வள்ளலார் பிறந்த இல்லத்தை புதுப்பிக்க கோரிக்கை: பழமை மாறாமல் கட்ட நடவடிக்கை தேவை
புவனகிரி-புவனகிரி அடுத்த மருதுாரில் அருட்பிரகாச வள்ளலார் அவதார இல்லத்தை விரைந்து புதுப்பிக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வாடிய பயிரை கண்ட போது வாடினேன் என்றும் உயிர்ப்பலி கூடாதென்று உலக மக்களுக்கு உன்னத நெறியை எடுத்துச்சொன்னவர் அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க அடிகள் . பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்று கட்டளை வாக்கியத்தில் மானுடர்களுக்கு நல்லுனர்வை எடுத்துரைத்தவர். கடலுார் மாவட்டம், புவனகிரி தாலுகா மருதுாரில் பிறந்த வள்ளலார் ஆன்மிக நெறியில் வாழ்ந்த போது சிதம்பரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நேரத்தில் ஆறுமுக நாவலரின் கடுஞ்சொல்லினால், அருகில் உள்ள வடலுாரை உத்திஞானச்சிதம்பரம் என உருவாக்கி சேவை செய்தார். தருமசாலையை துவக்கி, பின்னாளில் மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்திவளாகத்தில்…
Read More








