மல்லையாவுக்கு உதவி செய்யவில்லை: பாஜக குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதில்

மல்லையாவுக்கு உதவி செய்யவில்லை: பாஜக குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதில்

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு காங்கிரஸ் கட்சி உதவி செய்யவில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் மறுப்பு தெரிவித்துள்ளனர். தற்போது பிரிட்டனில் தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் விமான நிறுவனத்துக்கு கடன் கிடைப்பதற்கு மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும் உதவி செய்தனர் என்ற பாஜகவின் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் விதமாக, அவர்கள் இருவரும் இவ்வாறு தெரிவித்துள்ளனர். மேலும், மல்லையாவை வெளிநாட்டுக்குத் தப்ப வைத்தது பிரமதர் மோடி தலைமையிலான மத்திய அரசுதான் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக, மன்மோகன் சிங்கும், சிதம்பரமும், தில்லியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: தொழில் துறையைச் சேர்ந்த தலைவர்கள், தங்களுடைய கோரிக்கைகளைத் தெரிவித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவது…

Read More

தமிழில் நிவின் பாலி அறிமுகமாகும் ‘ரிச்சி’

தமிழில் நிவின் பாலி அறிமுகமாகும் ‘ரிச்சி’

தமிழில் நிவின் பாலி நாயகனாக நடித்துவரும் படத்துக்கு ‘ரிச்சி’ என தலைப்பிட்டுள்ளது படக்குழு. கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘Ulidavaru Kandanthe’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நாயகனாக நடித்து வருகிறார் நிவின் பாலி. தூத்துக்குடி, மணப்பாடு மற்றும் குற்றாலம் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. நிவின் பாலியுடன் நட்ராஜ் சுப்ரமணியன், ஷ்ரதா, ராஜ் பரத், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வந்த இப்படத்துக்கு பெயர் வைக்காமல் படப்பிடிப்பு நடத்தி வந்தார்கள். தற்போது ‘ரிச்சி’ என பெயரிட்டுள்ளார்கள். இப்படம் குறித்து இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன், “தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு ரௌடி கதாபாத்திரத்தில் நிவின் பாலியும், படகுகளை சரி…

Read More

எல்லை நிர்ணய அறிக்கை இன்னும் ஒரு மாதத்தில் வர்த்தமானியில்.!

எல்லை நிர்ணய அறிக்கை இன்னும் ஒரு மாதத்தில் வர்த்தமானியில்.!

உள்ளூராட்சி எல்லைகள் மேன்முறையீட்டு குழுவின் அறிக்கை, இன்னும் ஒரு மாதத்தில் வர்த்தமானிப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி எல்லைகள் பூரணப்படுத்தப்பட்ட உள்ளூராட்சி சபைகளில் மிக விரைவாக தேர்தலை நடாத்துமாறு கோரி பெப்ரல் அமைப்பினால் முன்வைக்கப்பட்ட மனு, இன்று உச்ச நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே அமைச்சர் பைசர் முஸ்தபா சார்பில் ஆஜரான சட்டத்தரணி இதனை குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் தினத்தை தெரியப்படுத்துமாறு கோரியே பெப்ரல் அமைப்பு குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தது. இதேவேளை, மனு மீதான அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மகிந்த எச்சரிக்கை

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மகிந்த எச்சரிக்கை

போர் வெற்றியைக் காட்டிக் கொடுக்கும் புதியஅரசியலமைப்புக்கான பணிகளை நிறுத்த வேண்டும்என்று எச்சரித்துள்ள முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, துறைமுகங்கள், நிலங்களை வாங்கும் வெளிநாட்டுமுதலீட்டாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். நுகேகொடவில் நேற்று நடந்த கூட்டு எதிரணியின்கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறுஎச்சரிக்கை விடுத்துள்ளார். “இந்த மக்கள் கூட்டத்தை பார்க்கும் போது நமது தலைவர்களுக்கு எந்தப் பக்கம்இழுத்துக்கொள்ளும் என்று எனக்கு சந்தேகமாக உள்ளது. அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், இனி அரசியலிருந்து ஓய்வு பெறுவோம்என்ற எண்ணத்தோடு ஜனவரி 9 ஆம் நாள், காலை 6 மணிக்கு அதிபர் மாளிகையைவிட்டு வெளியேறி மெதமுலனவுக்கு சென்ற என்னை, ‘ தற்போது உங்களுக்கு ஓய்வுஇல்லை, மீண்டும் நீங்கள் வரவேண்டும்” என சொன்னது நீங்கள் தான்….

Read More

உ.பி.யில் மீண்டும் மோதல் வெடிக்கிறது; காங்கிரசுக்கு எதிராக வேட்பாளர்கள் களமிறங்க முலாயம் உத்தரவு

உ.பி.யில் மீண்டும் மோதல் வெடிக்கிறது; காங்கிரசுக்கு எதிராக வேட்பாளர்கள் களமிறங்க முலாயம் உத்தரவு

லக்னோ, உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியும், காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் சமாஜ்வாடி 298 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரசுக்கு 105 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த கூட்டணியை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்வதற்காக நேற்று உத்தரபிரதேசம் சென்ற காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் சேர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் பாரதீய ஜனதாவின் பிரிவினைவாத அரசியலை ஒடுக்கவேண்டும் என்றனர். காங்கிரஸ் கட்சியுடன் சமாஜ்வாடி கட்சி கூட்டணி வைப்பது, முலாயம் சிங் யாதவிற்கு பிடிக்கவில்லை. “காங்கிரசுக்கு எதிராக சமாஜ்வாடி கட்சியை உருவாக்க நீண்ட காலம் நான் போராடினேன், இப்போதும் அகிலேஷ் யாதவை கூட்டணி…

Read More

அமெரிக்க ஜனாதிபதியால் ஆபத்திலிருந்து தப்பிய இலங்கை! டொனால்ட் ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கை

அமெரிக்க ஜனாதிபதியால் ஆபத்திலிருந்து தப்பிய இலங்கை! டொனால்ட் ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கை

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் மேற்கொள்ளும் சில தீர்மானங்கள் இலங்கைக்கு சாதகமாகும் நிலையை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையினை சமகால அரசாங்கம் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் இராஜதந்திர அதிகாரியான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். ஆசிய விவகாரங்களுக்கான பொறுப்பான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க தூதர் சமந்தா பவர் நீக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் மனித உரிமை தொடர்பில் கருத்து வெளியிட்ட அதிகாரிகள் இவ்வாறு பதவி நீக்கப்பட்டுள்ளதனை இலங்கைக்கு நன்மையாக்கிக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். டொனால்ட் ட்ரம்ப் இதுவரையில் இலங்கை தொடர்பில் நேரடி…

Read More

இந்த வார (01/27/2017) இ-பேப்பர்

இந்த வார (01/27/2017) இ-பேப்பர்

இந்த வார (01/27/2017) இ-பேப்பர் புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள் படிக்க http://canadauthayan.ca/current-epaper/ கிளிக் செய்து படித்த்து மகிழவும்.

Read More

“நாங்கள் சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்பதற்காவே தற்போதைய அரசுக்கு ஆதரவை வழங்குகின்றோம்”

“நாங்கள்  சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்பதற்காவே தற்போதைய அரசுக்கு ஆதரவை வழங்குகின்றோம்”

கனடா தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நடத்திய கூட்டத்தில் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தினி ஸ்ரீஸ்கந்தராஜா “நாங்கள் எத்தனையோ சந்தர்ப்பங்களைத் கடந்த காலங்களில் தவற விட்டுள்ளோம். இப்போது எமது இனத்தின் விடிவுக்கு நல்லதொரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இப்போதைய அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு நாம் எமது ஆதரவை வழங்க வேண்டும்” இவ்வாறு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ததேகூ(கனடா) நடத்திய இரவு விருந்தின் போது முல்லைத்தீவு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சாந்தி சிறிஸ்கந்தராசாஈ தனது உரையில் குறிப்பிட்டார். தலைமை உரையை ததேகூ (கனடா) இன் தலைவர் கதிர வேலுகுகதாசன் ஆற்றினார். வரவேற்புரையை ததேகூ இன் துணைத்தலைவர் வீர சுப்பிர மணியம் ஆற்றினார். மிகச் சிறப்பாக நடந்தேறிய இந்த விருந்தில்…

Read More

மைத்திரியின் அரசுக்கு ரணில் பக்கபலமாக உள்ளாரா?

மைத்திரியின் அரசுக்கு ரணில் பக்கபலமாக உள்ளாரா?

இலங்கையில் தற்போதைய ஜனாபதி மைத்திரி பால சிறிசேனாவின் அரசாங்கம், ஐக்கிய தேசியக் கட்சியை இணைக் கட்சியாக வைத்துக்கொண்டு ஆட்சியை நடத்துகின்றது. இந்த அரசின் மீதான விமர்சனங்கள் வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் முன்வைக்கப்பட்டபோது, அண்மையில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. தற்போதைய மைத்திரியின் ஆட்சிக்கு ரணில் என்னும் பிரதமர் எந்தளவிற்கு பலமாக உள்ளார்? ஐக்கிய தேசியக் கட்சியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் எந்தளவிற்கு உள்ளது? போன்ற தலைப்புக்களில் கருத்துக் கணிப்பை நடத்தியது ஒரு சிங்கள இணைய ஊடகம். இந்த கருத்துக் கணிப்பின்படி பிரதமர் ரணிலுக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு உள்ள செல்வாக்கு போன்றவை குறைவாகவே காணப்படுகின்றது என்றும் ரணிலின் அரசியல் தலைமைத்துவம் மங்குகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலிருந்து கிடைத்த…

Read More

இங்கிலாந்து பவுலர்களுக்கு கோலி பாராட்டு

இங்கிலாந்து பவுலர்களுக்கு கோலி பாராட்டு

கான்பூர் : உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று நடந்த இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘எங்களை விட இங்கிலாந்து வீரர்கள் எல்லா வகையிலும் சிறப்பாக ஆடினர் என்பதை ஒப்புக்கொள்கிறேன். பந்து வீச்சு, பீல்டிங், பேட்டிங் அனைத்திலும் அபாரமாக செயல்பட்டனர். வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள். எதிரணி நன்றாக ஆடும் போது எழுந்து நின்று பாராட்ட வேண்டும். அப்படி தான் இங்கிலாந்தின் ஆட்டம் அமைந்தது. கடின முனைப்புடன் கொஞ்சம் பவுன்சாக சரியான அளவில் பந்து வீசிய இங்கிலாந்து பவுலர்களுக்கே ஒட்டுமொத்த சிறப்பும் உரித்தானது. இந்த…

Read More
1 391 392 393 394 395 425