அனைத்து நாடுகளிலும் ஆளும் வர்க்கம் நீதியை நிராகரிக்கின்றது. அநீதியை ஆதரிக்கின்றது

அனைத்து நாடுகளிலும் ஆளும் வர்க்கம் நீதியை நிராகரிக்கின்றது. அநீதியை ஆதரிக்கின்றது

உலகில் வேரூன்றியுள்ள வர்க்க வேறுபாடுகளையும் ஆளும் வர்க்கம் மற்றும் முதலாளித்தும் போன்றவை எவ்வாறு நடுத்தர மற்றும் தொழிலாள விவசாய மக்களை துன்புறுத்துவார்கள் என்றும் உலக முதலாளித்துவத்தாலும் சர்வதேச ஆட்சியாளர்களாலும் எவ்வாறான அநீதிகள் எதிர்காலத்தில் வர்க்க நலன் சார்ந்து அரங்கேறும் என்று பல ஆண்டுகளுக்கு முன்னரேயே சமூகம் தொடர்பாகவும் சுரண்டல் தொடர்பாகவும் எழுதிவைத்துவிட்டு சென்ற லெனின், மார்க்ஸ் போன்ற சமூக, அரசியல் தத்துவார்த்த மேதைகள் போற்றுதற்குரியவர்கள். அவர்கள் சொல்லிய அனைத்தும் தற்போது நிகழ்கின்றன. உலகெங்கும் முதலாளித்துவ ஆட்சியாளர்கள் கைகோர்த்து நிற்கின்றார்கள். “உலகம் நீதியை நிராகரிக்கின்றது: அநீதியை ஆதரிக்கின்றது” என்ற தலைப்பில் முன்னர் ஒரு ஆசிரிய தலையங்கத்தை தீட்டியிருந்தோம். 2009ம் ஆண்டு எமது தாயக மண்ணில் உலக நாடுகள்…

Read More

தற்போதைய சூழ்நிலையில் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக்கூடிய தகுதி விக்னேஸ்வரனுக்கு அவர்களுக்கே உண்டு – யாழ்ப்பாணத்தில் வெளியாகியுள்ள அறிக்கை

தற்போதைய சூழ்நிலையில் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக்கூடிய தகுதி விக்னேஸ்வரனுக்கு அவர்களுக்கே உண்டு – யாழ்ப்பாணத்தில் வெளியாகியுள்ள அறிக்கை

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஈழத்தமிழர்கள், தமது தலைவர் என்று எவரையாவது குறிப்பிட்டால் அது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனையே குறிப்பதாக அமைந்திருந்தது. அந்த அளவுக்கு ஒட்டு மொத்தத் தமிழர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதொரு தலைவராக அவர் காணப்பட்டார். தமிழர் பிரச்சினை தொடர்பாக இடம்பெற்ற அனைத்துப் பேச்சுக்களிலும் பிரபாகரனால் நியமிக்கப்பட்டவர்களே பங்குபற்றினார்கள். புலிகளின் தலைமைக்கு அந்த அளவுக்கு அன்று மதிப்பு வழங்கப்பட்டது. பிரபாகரன் தமது இளவயதிலேயே புலிகள் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர். மிக நீண்ட காலமாக வேறு எவராலும் அசைக்க முடியாத நிலையில் அந்தப் பதவியில் அமர்ந்திருந்தவர்.அவரது நேர்மையும் கொள்கைப் பற்றுறுதியும், இனத்தின் மீது கொண்ட வாஞ்சையும் உலகத் தலைவர்களில் ஒருவராக அவரை அடையாளம் காட்டின….

Read More

தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு எதிரான சதி முயற்சி தொடருகின்றதா?

தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு எதிரான சதி முயற்சி தொடருகின்றதா?

புpராந்திய அதிகாரங்களை மக்களுக்கு ஓரளவு வழங்கும் வகையில் ஸதாபிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் மாகாணசபைகளுக்குள்ளே தங்களுக்கு நன்மைகளைத் தரும் வகையில் இயங்கவேண்டிய வடக்கு மாகாண சபையின் நிலைகண்டு தமிழ் மக்கள தாங்கொணாத் துயரம் கொண்டுள்ளனர் என்பது தற்போது நன்கு புலனாகின்றது தமிழ்மக்களுக்கு உதவுவதை விடுத்து வடக்கு மாகாண சபையை தங்களின் சுய பதவிக்காக பயன்படுத்துகின்றனரே! என்ற வேதனை மக்களிடம் இருக்கவே செய்கிறது. இதற்கு காரணம் உண்மையான சேவை நோக்கம் இல்லாதவர்கள் அங்கு மாகாண சபை உறுப்பினர்கள் என்ற பதவிகளை தங்கள் வசம் வைத்திருப்பதே என்பதையும் மக்கள் சுட்டிக்காட்டத் தொடங்கியுள்ளார்கள். இது இவ்வாறிருக்க, தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைக் கொண்டுள்ள வடக்கு மாகாண சபை முதல்வர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு…

Read More

பட்டிமன்றம் திரு ராஜா தலைமையில் சிறப்புப் பட்டிமன்றம் ” சிறந்த வாழ்க்கைத் துணைக்கு அன்பா அறிவா தேவை? என்னும் தலைப்பில் நடைபெற்றது

பட்டிமன்றம் திரு ராஜா தலைமையில் சிறப்புப் பட்டிமன்றம் ” சிறந்த வாழ்க்கைத் துணைக்கு அன்பா அறிவா தேவை? என்னும் தலைப்பில் நடைபெற்றது

உதயன் பல்சுவைக் கலைவிழா 2017 கடந்த சனிக்கிழமை கனடா நாட்டின் ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள பெரிய சிவன் ஆலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. பட்டிமன்றம் திரு ராஜா தலைமையில் சிறப்புப் பட்டிமன்றம் ” சிறந்த வாழ்க்கைத் துணைக்கு அன்பா அறிவா தேவை? என்னும் தலைப்பில் நடைபெற்றது. கனடா வாழ் பேச்சாளர்கள் திருவாளர்கள் கணபதி ரவீந்திரன், டாக்டர் போல் ஜோசப், கவிஞர் புகாரி மற்றும் திருமதி கோதை அமுதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். பட்டிமன்றத்தை சபையில் அமர்ந்திருந்த அனைவரும் இறுதவரை அமர்ந்திருந்து ரசித்தனர். நட்சத்திரா இசைக்குழுவினர் சிறந்த இசைநிகழ்ச்சியை வழங்கினர். நடனம் மறறும் சிறப்புக் கௌரவிப்பு ஆகியன இடம்பெற்றன. இந்த விழாவை சிறப்பாகவும் அழகுறவும் நடத்த ஆதரவு…

Read More

ரிசார்ட்டுக்கு திரும்ப தொடங்கிய எம்எல்ஏக்கள்: தினகரனுடன் கூட்டம் நடத்த திட்டம்

ரிசார்ட்டுக்கு திரும்ப தொடங்கிய எம்எல்ஏக்கள்: தினகரனுடன் கூட்டம் நடத்த திட்டம்

தொகுதிக்கும், சென்னைக்கும் சென்றிருந்த டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் இன்று மாலை முதல் புதுச்சேரிக்கு மீண்டும் திரும்ப தொடங்கினர். இந்நிலையில் டிடிவி தினகரன் தலைமையில் அக்கட்சி எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் செவ்வாயன்று சென்னையில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி சின்னவீராம்பட்டினம் தனியார் சொகுசு விடுதியில் கடந்த மாதம் 22ம் தேதி முதல் டிடிவி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கியிருந்தனர். சனிக்கிழமையன்று தினகரன் புதுச்சேரி வந்து சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்தார். இந்நிலையில் புதுச்சேரி தனியார் ரிசார்ட்டில் தங்கியிருந்த தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேரில் 15 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். தங்களுடைய தொகுதி பணிகளை மேற்கொள்வதற்காக சென்றுள்ள அவர்களில் பலர் மாலை…

Read More

அசல் ஓட்டுநர் உரிமம் எடுத்துச் செல்வது கட்டாயம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

அசல் ஓட்டுநர் உரிமம் எடுத்துச் செல்வது கட்டாயம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

வாகன ஓட்டுநர்கள் தங்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தை எடுத்துச் செல்வது கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இம்மாதம் 1-ம் தேதி முதல் வாகன ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தை தங்கள் கைகளில் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கம் பொது நல வழக்கு தொடர்ந்தது. கடந்த 1-ம் தேதி நீதிபதி துரைசாமி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மோட்டார் வாகனச் சட்டத்திலேயே இம்மாதிரியான கட்டாயம் வலியுறுத்தப்படவில்லையே என்று கேள்வி எழுப்பினார். மேலும் மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களினால் உரிமத்துக்கு ஏதேனும் இழப்பு உண்டானால் யார் பொறுப்பேற்பார்கள்…

Read More

சென்னையில் இன்று முரசொலி பவள விழா : 11 ஆண்டுக்குப் பிறகு திமுக மேடையேறும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ – கூட்டணியில் இணைவாரா?

சென்னையில் இன்று முரசொலி பவள விழா : 11 ஆண்டுக்குப் பிறகு திமுக மேடையேறும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ – கூட்டணியில் இணைவாரா?

கடந்த 2006-ல் திமுக கூட்டணியில் இருந்து விலகிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 11 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘முரசொலி’யின் 75-வது ஆண்டு நிறைவு பவள விழா கடந்த ஆகஸ்ட் 10, 11 தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. 11-ம் தேதி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது. ஆனால், பலத்த மழை பெய்ததால் பொதுக்கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் தள்ளிவைக்கப்பட்ட பொதுக்கூட்டம் சென்னை கொட்டிவாக்கம் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ திடலில் நாளை (செப்டம்பர் 5) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. கடந்த 2004 மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையில் அமைந்த மெகா கூட்டணியில்…

Read More

சசிகலா ஒப்புதல் இல்லாமல் கூட்ட முடியாது: பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றால் கடும் நடவடிக்கை – அதிமுக (அம்மா) துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எச்சரிக்கை

சசிகலா ஒப்புதல் இல்லாமல் கூட்ட முடியாது: பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றால் கடும் நடவடிக்கை – அதிமுக (அம்மா) துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எச்சரிக்கை

திமுகவின் கட்சி விதிகளுக்கு எதிராக வரும் 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக (அம்மா) துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுகவை சீர்குலைக்கும் நோக்கத்துடன் ஓ.பன்னீர்செல்வமும், அவரைச் சார்ந்தவர்களும் செயல்பட்டு வருகின்றனர். அதிமுக பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் முடக்கும் எண்ணத்துடன் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ், இ.மதுசூதனன், எஸ்.செம்மலை ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் கடந்த மார்ச் 23-ம் தேதி அதிமுக பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் யாரும்…

Read More

மலையாள மக்களுக்காக உதகையில் ‘ஓணம் சந்தை’

மலையாள மக்களுக்காக உதகையில் ‘ஓணம் சந்தை’

நீலகிரி மாவட்டத்தில் வாழும் மலையாள மக்கள் ஓணம் பண்டிகை பொருட்களை வாங்க ‘ஓணம் சந்தை’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கணிசமான மலையாள மக்கள் வசிக்கின்றனர். இதனால், மாவட்டத்தில் ஓணம் பண்டிகை களை கட்டும். மாவட்டத்தில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலை, ரயில்வே துறையில் மலையாள மக்கள் அதிகம் பேர் பணிபுரிவதால், ஓணம் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெறும். மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஓணம் நிகழ்ச்சிகள் ஒரு வாரத்துக்கு முன்னரே தொடங்கி விட்டது. உதகை கிரெசண்ட் கேசில் பள்ளி, குன்னூர் பிராவிடன்ஸ் பெண்கள் கல்லூரிகளில் ஓணம் திருவிழாக்களை மாணவர்கள் நடத்தினர். விழாக்களில் பூக்களம் அமைத்து மாவேலி அரசரை மாணவ, மாணவியர் வரவேற்றனர். தொடர்ந்து, மாணவியர் மற்றும் ஆசிரியைகளை…

Read More

மாணவி அனிதா குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் – முதல்வர் பழனிச்சாமி உத்தரவு

மாணவி அனிதா குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் – முதல்வர் பழனிச்சாமி உத்தரவு

மாணவி அனிதா குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். விபரீத முடிவுகளை மாணவர்கள் எடுக்க வேண்டாம் என்று வேண்டு கோளும் விடுத்துள்ளார். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இரங்கல் அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகத்தின் மகள் அனிதா தற்கொலை செய்துகொண்டு இறந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த அனிதாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். ரூ.7 லட்சம் நிவாரணம் இந்த சம்பவத்தில் உயிரிழந்த அனிதா குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து…

Read More
1 319 320 321 322 323 425