நடிகர் விஜய் ரூ.5 கோடி வரி ஏய்ப்பு : உறுதி செய்தது வருமான வரித்துறை
தமிழக வருமான வரி புலனாய்வு அதிகாரிகள், நேற்று கூறியதாவது:நடிகர்கள், விஜய், சமந்தா மற்றும் நயன்தாரா உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட, திரைத் துறையினரின் வீடுகளில், 2015 அக்டோபரில், வருமான வரி சோதனை நடந்தது. அதில், 25 கோடி ரூபாய்க்கும் மேல், வரி ஏய்ப்பு செய்திருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக, நடிகர் விஜய், புலி படத்தில் நடித்ததற்காக பெற்ற, சம்பளத்தில், ஐந்து கோடி ரூபாயை வருமான வரி கணக்கில் காட்டவில்லை. இது, சோதனையில் உறுதியானது. அதை ஏற்ற விஜய், அதற்குரிய வருமான வரியை செலுத்தினார். வரி ஏய்ப்பு செய்த மற்றவர்களிடமும், வருமான வரி வசூலிக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர். வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: வருமான வரி ஏய்ப்பு செய்தோர்,…
Read More









