விஷால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது ஏன்?- தேர்தல் ஆணையம் விளக்கம்

விஷால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது ஏன்?- தேர்தல் ஆணையம் விளக்கம்

ஆர்.கே.நகரில் போட்டியிடுவதாக இருந்த விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 11.15 மணியளவில் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அதிகாரபூர்வமாக அறிவித்தார். இது தொடர்பாக ஆ.கே.நகரின் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி இரண்டு பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விஷால் கிருஷ்ணாவின் வேட்புமனுவை நாங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டோம். அவரது வேட்புமனுவை 10 பேர் முன்மொழிந்திருந்தனர். அதில் சுமதி, அதை தீபன் ஆகியோர் விஷாலை பரிந்துரைத்து முன்மொழிந்தனரா என்பதில் சலசலப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக வேட்புமனு பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், விஷாலின் வேட்புமனுவை முன்மொழிந்த சுமதி, தீபன் ஆகியோர் வேட்புமனுவில் இருப்பது தங்கள் கையெழுத்து இல்லை என நேரில் தெரிவித்தனர். மாலையில் சில ஆடியோ ஆதாரங்களை என்னிடம்…

Read More

நடிகர் விஷால் மனு நிராகரிப்பு ஜெ.தீபா உள்பட 73 மனுக்களும் தள்ளுபடி

நடிகர் விஷால் மனு நிராகரிப்பு ஜெ.தீபா உள்பட 73 மனுக்களும் தள்ளுபடி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி தலைமையில் இந்த பரிசீலனை நடந்தது. பிற்பகல் 2.15 மணியளவில் நடிகர் விஷாலின் மனு மீதான பரிசீலனை நடைபெற்றது. வேட்பு மனு பரிசீலனை யின்போது சுயேச்சை வேட்பாளர்கள் தினேஷ், பிரேம்குமார் உள்ளிட்டோர் எழுந்து, ‘விஷால் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் முன்மொழிந்தவர்களின் கையெழுத்துகள் போலியாக போடப்பட்டு இருப்பதாகவும், அவர் மீது உள்ள வழக்கு தொடர்பான விவரத்தை குறிப்பிடவில்லை என்றும், வங்கி கணக்கு தொடர்பான விவரங் கள் சரியாக குறிப்பிடவில்லை என்றும் குற்றஞ்சாட்டினர். எனவே, விஷால் மனுவை நிரா கரிக்க வேண்டும் என்றும் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து…

Read More

“நேத்ரா” என்னும் திரைபபடத்திற்கான (AUDIO LAUNCH)

“நேத்ரா” என்னும் திரைபபடத்திற்கான (AUDIO LAUNCH)

SWETHA CINE ARTS (CANADA) ENTERPRISES என்னும் கனடிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த “நேத்ரா” என்னும் திரைபபடத்திற்கான (AUDIO LAUNCH) பாடல்கள் வெளியீடு கனடாவில் இன்று, டிசம்பர் மாதம் 2ம் திகதி ஸகாபுறோ ஆர்மேனியன் மண்டபத்தில் இலவச நிகழ்வாக நடைபெறறதது இந்த புதுமையான நிகழ்வினைச் சிறப்பிக்கவென நேத்ரா திரைப்படத்தின் இயக்குனர் ஏ. வெங்கடேஸ் மற்றும் இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா மற்றும் கதாநாயகன் தமன் ஆகியோர் கனடாவிற்கு வருகை தந்திருந்தார்கள். . அக்னி இசைக்குழுவின் அட்டகாசமான இசையில் இசைச் சக்கரவர்த்தி தேவாவின் புதல்வர் ஶ்ரீகாந்த் தேவாவின் இசையில் நேத்ரா திரைப்படத்தின் பாடல்களைக் கேட்டு மகிழவும், மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்கள்வத்ர்த்தகப் பிரமுகர்கள் ஆகியோர் நிறைந்து…

Read More

பிரிட்டன் பிரதமரை கொல்ல முயன்ற சதி முறியடிப்பு

பிரிட்டன் பிரதமரை கொல்ல முயன்ற சதி முறியடிப்பு

லண்டன் – பிரிட்டன் பிரதமர் தெரசா மே-வை கொல்ல முயன்ற சதி முறியடிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்நாட்டு மீடியாக்களில் வெளியான செய்தி: ஐ.எஸ். அமைப்பு மீது நாட்டம் கொண்ட பயங்கரவாதிகள், லண்டனின் டவுனிங் தெருவில் உள்ள வீட்டிற்குள் பிரிட்டன் பிரதமர் தெரசா மே நுழையும் முன்னர் ஐ.இ.டி., வெடிமருந்துகள் மூலம் தாக்குதல் நடத்தி கொல்ல திட்டம் தீட்டியிருந்தனர். இந்த சதி, பல வாரங்களாக பயங்கரவாதிகளை கண்காணித்ததை தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் கீழ், லண்டனின் வடக்கு பகுதியில் ஜகாரியா ரஹ்மான்(20) என்பவரும், தென் கிழக்கு பிர்மிஹ்ஹாம் பகுதியை சேர்ந்த அகிப் இம்ரான்(21) ஆகியோர் கடந்த நவ.,28 ல் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இன்று…

Read More

தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் தமிழ் வளர் மையங்கள் அமைக்கப்படும்: தென் ஆப்ரிக்காவில் அமைச்சர் பாண்டியராஜன் உறுதி

தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் தமிழ் வளர் மையங்கள் அமைக்கப்படும்: தென் ஆப்ரிக்காவில் அமைச்சர் பாண்டியராஜன் உறுதி

தென்ஆப்ரிக்காவின் டர்பன் நகரில், 4-வது உலகத்தமிழர் பொருளாதார மாநாடு நடந்தது. இதில், மொரிஷியஸ் துணை அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி, இந்தியா, சிங்கப்பூர், மலேஷியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளின் தமிழ் அமைப்புகள், வர்த்த அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தமிழகம் சார்பில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: வாணிபம் என்பது தமிழர்கள் ரத்தத்தில் கலந்த ஒன்று. திரைக்கடலோடியும் திரவியம் தேடு என்ற பொன்மொழிக்கு இணங்க, பலநாடுகளுக்கும் சென்ற நமது முன்னோர் வாணிபம், தொழில்களில் ஈடுபட்டனர். இன்று உலகில் உள்ள 155 நாடுகளில் 9.81 கோடி தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒரு மூலதன…

Read More

‘ஒக்கி’ புயல் தாண்டவம்: 4 நாட்களாகியும் கரை திரும்பாத குமரி மீனவர்கள்; கண்ணீருடன் சாலை மறியல் செய்த உறவினர்கள்

‘ஒக்கி’ புயல் தாண்டவம்: 4 நாட்களாகியும் கரை திரும்பாத குமரி மீனவர்கள்; கண்ணீருடன் சாலை மறியல் செய்த உறவினர்கள்

கடலுக்குச் சென்ற மீனவர்கள் நான்கு நாட்களாகியும் இன்னும் வீடு திரும்பவில்லை என்றும், அவர்களை விரைவில் கண்டுபிடித்துத் தரக்கோரியும் குமரி, சின்னத்துறை மாநில நெடுஞ்சாலையில் மீனவர் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையில் உள்ள மீனவர் கிராமம் சின்னத்துறை. அங்குள்ள மீனவர் குடும்பங்கள், ”கடலில் மாயமான நூற்றுக்கணக்கான மீனவர்கள் இன்னும் வீடு வந்து சேரவில்லை, காணாமல் போனவர்கள் குறித்த முறையான தகவல் கிடைக்கவில்லை, கடலோர காவல்படையின் தேடுதலில் தங்களுக்குத் திருப்தி இல்லை. மீனவர்களுக்குத் தரப்பட்டுள்ள பிரத்யேக எண் அடிப்படையில் தேடுவது குறித்து கடலோர காவல்படையினர் பரிசீலிக்கவில்லை” உள்ளிட்ட புகார்களை முன்வைத்து சின்னத்துறை மாநில நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ்…

Read More

புத்தூர் கிழக்கைசேர்ந்த 6 வயதுடையசயந்தன் பாஸ்கரனின் உயிர் காக்கும் நோக்கத்துடன்நிவாரணம் செந்தில் குமரன் சேகரித்த நிதி

புத்தூர் கிழக்கைசேர்ந்த 6 வயதுடையசயந்தன் பாஸ்கரனின் உயிர் காக்கும் நோக்கத்துடன்நிவாரணம் செந்தில் குமரன் சேகரித்த நிதி

புத்தூர் கிழக்கைசேர்ந்த 6 வயதுடையசயந்தன் பாஸ்கரனின் உயிர் காக்கும் நோக்கத்துடன் கடந்தஒக்டோபர் 18, 24, 25 ஆகியதிகதிகளில் கனடாகந்தசுவாமிஆலயத்தில் பக்தர்கள் அளித்தநன்கொடையின் மூலம் சேர்க்கப்பட்டநிதியான 5041.55 டாலர்கள்அவரின் இருதய சத்திரசிகிச்சைக்கு பயன்படப் போகிறதென்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். இதற்கு பெருமனதோடு ஒத்துழைப்பு நல்கி உதவி புரிந்த ஆலய நிர்வாக சபைக்கும்,அதன்; தலைவர் திருமுத்து அவர்களுக்கும்,தாங்கள் கொண்டு வந்த தொகை பெரிதோ சிறிதோ அதை அப்படியே அள்ளித் தந்த முருகனின் அடியார்களுக்கு அந்த குடும்பத்தின் சார்பில் உளம் நிறைந்த நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம். இந்த நிதி சேர்ப்பில் எனக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி! பின்குறிப்பு: இன்னும் பல ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் சிகிச்சைக்கு பணமின்றி…

Read More

பிறிமாடான்ஸ் நிறுவனம் வழங்கும் சமூகப் பார்வையுள்ள“தடைகளைத் தாண்டி”நாடகம்

பிறிமாடான்ஸ் நிறுவனம் வழங்கும் சமூகப் பார்வையுள்ள“தடைகளைத் தாண்டி”நாடகம்

கடந்தபலஆண்டுகளாககனடாவில் இளையதலைமுறைநடனக் கலைஞர்களை உருவாக்கிவரும் பிறிமாடான்ஸ் நிறுவனம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 3ம் திகதிமாலை 6.00 மணிக்குசமூகப் பார்வையுள்ள“தடைகளைத் தாண்டி”என்னும் நாடகத்தை மேடையேற்றுகின்றது. அன்றையதினம் ஸ்காபுறொவில் உள்ள மெற்றோபொலிட்டன் மண்டபத்தில் நடைபெறவுள்ள மேற்படி நாடகத்தை திருவாளர்கள் குயின்றஸ் துரைசிங்கம்,இலியாஸ் மற்றும் செல்வி கீர்த்தி காதயா ஆகியோர் தயாரித்து வழங்குகின்றார்கள். எமது சமூகத்தில் காணப்படும் பல்வேறு வகையான பிரச்சனைகளை மையமாகக் கொண்டு நடத்தப்பெறும் இந்த நிகழ்விற்கான அனுமதிச் சீட்டுக்களை மண்டபவாசலிலும் பெற்றுக்கொள்ளலாம். இங்கே காணப்படும் படத்தில் நேற்று முன்தினம் மாலை பிறிமாடான்ஸ் நிறுவனத்தின் கலைக்கூடத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் எடுக்கப்பட்ட படங்களில் வர்த்தக நண்பர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் ஆகியோர் உட்படநாடகத்தில் பங்கெடுக்கும் ஆண் மற்றும் பெண் கலைஞர்களும்…

Read More

கனடா- இந்திய கூட்டுத் தயாரிப்பான “ஏண்டா தலையில என்ன வைக்கேல்ல” திரைப்படம் தமிழ்நாட்டிலும் கனடாவிலும் ஒரே நாளில் திரையிடப்படுகின்றது

கனடா- இந்திய கூட்டுத் தயாரிப்பான “ஏண்டா தலையில என்ன வைக்கேல்ல” திரைப்படம் தமிழ்நாட்டிலும் கனடாவிலும் ஒரே நாளில் திரையிடப்படுகின்றது

“ஏண்டா தலையில என்ன வைக்கேல்ல” திரைப்படம் ஒரு கனடா- இந்திய கூட்டுத் தயாரிப்பு. கனடாவின் யோகி அன்ட் பார்ட்னர்ஸ் நிறுவனம், திருமதி சுபா தம்பிப்பிள்ளை, டாக்டர் வாசுகி ஆசிர்வாதம் ஆகிய இரண்டு பெண்மணிகள் மற்றும் இசைப் புயல் ஏ. ஆர். ரஹ்மான் அவர்களின் சகோதரியும் இசையமைப்பாளருமான ஏ. ஆர். ரெஹேனா ஆகியோரின் கூட்டுத் தயாரிப்பில் வெளியாகவுள்ளது. தமிழ்நாட்டில் எதிர்வரும் டிசம்பர் 15ம் திகதி தொடக்கம் சுமார் 120 திரையரங்குகளில் திரையிடப்படவுள்ள இந்தத் திரைப்படம் கனடாவின் ஸ்காபுறோ நகரில் பின்ச்- மெக்கோவான் சந்திப்புக்கு அருகில் சரவணபவான் ஹோட்டலுக்கு அருகாமையில் உள்ள வூட்சைட் சினிமாவில் டிசம்பர் மாதம் 16ம் திகதி சனிக்கிழமையும் 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 4.00…

Read More
1 299 300 301 302 303 425