சிறு வயதில் டீ விற்ற, நரேந்திர மோடி பிரதமராகியுள்ளார்

சிறு வயதில் டீ விற்ற, நரேந்திர மோடி பிரதமராகியுள்ளார்

ஐதராபாத்:”சிறு வயதில் டீ விற்ற, நரேந்திர மோடி பிரதமராகியுள்ளார். மிகப்பெரிய மாற்றம் சாத்தியம் என்பதற்கு உதாரணமாக, மோடி உள்ளார். அதுபோல, பெண்கள், தொழில் முனைவோராகத் தேவைப்படும் மாற்றங்கள், இங்கு சாத்தியமே,” என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பின் மகளும், ஆலோசகருமான, இவாங்கா டிரம்ப், பாராட்டு தெரிவித்தார். இவாங்கா டிரம்ப், Ivanka Trump, நரேந்திர மோடி, Narendra Modi, பெண்கள் தொழில் முனைவோர், Women Entrepreneur,அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், US President Donald Trumpஜி.டி.பி., GDP, மொத்த உள்நாட்டு உற்பத்தி, Gross Domestic Product, பெண் தொழிலதிபர்கள், Female Businessmen, ஆஸ்திரேலியா ,Australia, ஹமிஷ் பின்லேசன், Hamish Pine Lasane, தெலுங்கானா மாநிலத்தில், முதல்வர் சந்திர…

Read More

தினகரன் ஆதரவு எம்பிக்கள் 3 பேர் அணி தாவினர்: எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு

தினகரன் ஆதரவு எம்பிக்கள் 3 பேர் அணி தாவினர்: எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு

அதிமுகவில் அடுத்தடுத்து ஏற்படும் பரபரப்பால் எம்.பிக்கள் எம்.எல்.ஏக்கள் அணி தாவி வருகின்றனர். இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தினகரன் அணிக்கு ஏற்பட்ட பின்னடைவை அடுத்து அவரது அணியிலிருந்த மூன்று எம்பிக்கள் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு தாவினர். அதிமுக ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என இரண்டானது. தினகரன் தலைமையில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் செயல்பட்டு வந்த நிலையில் திடீரென தினகரன் ஓரங்கட்டப்பட்டார். பின்னர் ஓபிஎஸ் தனது ஆதரவு எம்.எல்.ஏ, எம்பிக்களுடன் எடப்பாடி அணியுடன் இணைந்தார். இதனால் தினகரன் அணி தனியாகவும், எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இணைந்து ஒரு அணியாகவும் இயங்கி வந்தனர். இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தினகரன் அணிக்கு ஏற்பட்ட…

Read More

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம்; யாருக்கும் ஆதரவு கிடையாது: விஜயகாந்த்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம்; யாருக்கும் ஆதரவு கிடையாது: விஜயகாந்த்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாகவும் யாருக்கும் ஆதரவில்லை என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக இன்று (செவ்வாய்க்கிழமை) விமானம் மூலம் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து அவரிடம் வினவினர் அதற்கு, “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிக்கிறது. இந்த தேர்தலில் நாங்கள் யாருக்கும் ஆதரவு கொடுக்கமாட்டோம். ஆர்.கே.நகரில் பணபலம் உள்ளவர்களே வெற்றி பெறுவார்கள். தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க மாலை 5 மணிக்கு மேல் பிரசாரம் செய்யத் தடை விதிக்க வேண்டும். அப்படி கட்டுப்பாடு விதித்தால், பணப்பட்டுவாடா செய்பவர்களே அந்தக் கட்டுப்பாட்டை விமர்சிப்பார்கள்” என்று கூறினார். வழக்கமான பரிசோதனை.. விஜயகாந்த் சிகிச்சை குறித்து சில…

Read More

ஜெ. நினைவு தினம் அனுசரிக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு

ஜெ. நினைவு தினம் அனுசரிக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிலதாவுக்கு டிசம்பர் 5-ல் நினைவு தினம் அனுசரிக்க தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 75 நாள் சிகிச்சைக்கு பிறகு கடந்த ஆண்டு டிசம்பர்.5-ம் தேதி காலமானார். அவரது உடல், மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடம் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில், நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். அதற்கு ரூ.15 கோடி ஒதுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதன்பின், தமிழக முதல்வராக பொறுப்பேற்ற கே.பழனிசாமி, ஜெயலலிதா நினைவு மண்டபம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். வரும் டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதாவின்…

Read More

இராகாலயம் இசைக் கல்லூரியின்; 16வது ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது

இராகாலயம் இசைக் கல்லூரியின்; 16வது ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது

கனடாவில் கடந்த 16 ஆண்டுகளாக இயங்கிவரும் இராகாலயம் இசைக் கல்லூரியின் 16வது ஆண்டு விழா கடந்த சனிக்கிழமையன்று ஸ்காபுறோ பெரிய சிவன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. பல மாணவ மாணவிகளின் இனிதான இசை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. பல்வேறு துறை சார்ந்த பிரமுகர்கள் அங்கு கலந்து கொண்டு மாணவ மாணவிகளையும் கல்லூரியின் அதிபரையும் வாழ்த்திச் சென்றனர். இங்கே காணப்படும் படத்தில் விழாவிற்கு பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வர்த்தகப் பிரமுகர் திரு சுதர்சன் மற்றும் அவரது பார்pயார் திருமதி திவா சுதர்சன் ஆகியோர் மேடையில் கல்லூரி அதிபர் திரு ரவீந்திரன் மற்றும் அவரது பாரியார் ஆகியோரால் கௌரவிக்கப்படுவதைக் காணலாம். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கனடா…

Read More

பல் வைத்தியர் டாக்டர பவித்ரா நந்தீஸ்வரர் அவர்களது Sandhurst Family Dental Clinic இனது திறப்பு விழா

பல் வைத்தியர் டாக்டர பவித்ரா நந்தீஸ்வரர் அவர்களது Sandhurst Family Dental Clinic இனது திறப்பு விழா

பல்வைத்திய நிபுணர் டாக்டர பவித்ரா நந்தீஸ்வரர் அவர்களது Sandhurst Family Dental Clinic இனது திறப்பு விழா கடந்த சனிக்கிழமை 18ம் திகதி மதியம் 1001 Sandhurst Circle, UNit 207, Scarborough என்னும் விலாசத்தில இடம்பெற்றது. எமது பாராளுமன்ற உறுப்பினர் திரு ஹரி ஆனந்தசங்கரி நாடாவை வெட்டி நிறுவனத்தைத் திறந்து வைத்தார். பல வைத்திய நிபுணர்கள் நண்பர்கள் மற்:றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் அங்கு சமூகமளித்தார்கள். மிகவும் திட்டமிட்ட முறையில் நடத்தப்பெற்ற மேற்படி திறப்பு விழாவில் எடுக்கப்பட்ட படங்களை இங்கே காணலாம். வாழ்த்துக்களைத் தெரிவிக்க 416 299 1020 அல்லது 416 496 9595 ஆகிய இலக்கத்தை அழைக்கவும்

Read More

மைத்திரி அரசாங்கத்தின் “குரலாக” ஒலிக்கும் சுமந்திரனின் சவால்களுக்;கு சவாலாக எழுந்துள்ள மற்றுமொரு யாழ் சட்டத்தரணி சுகாஸ்

மைத்திரி அரசாங்கத்தின் “குரலாக” ஒலிக்கும் சுமந்திரனின் சவால்களுக்;கு சவாலாக எழுந்துள்ள மற்றுமொரு யாழ் சட்டத்தரணி சுகாஸ்

சுமந்திரன் என்னும் ஒரு சட்டத்தரணி, பல ஆண்டுகளுக்கு முன்னர் அரசியலுக்கு வருவதற்கு விரும்பினார். அதற்குக் காரணம், அவரது சட்டக்கல்லூரி மாணவ நண்பர்கள் பலர் அவரிடம் பல தடவைகள் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டார்களாம். “சட்டத்தை நன்கு கற்றுக்கொண்டு விவாதிக்கும் ஆற்றலும் கொண்டவர் நீங்கள். எனவே அரசியலுக்குள் பிரவேசியுங்கள்” என்றார்களாம் நண்பரகள். முதலில் தமிழர் தரப்பில் முயன்ற அவர் அதில் தோல்வி கண்டு “குள்ளநரி” ரணிலிடம் சென்றாராம். கொழும்பில் ஏதாவது தொகுதியில் போட்டியிட விரும்பிய அவருக்கு அறிவுரைகள் பல சொல்லிய ரணில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடாக அரசியலுக்குள் வந்தால் “நன்மைகள்” பல உண்டு என்று உற்சாகப்படுத்தி அதற்கா பரிந்துரைகள் கூட சம்பந்தப்பட்டவர்களிடம் செய்தாராம். இவ்வாறு தமிழர் அரசிலுக்குள் வந்த…

Read More

எகிப்து மசூதியில் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 155 ஆக உயர்வு

எகிப்து மசூதியில் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 155 ஆக உயர்வு

வடக்கு செனாய் பகுதியில் மசூதியில் பயங்கரவாதிகள் வெடிகுண்டை வெடிக்க செய்து உள்ளனர், துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி உள்ளனர். பாதுகாப்பு படை ஆதரவாளர்கள் தொழுகையில் ஈடுபட்ட போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர் என பாதுகாப்பு படை தகவல்கள் தெரிவித்து உள்ளது. அல்-ரவுடாக் மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 75 பேர் காயம் அடைந்து உள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவித்து உள்ளது. இதற்கிடையே தாக்குதலில் 155 பேர் உயிரிழந்து உள்ளனர் எனவும் அந்நாட்டு மீடியா தகவல்கள் தெரிவிக்கிறது. மருத்துவமனைகளில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலி எண்ணிக்கை உயரலாம் எனவும் அஞ்சப்படுகிறது. வடக்கு செனாயில் ஐ.எஸ். ஊடுருவல்காரர்களுடன்…

Read More

இந்திரஜித்: சினிமா விமர்சனம்

இந்திரஜித்: சினிமா விமர்சனம்

தயாரிப்பாளர் எஸ். தாணுவின் மகன் கலாபிரபு, சக்கரக்கட்டி படத்திற்குப் பிறகு இயக்கியிருக்கும் திரைப்படம் இது. ஒரு தொன்மையான அதிசயப் பொருளை ஆய்வாளர்கள் தேடிச் செல்வது போன்ற சாகசக் கதை என்று கூறப்பட்டிருந்ததாலும் ட்ரைலர் சற்று வித்தியாசமாக இருந்ததாலும் கொஞ்சம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக சூரியனிலிருந்து தெறித்துவரும் ஒரு பொருள் பூமியில் வந்து விழுகிறது. அந்தப் பொருளுக்கு காயங்களையும், நோய்களையும் குணப்படுத்தும் சக்தி இருப்பதால் சித்தர்கள் அதை ஒரு ரகசிய இடத்தில் வைக்கிறார்கள். அவர்கள் காலத்திற்குப் பிறகு அந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்பது தெரியாமலேயே போய்விடுகிறது. கோவாவில் உள்ள ஒரு வரலாற்றுப் பேராசிரியர் அந்தப் பொருளைத் தேட ஆரம்பிக்கிறார். அவரிடம்…

Read More

இலங்கை: வடக்கு மாகாண சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பு

இலங்கை: வடக்கு மாகாண சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பு

உயிர் நீத்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண சபைக்குள் அஞ்சலி செலுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஈ.ஆனோல்ட் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாண சபையின் அமர்வு வியாழன்று நிறைவடையும் தருணத்தில், மாகாண சபை உறுப்பினர் ஈ.ஆனோல்ட்டினால், அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சபை ஒத்தி வைப்பு வேளையிலும் உயிர் நீத்த மாவீரர்களுக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ரோஹிஞ்சாக்களை திருப்பியனுப்ப மியான்மருடன் வங்கதேசம் ஒப்பந்தம் இலங்கை உள்ளாட்சி தேர்தல் தாமதம்: அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் எனினும், தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு அஞ்சலி…

Read More
1 301 302 303 304 305 425