போக்குவரத்துக் கழகங்களை மூட தயாராகிறதா அரசு?- அன்புமணி

போக்குவரத்துக் கழகங்களை மூட தயாராகிறதா அரசு?- அன்புமணி

மின்வாரியக் கடன்சுமையை குறைக்க உதய் திட்டத்தை செயல்படுத்தியது போன்று, அரசுப் போக்குவத்துக் கழகங்களின் கடன் சுமையையும் அரசே ஏற்கும் வகையில் புதியத் திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும். போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு வழங்க வேண்டிய அனைத்து நிலுவைகளையும் வழங்க வேண்டும். அத்துடன் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகத்தை சீரமைத்து, அனைத்து போக்குவரத்துக் கழகங்களையும் லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பொருளாதார நிலை குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன. அரசுப்…

Read More

யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் சென்னை: மக்களுக்கு பிரதமர், முதல்வர் வாழ்த்து

யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் சென்னை: மக்களுக்கு பிரதமர், முதல்வர் வாழ்த்து

யுனெஸ்கோ படைப்பாக்க நகரங்கள் தொடரமைப்பு பட்டியலில் சென்னை சேர்க்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை மாநகர மக்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நமது உயர்ந்த கலாச்சாரத்தில் சென்னையின் பங்களிப்பு மிகவும் மதிப்பானது. யுனெஸ்கோ தனது படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் சென்னையை சேர்த்துள்ளது. இது இந்தியாவுக்கு பெருமை தரக்கூடிய தருணம். சென்னை மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். பிரதமரின் இந்த வாழ்த்துக்கு முதல்வர் கே.பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த 2004-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு, படைப்பாற்றலை காரணியாகக் கொண்டு நிலையான வளர்ச்சியை எய்திட…

Read More

வருமான வரி சோதனைகளால் அஞ்சிவிட மாட்டேன்; மத்திய அரசின் சதி எடுபடாது: டிடிவி தினகரன்

வருமான வரி சோதனைகளால் அஞ்சிவிட மாட்டேன்; மத்திய அரசின் சதி எடுபடாது: டிடிவி தினகரன்

சென்னையில் உள்ள ஜெயா டிவி அலுவலகம், சசிகலாவின் உறவினர்கள் ஆதரவாளர்கள் வீடுகளில் இன்று (நவ.9) காலை முதல் வருமான வரித் துறையினர் சோதனை நடத்திவரும் நிலையில், இந்த சோதனைக்குப் பின்னணியில் மத்திய அரசு இருப்பதாக அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இன்று காலை முதல் 150 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை அடையாறில் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், பல்வேறு கேள்விகளுக்கும் பதில அளித்தார். “எனது வீட்டில் எந்த சோதனையும் நடைபெறவில்லை. காலை 8.30 மணியளவில் அதிகாரி ஒருவர் எங்கள் வீட்டுக்கு வந்தார். ஆனால், அவரும் சற்று நேரத்தில் புறப்பட்டுச் சென்றுவிட்டார். திரும்பி…

Read More

நான் மதம் மாறவில்லை: வைகோ மறுப்பு

நான் மதம் மாறவில்லை: வைகோ மறுப்பு

மதிமுக பொதுச் செயலாளார் வைகோ தான் கிறித்துவத்துக்கு மதம் மாறவில்லை என்று தெரிவித்துள்ளார். மதபோதகர் மோகன் சி.லாசரஸ் ஒரு கூட்டத்தில் வைகோ கிறித்துவத்துக்கு மதம் மாறிவிட்டதாகவும், தினமும் இருமுறை பைபிள் வாசிப்பதாகவும் தெரிவித்திருந்தார். அவர் பேசிய அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டது. அந்த வீடியோவில் லாசரஸ் குறிப்பிட்டுள்ளதைக் குறித்து கேட்டபோது, வைகோ “நான் கிறித்துவனல்ல. நான் எல்லா மதங்களையும் மதிக்கிறேன். எனது மருமகளின் பூஜையறையில் எல்லா தெய்வங்களின் உருவங்களும் இருக்கும்” என்றார். லாசரஸ் பேசும் வீடியோவில், வைகோவும் அவரது குடும்பத்தாரும் கிறித்துவர்களாக மாறிவிட்டதாகவும், இயேசுவின் சேவைக்கு அவர்கள் தம்மை அர்பணித்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். “அவரது மகளும், மாப்பிள்ளையும் கிறித்துவர்கள். அவர்கள் அமெரிக்காவில் உள்ளனர்….

Read More

இப்படை வெல்லும்

இப்படை வெல்லும்

ஐடி துறையில் வேலைபார்த்து, பிறகு பணியிழந்த மதுசூதனன் (உதயநிதி) பார்கவியைக் (மஞ்சிமா மோகன்) காதலித்து வருகிறான். இந்தக் காதலுக்கு காவல்துறை அதிகாரியான பார்கவியின் அண்ணன் (ஆர்.கே. சுரேஷ்) எதிர்ப்புத் தெரிவிக்கிறார். இதனால், பார்கவியும் மதுசூதனனும் பதிவுத் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். இதற்கிடையில் சிறையிலிருந்து தப்பிய சோட்டா (டேனியல் பாலாஜி) என்ற தீவிரவாதி சென்னையின் பல இடங்களில் குண்டுவெடிப்புகளை நடத்தத் திட்டமிடுகிறான். திரைப்படம் இப்படை வெல்லும் நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், சூரி, ஆர்.கே. சுரேஷ், டேனியல் பாலாஜி,ராதிகா, எம்.எஸ். பாஸ்கர், ரவி மரியா இசை டி. இமான் இயக்கம் கௌரவ் சோட்டாவை யதேச்சையாக சந்திக்கும் மதுசூதனனும் குழந்தைவேலு (சூரி) என்ற டப்பிங் கலைஞரும் காவல்துறையால்…

Read More

சசிகலாவின் கணவர், குடும்பத்தினர் வீடுகளில் ஐடி ரெய்டு

சசிகலாவின் கணவர், குடும்பத்தினர் வீடுகளில் ஐடி ரெய்டு

தமிழ்நாட்டில் மட்டும் 105 இடங்களில் சோதனை நடக்கிறது.சென்னையில் 20 இடங்கள், திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 12 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. இந்த சோதனையில் வருமான வரி ஆணையர்கள் 6 பேர் உட்பட 1,800 அதிகாரிகள் ஈடுபட்டனர். ஒவ்வொரு இடத்திலும் 5 முதல் 10 பேர் வரை இடம்பெற்றனர். கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 1000 அதிகாரிகள் வந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். SRINI weds MAHI என்ற பெயரில் திருமணத்திற்கு செல்வதுபோல் சோதனைக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர். * சென்னையில் அடையாறில் உள்ள தினகரன் வீடு, * ஈக்காடு தாங்கலில் உள்ள…

Read More

நடனச் செல்வி டெனிசியா பறறிக் அவர்களின் பரதநாட்டிய அரஙகேற்றம்

நடனச் செல்வி டெனிசியா பறறிக் அவர்களின் பரதநாட்டிய அரஙகேற்றம்

கனடா மிசிசாகா நகரில் அமைந்துள்ள மெடோவேல் தியேட்டர் மண்டபத்தில் நடைபெற்ற நடனச் செல்வி டெனிசியா பறறிக் அவர்களின் பரதநாட்டிய அரஙகேற்றம் மிகவும் சிறப்பாக நிறைவுறும் வரையில் நகர்ந்து சென்றது. சிலம்பொலி சேஸ்த்திர நாட்டியப் பள்ளியின் ஸ்தாபகர் மற்றும் முதன்மைக் குரு ஶ்ரீமதி ஜனனி குமார் அவர்களின் மாணவியான நடனச் செல்வி டெனிசியா பற்றிக் சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக தனது குருவிடம் கற்ற வித்தைகளையும் நடன நுட்பங்களையும் இன்று மண்டபத்தை நிறைத்திருந்த சபையோர் முன்பாக சமர்பபித்தார். தமிழ் மொழி அறிவிப்பாளராக “தமிழழகன்” மதியழகன் பணியாற்றினார். ஆங்கில அறிவிப்பாளராக பணியாற்றிய செல்வி Yaalini Vijayakumar யும் சிறப்பாக தனது ப ணியைச் செய்தார். சிலம்பொலி சேஸ்த்திர நாட்டியப்…

Read More

ஆக்கிரமிப்புகளால் சென்னை புறநகரில் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

ஆக்கிரமிப்புகளால் சென்னை புறநகரில் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளால் 8 நாட்களாக தேங்கி இருக்கும் நீர் வெளியேறுவதில் சிக்கல் நீடிக்கிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் கடந்த 31-ந்தேதியில் இருந்து மழை பெய்து வருகிறது. முதல் 2 நாட்கள் நல்ல மழை பெய்தது. அதன்பின்னர், விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீ புரம் ஆகிய மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் பெருநகர சென்னை மாநகராட்சி, ஊராட்சி, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை என தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. கடந்த…

Read More

தமிழகத்தில் 2018 பிப்ரவரி வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் 2018 பிப்ரவரி வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தொகுதி மறுவரையறை பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் தமிழகத்தில் 2018 பிப்ரவரி வரை உள்ளாட்சித் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து கடந்த ஆண்டு அக்டோபரில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், இடஒதுக்கீடு தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடுத்த வழக்கு காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனிஅதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. அந்த வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் செப்டம்பர் 18-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல்…

Read More

மன்மோகன் சிங் பணமதிப்பு நீக்கத்தை விமர்சிப்பது வேதனையளிக்கிறது: நிர்மலா சீதாராமன்

மன்மோகன் சிங் பணமதிப்பு நீக்கத்தை விமர்சிப்பது வேதனையளிக்கிறது: நிர்மலா சீதாராமன்

மற்றவர் இயக்கும் கருவியாக இருந்து ஆட்சியை நடத்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பணமதிப்பு நீக்கத்தை விமர்சிப்பது வேதனையளிக்கிறது என நிர்மலா சீதாராமன் கூறினார். சென்னையில் பேட்டியளித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பணமதிப்பு நீக்க நடவடிக்கை திட்டமிட்ட திருட்டு, சட்டபூர்வ பணக்கொள்ளை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளாரே? பணமதிப்பு நீக்க நடவடிக்கை திட்டமிட்ட திருட்டு என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வர்ணித்து இருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. அவர் பிரதமராக இருந்தபோது தான் பல்வேறு துறைகளிலும் பெரும் ஊழல்கள் நடந்தன. நிலக்கரி சுரங்க ஊழல், ஹெலிகாப்டர் பேர ஊழல் என…

Read More
1 305 306 307 308 309 425