திமுகவின் கடந்த கால காவிரி துரோகமே இன்றைய நடைமுறை சிக்கலுக்கு காரணம்: தமிழிசை சவுந்தரராஜன்

திமுகவின் கடந்த கால காவிரி துரோகமே இன்றைய நடைமுறை சிக்கலுக்கு காரணம்: தமிழிசை சவுந்தரராஜன்

திமுகவின் கடந்த கால காவிரி துரோகமே இன்றைய நடைமுறை சிக்கலுக்கு காரணம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”காவிரி பிரச்சினையில் மத்திய பாஜக அரசை குறைசொல்லும் ஸ்டாலின், மத்தியில் 18 ஆண்டுகள், தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக காவிரி பிரச்சினையை ஏன் தீர்க்கவில்லை? சர்க்காரியா கமிஷன், பூச்சி மருந்து ஊழல் வழக்கில் தப்பிக்க வேண்டி அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் கட்டளைக்குப் பணிந்து காவிரி வழக்கை வாபஸ் வாங்கினார் அன்றைய திமுக முதல்வர் கருணாநிதி. நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை அரசு இதழில் 7 ஆண்டு காலம் தாமதம் ஆனபோது…

Read More

இலங்கை ஜனாதிபதி சிறிசேனவின் ஐ.நா வருகையை முன்னிட்டு கண்டன போராட்டம்

இலங்கை ஜனாதிபதி சிறிசேனவின் ஐ.நா வருகையை முன்னிட்டு கண்டன போராட்டம்

இலங்கை ஜனாதிபதி சிறிசேனவின் ஐ.நா வருகையை முன்னிட்டும், தாயகத்தில் 200 நாட்கள் தாண்டியும் அரசின் பாராமுகத்தோடும் கண்ணீரோடும் எழுச்சியோடும் நடைபெற்று கொண்டு இருக்கும் மக்கள் எழுச்சி போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் முகமாகவும் கனடிய மண்ணில் கனடா தமிழ் சமூகமும் கனடா தமிழ் மாணவர் சமூகமும் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு முன்னால் நடத்தவுள்ளனர். இடம்: அமெரிக்க துணைத் தூதரகம், டொரண்டோ (360 University Avenue) திகதி: செவ்வாய் செப்டெம்பெர் 26, 2017 நேரம்: மாலை 5:00 மணி முதல் 7:00 மணிவரை இந்த கண்டன போராட்டத்திற்கு கனடா வாழ் அனைத்து மக்களும் ஊடகங்களும் ஆதரவு நல்கி அணி திரண்டு தாயகத்தில் போராடும்…

Read More

ஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்

ஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்

தமிழினத்துக்கு வடகிழக்கு இணைந்த கூட்டாட்சி அரசியல் அமைப்புக்கு கடினமாக உழைத்து தமிழரை இன அழிப்பில் இருந்து பாதுகாப்போம் என்று கடைசி தேர்தலில் கூக்குரல் இட்டுவிட்டு மக்களின் வாக்குகளை பெற்றபின் ஊமைகளாகி போய்விட்டார்கள். இவர்கள் சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் பயந்தவர்களா? 1. சர்வதேச விசாரணையை சுமந்திரன் வேண்டாம் என்றபோது ஏன் இவர்கள் ஊமைகளாக இருந்தார்கள். 2. இரண்டு வருடம் இலங்கைக்கு கால அவகாசம் ஐ. நா. மனித உரிமைப் பேரவையில் கொடுக்க வேண்டும் என்று சுமந்திரன் சொன்னபோது ஏன் இவர்கள் ஊமைகளாக இருந்தார்கள். 3. சிங்கள அமைச்சர்கள், தமிழர்கள் அரசியல் வழிகாட்டு குழுவில் இருந்தும் வடகிழக்கு இணைப்பையும், கூட்டாட்சி (சமஷ்டி) கேட்கவில்லை என்ற போது ஏன் இவர்கள் ஊமைகளாக…

Read More

முதலமைச்சருக்கு விலாசமிடப்பட்டுள்ள முக்கியமான கடிதம் இது

முதலமைச்சருக்கு விலாசமிடப்பட்டுள்ள முக்கியமான கடிதம் இது

அவரசமான வேண்டுகோளும் கூட… இதைப்போல இன்னும் எத்தனை இடங்களில் இவ்வாறான இடர்தரும் விடயஙகளை இடம்பெறுகின்றனவோ?? நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கௌரவ முதலமைச்சர் வட மாகாணம் ஐயா…… கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் யாழ் – பருத்தித்துறை வீதியில் புத்தூர் 9 ஆம் கட்டையில் வடிகாலமைப்புப் பணி மேற்கொள்ளப்படுகின்றது. இதற்காக வீதியோரத்தில் பாரிய அளவில் நிலம் வெட்டப்படுகின்றது. இவ்வாறு வெட்டப்பட்ட மண் மற்றும் நிர்மாண வேலைகளுக்கான கற்கள் வீதியோரத்தில் குவிக்கப்பட்டும் உள்ளன. எனினும் சாதாரணமாகவே விபத்துக்கள் நடைபெறும் பாரிய வளைவினை உடைய இவ் வீதியில் வீதியோரத்தில் வேலைகள் நடைபெறுவதற்கான எந்தச் சமிஞையும் கிடையாது. தனியே இரண்டு கொங்கிறீட் கட்களால் முண்டு கொடுக்கப்பட்டு மஞ்சல் நிற சிறு துண்டு பொலித்தீன்…

Read More

ஈபிஎஸ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வேலையைத் தொடங்கிவிட்டேன்: தினகரன்

ஈபிஎஸ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வேலையைத் தொடங்கிவிட்டேன்: தினகரன்

அதிமுக பொதுக் குழு தீர்மானம் செல்லாது. பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வேலையைத் தொடங்கிவிட்டேன் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டு, சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், இரட்டை இலையை மீட்பது மற்றும் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது ஆகிய முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது குறித்து டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கட்சியின் பொதுச் செயலாளர்தான் பொதுக் குழுவை கூட்ட முடியும். அவ்வாறு இல்லை என்றால் துணை பொதுச் செயாலாளர் நான்தான் பொதுக் குழுவை கூட்ட முடியும்….

Read More

தமிழக அமைச்சரின் பணமா? – ரூ.246 கோடி டெபாசிட் செய்த நபர்: அபராதம் கட்டியதால் தண்டனையில் இருந்து தப்பினார்

தமிழக அமைச்சரின் பணமா? – ரூ.246 கோடி டெபாசிட் செய்த நபர்: அபராதம் கட்டியதால் தண்டனையில் இருந்து தப்பினார்

பினாமி பெயரில் ரூ.246 கோடி டெபாசிட் செய்த நபர், தாமாக முன்வந்து கறுப்பு பணம் கணக்கு காட்டும் திட்டத்தின் கீழ், 50 சதவீதம் அபராதம் கட்டி தண்டனையில் இருந்து தப்பி இருக்கிறார். 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1000, 500 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தவர்கள் வங்கியில் செலுத்தி, மாற்றிக்கொள்வதற்கு அவகாசம் தரப்பட்டது. வங்கிகளில் இரண்டரை லட்சத்துக்கு அதிகமாக 1000, 500 நோட்டுகளை டெபாசிட் செய்தவர்கள் பற்றிய தகவல்களை வருமான வரித் துறை திரட்டி, விசாரணை நடத்தி வருகிறது. 50 சதவீதம் அபராதம் இதில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில்…

Read More

இலங்கை அரசியலில் வெளிச்சத்திற்கு வரும் பல உண்மைகளால் மக்கள் தெளிவு பெறுவார்களா? அன்றி தொடர்ந்தும் ஏமாற்றப்படுவார்களா?

இலங்கை அரசியலில் வெளிச்சத்திற்கு வரும் பல உண்மைகளால் மக்கள் தெளிவு பெறுவார்களா? அன்றி தொடர்ந்தும் ஏமாற்றப்படுவார்களா?

உண்ணாவிரம் இருந்து தன்னை அழித்துக்கொண்ட தியாகி திலீபன் அவர்களின் நினைவு நாள் அனுஸ்டிக்கப்படுகின்ற இந்த வாரத்தில் அவர் வெறுமனே பசித்திருக்கும் போராட்டத்தை நடத்தவில்லை, மரணத்தை அணைத்துக்கொள்ளும் நாளுக்கு சுமார் இரண்டு வாரங்களுக்கு மேலாக அவர் ஒரு செயற்கை நோயாளியாக இருந்து செத்து மடிந்திருக்கின்றார். இயற்கையாய் வரும் நோய்களைத் தாங்குவதே கொடுமை. அவ்வாறு இருக்கும் போது செயற்கையாக பசிஇருத்தலைத் தொடர்ந்து கடைப்பிடிக்கும் போது உடலின் அனைத்து உறுப்புக்களும் இயல்பை இழந்து தவித்திருக்கும். அப்போது அந்த தியாகி அடைந்து உடல் வேதனை எவ்வாறு இருந்திருக்கும் என்று நாம் தற்போது எண்ணிப் பார்க்கின்றோம்.. அதற்கு காரணங்கள் பல உண்டு. தியாகி திலீபனுக்கு பின்னர் எத்தனையோ ஆயிரக்கணக்கான போராளிகள் தங்களை அழித்துக்கொண்டே…

Read More

இசையமைப்பாளர் இமான் அவர்களது மிகவும் ஆர்ப்பாட்டமான இசை நிகழ்ச்சி

இசையமைப்பாளர் இமான் அவர்களது மிகவும் ஆர்ப்பாட்டமான இசை நிகழ்ச்சி

இசையமைப்பாளர் இமான் அவர்களது மிகவும் ஆர்ப்பாட்டமான இசை நிகழ்ச்சி ஒன்று இங்கிலாந்தின் இலண்டன் மாநகரில் உள்ள புகழ்பெற்ற வெம்பிளி அரங்கில் நடைபெறுமென உலகெங்கும் தீவிரமான விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தன. கனடாவிலிருந்தும் பாடகிகள் லக்சுமி சிவனேஸ்வரலிங்கம் மற்றும் சரிகா சிவநாதன் ஆகியோர் விசேடமாக அழைக்கப்பட்டிருந்தனர்.இவர்களில் லக்சுமி சிவனேஸ்வரலிங்கம் தான் போகன் திரைப்படத்திற்காக பின்னணி பாடிய “செந்தூரா” பாடலைப் பாடினார். கனடாவிலிருந்தும் உலகெங்கும் இருந்தும் பலரும் ரசிக்க முயற்சி எடுத்திருப்பார்கள். ஆனால் அனைவருக்கும் ஏமாற்றம் தான் மேற்படி இசை நிகழ்சசிக்கு எதிர்பார்ககப்பட்ட வண்ணம் மக்கள் பெருந்திரளாக வரவில்லை. அத்துடன் அதிகமான பாடல்களுக்கு (வாத்தியகருவிகள் மேடையில் குவிக்கப்படடிருந்தாலும்) வாத்தியக் கருவிகளிலிருந்து பின்னணி இசை வரவில்லை என்றும் சிடிக் கள் மூலமான இசையே…

Read More

ஸ்காபுறோ-அஜின்கோர்ட் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஆர்னல்ட் சான் காலமானார்

ஸ்காபுறோ-அஜின்கோர்ட் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஆர்னல்ட் சான் காலமானார்

ஸ்காபுறோ-அஜின்கோர்ட் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஆர்னல்ட் சான் காலமானார் என்னும்சோகமான செய்தியை இங்கு பதிவு செய்கின்றோம் முதன் முறையாக லிபரல் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட திரு ஆரனல்ட் சான், மிகவும் ஒரு தீவிரமான அரசியல் செயற்பாட்டாளராக விளங்கினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கனடா உதயன் நடத்திய பல வைபவங்களில் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்ட அவர் தன்னைப் பீடித்திருந்த புற்றுநோயுடன் கடந்த பல மாதங்களாக போராடி வந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. Scarborough MP Arnold Chan—who used his final speech in Parliament to implore MPs to “elevate” their debate — has died after a battle…

Read More

பெரும்பான்மையை நிரூபிக்க தயாராகும் பழனிசாமி அரசு: விரைவில் ஆளுநர் உத்தரவிட வாய்ப்பு?

பெரும்பான்மையை நிரூபிக்க தயாராகும் பழனிசாமி அரசு: விரைவில் ஆளுநர் உத்தரவிட வாய்ப்பு?

எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல், அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவு வாபஸ் உள்ளிட்ட சிக்கல்களுக்கிடையில் விரைவில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் பழனிசாமிக்கு ஆளுநர் உத்தரவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த பின், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 21 பேர் முதல்வர் பழனிசாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரைச் சந்தித்து கடிதம் அளித்துள்ளனர். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் மாற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின் றனர். சமீபத்தில் தினகரன் தலைமையில் ஆளுநர் வித்யாசாகர் ராவை எம்எல்ஏக்கள், எம்பிக்கள் குழுவினர் சந்தித்தனர். அப்போது, எம்எல்ஏக்கள் மனு மீது நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் கூறியதாக தினகரன் தெரிவித்தார். ஆளுநர் விரைவாக நடவடிக்கை எடுக்க…

Read More
1 317 318 319 320 321 425