வெள்ளை அறிக்கை வெளியிட்டால் மட்டும் ஜெயலலிதா உயிரோடு வந்து விடுவாரா? – திருநாவுக்கரசர்
வெள்ளை அறிக்கை வெளியிட்டால் மட்டும் ஜெயலலிதா உயிரோடு வந்து விட போகிறாரா? என்றும், அவருக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் டாக்டர்கள் சொல்வது எல்லாம் பொய் என்பதை நான் நம்பவில்லை என்றும் திருநாவுக்கரசர் கூறினார். சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் நரேந்திரமோடியின் அறிவிப்பால் மக்கள் கடந்த 2 மாதங்களாக மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள். வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தர மறுக்கிறார்கள். சேகர் ரெட்டியிடம் மட்டும் புதிய ரூபாய் நோட்டுகள் கோடிக்கணக்கில் சென்றது எப்படி? மேலும் பொதுத்துறை வங்கிகளை காட்டிலும்…
Read More








