தி.மு.க ஊழல் ஆரம்பம் ? கோவிட்டால் இறந்தவர்களுக்கு வேறு காரணங்களுடன் இறப்பு சான்றிதழ்
கோவிட் பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு வேறு காரணங்களால் இறந்ததாக இறப்புச்சான்றிதழ் தருவதாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கோவிட் தொற்றின் காரணமாக நேற்று (ஜூன் 7) வரை இறந்தவர்களின் எண்ணிக்கை 27,356 ஆகும். கடந்த சில வாரங்களாக கோவிட் தொற்றால் இறக்க நேரிட்டவர்களுக்கு, அவர்களது இறப்புச் சான்றிதழில் கோவிட் நோய் தொற்றால் இறந்தார்கள் எனக் குறிப்பிடுவதில்லை. மாறாக, வேறு காரணங்களால் இறந்தார்கள் என இறப்புச் சான்றிதழ் தருவதாக மாநிலம் முழுவதும் பல்வேறு புகார்களை பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால், கோவிட் தொற்றால் பெற்றோர்களை இழந்து வாழும் குழந்தைகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்துள்ள நிவாரண உதவிகள்…
Read More








