கல் செய்துள்ளார். 1991-ம் ஆண்டு ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக 26 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறார் நளினி, இவரது மகள் திருமண ஏற்பாடுகளை கவனிக்க ஆறு மாதங்கள் பரோல் வழங்கக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து தமிழக அரசு சார்பில் கடந்த நவம்பர் 16ம் தேதி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் நளினியை பரோலில் அனுப்பினால் வெளிநாடு தப்பிச் சென்று விடுவார் என்று கூறி, பரோல் வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த பதில் மனுவுக்கு…

Read More

முன் மொழிந்த 10 பேரை விஷால் சந்தித்தாரா?- முன்னாள் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி கேள்வி

முன் மொழிந்த 10 பேரை விஷால் சந்தித்தாரா?- முன்னாள் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி கேள்வி

விஷால் வேட்புமனு மட்டுமல்ல மேலும் 70-க்கும் மேற்பட்டவர்கள் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தன்னை முன் மொழியும் நபர்கள் நம்பிக்கையானவர்கள் தானா? என்பதை நேரில் ஆய்வு செய்திருக்க வேண்டும் என்று முன்னாள் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி தெரிவித்தார். ஆர்.கே.நகரில் போட்டியிட்ட நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. முன்மொழிந்த 10 பேரில் இரண்டு பேர் தாங்கள் விஷாலை முன் மொழியவில்லை என்று தெரிவித்ததன் அடிப்படையில் விஷாலின் வேட்பு மனு தள்ளுபடியானது. அதன் பின்னர் விஷால் பேசியதை அடுத்து வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இரவு நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஏன் இத்தனை குழப்பம், விஷால் மனுவில் தேர்தல் ஆணைய நடைமுறை சரியா? இரண்டுமுறை முடிவுகள் ஏன்…

Read More

‘இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம்’ டிரம்ப் அறிவிப்பு, ஐ.எஸ்., அல்-கொய்தா எச்சரிக்கை

‘இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம்’ டிரம்ப் அறிவிப்பு, ஐ.எஸ்., அல்-கொய்தா எச்சரிக்கை

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம் என டிரம்ப் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் இரத்தத்தில் குளிக்க செய்வோம் என அல்-கொய்தா, ஐ.எஸ். பயங்கரவாத இயக்கங்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அது குறித்த அறிவிப்பை வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நள்ளிரவில் வெளியிட்டார். மேலும் டெல் அவிவ் நகரில் இருந்து ஜெருசலேமுக்கு அமெரிக்க தூதரகத்தை உடனடியாக மாற்றவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். சர்வதேச அளவில் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கிற முதல் உலக நாடாக அமெரிக்கா திகழ்கிறது. முன்னதாக இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ, பாலஸ்தீன நிர்வாக தலைவர் மகமது அப்பாஸ், எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல்…

Read More

பிரதமர் மோடி குறித்தான விமர்சனம் காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யர் மன்னிப்பு கோரினார்

பிரதமர் மோடி குறித்தான விமர்சனம் காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யர் மன்னிப்பு கோரினார்

குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் தீவிரமாக சென்ற நிலையில் பிரதமர் மோடி டெல்லியில் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச நினைவு மையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அப்போது காங்கிரஸ் மீது கடுமையான தாக்குதலை தொடுத்தார். டாக்டர் அம்பேத்கார் பெயரில் வாக்கு சேகரிக்கும் கட்சிகள், இந்த நாட்டை கட்டமைப்பதில் அவருடைய பங்களிப்பை அழிக்க முயற்சி செய்கின்றன என்றார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மணிசங்கர் அய்யர் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக குஜராத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி குஜராத் மக்கள் மணிசங்கர் அய்யர் பேச்சுக்கு குஜராத் மக்கள் வாக்குகளால் பதிலடி கொடுப்பார்கள் என்றார். இந்நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்…

Read More

நடுரோட்டில் நடனம்: முஸ்லிம் பெண்களை மிரட்டியவர்கள் மீது வழக்கு

நடுரோட்டில் நடனம்: முஸ்லிம் பெண்களை மிரட்டியவர்கள் மீது வழக்கு

திருவனந்தபுரம்: எய்ட்ஸ் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடுரோட்டில், ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு நடனமாடிய மூன்று முஸ்லிம் பெண்கள் குறித்து, சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தவர்கள் மீது, கேரள மகளிர் கமிஷன் வழக்கு பதிவு செய்துள்ளது. நடுரோட்டில் திடீர் நடனம் கேரள மாநிலம், மலப்புரம் நகரின் முக்கியமான சாலை சந்திப்பில் கடந்த டிச., 1ம் தேதி மூன்று முஸ்லிம் பெண்கள் திடீரென, ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடினர். அவர்கள் பல் மருத்து கல்லூரி மாணவிகள். உலக எய்ட்ஸ் தினம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடுரோட்டில் நடமாடினர் என்பது பின்னர் தெரிய வந்தது. ஆனால், மூன்று பெண்களும் ஜீன்ஸ் பேன்ட் அணிந்து தலையை துணியால் மூடிக்…

Read More
1 298 299 300 301 302 425