நியாயமான விலையில் மின்சாரத்தை கொள்முதல் செய்து தமிழகத்தில் மின் தடையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
பா.ம.க. இளைஞர் அணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– மின்வெட்டு தலைநகர் சென்னை உள்பட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக கடுமையான மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே கோடை வெயிலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின்தடையை போக்க அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு மின்மிகை மாநிலமாகிவிட்டதாகக் கூறி இரு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது மின்தட்டுப்பாடு நிலவுவதற்கு தமிழக ஆட்சியாளர்களின் அலட்சியம் தான் காரணமாகும். வல்லூர் அனல் மின் நிலையத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட மின்சாரத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.1,156 கோடியை தமிழக அரசு செலுத்தாததால், தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த 1,065 மெகாவாட் மின்சாரத்தை நிறுத்திவிட்டது. சென்னையில்…
Read More









