நல்ல சம்பளம் கிடைத்தும் போராட்டம் நடத்துவதா; மாணவர்கள் மீது அக்கறையே இல்லையா?- ஆசிரியர்களைக் கடிந்து கொண்ட நீதிபதி கிருபாகரன்

நல்ல சம்பளம் கிடைத்தும் போராட்டம் நடத்துவதா; மாணவர்கள் மீது அக்கறையே இல்லையா?- ஆசிரியர்களைக் கடிந்து கொண்ட நீதிபதி கிருபாகரன்

போராட்டம் நடத்தும் ஆசிரியர்களால் மாணவர் சமுதாயம்தான் பாதிக்கப்படுகிறது என உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மாணவர்களுக்கு உடனடியாக கவுன்சிலிங் மையத்தை அமைக்க வேண்டும் என வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை நாளை இன்னொரு வழக்குடன் சேர்த்து விசாரிப்பதாக தெரிவித்த நீதிபதி கிருபாகரன் ஆசிரியர் போராட்டம் குறித்து தனது கருத்துக்களை பதிவு செய்தார். அப்போது நீதிபதி கிருபாகரன், ஆசிரியர்கள் நடத்தும் போராட்டத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். போராடும் ஆசிரியர்கள் மாணவர்கள் நிலை பற்றி கவலை கொள்வதில்லை என்று தெரிவித்தார்….

Read More

சென்னையில் டெங்கு கட்டுப்படுத்தப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி; காய்ச்சலால் பாதிக்கப்பட்ட போலீஸாருக்கு நேரில் ஆறுதல்

சென்னையில் டெங்கு கட்டுப்படுத்தப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி; காய்ச்சலால் பாதிக்கப்பட்ட போலீஸாருக்கு நேரில் ஆறுதல்

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 7 போலீஸாரை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சென்று நலம் விசாரித்தனர். “டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 10 நாட்களில் சென்னையில் 100 சதவீதம் முழுமையாக தடுக்கப்படும்” என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 7 போலீஸார் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை இன்று (புதன்கிழமை) சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை காவல் ஆணையர். ஏ.கே.விஸ்வநாதன், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். வேண்டிய மருத்துவ உதவிகள் கிடைப்பது பற்றி அமைச்சர் விஜயபாஸ்கர், காவல் ஆணையர்…

Read More

மொத்தமுள்ள 2,236 பேரில் 2,130 பேர் பங்கேற்று தீர்மானங்களுக்கு ஆதரவு: சசிகலா பதவியை ரத்து செய்தது அதிமுக பொதுக்குழு – முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிக அதிகாரங்கள்

மொத்தமுள்ள 2,236 பேரில் 2,130 பேர் பங்கேற்று தீர்மானங்களுக்கு ஆதரவு: சசிகலா பதவியை ரத்து செய்தது அதிமுக பொதுக்குழு – முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிக அதிகாரங்கள்

அதிமுகவில் சசிகலா வகித்து வந்த தற்காலிக பொதுச்செயலாளர் பதவியையும், அவர் அறிவித்த நியமனங்களையும் ரத்து செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மொத்தமுள்ள 2,236 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,130 பேர் பங்கேற்று தீர்மானத்தை ஆதரித்தனர். கட்சியில் பொதுச்செயலாளர் பதவியே ரத்து செய்யப்பட்டு, அதிகாரங்கள் அனைத்தும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ளன. 12 தீர்மானங்கள் அதிமுக இரு அணிகள் இணைந்த பிறகு அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்: அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெருமையும், கம்பீரமும் மறைந்த ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரியது என…

Read More

அஜீத்தும் இயக்குநர் சிவாவும் தொடர்ச்சியாக இணைந்து உருவாக்கியிருக்கும்-விவேகம்

அஜீத்தும் இயக்குநர் சிவாவும் தொடர்ச்சியாக இணைந்து உருவாக்கியிருக்கும்-விவேகம்

அஜீத்தும் இயக்குநர் சிவாவும் தொடர்ச்சியாக இணைந்து உருவாக்கியிருக்கும் மூன்றாவது படம், அஜீத்குமார் நடிக்க வந்து 25வது வருடத்தில் வந்திருக்கும் படம், முழுக்க முழுக்க ஐரோப்பாவில் எடுக்கப்பட்ட படம் என “விவேகம்” அஜீத்தின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருக்கும் அணுகுண்டுகளை வெடிக்கச்செய்து ஒரு நிலநடுக்கத்தை உருவாக்கும் கும்பல், மேலும் இரண்டு அணுகுண்டுகளை வெடிக்கச் செய்யத் திட்டமிடுகிறது. அதனைத் தடுக்க செர்பியாவில் உள்ள ஒரு பயங்கரவாத எதிர்ப்புப் படை (உளவுப் படை?) ஒன்று களமிறங்குகிறது. அதன் சார்பில் செயலில் இறங்குகிறார் அஜய்குமார். நடாஷா என்ற ஹேக்கரால்தான் அதனை தடுக்க முடியும் என அவளைத் தேட, அவள் கொல்லப்படுகிறாள். இந்தக் கட்டத்தில் ஆர்யன் உள்ளிட்ட…

Read More

பிரதி அமைச்சர் பதவியில் இருந்து அருந்திக விலக்கப்பட்டார்

பிரதி அமைச்சர் பதவியில் இருந்து அருந்திக விலக்கப்பட்டார்

பிரதி அமைச்சர் பதவியில் இருந்து அருந்திக பெர்ணான்டோ விலக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகம் பிரிவு இதனை அறிவித்துள்ளது. அரசியல் அமைப்பில் ஜனாதிபக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகார பிரதி அமைச்சர் பதவியில் இருந்து அவர் இன்று முதல் நீக்கப்படுகிறார் என அறிவித்துள்ளது.

Read More

ஜெயலலிதாவுக்கு பிறகு கட்சியில் இனி பொதுச்செயலாளர் பதவி கிடையாது

ஜெயலலிதாவுக்கு பிறகு கட்சியில் இனி பொதுச்செயலாளர் பதவி கிடையாது

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில் இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூடுகிறது. இன்று காலை 10.30 மணிக்கு கூட்டம் தொடங்கவுள்ள நிலையில் தொண்டர்கள் குவியத் தொடங்கினர். கூட்டத்தில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை கட்சியிலிருந்து முழுவதும் நீக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க 750 செயற்குழு உறுப்பினர்கள் உள்பட 2,300 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. செயற்குழு , பொதுக்குழு உறுப்பினர்கள் வர தொடங்கினர்கள். பொதுக்கூழுவிற்கு 95 சதவீதம் உறுப்பினர்கள் வருகை தந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை வானகரத்தில் நடைபெறவுள்ள…

Read More

The Doctor Game column- How Safe Are Cell Phones?

The Doctor Game column- How Safe Are Cell Phones?

How Safe Are Cell Phones? Are some cell phone users destined to develop cancer after years of use? Or, is this fear being over-played? For years I’ve tried to find an unbiased informative source. Now, a report from the University of California attempts to answer this perplexing question. We know that high frequency ionizing radiation from excessive X–ray exposure can possibly cause malignancy. This radiation is cumulative, and like an elephant, it never forgets the…

Read More

இரண்டு ஈழம் சார்ந்த முழு நீளத் திரைப்படங்கள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு ஸ்காபுறோவில் இடம்பெற்றது

இரண்டு ஈழம் சார்ந்த முழு நீளத் திரைப்படங்கள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு ஸ்காபுறோவில் இடம்பெற்றது

06-09-2017 புதன் அன்று ஸ்காபரோ நகரில் நடைபெற்ற இரண்டு ஈழம்சாரந்த் முழுநீளத் திரைப்படங்களுக்கான ஊடகவியலாளர்கள், திரைத்துறைசார் நண்பர்கள் கலந்து கொண்ட சந்திப்பு இனிதே நடந்தேறியது. 3001 மார்க்கம் வீதியில் அமைந்துள்ள Golden Cultural Centre ல் மாலை 6.00 மணிக்கு நடந்த இந்த நிகழ்வில் , யாழ்ப்பாணத்திலிருந்து முழுமையாக எமது மண்ணின் மொழி பேசிக்கொண்டு, ஒரு முழுநீளத் திரைக்காவியமாக, மென்மையான காதல் கதையுடன் “மனசுக்குள் ஒரு மழைச்சாரல்” என்னும் படத்தின் முன்னோட்டமும், அதில் பணிபுரிந்தவர்களின் ஒளிப்பதிவு செய்யப்பட்ட செவ்விகளும் காண்பிக்கப்பட்டன. முன்னோட்டம் பெரும் ஆர்வத்தைத் தூண்டுவதாக வந்திருந்தவர்களும், ஏற்கனவே படத்தைப் பார்த்தவர்கள் இது நிச்சயமாக அனைவரும் சென்று ரசிக்கும் படமென்றும் சொல்லிச் சென்றனர். இப்படத்தினை லண்டனிலிருந்து…

Read More

தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் சபரிமாலா பணியை விட தேசம் தான் முக்கியம் என்று தனது பதவியைத் துறந்துள்ளார்

தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் சபரிமாலா பணியை விட தேசம் தான் முக்கியம் என்று தனது பதவியைத் துறந்துள்ளார்

தற்போது இந்தியா முழுவதும் “நீட்” என்னும் கல்வித் திட்டம் தொடர்பாக எங்கும் ஆர்ப்பாட்டப் போராட்டங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கையில், இந்தியா முழுவதும் ஒரே கல்வி முறையை அமுல்படுத்தும் படி வலியுறுத்தி போராடி வந்த அரசுப் பள்ளி ஆசிரியர் சபரிமாலா பதவியை விட தேசம் தான் முக்கியம் என்று தனது பணியைத் துறந்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அரசுப் பள்ளியின் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே பல பட்டிமன்றங்களில் நடுவராகவும் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு கொண்டும் ஆசிரிய பணிக்கு முன் உதாரணமாக விளங்கி கொண்டு இருக்கிறார்

Read More

கன்னட எழுத்தாளர் கவுரி லங்கேஸ் படுகொலை தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள சீமான்

கன்னட எழுத்தாளர் கவுரி லங்கேஸ் படுகொலை தொடர்பாக கண்டனம்  தெரிவித்துள்ள சீமான்

கன்னட எழுத்தாளர் கவுரி லங்கேஸ் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேற்படி அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது:- “பெருமதிப்பிற்குரிய கன்னட எழுத்தாளர் கவுரி லங்கேஸ் சுட்டுக்கொலை செய்யப்பட்ட செய்தி இந்தியப்பெருநிலத்தின் அறிவுச்சமூகத்தைப் பெரிதும் பாதித்திருக்கிறது. தொடர்ச்சியாக இந்துத்துவப் பயங்கரவாதத்திற்கு எதிராக தனது கருத்துகளைத் துணிவோடு வெளிப்படுத்திக் கொண்டிருந்த முற்போக்காளர் கவுரியின் மரணம் இந்திய நாட்டில் நிலவும் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான அடக்குமுறைகளை உலகத்திற்கு எடுத்துக்காட்டிவிட்டது. பேராற்றலும், நெஞ்சுரமும், நம்பிக்கையும் நிறைந்த பெண்ணாக வாழ்ந்து, எதற்கும் அஞ்சாமல் மதப்பயங்கரவாதத்திற்கு எதிராகக் கருத்துகளைக் கூறும் எளிய மக்களின் மனசாட்சியின் குரலாக மதிப்புமிகு கவுரி லங்கேஸ் திகழ்ந்தார்….

Read More
1 318 319 320 321 322 425