ஜி.எஸ்.டி வரியை விமர்சிக்கும் மெர்சல் திரைப்படம்: பாஜக தலைவர் தமிழிசை எதிர்ப்பு

ஜி.எஸ்.டி வரியை விமர்சிக்கும் மெர்சல் திரைப்படம்: பாஜக தலைவர் தமிழிசை எதிர்ப்பு

விஜய் நடித்து வெளியாகியிருக்கும் மெர்சல் திரைப்படத்தில் ஜி.எஸ்.டி. வரி குறித்து எதிர்மறையான கருத்துக்களைத் தெரிவித்திருப்பதற்கு தமிழக பாரதீய ஜனதாக் கட்சி கடும் கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறது. மெர்சல் திரைப்படத்தில், ஒரு காட்சியில் கதாநாயகன் பேசும்போது, “சிங்கப்பூரில் 7 சதவீதம்தான் ஜி.எஸ்.டி. அங்க மருத்துவம் இலவசம். ஆனால், 28 சதவீதம் ஜி.எஸ்.டி வாங்கும் இங்க இலவசமாக மருத்துவத்தைக் கொடுக்க முடியவில்லை” என்று வசனம் பெறுவதாக ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த காட்சிக்கு தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். “சட்டங்களை மதிக்காமல் திரைப்படம் எடுக்கிறீர்கள். பிறகு சட்டத்தைப் பற்றியும் வரியைப் பற்றியும் அரசாங்கத்தைப் பற்றியும் பேசுகிறீர்கள். “தவறான நடவடிக்கைகளை ஆதரிக்காதீர்கள்…

Read More

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை விடுதலை செய்ய பாகிஸ்தான் ஐகோர்ட்டு உத்தரவு

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை விடுதலை செய்ய பாகிஸ்தான் ஐகோர்ட்டு உத்தரவு

இஸ்லாமாபாத்: ஜமாத்-உத்-தவா, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கங்களின் தலைவன், மும்பை தாக்குதல் சூத்திரதாரி ஹபீஸ் சயீத்தை ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாதியாக அறிவித்து உள்ளது. ஹபீஸ் சயீத்தின் தலைக்கு அமெரிக்கா 1 கோடி அமெரிக்க டாலரை பரிசாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் நெருக்கடியை அடுத்து பாகிஸ்தான் கடந்த ஜனவரியில் ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் வீட்டுக்காவலில் அடைந்தது. அப்போது பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான். வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹபீஸ் சயீத் தரப்பில் லாகூர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய கோர்ட்டு கேட்டது. அரசு உரிய ஆதாரங்களை சமர்பிக்கவில்லை…

Read More

ராணுவத்தினரே எனது குடும்பம்: வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய மோடி

ராணுவத்தினரே எனது குடும்பம்: வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய மோடி

ஸ்ரீநகர்: ராணுவத்தினரை எனது குடும்பமாக கருதி தீபாவளி கொண்டாடுவதில் மகிழ்ச்சியடைவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் மோடி கொண்டாடி வருகிறார். முன்னதாக கடந்த 2014ல் காஷ்மீரில் தீபாவளியை கொண்டாடினார். 2015 ம் வருடம் பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா பாகிஸ்தான் எல்லையிலும், 2016ம் வருடம் இமாச்சல பிரதேசத்திலும் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை மோடி கொண்டாடினார். இதன்படி, இந்த வருடம் தீபாவளியை எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் உள்ள காஷ்மீரின் குரேஸ் பகுதியில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாட முடிவு செய்தார். இதற்காக ஸ்ரீநகர் வந்த பிரதமரை, ராணுவ தளபதி பிபின் ராவத் வரவேற்றார். அங்கிருந்து பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள குரேஸ் பகுதிக்கு…

Read More

கொடுமைபடுத்தியதாக கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது தம்பி மனைவி புகார்

கொடுமைபடுத்தியதாக கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது தம்பி மனைவி புகார்

கிரிக்கெட் வீரர் யுவராஜ் மாடல் அழகியும் இந்தி நடிகையுமான 29 வயதான ஹாசல் கீச்சை திருமணம் செய்து உள்ளார். இவர்கள் திருமணம் கடந்தாண்டு நவம்பர் 18ம் தேதி நடந்தது. இந்த் தீபாவளி யுவராஜ் சிங்கிற்கு தலைத்தீபாவளியாகும். இந்த நிலையில் வராஜ் சிங்கின் தம்பியின் மனைவி ஆகான்ஷா சர்மா கணவர் சோரவர் சிங், மாமியார் ஷப்னம் சிங் மற்றும் மைத்துனர் யுவராஜ் சிங் ஆகியோருக்கு எதிராக புகார் கொடுத்து உள்ளார்.ஆகான்ஷா இது குறித்து தற்போது பேச மறுத்து விட்டார்.அக்டோபர் 21 அன்று முதல் விசாரணைக்குப் பின்னர் இந்த விஷயத்தில் அவர் பேசுவார்.ஆனால் அவரது வழக்கறிஞர் ஸ்வாதி சிங் மாலிக் இந்த விவகாரத்தை உறுதிப்படுத்தியுள்ளார். ஆமாம் யுவராஜ், சோரவர்…

Read More

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். அப்போது, அமெரிக்காவின் அறிவியல், மருத்துவம், தொழில் மற்றும் கல்வியில் ஆற்றிய பங்கிற்காக இந்திய வம்சாவளியினருக்கு பாராட்டு தெரிவித்தார். அமெரிக்க அதிபராக ஜார்ஜ் புஷ் இருந்த காலம் முதல் வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அப்போது மாளிகையில் உள்ள அறை ஒன்றில் நடக்கும் விழாவில் புஷ் கலந்து கொண்டது இல்லை. ஆனால், கடந்த 2016ல் அதிபராக ஒபாமா இருந்த போது, வெள்ளை மாளிகையில் உள்ள கிழக்கு அறையில் தீபாவளி கொண்டாடப்பட்டது. ஒபாமா குத்துவிளக்கேற்றி தீபாவளியை கொண்டாடினார். அதேபோல், இந்த வருடம், வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நடந்த தீபாவளி பண்டிகையில், அதிபர் டிரம்ப் உடன்,…

Read More

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்

லக்னோ: உ.பி. மாநிலம் அயோத்தியில் 2 லட்சம் தீபங்கள் ஏற்றி தீபாவளி கொண்டாடப்பட்டது. இதில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொள்ள உள்ளார் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உபி., மாநிலம் அயோத்தியில் மிக பிரம்மாண்டமான வகையில் தீபாவளி கொண்டாட மாவட்ட நிர்வாகத்திற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து இன்று அயோத்தியில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அப்போது 2 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன. முன்னதாக ராமர், சீதை, லட்சுமணர் வேடம் அணிந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் அழைத்து வரப்பட்டனர். இது குறித்து பா.ஜ. வட்டாரங்கள் கூறுகையில்.உ.பி.யில் பா.ஜ. 14 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை பிடித்துள்ளது. ராமாயணத்தில் ராமர் 14…

Read More

இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்

இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்

ஒட்டோவா: கனடாவில் கனடாவாழ் இந்தியர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியூ. கனடாவின் ஒட்டோவா நகரில் இந்தியர்கள் பெருமளவு வசித்துவருகின்றனர். இந்தாண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாட கனடா பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஒட்டோவா நகர் வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியூ, இந்தியர்களின் உடையான ஷர்வானி அணிந்திருந்தார். பின்னர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் குத்துவிளக்கேற்றி இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். அதன் பின்னர் தபால் தலையும் வெளியிட்டார். இந்த விழாவில் கனடாவிற்கான இந்திய ஹை கமிஷனர் விகாஸ் ஸ்வரூப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா தொடர்பான புகைப்படங்கள் கனடா பிரதமரின் டுவீட்டரில் வெளியாகியுள்ளன.

Read More

இலங்கை வடக்கு மாகாணத்தில் முழுஅடைப்பு போராட்டம்: அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி

இலங்கை வடக்கு மாகாணத்தில் முழுஅடைப்பு போராட்டம்: அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி வடக்கு மாகாணத்தில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கியது. தீவிரவாத தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தமிழர்கள் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் அனுராதபுரம் சிறையில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள், ராசதுரை திருவருள், மதியழகன், கணேசன் தர்ஷன் ஆகிய 3 பேர் மீதான வழக்கு வவுனியா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு தற்போது சிங்கள பகுதியான அனுராதபுரம் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 பேரும் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களின் உடல்நிலை மோசமடைந்துள்ள நிலை யில் இலங்கை அரசு எவ்வித…

Read More

முகலாய மன்னர்கள் துரோகிகள்; தாஜ்மஹால் கதை கொண்டாடப்பட வேண்டிய வரலாறா?- பாஜக எம்.எல்.ஏ.,வின் பேச்சு

முகலாய மன்னர்கள் துரோகிகள்; தாஜ்மஹால் கதை கொண்டாடப்பட வேண்டிய வரலாறா?- பாஜக எம்.எல்.ஏ.,வின் பேச்சு

“முகலாய மன்னர்கள் இந்தியா மீது தொடர்ந்து படையெடுத்தவர்கள். வரலாறு என்ற பெயரில் துரோகிகளை மகிமைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். தாஜ்மஹாலை கட்டியவர் சொந்த மகனால் சிறையில் வைக்கப்பட்டார். இந்தக் கதையையா வரலாறு எனக் கொண்டாடுவது” என பாஜக எம்.எல்.ஏ., சங்கீத் சோம் பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகருக்குச் சென்ற சங்கீத் சோம், பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது, “இந்தியா மீது தொடர்ந்து படையெடுத்த பாபர், அக்பர், அவுரங்கஜீபை நாம் வரலாறு என்ற பெயரில் மகிமைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அவர்கள் துரோகிகள். அவர்களது பெயர்கள் வரலாற்றில் இருந்து நீக்கப்பட வேண்டியது. இந்தியாவின் மிகப்பெரிய சாதனையாளர்கள் மஹரானா பிரதாப், சிவாஜி பற்றி பள்ளி, கல்லூரிகளில் பயிற்றுவிக்க வேண்டும். வரலாற்றுப் புத்தகங்களில்…

Read More

இந்தியன்-2 கைவிடப்பட்டதா? ரசிகர்கள் அதிர்ச்சி

இந்தியன்-2 கைவிடப்பட்டதா? ரசிகர்கள் அதிர்ச்சி

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 20 வருடங்களுக்கு முன் வெளிவந்த படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தொடங்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் அறிவிப்பு பிக்பாஸ் இறுதிப்போட்டியில் அறிவிக்கப்பட்டது, இதை தொடர்ந்து தற்போது இப்படம் நின்றுவிட்டதாகவும், இதில் கமலுக்கு பதில் சூர்யா நடிக்கவிருப்பதாகவும் ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் உலா வந்தது. இதை அறிந்த இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு கூறுகையில் ‘ஷங்கர் இயக்கத்தில் கமல் சார் இந்தியன் 2 நடிப்பது உறுதி. ஷங்கர் அவர்கள் 2.0 இசை வெளியீட்டு விழாவில் பிஸியாகவுள்ளார், அவை முடிந்த பிறகு அடுத்து இந்தியன்-2வில் கவனம் செலுத்துவார், சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்’ என்று கூறியுள்ளார்.

Read More
1 311 312 313 314 315 425