கார் சர்ச்சைகளுக்கு நடிகை அமலாபால் மறைமுகமாகப் பதிலடி

கார் சர்ச்சைகளுக்கு நடிகை அமலாபால் மறைமுகமாகப் பதிலடி

நடிகை அமலாபால் ரூ. 1.5 கோடி மதிப்பிலான பென்ஸ் காரை, புதுச்சேரியில் போலி முகவரி அளித்து பதிவு செய்தார். குறைந்த தொகையை சாலை வரியாகச் செலுத்தியுள்ளார் எனப் புகார் எழுந்தது. இதேபோல, புதுவையில் போலி முகவரி கொடுத்து விலை உயர்ந்த கார்களுக்கு குறைந்த சாலை வரியைச் செலுத்தி பலர் மோசடி செய்துள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த புதுச்சேரி போக்குவரத்து செயலருக்கும், காவல்துறை முதுநிலை எஸ்.பி.க்கும் கிரண் பேடி உத்தரவிட்டார். ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக புதுவை மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எப்.ஷாஜஹான் செய்தியாளர்களிடம் கூறும் போது போக்குவரத்துத் துறை சட்டவிதிகள்படி ஒருவர் ஒரு வாகனத்தை பதிவு…

Read More

அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல்- 8 பேர் பலி

அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல்- 8 பேர் பலி

நியூயார்க்: அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் அருகே பாதசாரிகள் செல்லும் பாதையில் கார் புகுந்து ஏற்படுத்திய விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளார், அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் அருகே உள்ள லோயர் மன்ஹாட்டன் பகுதியில் கார் ஒன்று பாதசாரிகள் செல்லும் ரோட்டில் தாறுமாறாக ஓடி பயங்கரவாத தாக்குதல் ஏற்படுத்தியது. இதில் 8 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பயங்கரவாத தாக்குதல் ஏற்படுத்திய நபர் காரில் இருந்து இறங்கி கையில் போலி துப்பாக்கியுடன் மக்களை மிரட்டியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை சுட்டு பிடித்துள்ளார். இது குறித்து நியூயார்க் மேயர் பேசுகையில் இச்சம்பவம் ஒரு பயங்கரவாத செயல் என்றும், இதில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாம் பிராத்தனை…

Read More

விடிய விடிய மழை சென்னை நகரில் வெள்ளப்பெருக்கு ; மழை விபத்துகளில் 3 பேர் பலி

விடிய விடிய மழை சென்னை நகரில் வெள்ளப்பெருக்கு ; மழை விபத்துகளில் 3 பேர் பலி

தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே மையம் கொண்ட வளிமண்டல மேலடுக்கு தொடர்ந்து நீடிப்பதால், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நேற்றிலிருந்து தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, சென்னை தாம்பரத்தில் அதிகபட்சமாக 18 செ.மீ மழையும், செம்பரம்பாக்கம் ஏரி அருகே 17.6 செ.மீ மழையும் பெய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மீனம்பாக்கத்தில் 16.9 செ.மீ மழையும், புழல் மற்றும் அண்ணா பல்கலைகழகத்தில் 14.5 செ.மீ மழையும் பெய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே தொடர் மழை காரணமாக பல இடங்களில் சாலையில் தண்ணீர் தேங்கியிருப்பதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒருநாள் பெய்த கனமழையால் சென்னை…

Read More

சிவில் சர்வீசஸ் தேர்வில் காப்பி அடித்த ஐ.பி.எஸ். அதிகாரியின் மனைவி ஐதராபாத்தில் கைது

சிவில் சர்வீசஸ் தேர்வில் காப்பி அடித்த ஐ.பி.எஸ். அதிகாரியின் மனைவி ஐதராபாத்தில் கைது

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சார்பில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 சிவில் சர்வீசஸ் பணிகளில் 985 பதவி இடங்களை நிரப்புவதற்கான முதன்மை தேர்வு கடந்த 28–ந்தேதி தொடங்கி 5–ந்தேதி வரை நடக்கிறது. சென்னை உள்பட நாடு முழுவதும் 24 நகரங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. ஐ.பி.எஸ். அதிகாரியான நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு சபீர் கரீமும் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்பதற்காக இந்த தேர்வை எழுதினார். எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் சபீர் கரீம் 28–ந்தேதி முதன்மை தேர்வை எழுதினார். தேர்வாளர்களை போலீசார் கடுமையாக சோதனை செய்தபின்னரே மையத்துக்குள் அனுமதிப்பார்கள். சபீர் கரீம் ஐ.பி.எஸ். அதிகாரி என்பதால் போலீசார்…

Read More

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு விசாரணை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு விசாரணை

தமிழக முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி மரணம் அடைந்தார். செப்டம்பர் மாதம் 22-ந் தேதி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் 75 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு மரணம் அடைந்தார். ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதிலும், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதிலும் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அ.தி.மு.க. தலைவர்கள் சிலரும் இந்த சந்தேகத்தை எழுப்பினார்கள். இதையடுத்து ஜெயலலிதா மரணத்தில் புதைந்துள்ள மர்மங்களை கண்டுபிடிக்க உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்த கோரிக்கையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொண்டு விசாரணை ஆணையத்தை அமைத்தார். சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி…

Read More

அடுத்த தேவர் ஜெயந்திக்குள் ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணி காணாமல் போகும் -டிடிவி தினகரன்

அடுத்த தேவர் ஜெயந்திக்குள் ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணி காணாமல் போகும் -டிடிவி தினகரன்

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கதேவரின் 110-வது ஜெயந்தி விழா மற்றும் 55-வது குருபூஜை கடந்த 28-ந்தேதி தொடங்கியது. முதல் நாள் விழா ஆன்மீக விழாவாகவும், 2-வது நாள் விழா அரசியல் விழாவாகவும் கொண்டாடப்பட்டது. இன்று தேவரின் குருபூஜை நடைபெற்றது. குருபூஜையை முன்னிட்டு காலையிலேயே ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக நினைவிடம் வந்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் ஜோதி ஏந்தி வந்தனர். நினைவிடம் மற்றும் தங்க கவசத்தில் ஜொலித்த முத்து ராமலிங்கதேவர் சிலைக்கு அஞ்சலி செலுத்தினர். பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் டிடிவி…

Read More

கனமழை சென்னையில் போக்குவரத்து நெரிசல்; பள்ளி மாணவர்களை முன்னதாக வீட்டுக்கு அனுப்ப உத்தரவு

கனமழை சென்னையில் போக்குவரத்து நெரிசல்; பள்ளி மாணவர்களை முன்னதாக வீட்டுக்கு அனுப்ப உத்தரவு

வட கிழக்கு பருவ மழை கடந்த வாரம் தொடங்கிய நிலையில் தென் மேற்கு வங்க கடலில் தமிழகத்தின் அருகே மேலடுக்கு சுழற்சி உருவானது. அது மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கை அருகே மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், சென்னை மற்றும் வட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் இன்று முதல் மழை தீவிரம் அடையும் என்றும் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி சென்னையில் இன்று அதிகாலை முதல் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் அனைத்துப் பகுதியிலும் மழை கொட்டியது….

Read More

திரைப்படத்தை திரைப்படமாக பாருங்கள்: மெர்சல் பட வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள் கருத்து

திரைப்படத்தை திரைப்படமாக பாருங்கள்: மெர்சல் பட வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள் கருத்து

மெர்சல் படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழை திரும்பப் பெறக்கோரிய வழக்கறிஞர் அஸ்வத்தமன் தொடர்ந்த பொது நல வழக்கு விசாரணையில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.சுந்தர் சரமாரி கேள்வி எழுப்பியதோடு, வழக்கைத் தள்ளுபடி செய்தனர். மெர்சல் படத்துக்கு ஒரே நாளில் சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்று மனுதாரர் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் பொது நல அக்கறை இருந்தால் திரைப்படத்தில் குடிப்பது போன்ற காட்சிகளுக்குத் தடை கோருவதற்கு வரலாம். மாற்றுத்திறனாளிகள் தவறாக சித்தரிப்பதை எதிர்த்து வரலாம். ஆனால் வரவில்லை. இது போன்றவற்றுக்கு எதற்காக வருகிறீர்கள்? மெர்சல் படத்துக்கு எதிராக இது போல் எத்தனை வழக்குகள் தொடரப்பட்டுள்ளன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இந்தப் படத்தில் என்ன தவறு…

Read More

கடவுள் தன் பக்கம் இல்லை என்றால், நான் இவ்வளவு வெற்றிகளைப் பெற்றிருக்க முடியாது: ரஜினிகாந்த் பேச்சு

கடவுள் தன் பக்கம் இல்லை என்றால், நான் இவ்வளவு வெற்றிகளைப் பெற்றிருக்க முடியாது: ரஜினிகாந்த் பேச்சு

தமிழ் பட உலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படம் ‘2.0’. ஷங்கர் இதை இயக்கி உள்ளார். நடிகர் ரஜினிகாந்த், நடிகை எமிஜாக்சன் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர். இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் வில்லனாக வருகிறார். ஹாலிவுட் படங்களுக்கு இணையாக பேசப்படும் 2.0 படத்தின் பாடல் வெளியீட்டு விழா துபாயில் நேற்று (வெள்ளிக்கிழமை) பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இந்த விழா துபாயில் டவுன் டவுன் பகுதியில் உள்ள புர்ஜ் பார்க் வளாகத்தில் நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், கடவுள் தன் பக்கம் இல்லை என்றால், நான் இவ்வளவு வெற்றிகளை பெற்றிருக்க முடியாது என்றார். மேலும், ரஜினிகாந்த் கூறியதாவது:- பணம் புகழைவிட விட மன அமைதிதான்…

Read More

ஜெயலலிதா மரணம் பற்றிய விவரங்களை நேரடியாகவோ, தபால் மூலமாகவோ நவம்பர் 22 க்குள் கூறலாம்-ஆறுமுக சாமி

ஜெயலலிதா மரணம் பற்றிய விவரங்களை நேரடியாகவோ, தபால் மூலமாகவோ நவம்பர் 22 க்குள் கூறலாம்-ஆறுமுக சாமி

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22–ந் தேதி இரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல், டிசம்பர் மாதம் 5–ந் தேதி மரணம் அடைந்தார். ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று இப்போதைய துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அப்போது வலியுறுத்தினார். அதை ஏற்றுக்கொண்ட முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்டு மாதம் 17–ந் தேதி, ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதன்பின்னர், கடந்த மாதம் (செப்டம்பர்) 25–ந் தேதி…

Read More
1 308 309 310 311 312 425