உள்ளாட்சித் தேர்தல்கள் தமிழர் பகுதிகளில் நிலையான மாற்றங்களை தோற்றுவிக்க வேண்டும்

உள்ளாட்சித் தேர்தல்கள் தமிழர் பகுதிகளில் நிலையான மாற்றங்களை தோற்றுவிக்க வேண்டும்

இந்திய தேசத்தில் பல மாநிலங்களில் உள்ள அரசுகளை கைப்பற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் எத்தனை கோடிகளை கொள்ளை அடிப்பது என்பதையே மிகவும் முக்கிய விடயமாகக் கொண்டு தங்கள் நாளாந்த அரசியலை நடத்தி வருவார்கள். இதற்கு தமிழ்நாடும் விதி விலக்கு அல்ல என்பதை நாம் நன்கு அறிவோம். தமிழ்நாட்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் அவரது தோழியாக இருந்த சசிகலாவும், லட்சத்துக் கோடிகளை கொள்ளையடித்து பாதுகாத்து வைக்கும் அளவிற்கு அங்கு அரசியிலில் ஓட்டைகள் இருந்திருக்கின்றன. தமிழ்நாட்டிற்கு மாறி மாறி வரும் ஆளுனர்கள் (கவனர்கள்) கூட கோடிக்கணக்கில் சம்பாதித்த பினனர் தான் அந்த மாநிலத்தை விட்டுச் செல்வார்கள் என்பதும் அங்கு நிதர்சனமாகத் தெரியும் உண்மை. ஷஇவ்வாறு தமிழ்நாட்டில் அரசியல் மூலம்…

Read More

தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்படுமா? – தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி

தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்படுமா? – தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்படுமா? என்பது குறித்து தெரிவிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். அவர் தனக்கு கடந்தமுறை ஒதுக்கப்பட்ட தொப்பி சின்னத்தை மீண்டும் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கு அதிமுக அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன், இரட்டை இலை சின்னமும் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து டிடிவி தினகரன் சார்பில் டெல்லி…

Read More

ஆர்.கே நகர் தேர்தல் அ.தி.மு.க,திமுக, தினகரன்,வேட்பாளர்கள் சொத்து மதிப்பு

ஆர்.கே நகர் தேர்தல் அ.தி.மு.க,திமுக, தினகரன்,வேட்பாளர்கள் சொத்து மதிப்பு

ஆர்.கே.நகரில் போட்டியிட இன்று ஒரே நாளில் அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனன்,தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன், ஆகியோர் மனுதாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கலுக்கு டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தனிக்கொடியுடன் வந்தனர். அ.தி.மு.க. சார்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மதுசூதனன், இப்போது நான் இரட்டைக் குழல் துப்பாக்கி. அதனால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என கூறினார். தினகரனுக்கு ஆர்.கே.நகர் வாக்காளர்கள் மத்தியில் சென்ற இடைத்தேர்தலில் இருந்தே பெரிய ஆதரவு இருந்தது. இப்போதும் பெரும் திரளான மக்கள் அவருக்காக கூடினர். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்’ என ஒருவர் கேட்க, அவருடைய கனவுகள் நிறைவேறட்டும் என்று பதிலளித்தார். உடனேயே…

Read More

புத்தாண்டு முதல் இலவச அரிசி திட்டம் ரத்தா?- தமிழக அரசு விளக்க வேண்டும்: ராமதாஸ்

புத்தாண்டு முதல் இலவச அரிசி திட்டம் ரத்தா?- தமிழக அரசு விளக்க வேண்டும்: ராமதாஸ்

புத்தாண்டு முதல் இலவச அரிசி திட்டம் ரத்து செய்யப்படலாம் என வெளியாகியுள்ள தகவல்கள் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டதன் விளைவாக, புத்தாண்டு முதல் பொது வினியோகத் திட்டத்தில் அதிரடியாக மாற்றங்கள் செய்யப்படவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலவச அரிசித் திட்டம் கூட ரத்து செய்யப்படலாம், மற்ற உணவு தானியங்களின் விலைகள் உயர்த்தப்படலாம் என வெளியாகும் செய்திகள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவுகளைக் காரணம் காட்டி, நியாய விலைக்…

Read More

குமரி, நெல்லை, தூத்துக்குடியில் ‘ஒக்கி’ புயலால் விழுந்த 329 மரங்கள் அகற்றம்; மின் கம்பங்கள் சீரமைப்புப் பணிகளில் 2000 ஊழியர்கள்: தமிழக அரசு

குமரி, நெல்லை, தூத்துக்குடியில் ‘ஒக்கி’ புயலால் விழுந்த 329 மரங்கள் அகற்றம்; மின் கம்பங்கள் சீரமைப்புப் பணிகளில் 2000 ஊழியர்கள்: தமிழக அரசு

தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் புயல் காற்றினால் விழுந்த 579 மரங்களில் 329 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகளில் 2000 ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ‘ஒக்கி’ புயல் சேதம் தொடர்பாக அரசின் சார்பில் நடைபெற்று வரும் மீட்பு, நிவாரணப் பணிகள் குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”’ஒக்கி’ புயலினால் தென் தமிழ்நாட்டின் அநேக இடங்களில் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில், பலத்த காற்றுடன் மிக கன மழை பெய்துள்ளது. தமிழக முதல்வர் பழனிசாமியின் உத்தரவின் பேரில், கன்னியாகுமரி மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், டி.கே.இராமச்சந்திரன், இ.ஆ.ப., தூத்துக்குடி மாவட்டத்தில்…

Read More

முடிவுக்கு வந்தது இழுபறி: ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளர் மதுசூதனன்; மீண்டும் வாய்ப்பு

முடிவுக்கு வந்தது இழுபறி: ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளர் மதுசூதனன்; மீண்டும் வாய்ப்பு

ஆர்.கே.நகர் இடைதேர்தலில் அதிமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிட மதுசூதனனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆட்சிமன்றக் குழு கூடி வேட்பாளரை முடிவு செய்யும் என ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில் இன்று காலை கூடிய ஆட்சிமன்றக்குழு மதுசூதனனை வேட்பாளராக அறிவித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஆர்.கே.நகர் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டபோது ஓபிஎஸ் அணியில் வேட்பாளராக போட்டியிட்டவர் மதுசூதனன், ஈபிஎஸ் அணியில் தினகரன் போட்டியிட்டார். தேர்தல் ரத்து செய்யப்பட்டவுடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்தன. ஓபிஎஸ் அணிகள் இணைந்தாலும் உடனிருப்பவர்கள் யாருக்கும் உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்பது அனைவரின் குறைபாடாக இருந்தது. இந்நிலையில் மீண்டும் ஆர்.கே.நகர் இடைதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. திமுக, நாம் தமிழர் கட்சியினர் அவர்களது…

Read More

மதுரை கப்பலூர் சம்பவத்துக்கு பிறகு ஒரே மேடையில் ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். ஆதரவாளர்கள் பங்கேற்பு

மதுரை கப்பலூர் சம்பவத்துக்கு பிறகு ஒரே மேடையில் ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். ஆதரவாளர்கள் பங்கேற்பு

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் திடீரென்று கைகோர்த்துள்ளதால் மதுரை மாவட்ட அதிமுகவில் இதுவரை நீடித்த உட்கட்சி பூசல் முடிவுக்கு வந்துவிட்டதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்ட அதிமுகவில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், புறநகர் மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோருக்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது. இவர்களில் ஒருவர், மற்றொருவருக்கு முக்கியத்துவம் உள்ள கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. ஆனால், முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்கும் கட்சி நிகழ்ச்சிகளிலும், அரசு விழாக்களிலும் ஒற்றுமையாக இருப்பதுபோன்று அனைவரும் பங்கேற்பார்கள்.ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அப்பதவியை இழப்பதற்கு ஒரு வகையில்…

Read More

நடிகை அமலாபால் கார் பதிவெண் விவகாரம்: கேரள போலீஸார் புதுச்சேரியில் விசாரணை – 137 உயர்ரக கார்களின் விவரங்களையும் சோதனையிட்டனர்

நடிகை அமலாபால் கார் பதிவெண் விவகாரம்: கேரள போலீஸார் புதுச்சேரியில் விசாரணை – 137 உயர்ரக கார்களின் விவரங்களையும் சோதனையிட்டனர்

நடிகை அமலாபால் உயர் ரக காரை புதுச்சேரியில் பதிவு செய்து பதிவெண் வாங்கிய விவகாரம் குறித்து கேரள போலீஸார் போக்குவரத்து துறை அலுவலகத்தில் நேற்று விசாரணை நடத்தினர். புதுச்சேரியில் நடிகை அமலா பால் விலை உயர்ந்த தனது காரை பதிவு செய்த விவகாரத்தில் முறைகேடு செய்திருப்பதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்திருந்தார். ‘இந்த விவகாரத்தில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை. அமலாபால் கார் வாங்கியதில் அனைத்து ஆவணங்களும் புதுச்சேரி அரசிடம் சமர்பித்துள்ளார். துறைரீதியாக எந்த தவறும் நடைபெறவில்லை’ என புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்திருந்தார். தொடர்ந்து கேரள போக்குவரத்து ஆணைய உதவி செயலர் சந்தோஷ் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் கடந்த 6-ம் தேதி…

Read More

இளவரசர் ஹாரி – மார்க்கெல் திருமணம் எங்கே? எப்போது?

இளவரசர் ஹாரி – மார்க்கெல் திருமணம் எங்கே? எப்போது?

இளவரசர் ஹேரி மற்றும் மெகன் மார்கிலின் திருமணம் அடுத்த ஆண்டு மே மாதம் வின்ட்ஸர் கோட்டையில் நடக்கவுள்ளதாக கென்னிங்ஸ்டன் அரண்மனை அறிவித்துள்ளது. விளம்பரம் இசை, பூக்கள், வரவேற்பறை உள்ளிட்ட அனைத்து சேவைகளின் செலவுகளையும் அரச குடும்பம் ஏற்கிறது. திருமண தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் .இங்கிலாந்து திருச்சபையில் செல்வி மார்கெலுக்கு திருமணத்துக்கு முன்பு ஞானஸ்நானம் செய்யப்படுகிறது. திருமணத்தின் அனைத்து அம்சங்களுக்குமான செயல்முறை குறித்து முப்பத்து மூன்று வயதான இளவரசர் ஹேரியும், செல்வி மார்கெலும் மிகுந்த ஈடுபாடு காட்டுவதாகவும். இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பொது மக்கள் உணரத் தேவையான திட்டங்கள் குறித்து தீவிரமாக வேலை செய்து வருவதாகவும் இளவரசர் ஹேரியின் செய்திதொடர்பாளர் ஜேசன் நாஃப் தெரிவித்துள்ளார்….

Read More

அருணாசல நதி கருப்பு நிறமாகிவிட்டது, அதிகாரிகள் சீனாவை குற்றம் சாட்டுகின்றனர்

அருணாசல நதி கருப்பு நிறமாகிவிட்டது, அதிகாரிகள் சீனாவை குற்றம் சாட்டுகின்றனர்

அருணாசலப் பிரதேசத்தில் தெளிந்த நீரோடைபோல ஓடிய சியாங் நதியை மாசுபடுத்தியதாக சீனா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நவம்பர் 29, 2017, 05:46 PM திபெத் பீட பூமியில் உற்பத்தியாக இந்தியா வழியாக வங்கதேசத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கும் பிரமபுத்திராவின் முக்கிய கிளை நதி சியாங். சுமார் 230 கி.மீ நீளம் கொண்ட இந்த நதி, கிழக்கு சியாங் மாவட்டத்தில் பாசிகட் என்ற இடத்தில் பிரமபுத்திரா நதியில் இணைகிறது. அண்மையில், பிரம்மபுத்திரா நதியை சீனாவுக்குள் திருப்பும் வகையில் 1,000 கிலோமீட்டர் நீளத்துக்குச் சீனா சுரங்கம் வெட்டப்போவதாக செய்தி வெளியாகி, அதை சீனா மறுத்திருந்தது. இந்த நிலையில் அருணாசலப் பிரதேசத்தில் தெளிந்த நீரோடைபோல ஓடிய சியாங் நதியை மாசுபடுத்தியதாக…

Read More
1 300 301 302 303 304 425