மயிலாடுதுறையில் பாஜக – விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மோதல்

மயிலாடுதுறையில் பாஜக – விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மோதல்

மயிலாடுதுறையில் பாஜகவினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் வாகனங்கள் உடைக்கப்பட்டன. மெர்சல் படம் விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை விமர்சித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக் கொடி எந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பாஜகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் வாகனங்கள் உடைக்கப்பட்டன. மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி வரி குறித்த கருத்துகள் இடம் பெற்றதற்கு, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்தார். அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யை வளைத்துப் போடுவதற்காக பாஜக திட்டமிடுவதாக திருமாவளவன் குற்றம் சாட்டினார்….

Read More

நிலவேம்பு குறித்து சர்ச்சை ட்வீட்; முகாந்திரம் இருந்தால் கமல் மீது வழக்கு பதியலாம்: உயர் நீதிமன்றம்

நிலவேம்பு குறித்து சர்ச்சை ட்வீட்; முகாந்திரம் இருந்தால் கமல் மீது வழக்கு பதியலாம்: உயர் நீதிமன்றம்

நிலவேம்பு கசாயம் பற்றிய வதந்திகளை பரப்பும் நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் விசாரணை நடத்தி முகாந்திரம் இருந்தால் கமல் மீது வழக்குப்பதிவு செய்யலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 18-ம் தேதி நிலவேம்பு கசாயம் குறித்து ட்விட்டரில் நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருந்தார். சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை தனது இயக்கத்தினர் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அரசின் செயல்பாடுகள் மற்றும் நிலவேம்பு கசாயம் குறித்து கமல் தவறான தகவலைப் பரப்புவதால், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டுமென அக்டோபர் 19-ம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில்…

Read More

ரூ.33 கோடிக்கு புதிய ரூ.2000 நோட்டு சேகர் ரெட்டிக்கு கிடைத்தது எப்படி? – ரிசர்வ் வங்கியில் போதிய தகவல்கள் இல்லாததால் திணறும் சிபிஐ

ரூ.33 கோடிக்கு புதிய ரூ.2000 நோட்டு சேகர் ரெட்டிக்கு கிடைத்தது எப்படி? – ரிசர்வ் வங்கியில் போதிய தகவல்கள் இல்லாததால் திணறும் சிபிஐ

தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளிடம் கைப்பற்றப்பட்ட ரூ.33 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள புதிய 2 ஆயிரம் நோட்டுகள், அவர்களுக்கு எப்படி கிடைத்தது என்பதைக் கண்டறிய முடியாமல் சிபிஐ திணறி வருகிறது. ரூ.500, ரூ.1,000 உள்ளிட்ட உயர் மதிப்பு நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதன் பிறகு நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள பணம் அச்சிடும் அரசு அச்சகங்களில் இருந்து புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டன. ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் உள்ள பணக் கிடங்குகளுக்கு அனுப்பப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகள், அங்கிருந்து பல்வேறு…

Read More

‘மெர்சல்’ பட விவகாரம் சுபத்துடன் முடிந்துவிட்டது: தமிழிசை

‘மெர்சல்’ பட விவகாரம் சுபத்துடன் முடிந்துவிட்டது: தமிழிசை

‘மெர்சல்’ பட விவகாரம் சுபத்துடன் முடிந்துவிட்டது. திருமாவளவனின் கட்டப்பஞ்சாயத்து பிரச்சினையும் தீர்த்துவைக்கப்பட்டுவிட்டது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார். பாஜக மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக்கூட்டம் இன்று கரூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களிடம் கூறியது, ”டெங்குவை தடுக்க தமிழக அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காததால் இந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ‘மெர்சல்’ பட விவகாரம் சுபத்துடன் முடிந்துவிட்டது. திருமாவளவனின் கட்டப்பஞ்சாயத்து பிரச்சினையும் தீர்த்துவைக்கப்பட்டுவிட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுப்போம். எனது செல்போனுக்கு தொடர்ந்து மிரட்டல் வருகிறது. இதனைக்கண்டு நான் பயப்படப் போவதில்லை. விமர்சனங்கள் நாகரீகமாக இருக்க வேண்டும்” என்று தமிழிசை…

Read More

செல்வி திருநீற்றா சபேசன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம்

செல்வி திருநீற்றா சபேசன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம்

Scarborough’s Nattiya Kalashettra;s Guru Smt. Thenuja Thirumaran, presented Bharathanatya Arangetram of her wonderful and talented Student Selvi Thiruneta Sabesan, on last Saturday 21st,at Chinese Cultural Centre in Scarborough. Poojas and other ceremonies started at 4.30 and the Selvi’s Dance Performances commenced at 5.15. When the First piece was done the Auditorium was Fully packed and all the invitees were enjoying the dance and Music. Selvi Thiruneta was with full energy and her performances were fantastic….

Read More

கொழும்பு துறைமுக நகர் பணி 2019ல் முழுமை பெறும்

கொழும்பு துறைமுக நகர் பணி 2019ல் முழுமை பெறும்

இலங்கையில், சீனா சார்பில், கொழும்பு துறைமுக நகர் அமைக்கும் பணிகள், ௨௦௧௯ல் முடியும்’ என, அந்நாட்டின், நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர், சம்பிகா ரனவகா தெரிவித்தார். இலங்கை அதிபராக, ராஜபக் ஷே இருந்த போது, ‘கொழும்பு துறைமுகம் நகர்’ உருவாக்க, சீனாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதிபராக, சிறிசேன பதவியேற்ற பின், முறைகேடு நடந்துள்ளதாக கூறி, திட்டத்தை இலங்கை அரசு நிறுத்தியது. இத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, இலங்கைக்கு, சீனா நெருக்கடி கொடுத்தது. இதையடுத்து, இத்திட்டத்தை நிறைவேற்ற, சிறிசேன அரசு, ௨௦௧௬ல் அனுமதி அளித்தது. இந்நிலையில், இலங்கை நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர், சம்பிகா ரனவகா கூறியதாவது: கொழும்பு துறைமுக நகர் திட்டம், ௨௬௯ ஏக்கரில், ௯,௧௦௦ கோடி…

Read More

நவம்பர் 7 ல் முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறேன் : கமலஹாசன்

நவம்பர் 7 ல் முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறேன் : கமலஹாசன்

நடிகர் கமலஹாசனின் அரசியல் பிரவேசம் எப்போது என்பது குறித்த கேள்வி பல்வேற கருத்துக்கள் நிலவி வருகிறது. ஆனால் தான் டுவிட்டர் மூலம் எப்போதோ அரசியலுக்கு வந்து விட்டதாக கமல் சமீபத்தில் கூறி இருந்தார். இந்நிலையில் தனது பிறந்தநாளான நவம்பர் 7 அன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக கமல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நவம்பர் 7 ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளேன். நம் இயக்கத்தார் என்னுடனும், மக்களுடனும் தொடர்பு கொள்ள வசதியாக ஏற்பாடுகள் நடக்கின்றன. தமிழகத்திற்கு கடமையாற்ற நினைப்பவர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன். தியாகமாக நினைத்து முன்வருபவர்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள். அவர்கள் என்னை கடன்பட செய்வார்கள். இளைஞர்களை ஒருங்கிணைக்க…

Read More

ஏண்டா தலையில எண்ண வைக்கேல்ல?

ஏண்டா தலையில எண்ண வைக்கேல்ல?

A new Tamil Movie is ready for Screening in Tamil Nadu, SriLanka and North America, including our Great Country Canada, soon. “Enda Thalaiyila Ennai vaikkella” (ஏண்டா தலையில எண்ண வைக்கேல்ல?” is the name of the Movie and the three female Producers are Singer and Music Director Rehena (Sister of A. R. Rehman), Mrs. Subha Thambipillai from Canada (WIfe of Mr. Yogi Thambipillai- Yogi & Partners) and Dr(Mrs) Indiran Asrvatham of Hope Medical Centre in Scarborough and…

Read More

தமிழ் அரசியல்வாதிகளில் தலைவரான திரு சம்பந்தன் தனது மக்களுக்காக பேசுகின்றார்

தமிழ் அரசியல்வாதிகளில் தலைவரான திரு சம்பந்தன் தனது மக்களுக்காக பேசுகின்றார்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகளின் அரசியல் செயற்பாடுகள் 2009ஆம் ஆண்டு யுத்தத்திற்கு பின்னர் ஆக்கபூர்வமானதாக இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின முக்கிய அதிகாரி தெரிவித்துள்ளாராம் .. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகளின் அரசியல் செயற்பாடுகள் 2009ஆம் ஆண்டு யுத்தத்திற்கு பின்னரான சூழலில் ஆக்கபூர்வமானதாக இல்லை என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிறீப் கூறிய கருத்துக்கள் எடுத்துக் காட்டியுள்ளது என்று, அரசியல் விமர்சகர்கள் கூறியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை கேள்விக்கு உட்படுத்திய பப்லோ டி கிறீப், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், முன்னேற்றம் எங்கிருக்க வேண்டுமோ, அவற்றுக்குச் சிறிது கூட சமீபமாக எதுவுமே…

Read More

கறுப்பு பணம் எதிர்ப்பு தினம்: ஜெட்லி தகவல் – நவ.8

கறுப்பு பணம் எதிர்ப்பு தினம்: ஜெட்லி தகவல் – நவ.8

ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் அறிவிக்கப்பட்ட நவம்பர் 8ம் தேதியை நாடு முழுவதும் கறுப்பு பணம் எதிர்ப்பு தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். டில்லியில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: வரும் நவம்பர் 8 ம் தேதியை நாடு முழுவதும் கறுப்பு பணம் எதிர்ப்பு தினமாக பா.ஜ., கொண்டாடும். கறுப்பு பணத்தை ஒழிக்க காங்கிரஸ் கட்சி ஒரு நடவடிக்கை கூட எடுத்தது கிடையாது. அக்கட்சி பல முறை ஆட்சியில் இருந்த போதும், கறுப்பு பணத்திற்கு எதிராக ஏதாவது ஒரு நடவடிக்கை எடுத்ததாக எனக்கு நினைவில் இல்லை. அக்கட்சி தலைவர்கள் சுய நலம் காரணமாக ரொக்க பொருளாதாரத்தை ஆதரிக்கின்றனர். ரூபாய்…

Read More
1 309 310 311 312 313 425