வெறிநாய்களிடம் மாட்டிக் கொண்ட தனுஷ் பட நாயகி… தலையைக் கடித்துக் குதறின!

வெறிநாய்களிடம் மாட்டிக் கொண்ட தனுஷ் பட நாயகி… தலையைக் கடித்துக் குதறின!

மும்பை: பிரபல கன்னட நடிகை பாருல் யாதவை மும்பையில் வெறிநாய்கள் தாக்கி, கடித்துக் குதறின. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கன்னடப் பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் பாருல்யாதவ். இவர் தமிழில் தனுஷ் ஜோடியாக ‘ட்ரீம்ஸ்’ படத்தில் நடித்துள்ளார். புலன் விசாரணை இரண்டாம் பாகத்தில் பிரசாந்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராம்கோபால் வர்மா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான வீரப்பன் வாழ்க்கை கதை படத்தில் அதிரடிப்படையினருக்கு வீரப்பனை காட்டிக்கொடுக்கும் உளவாளி கதாபாத்திரத்தில் நடித்தவர் இவர்தான். பாருல் யாதவ் குடும்பத்தினருடன் மும்பையில் வசிக்கிறார். இவர் தான் வளர்க்கும் வெளிநாட்டு நாயுடன் தினமும் வாக்கிங் போவது வழக்கம். நேற்றும் வீட்டுக்கு அருகே நாயுடன்…

Read More

அர்ஜூன் மகேந்திரன் அரச பதவிகள் ஏதும் வகிக்கவில்லை: ரங்க கலன்சூரிய

அர்ஜூன் மகேந்திரன் அரச பதவிகள் ஏதும் வகிக்கவில்லை: ரங்க கலன்சூரிய

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன், தற்போது எந்தவிதமான அரச பதவிகளையும் வகிக்கவில்லை என்று அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் ரங்க கலன்சூரிய தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரத்தில் குற்றச்சாட்டப்பட்டுள்ள, முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், மத்திய வங்கியின் ஆலோசகராக மீண்டும் செயலாற்றுகின்றார் என்று ஊழலுக்கு எதிரான முன்னணி குற்றஞ்சாட்டி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை எழுதியிருந்தது. இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் ரங்க கலன்சூரிய, ‘மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் நிதியமைச்சின் ஆலோசகராக செயற்படுவது உண்மையற்ற விடயமாகும். அவர் அரசாங்கத்தில் எந்தவொரும் பதவிலும் இல்லை’ என்றுள்ளார்.

Read More

கெளரவ டாக்டர் பட்டத்தை மறுத்த டிராவிட்! கொண்டாடும் ரசிகர்கள்!

கெளரவ டாக்டர் பட்டத்தை மறுத்த டிராவிட்! கொண்டாடும் ரசிகர்கள்!

கெளரவ டாக்டர் பட்டம் என்பது திறமை, பங்களிப்பு மற்றும் பிரபலம் போன்றவற்றுக்கான முக்கியமான அங்கீகாரம். இந்தக் கெளரவத்தை வேண்டாம் என்று சொல்லி மறுத்துள்ளார் ராகுல் டிராவிட். ராகுல் டிராவிடின் பல சாதனைகளுக்குக் கெளரவம் செய்யும் விதமாக அவருக்குக் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க கர்நாடகாவின் பெங்களூர்ப் பல்கலைக்கழகம் முடிவு செய்தது. ஆனால் இதைப் பெற மறுத்துவிட்டார் டிராவிட். தானே தன் சொந்த முயற்சியில் விளையாட்டுத் துறையில் ஆய்வு செய்து டாக்டர் பட்டத்தை வாங்கிக்கொள்வதாகப் பல்கலைக்கழகத்துக்குப் பதில் அளித்துள்ளார். இந்தத் தகவல் சமூகவலைத்தளத்தில் வெளியானவுடன் டிராவிடுக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. இந்தக் காலத்தில் இப்படியும் ஒருவர் என்று ரசிகர்கள் டிராவிடைக் கொண்டாட இன்னுமொரு காரணமாக இந்தச் செய்தி அமைந்துள்ளது.

Read More

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மின்னஞ்சலில் கொலை மிரட்டல்

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மின்னஞ்சலில் கொலை மிரட்டல்

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தில்லி முதல்வரும் ஆம்ஆத்மி தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவாலின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலுக்கு நேற்று மற்றும் நேற்று முன்தினம் மர்மநபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அந்த மின்னஞ்சலில் அரவிந்த் கேஜ்ரிவாலை கொலை செய்வோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மின்னஞ்சலை தில்லி காவல்துறை ஆணையர் அலோக் குமார் வர்மாவுக்கு அனுப்பிய மாநில உள்துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு 2 முறை கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தில்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More

எல்லையில் சுவர், குடியேற்ற கட்டுப்பாடுகள் போன்ற திட்டங்களில் கையெழுத்திடுகிறார் டிரம்ப்

எல்லையில் சுவர், குடியேற்ற கட்டுப்பாடுகள் போன்ற திட்டங்களில் கையெழுத்திடுகிறார் டிரம்ப்

வாஷிங்டன், அமெரிக்க அதிபராக பதவி ஏற்றது முதல் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் டொனால்டு டிரம்ப், மெக்சிகோ எல்லையில் சுவர், அமெரிக்காவுக்கு குடியேறுபவர்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்ட திட்டங்களில் நடப்பு வாரத்தில் கையெழுத்திட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், சில முஸ்லீம் நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு குடி பெயருவதற்கு தற்காலிக தடைவிதிக்கவும் டிரம்ப் உத்தரவிட உள்ளதாக அங்குள்ள ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. தேச பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று டிரம்ப் கூறியிருந்த நிலையில், அவற்றில் ஒன்று மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பப்படும் என்பதாகும். தனது தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியமாக இதை டிரம்ப் கூறி வந்த நிலையில், இந்த உத்தரவை பிறப்பிக்க போவதாக நியூயார்க்டைம்ஸ் நாளிதழ் செய்தி…

Read More

கலக்கத்தில் ‘சி 3’ படக்குழுவினர்

கலக்கத்தில் ‘சி 3’ படக்குழுவினர்

‘S 3’ என்று படம் ஆரம்பிக்கும் போதுவிளம்பரப்படுத்தப்பட்ட ‘சிங்கம்’ படத்தின் மூன்றாம்பாகம், பின்னர் ‘C 3’ என்று அழைக்கப்பட ஆரம்பித்தது. தமிழில் ‘சி 3’ என்றும் பலரும்கூற ஆரம்பித்தார்கள். ஆனால், நேற்று தயாரிப்புநிறுவனத் தரப்பிலிருந்து படத்தை ‘C 3’ என்று அழைக்கவேண்டாம், ‘Si 3’ என்று சொல்லுங்கள் என கூறினார்கள். ஆனால், சராசரி ரசிகரை எப்படி குழப்பினாலும், ‘சிங்கம்பார்ட் 3’ என்றுதான் அவர்கள் சொல்கிறார்கள். ‘சி 3’ படம் நாளை 26ம் தேதி ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தெலுங்கிலும், தமிழ்நாட்டிலும், உலகம் முழுவதும் என 1500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில்வெளியிடுவதாக இருந்தார்கள். தெலுங்கு மாநிலங்களில் பொங்கலின் போது வெளிவந்த ‘கைதி நம்பர் 150, கௌதமிபுத்ர சட்டகர்னி,…

Read More

டிரம்புடன் என்ன பேசினேன்? டிவிட்டரில் மனம் திறந்தார் மோடி

டிரம்புடன் என்ன பேசினேன்? டிவிட்டரில் மனம் திறந்தார் மோடி

புது தில்லி: அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், நேற்று இரவு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, டிரம்புடனான தொலைபேசி பேச்சு மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியா, அமெரிக்காவின் உண்மையான தோழன் என்று டிரம்ப் கூறினார். இரு நாட்டு உறவுகளும் மேம்படும் வகையில், வருங்காலத்தில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட இருவரும் அப்போது ஒப்புக் கொண்டோம். தன்னை அமெரிக்கா வருமாறு டிரம்ப் அழைப்பு விடுத்தார். அவரும் இந்தியாவுக்கு வருகை தருமாறு நான் அழைத்துள்ளேன் என்று மோடி பதிவு செய்துள்ளார். அமெரிக்காவின் 45-ஆவது அதிபராக கடந்த 20-ஆம் தேதி டிரம்ப்…

Read More

இரானி கோப்பை சகா சதம்

இரானி கோப்பை சகா சதம்

குஜராத் அணிக்கு எதிரான இரானி கோப்பை போட்டியில் ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ அணியின் விரிதிமன் சகா சதமடித்துகைகொடுத்தார். ரஞ்சி கோப்பை ‘நடப்பு சாம்பியன்’ குஜராத், ‘ரெஸ்ட் ஆப்இந்தியா’ அணிகள் மோதும் இரானி கோப்பை கிரிக்கெட்போட்டி மும்பையில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் குஜராத் 358, ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ 226 ரன்கள் எடுத்தன. மூன்றாம்நாள் முடிவில், இரண்டாவது இன்னிங்சில் குஜராத் அணி 8 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்திருந்தது. நான்காம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த குஜராத் அணிக்கு ஹர்திக்படேல் (0) ஏமாற்றினார். சிராக் காந்தி (70) நம்பிக்கை தந்தார். இரண்டாவது இன்னிங்சில் குஜராத்அணி 246 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ சார்பில்…

Read More

ரோம் பிரகடனத்தில் சிறிலங்கா கையெழுத்திட வேண்டும் – ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

ரோம் பிரகடனத்தில் சிறிலங்கா கையெழுத்திட வேண்டும் – ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாகஇல்லாதொழிக்குமாறும், அனைத்துலக குற்றவியல்நீதிமன்றம் தொடர்பான ரோம் பிரகடனத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், சிறிலங்கா அரசாங்கத்திடம், ஐ.நாவின் சிறப்புஅறிக்கையாளர் ஜுவான் மென்டஸ் வலியுறுத்தியுள்ளார். சித்திரவதைகள் மற்றும் ஏனைய கொடூரமான, மனிதமாபிமானமற்ற, அல்லது இழிவுபடுத்தும்நடவடிக்கைகள், தண்டனைகள் தொடர்பான ஐ.நா சிறப்புஅறிக்கையாளரான, ஜுவான் மென்டஸ் சிறிலங்காவுக்குமேற்கொண்ட பயணம் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார். 2016 ஏப்ரல் 29ஆம் நாள் தொடக்கம், மே 7ஆம் நாள் வரை சிறிலங்காவில் மேற்கொண்டபயணத்தின் போது கண்டறியப்பட்ட விடயங்களை உள்ளடக்கியதாக இந்த அறிக்கைதயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைவரும், மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவதுஅமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த அறிக்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை சிறிலங்கா உடனடியாக இல்லாமல்ஒழிக்க வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக…

Read More
1 392 393 394 395 396 425