மருத்துவமனை செல்ல ஜெயலலிதா காரை பயன்படுத்தினார்: கணவர் நடராஜனை பார்த்ததும் கண்கலங்கிய சசிகலா – சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்

மருத்துவமனை செல்ல ஜெயலலிதா காரை பயன்படுத்தினார்: கணவர் நடராஜனை பார்த்ததும் கண்கலங்கிய சசிகலா – சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்

சென்னை பெரும்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது கணவர் நடராஜனை பார்த்ததும் சசிகலா கண் கலங்கினார். பின்னர் அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக (அம்மா அணி) பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா, தனது கணவர் நடராஜன், ஆபத்தான நிலையில் சென்னையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரைப் பார்க்க பரோலில் நேற்று முன்தினம் சென்னை வந்தார். தி.நகரில் உள்ள தனது அண்ணன் மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் தங்கியிருக்கும் சசிகலாவை, திவாகரன் மகன் ஜெய்ஆனந்த், இளவரசியின் மகன் விவேக், சசிகலாவின் வழக்கறிஞர் அசோகன் ஆகியோர் நேற்று சந்தித்துப்…

Read More

மத்திய அரசுப் பள்ளிகளில் சமஸ்கிருத திணிப்பு: வைகோ கண்டனம்

மத்திய அரசுப் பள்ளிகளில் சமஸ்கிருத திணிப்பு: வைகோ கண்டனம்

மத்திய அரசுப் பள்ளிகளில் மாணவர்கள், பெற்றோர்களின் விருப்பத்துக்கு மாறாக ஜெர்மன், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளை நீக்கிவிட்டு, சமஸ்கிருதத்தைக் கட்டாயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மதிமுக தலைவர் வைகோ கூறியுள்ளார். இதுதொடர்பாக திங்கட்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அடுத்த கல்வி ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஜெர்மன், பிரெஞ்சு போன்ற அயல் மொழிகளை மூன்றாவது மொழியாக அனுமதிக்கக் கூடாது என்று திட்டவட்டமாக அறிவுறுத்தி இருக்கிறது. மாணவர்கள் விரும்பினால் அந்நிய மொழிகளை நான்காவது, ஐந்தாவது மொழியாகக் கற்றுக்கொள்ளட்டும். புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மும்மொழி பாடத் திட்டம் நடைமுறைப் படுத்தப்படும்போது, இந்தி,…

Read More

ஜெயலலிதா கைரேகை சர்ச்சை டாக்டரை பதவி நீக்கக் கோரும் வழக்கு: அக்.9-ல் உத்தரவு

ஜெயலலிதா கைரேகை சர்ச்சை டாக்டரை பதவி நீக்கக் கோரும் வழக்கு: அக்.9-ல் உத்தரவு

ஜெயலலிதாவின் கைரேகை குறித்து சான்றளித்த மருத்துவர் பாலாஜியை, தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலராக நியமித்ததை எதிர்த்து பாடம் நாராயணன் தொடர்ந்த வழக்கு குறித்த உத்தரவு வரும் 9-ம் தேதி வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தேர்தல் முறைகேடு காரணமாக நிறுத்தப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி மற்றும் உறுப்பினர் உயிரிழந்த திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்த தேர்தல், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நேரத்தில் நடந்தது. ஜெயலலிதாவை யாரும் பார்க்க இயலாத நேரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கிய ஒரு படிவத்தில் ஜெயலலிதா கையெழுத்தும் மற்றொரு…

Read More

ஜெயலலிதா மரணத்தை சந்தேக மரணமாக பதிவு செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் வழக்கு; விசாரணை ஒத்திவைப்பு

ஜெயலலிதா மரணத்தை சந்தேக மரணமாக பதிவு செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் வழக்கு; விசாரணை ஒத்திவைப்பு

ஜெயலலிதா மரணத்தை சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று காவல் ஆணையருக்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சமீபத்தில் கடலூரைச் சேர்த்த வழக்கறிஞர் ஏ.கே.வேலன் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், “ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 74 நாட்களில் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து எந்த விவரமும் வெளியிடவில்லை. ஆளுநர் கூட அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. அரசின் முதன்மை பொறுப்பில் உள்ளவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலவரங்களை வெளியிடவேண்டும். அப்போலோ மருத்துவமனை அனைத்தையும் மறைத்து விட்டது. எனவே இது தொடர்பாக சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ்…

Read More

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அமைச்சர் தலைமை ஏற்பதா?- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த செல்லூர் ராஜூ

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அமைச்சர் தலைமை ஏற்பதா?- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த செல்லூர் ராஜூ

மதுரையில் ஆர்எஸ்எஸ் பேரணியைத் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைப்பதாகச் செய்திகள் வெளியான நிலையில், அதிமுக கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைகள் காற்றில் பறக்க விடப்படுவதாகவும் இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்துகொள்ள முதல்வர் எடப்பாடி அனுமதியளிக்கக் கூடாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அவர்கள், ”முந்தைய காலங்களில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நீதிமன்றத்தின் கட்டுப்பாடுகளுக்கு ஆர்எஸ்எஸ் விழா ஏற்பாட்டாளர்கள் ஒப்புக்கொண்ட பிறகே அனுமதி அளிப்பார். ஆனால் இப்போது எந்த விதிமுறைகளும் இல்லாமல் அனுமதி அளிக்கப்படுகிறது. அம்மா வழியில் செயல்படுவதாகக் கூறும் எடப்பாடி பழனிசாமி அரசு, இந்தப் பேரணியை அனுமதித்து அவருக்கு…

Read More

ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ‘திடீர்’ ஆலோசனை

ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ‘திடீர்’ ஆலோசனை

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்திவிட்டார். தினத்தந்திக்கு ஏற்கனவே அளித்த பேட்டியில், ரஜினிகாந்துக்கு போட்டியாக நான் அரசியலுக்கு வரவில்லை. புதிய கட்சி பெயர், கொடி, சின்னம் உருவாக்கும் பணிகளை தொடங்கிவிட்டேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தார். அரசியலில் முழுமையாக ஈடுபடும் சூழலில் சினிமாவை விட்டு விலகி விடுவீர்களா? என்ற கேள்விக்கு அதுதான் நியாயமாக இருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது. இரண்டு படகுகளில் கால் வைத்துக்கொண்டு இருக்க முடியாது என பதிலளித்து இருந்தார். அரசியல் குறித்து பேசிவரும் நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் கமல்ஹாசன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார். அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கை குறித்து ஆலோசனை நடப்பதாக…

Read More

ம.நடராஜனுக்கு மாற்று கல்லீரல், சிறுநீரகம் பொருத்தப்பட்டது

ம.நடராஜனுக்கு மாற்று கல்லீரல், சிறுநீரகம் பொருத்தப்பட்டது

சசிகலாவின் கணவரும் ‘புதிய பார்வை’ இதழின் ஆசிரியருமான நடராஜனுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மருத்துவமனைக்குச் செல்லும் முன் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ”நடராஜனுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார். அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலா. இவரின் கணவர் ம.நடராஜன் (74). இவர் உடல்நலக் குறைவால் கடந்த மாதம் 10-ம் தேதி சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயல் இழந்த நிலையில் அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்தது. அத்துடன் அவரது நுரையீரலும் பாதிக்கப்பட்டதால் மூச்சுத் திணறல்…

Read More

திருமணமான 15 நாளிலேயே காவலர் டெங்குவால் பலி

திருமணமான 15 நாளிலேயே காவலர் டெங்குவால் பலி

டெங்கு காய்ச்சல் பாதிப்பால், மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காவலர் நேற்று உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகில் உள்ள உலக்குடியைச் சேர்ந்தவர் தங்கச்சாமி(27). இவர், நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் உள்ள சிறப்பு பட்டாலியன் பிரிவில் காவலராக பணிபுரிந்தார். சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், காய்ச்சல் அதிகரித்ததால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனையில் அவருக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது தெரியவந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். டெங்கு காய்ச்சல் அதிகரிப்பால் அவரது உடல்நிலை மோசமடைந்து, சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்ததாக தனியார் மருத்துவமனை நிர்வாகம்…

Read More

சர்வதேச இந்து இளைஞர் பேரவையுடன் இணைந்து மன்னார் மாவட்ட அறநெறி பாடசாலைகளின் இணையம் நடாத்தும் இந்து மாநாடு

சர்வதேச இந்து இளைஞர் பேரவையுடன் இணைந்து மன்னார் மாவட்ட அறநெறி பாடசாலைகளின் இணையம்  நடாத்தும் இந்து மாநாடு

சர்வதேச இந்து இளைஞர் பேரவையுடன் இணைந்து மன்னார் மாவட்ட அறநெறி பாடசாலைகளின் இணையம் நடாத்தும் இந்து மாநாடு எதிர்வரும் (08.10.2017) ஞாயிற்றுக்கிழமை மன்னார் நகர மண்டபத்தில் இரு அரங்குளாக நடைபெறவுள்ளது. காலை நிகழ்வுகள் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அரங்கில்; நல்லை திருஞானசம்பந்தர் ஆதின முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த சுவாமிகள் முன்னிலையில் இடம்பெறும். மன்னார் அறநெறி பாடசாலைகளின் இணையத்தின் தலைவர் செந்தமிழருவி சிவஸ்ரீ மகா தர்மகுமார குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ் தேசப்பிரிய அவர்களும் சிறப்ப விருந்தினர்களாக யாழ்.பல்கலைகழக விரிவுரையாளர் சட்டத்தரணி கோசலை மதன,; கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் செந்தமிழ்…

Read More

இலங்கையில் பௌத்த மதத்திற்கு ஆபத்து வருகின்றதாம்

இலங்கையில் பௌத்த மதத்திற்கு ஆபத்து வருகின்றதாம்

தற்போதைய அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ளது போன்று உத்தேச புதிய அரசியலமைப்பிலும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுமென அரசாங்கத்தினால் கூறப்படுகின்றபோதும் உத்தேச அரசியலமைப்பில் சில விடயங்கள் மூலம் பௌத்தத்திற்கு வழங்கப்படும் முன்னுரிமை இல்லாது செய்யப்படவுள்ளதாக பிவித்துறு ஹெல உறுமய தலைவரான ஒன்றிணைந்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் கடந்த திங்கட்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் இந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போது மேலும் தெரிவிக்கையில்; பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையிலும், ஒற்றையாட்சியிலும் கை வைக்க மாட்டோம் என ஜனாதிபதியும் பிரதமரும் அடிக்கடி உத்தரவாதமளித்துள்ளனர். ஆனால் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட பௌத்த செயற்பாட்டு குழுக்கள் புதிய அரசியலமைப்பின் ஊடாக பௌத்த…

Read More
1 313 314 315 316 317 425