கனடாவரும் முதலமைச்சர் சி. வி. விக்கினேஸ்வரன் அவர்களை கரம்கூப்பி வரவேற்போமாக!

கனடாவரும் முதலமைச்சர் சி. வி. விக்கினேஸ்வரன் அவர்களை கரம்கூப்பி வரவேற்போமாக!

இன்னும் இரண்டு வாரங்களில் எமக்காக புத்தாண்டு 2017 பிறக்கப்போகின்றது. புத்தாண்டில் புதியவை பிறக்கும் என்ற எதிர்பார்ப்போடுதான் நாம் அனைவரும் வாழ்வில் காத்திருப்பதுண்டு. புதிய வருடத்தில் என்னதான் எமக்கு கிட்டப்போகின்றது என்று எண்ணியிருந்த கனடாவாழ் தமிழ் மக்களை சந்திக்க தாயகத்திலிருந்து வடக்கின் முதலமைச்சர் திரு சி. வி. விக்கினேஸ்வரன் எங்கள் புலம் பெயர் மண்ணுக்கு வருகின்றார் என்ற நற்செய்தி எமக்கு கிட்டியுள்ளது. அவரது விஜயம் தொடர்பான விரிவான செய்தி எமது இவ்வார உட்பக்க மொன்றில் காணப்படுகின்றது. தாயகத்தில் வடக்கிலும் கிழக்கிலும் எமது உறவுகளில் பலர் பல்வேறு துன்பங்களைஅனுபவித்து வருகின்றார்கள். அவர்களில் பலர் போரினால் ஏற்பட்டு வடுக்கள் இன்னும் மறையாமல் மனங்கள் பாதிக்கப்பட்ட துயரோடு வாழ்ந்து வருகின்றார்கள். அங்கங்களை…

Read More

ஊர்காவற்றுறை, சுருவில் மக்கள் ஒன்றியம் நடத்திய வருடாந்த இராப்போசன விருந்து

ஊர்காவற்றுறை, சுருவில் மக்கள் ஒன்றியம் நடத்திய வருடாந்த  இராப்போசன விருந்து

கனடாவில் கடந்த பல வருடங்களாக இயங்கிவரும், ஊர்காவற்றுறை சுருவில் மக்கள் ஒன்றியம் நடத்திய வருடாந்த  இராப்போசன விருந்து கடந்த சனிக்கிழமையன்று மார்க்கம் நகரில் சிறப்பாகநடைபெற்றது. சிறுவர் சிறுமியர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு ஆகியன இடம்பெற்றன. சுருவில் கிராமத்தில் வாழும் மக்களுக்கு உதவும் வகையில் செய்யவேண்டிய பணிகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன. இங்கே காணப்படும் படத்தில் அங்கு கலந்து கொண்ட மூத்தோர்களில் சிலர் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் காணலாம்.

Read More

“Ethnic Press and Media Council of Canada” நடத்தியவருடாந்த இராப்போசன விருந்தில் கனடா உதயன் நண்பர்கள்

“Ethnic Press and Media Council of Canada” நடத்தியவருடாந்த இராப்போசன விருந்தில் கனடா உதயன் நண்பர்கள்

கனடாவில் இயங்கும் மிகப்பெரிய பத்திரிகையாளர்கள் கழகமான “Ethnic Press and Media Council of Canada” தனது வருடாந்த இராப்போசன விருந்தை கடந்த வெள்ளிக்கிழமை 16ம் திகதி ரொரென்ரோ மாநகரில் நடத்தியது. ஒன்றாரியோ மாகாண முதல்வர் கௌரவகெத்தலின் வின் தனது அமைச்சர்கள் பலரோடு அங்கு வருகை தந்திருந்தார். கனடா உதயன் பிரதம ஆசிரியர் மேற்படி கழகத்தில் உபதலைவர்களில் ஒருவராக உள்ளார். மேற்படி இராப்போசன விருந்தில் அவர்கள் தனது நண்பர்களான சங்கர் நல்லதம்பி, விமல் நவரட்ணம், தாஸ் சாண்,கிருபாகிசான் ஆகியோரோடு கலந்துகொண்டார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய நகரசபை உறுப்பினருமான ஜிம் கரி ஜியானிஸ் அவர்களும் அங்கு கலந்து கொண்டார்.

Read More

திருசமீம் மொகமட் தலைமையிலான வீடு விற்பனை நிறுவனமான Century 21 Innovative Realty Inc நடத்திய வருடாந்த விருது விழா

திருசமீம் மொகமட் தலைமையிலான வீடு விற்பனை நிறுவனமான  Century 21 Innovative Realty Inc நடத்திய வருடாந்த விருது விழா

பிரபல வீடு விற்பனை நிறுவனஅதிபர் திருசமீம் மொகமட் அவர்களின் Century 21 Innovative Realty Inc தனதுவருடாந்தர விருது வழங்கும் விழாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஸகாபுறோ கொன்வென்சன் சென்றர் மணடபத்தில் சிறப்பாக நடத்தியது. பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல பிரமுகர்கள் அங்கு கலந்து சிறப்பித்தனர். பல வெற்றியாளர் தங்கள் விற்பனைச் சாதனைகளுக்காக சிறப்பு விருதுகளைப் பெற்றார்கள். முதற்பிரிவு வெற்றியாளர்களாக பல விற்பனை முகவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இங்கேகாணப்படும் படத்தில் முதன்மை விருதுகள் பெற்றவர்களான திரு தனாசசீந்திரா மற்றும் திரு அருள் சிவ சுப்பிரமணியம் ஆகியோர் அங்கு சமூகமளித்த மோட்கேஜ் திரு விமல் நவரட்ணம் மற்றும் திரு ஞானி ஞானேந்திரன் ஆகியோரோடு நிற்பதைக்…

Read More

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வீட்டில் நடத்திய சோதனை பழிவாங்கும் செயல் மம்தா பானர்ஜி கண்டனம்

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வீட்டில் நடத்திய சோதனை பழிவாங்கும் செயல் மம்தா பானர்ஜி கண்டனம்

கொல்கத்தா, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வீட்டில் வருமான வரி இலாகா நடத்திய சோதனை பழிவாங்கும் செயல் என்று மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்தார். அதிரடி சோதனை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவுக்கு சொந்தமான சென்னை அண்ணா நகர் வீட்டிலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் நேற்று வருமான வரி இலாகா அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வருமான வரி இலாகாவின் இந்த சோதனைக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இதுபற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-…

Read More

பாரிஸ் தாக்குதல் குற்றவாளி ஜேர்மனியில் கைது

பாரிஸ் தாக்குதல் குற்றவாளி ஜேர்மனியில் கைது

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரான்ஸ் தலைநகர்பாரிஸில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்தொடர்புடைய நபர் ஜேர்மனியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். மொராக்கோவை சேர்ந்த 24 வயதான Redouane S என்றநபரே குறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 13ம் திகதி பாரிஸில் பயங்கர தாக்குதல்களை நடத்திய ஐ.எஸ்அமைப்பின் செல் உறுப்பினராக Redouane செயல்பட்டு வந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அக்டேபார் 2014 மற்றும் 2015ம் ஆரம்பத்தில் துருக்கி மற்றும் கிரீஸ் நாடுகளில் ஐ.எஸ்அமைப்பினர் திட்டமிட்டு தாக்குதல் நடத்த Redouane குடியிருப்பு வாடகைக்குஅமர்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2015 ஜனவரி 15ம் திகதி பெல்ஜியத்தில் பாரிஸ் தாக்குதலின் முக்கியகுற்றவாளியான Abdelhamid Abaaoud உட்பட மற்ற ஐ.எஸ் செல் உறுப்பினர்கள் சந்திப்புகுறித்த…

Read More

ரூபாய் வாபஸ் திட்டத்தை விமர்சிக்கவில்லை: சந்திரபாபு நாயுடு விளக்கம்

ரூபாய் வாபஸ் திட்டத்தை விமர்சிக்கவில்லை: சந்திரபாபு நாயுடு விளக்கம்

மத்திய அரசு எடுத்த முடிவை விமர்சித்து ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கருத்து தெரிவித்ததாக நேற்று தகவல் வெளியான நிலையில், இன்று தனது கருத்து குறித்து விளக்கம் தெரிவித்துள்ள சந்திர பாபு நாயுடு, மக்கள் படும் கஷ்டங்கள் குறித்து வருத்தம் மட்டுமே தெரிவித்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:- “ ரூபாய் நோட்டு தடையை அமல்படுத்தியதில் உள்ள குறைபாடுகள் குறித்தும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு ஒருமாதத்திற்கு மேலாகியும் ரூபாய் தட்டுப்பாடு நிலவுவது குறித்து  மட்டுமே நான் கருத்து தெரிவித்தேன். ஏ.டி.எம் மையங்கள் முன் வரிசையில் நிற்கையில் முதியவர்கள் உயிரிழக்கும் சம்பவம் வேதனை அளிக்கிறது. ஹூட்ஹூட்…

Read More

ஆட்சிமாற்றத்தை ஆதரித்தமைக்காக இந்தியா வருந்த வேண்டும் – என்கிறார் கோத்தா

ஆட்சிமாற்றத்தை ஆதரித்தமைக்காக இந்தியா வருந்த வேண்டும் – என்கிறார் கோத்தா

மைத்திரிபால சிறிசேன- ரணில் விக்கிரமசிங்க கூட்டுஅரசாங்கம் சீனாவுடன் கூட்டாக இணைந்துசெயற்படுவது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நிச்சயம்குழப்பத்துக்கு உள்ளாக்கியிருக்கும் என்றுசிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர்கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். “முன்னைய அரசாங்கம் சீனாவுடன் உறவுவைத்திருந்ததை இந்தியா கடுமையாக எதிர்த்தது. அதனால் தான், 2015 அதிபர் தேர்தலின் போது, எதிர்க்கட்சிகளைப் பலப்படுத்தியது. முன்னைய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட சீனாவின்  திட்டங்களை இந்தியாவிரும்பவில்லை. கடந்த அதிபர் தேர்தலில் ஐதேக தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவுஅளித்தமைக்காக இந்தியா வருந்த வேண்டும். போர் நடந்த காலத்திலும், போருக்குப் பிந்திய காலத்திலும், சிறிலங்காவுக்கும்இந்தியாவுக்கும் இடையில் நல்ல புரிந்துணர்வு இருந்தது என்பதை, இந்தியாவின்முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் அண்மையில்வெளியிட்டுள்ள நூலில் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால், மேனனை…

Read More

அமெரிக்க அதிபராக டிரம்ப் அதிகாரபூர்வமாக தேர்வு

அமெரிக்க அதிபராக டிரம்ப் அதிகாரபூர்வமாக தேர்வு

அமெரிக்காவின் புதிய அதிபராக குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிகாரபூர்வமாக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபரைத் தேர்வு செய்யும் அமைப்பான எலெக்டோரல் காலேஜ் எனப்படும் மாகாணங்கள் வாரியான “தேர்வு செய்வோர் அவை’ மூலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில், டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக 304 வாக்குகளும், அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக 227 வாக்குகளும் கிடைத்தன. கட்சி மாறி 7 வாக்குகள் பதிவாயின. அதில் டிரம்புக்கு ஆதரவாக 2 பேரும், ஹிலாரி கிளிண்டனுக்கு 4 பேரும் ஆதரவாக வாக்களித்தனர். எலெக்டோரல் காலேஜ் முறையில் நடைபெறும் வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெறுவதற்கு 270…

Read More

ரூபாய் வாபஸ் விவகாரம்: ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு திடீர் விமர்சனம்

ரூபாய் வாபஸ் விவகாரம்: ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு திடீர் விமர்சனம்

ஐதராபாத்: பழைய ரூ.500,1000 தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பை முதலில் வரவேற்ற ஆந்திரபாபு முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, திடீரென இந்த முடிவை விமர்சனம் செய்துள்ளார். ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8-ந் தேதி வெளியிட்ட அதிரடி அறிவிப்பால், நாட்டில் ரூபாய் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.பொதுமக்களுக்கு பணம் வழங்க முடியாத நிலையில் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் பூட்டு போட்டு மூடப்பட்டுள்ளன. அவ்வப்போது திறக்கிற ஒரு சில ஏ.டி.எம். மையங்களும் சில மணி நேரமே இயங்குகிற நிலையில், பணம் எடுப்பதற்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்துக்கிடக்கிற நிலைமை தொடர்ந்து கொண்டிருக்கிறது. உயர்மதிப்பு நோட்டு செல்லாது என்ற…

Read More
1 402 403 404 405 406 425