ஜெயலலிதா இல்லமான போயஸ்கார்டனில் சோதனை நடத்தப்பட்டதில் சதி இருக்கிறது : டிடிவி தினகரன் பேட்டி

ஜெயலலிதா இல்லமான போயஸ்கார்டனில் சோதனை நடத்தப்பட்டதில் சதி இருக்கிறது : டிடிவி தினகரன் பேட்டி

போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்து வந்த வேதா இல்லத்தில் வருமான வரித்துறையினர் நேற்று திடீரென சோதனை நடத்தினர். வருமான வரித்துறை கூடுதல் இயக்குனர் தலைமையில் 10-க்கு மேற்பட்ட அதிகாரிகள் 4 மணிநேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டனர். நள்ளிரவு இந்த சோதனை முடிவுக்கு வந்தது. இந்த வருமான வரித்துறை சோதனை குறித்து கடும் விமர்சனம் செய்துள்ள டிடிவி தினகரன், இந்த சோதனைக்கு பின்னால் நிச்சயமாக அரசியல் சதி உள்ளது என்று தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் இன்று காலை அளித்த பேட்டி வருமாறு:- “ போயஸ் இல்லத்தில் உள்ள சசிகலாவின் அறையில் வருமான வரி சோதனை நடந்தது. சந்தேகத்தின் பேரில் சோதனை நடந்துள்ளது, சோதனை…

Read More

போயஸ் கார்டன் சோதனை: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வீடுகளுக்கு பாதுகாப்பு

போயஸ் கார்டன் சோதனை: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வீடுகளுக்கு பாதுகாப்பு

சசிகலா குடும்பத்தினரிடம் கடந்த 6 நாட்களாக வருமான வரி சோதனையும் அதை தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது. இந்த சோதனையின் ஒரு பகுதியாக நேற்று இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென்று ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடத்தினர். ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் அறையில் நடந்த இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது. போயஸ் கார்டனில் சோதனை நடைபெறும் தகவல் அறிந்ததும் அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டு வந்தனர். அவர்கள், ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினார்கள். அப்போது வருமான வரித்துறை, மத்திய அரசு மற்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இது…

Read More

மீனவர்களை தாக்கியது கடலோர காவல் படை துப்பாக்கி தோட்டாக்கள் அல்ல: நிர்மலா சீதாராமன் பேட்டி

மீனவர்களை தாக்கியது கடலோர காவல் படை துப்பாக்கி தோட்டாக்கள் அல்ல: நிர்மலா சீதாராமன் பேட்டி

ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான தாக்குதலை இந்திய கடலோர காவல்படையே ஒப்புக்கொண்ட நிலையில் “துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்டது கடலோர காவற்படை பயன்பாட்டில் உள்ள தோட்டாக்கள் அல்ல” என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னையில் தொழில் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: கடலோர காவல் படையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது பற்றி? “கோஸ்ட் கார்ட் தலைவரைக் கேட்டேன், எங்களிடம் அப்படிப்பட்ட தோட்டாவே இல்லை. பிறகு எப்படி நாங்கள் மீனவர்கள் மீது பிரயோகித்திருக்க முடியும் என்று கேட்கிறார். அப்படிப்பட்ட தோட்டாக்களை நீங்கள் சப்ளை செய்கிறீர்களா? என்று பாதுகாப்புத்துறையை பார்த்து…

Read More

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் நேற்றிரவு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சசிகலா குடும்பத்தினர், அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 9-ம் தேதி முதல் தொடர் சோதனை மேற்கொண்டனர். தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா என 3 மாநிலங்களில் 187 இடங்களில் 1800-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தினர். நாட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனைகளில் இது மிகப்பெரியது எனக் கூறப்படுகிறது. குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் கடந்த 13-ம் தேதி வரை சோதனை நீடித்தது. இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் சசிகலாவின் உறவினர்களான விவேக்…

Read More

சிறையில் உள்ள சசிகலா- இளவரசியிடம் விசாரணை வருமான வரித்துறை தீவிரம்

சிறையில் உள்ள சசிகலா- இளவரசியிடம் விசாரணை வருமான வரித்துறை தீவிரம்

வருமானவரித்துறை சோதனையை சட்டப்படி எதிர்கொள்வது குறித்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் வழக்கறிஞர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழகத்தில் சசிகலா உறவினர்களின் இல்லம் மற்றும் நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ், ஜாஸ் சினிமாஸ், ஜெயா டிவி சிஇஓ விவேக் வீடு மற்றும் அலுவகங்கள், தினகரன் வீடுகள், திவாகரன் வீடுகள் உள்ளிட்ட 187 இடங்களில் ஒரே சமயத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 6 வருமான வரித்துறை அதிகாரிகளின் தலைமையில் 1,800 அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டனர். 5 நாள் சோதனையில் சிக்கிய பல சொத்து ஆவணங்களில், சசிகலா ஒரு பங்குதாரராக இருப்பதை வருமான வரி துறை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். இது…

Read More

தேர்தல் பணப்பட்டுவாடா ஆவணங்கள் சிக்கியதாக தகவல்: கோடநாடு மேலாளரிடம் 6 நாள் விசாரணை – திவாகரன், கிருஷ்ணபிரியாவுக்கு வருமான வரித்துறை சம்மன்

தேர்தல் பணப்பட்டுவாடா ஆவணங்கள் சிக்கியதாக தகவல்: கோடநாடு மேலாளரிடம் 6 நாள் விசாரணை – திவாகரன், கிருஷ்ணபிரியாவுக்கு வருமான வரித்துறை சம்மன்

சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு கர்ஸன் எஸ்டேட்டில் 6 நாட்களாக நடந்து வந்த வருமான வரித்துறை சோதனை நேற்று நிறைவடைந்தது. இந்த சோதனையின்போது சட்டப் பேரவைத் தேர்தலின்போது தொகுதிகளுக்கு பணப்பட்டுவாடா செய்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக எஸ்டேட் மேலாளரிடம் அதிகாரிகள் 6 நாட்களாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர். சசிகலா குடும்பத்தினர், அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் கடந்த 9-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் உள்ள 187 இடங்களில் 1,800-க்கும் அதிகமான அதிகாரிகள் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஒவ்வொரு நாளும் ஒரு சில இடங்களில் சோதனை நிறைவு பெற்றது. முக்கியமான…

Read More

ஓபிஎஸ், ஈபிஎஸ் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்த வேண்டும்: அன்புமணி பேட்டி

ஓபிஎஸ், ஈபிஎஸ் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்த வேண்டும்: அன்புமணி பேட்டி

சசிகலாவிற்கும், ஜெயலலிதாவிற்கும் சேவகர்களாக இருந்த ஓ.பன்னீர் செல்வம்,எடப்பாடிபழனிசாமி ஆகியோரும் வருமானவரித்துறை சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஈரோட்டில் நடைபெறும் செஸ் போட்டியினை துவக்கி வைக்க சென்ற பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ”ஈரோட்டில் நடைபெறும் செஸ் போட்டியினை தொடங்கி வைக்க வந்திருக்கிறேன், தமிழக அரசு செஸ் விளையாட்டு போட்டிகளை ஊக்கப்படுத்த வேண்டும். மேலும் ஜெயலலிதா வழிப்படி ஆட்சி நடத்துவதாக கூறிக்கொண்டு மூடிய டாஸ்மாக் கடைகளை தற்போதைய ஆட்சி திறந்து கொண்டு இருக்கின்றது விரைவில் இதற்காக மக்களை மற்றும் பெண்களை திரட்டி போராட்டம் நடத்த உள்ளோம்….

Read More

டி.டி.வி.தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் திடீர் ஆலோசனை

டி.டி.வி.தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் திடீர் ஆலோசனை

சசிகலாவின் தம்பி திவாகரன், உறவினர்கள் டி.டி.வி.தினகரன், இளவரசி யின் மகனும், ஜெயா டி.வி.யின் தலைமை செயல் அதிகாரியுமான விவேக், இளவரசியின் மகள்கள் கிருஷ்ணபிரியா, சகிலா மற்றும் உறவினர்கள் வீடு உள்பட மொத்தம் 187 இடங் களில் இந்த சோதனை நடந்தது. சென்னை மட்டும் அல்லாமல் திருச்சி, தஞ்சை, மன்னார்குடி உள்ளிட்ட நகரங்களில் உள்ள சசிகலா உறவினர் வீடுகளிலும் சோதனை நடந்தது. இது தொடர்பாக விசாரணைக்காக வருமான வரித்துறை அவர்கள் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களையும் சென்னைக்கு வரவழைத்து திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்படாத மேலும் 3…

Read More

இலங்கையில் மூத்த பத்திரிகையாளர் கோபு காலமானார்

இலங்கையில் மூத்த பத்திரிகையாளர் கோபு காலமானார்

இலங்கையில் மூத்த தமிழ் பத்திரிகையாளரான கோபு எனப்படும் எஸ்.எம். கோபாலரெத்தினம் இன்று புதன்கிழமை 87-வது வயதில் மட்டக்களப்பில் காலமானார். தமிழ் பத்திரிகை துறையில் 1953-ஆம் ஆண்டு வீரகேசரி நாளிதழில் ஒப்பு நோக்குநராக இணைந்து கொண்ட இவர் அதே ஆண்டில் உதவி ஆசிரியரானார். 1960-ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வெளிவந்த ‘ஈழநாடு’ நாளிதழில் செய்தி ஆசிரியராக இணைந்து கொண்ட அவர், அந்தப் பத்திரிகையின் ஆசிரியராக உயர்வு பெற்று 20 வருடங்களுக்கு மேல் அந்நிறுவனத்தில் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் வெளியான காலைக்கதிர், செய்திக்கதிர் , ஈழமுரசு ஆகிய பத்திரிகைகளிலும் ஆசிரியராக பணியாற்றி இறுதியாக 2000-ஆம் ஆண்டு மட்டக்களப்பில் வெளியான ” தினக்கதிர் ” நாளிதழ் ஆசிரியராக இணைந்து சில…

Read More

போதைப்பொருள் அச்சுறுத்தல் பயங்கரவாதத்தை விட பெரிய சவாலாக உள்ளதாக ஜம்மு காஷ்மீர் டிஜிபி எஸ்.பி

போதைப்பொருள் அச்சுறுத்தல் பயங்கரவாதத்தை விட பெரிய சவாலாக உள்ளதாக ஜம்மு காஷ்மீர் டிஜிபி எஸ்.பி

ஜம்மு காஷ்மீர் மாநில டிஜிபி எஸ்.பி.வெய்ட் செய்தியார்களிடம் கூறியதாவது: போதைப்பொருள் அச்சுறுத்தல் பயங்கரவாதத்தை விட பெரிய சவாலாக உள்ளது. இந்த வருடம் போதைபொருள் கடத்தல் சட்டப்பிரிவின் கீழ் 667 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 542 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நான் பணியில் சேர்ந்த போது போதைபொருளுக்கு எதிராக போரை அறிவித்தேன். மருந்துகள் மூலம் போதைப்பொருட்கள் செலுத்தபடுகின்றன. போலீஸ் மட்டும் இதனை தனியாக எதிர்த்து போராட முடியாது. ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் மருந்துகள் மூலம் போதைபொருட்கள் செலுத்தப்படுகின்றன. அதனை இயக்குவது யார் யார் என்று தெளிவாக தெரியவந்துள்ளது. போதை பொருள் அச்சுறுத்தலில் இருந்து எல்லோரும் இணைந்து இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தை…

Read More
1 303 304 305 306 307 425