தி.மு.க ஊழல் ஆரம்பம் ? கோவிட்டால் இறந்தவர்களுக்கு வேறு காரணங்களுடன் இறப்பு சான்றிதழ்

தி.மு.க ஊழல் ஆரம்பம் ? கோவிட்டால் இறந்தவர்களுக்கு வேறு காரணங்களுடன் இறப்பு சான்றிதழ்

கோவிட் பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு வேறு காரணங்களால் இறந்ததாக இறப்புச்சான்றிதழ் தருவதாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கோவிட் தொற்றின் காரணமாக நேற்று (ஜூன் 7) வரை இறந்தவர்களின் எண்ணிக்கை 27,356 ஆகும். கடந்த சில வாரங்களாக கோவிட் தொற்றால் இறக்க நேரிட்டவர்களுக்கு, அவர்களது இறப்புச் சான்றிதழில் கோவிட் நோய் தொற்றால் இறந்தார்கள் எனக் குறிப்பிடுவதில்லை. மாறாக, வேறு காரணங்களால் இறந்தார்கள் என இறப்புச் சான்றிதழ் தருவதாக மாநிலம் முழுவதும் பல்வேறு புகார்களை பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால், கோவிட் தொற்றால் பெற்றோர்களை இழந்து வாழும் குழந்தைகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்துள்ள நிவாரண உதவிகள்…

Read More

பாபா ராம்தேவ் கருத்து கூற தடை விதிக்க முடியாது: டில்லி நீதிமன்றம்

பாபா ராம்தேவ் கருத்து கூற தடை விதிக்க முடியாது: டில்லி நீதிமன்றம்

அலோபதி மருத்துவத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த வழக்கில், ‘பாபா ராம்தேவ் கருத்துக் கூற தடை விதிக்க முடியாது’ என, டில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தற்போது கடைப்படிக்கப்பட்டு வரும் அலோபதி மருத்துவ முறை முற்றிலும் முட்டாள்தனமானது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் மக்களின் உயிரைக் காப்பதிலிருந்து தோல்வியடைந்து விட்டன. அலோபதி மருந்துகளாலும், மருத்துவத்தாலும் லட்சக்கணக்கான உயிர்களை இழந்துள்ளோம். இந்த முறையை முற்றிலும் நீக்கிவிட்டு, ஆயுர்வேத முறையை அமல்படுத்த வேண்டும்’ என, யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்திருந்தார். இதனால் பாபா ராம்தேவிற்கு எதிராக டில்லி மருத்துவ கவுன்சில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம், ‘அலோபதி மருத்துவத்திற்கு எதிராக கருத்து வெளியிட பாபா ராம்தேவிற்கு…

Read More

வாங்காத விருதை திருப்பி தந்த பெண் பித்து சினிமா எழுத்தாளன் வைரமுத்து !!

வாங்காத விருதை திருப்பி தந்த  பெண் பித்து சினிமா எழுத்தாளன் வைரமுத்து !!

பெண் பித்து சினிமா எழுத்தாளன் வைரமுத்துற்கு கேரளாவில் ஓஎன்வி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு கிளம்ப, அதை மறுபரிசீலனை செய்வதாக ஓஎன்வி அகாடமி குழு அறிவித்தது. இந்நிலையில் தனக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட விருதை திருப்பி தருவதாக வைரமுத்து அறிவித்துள்ளார். மலையாள கவிஞரும், பாடலாசிரியரும் மற்றும் ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி., குறுப்புவின் பெயரில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் விருது முதன்முறையாக கேரளாவை சேராத வைரமுத்துவிற்கு இந்தாண்டு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும் அவரை வாழ்த்தினர். இந்நிலையில் ஏற்கனவே மீடூ புகாரில் சிக்கி பாலியல் குற்றம்சாட்டப்பட்ட வைரமுத்துவிற்கு இந்த விருது வழங்க கேரளாவை சேர்ந்த நடிகைகள் பார்வதி, ரீமா கல்லிங்கள், இயக்குனர்கள்…

Read More

பத்மா சேஷாத்ரி பள்ளியை விலைக்கு வாங்க தி.மு.க. கட்ட பஞ்சாயத்து முயற்சி !!

பத்மா சேஷாத்ரி பள்ளியை விலைக்கு வாங்க  தி.மு.க. கட்ட பஞ்சாயத்து முயற்சி !!

சென்னை, கே.கே.நகர், பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியை, தி.மு.க., முக்கிய புள்ளி கையகப்படுத்தப் பார்ப்பதாக புகார் எழுந்துள்ளது. நல்லாட்சி தரும் முயற்சியில் இறங்கி இருக்கும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவர் மனைவி துர்கா ஸ்டாலின் பெயர் இதில் இழுக்கப்படுவதால், களங்கம் ஏற்படும் முன், முதல்வர் இதில் தலையிட்டு, விவகாரத்தைத் தீர்க்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. அவப்பெயர் பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ஒருவர், ‘ஆன்லைனில்’ பாடம் நடத்தும்போது, மாணவியரிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாகவும், மொபைல் போன் மூலம் தவறான கண்ணோட்டத்துடன் குறுஞ்செய்திகள் அனுப்புவதாகவும் புகார் எழுந்தது. தற்போது அந்த ஆசிரியர், ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் உள்ளார். அந்தப்…

Read More

தொழில் செய்யவேண்டுமானால் ஐடி விதிகளுக்கு டுவிட்டர் கட்டுப்பட வேண்டும் – இந்திய கோர்ட் ஆணை

தொழில் செய்யவேண்டுமானால்  ஐடி விதிகளுக்கு டுவிட்டர் கட்டுப்பட வேண்டும் – இந்திய கோர்ட் ஆணை

மத்திய அரசின் புதிய ஐடி சட்டங்களுக்கு டுவிட்டர் கட்டுப்பட வேண்டும் என டில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. வழக்கறிஞர் அமித் ஆச்சார்யா என்பவர் டில்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசு கொண்டு வந்த புதிய ஐடி விதிமுறைகளை பின்பற்ற சமூக வலைதளங்களுக்கு, 3 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டது. மே 25ம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால், டுவிட்டர் நிறுவனம், புகார் பெறுவதற்கான அதிகாரியை நியமிக்கவில்லை. இது தொடர்பாக டுவிட் மூலம் புகார் அளித்தும் பதில் ஏதும் கிடைக்கவில்லை. இதனால், இனியும் தாமதம் செய்யாமல், உடனடியாக அதிகாரியை நியமிக்க வேண்டும். புதிய விதிமுறைகளை சமூக வலைதள நிறுவனங்கள் பின்பற்றப்படுகிறதா என்பதை மத்திய அரசு உறுதி…

Read More

பெண்களிடம் பாலியல் மோசடி செய்த சினிமா எழுத்தாளர் வைரமுத்து விருது வாபஸ் ஆகிறது !!

பெண்களிடம் பாலியல் மோசடி செய்த  சினிமா எழுத்தாளர் வைரமுத்து விருது வாபஸ் ஆகிறது !!

வைரமுத்து மீதான பாலியல் புகார் காரணமாக அவருக்கு ஓ.என்.வி., விருது வழங்க கூடாது என பலரும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அதுப்பற்றி மறு ஆய்வு செய்வதாக ஓஎன்வி பண்பாட்டு குழு அறிவித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி உள்ளிட்ட பெண்கள் சிலர் மீடூ மூலம் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்தனர். அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சின்மயி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில் மலையாள கவிஞரும், பாடலாசிரியரும் மற்றும் ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி., குறுப்புவின் பெயரில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் விருது முதன்முறையாக கேரளாவை சேராத வைரமுத்துவிற்கு இந்தாண்டு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த விருதினை பெறுவதில்…

Read More

பிரதமர் நடத்திய ஆய்வு கூட்டத்தினை முதல்வர் மம்தா புறக்கணித்ததை தொடர்ந்து அதிரடி!!

பிரதமர் நடத்திய ஆய்வு கூட்டத்தினை முதல்வர் மம்தா புறக்கணித்ததை தொடர்ந்து அதிரடி!!

மேற்கு வங்கத்தில் ‘யாஸ்’ புயல் பாதிப்புகள் குறித்து பிரதமர் நடத்திய ஆய்வு கூட்டத்தினை முதல்வர் மம்தா புறக்கணித்த சம்பவத்தை தொடர்ந்து இன்று மேற்குவங்க மாநில தலைமை செயலாளர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ‘யாஸ்’ புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய பிரதமர் விமானம் வாயிலாக, இன்று காலை மேற்கு வங்கம் வந்தார். பின்னர் பாதிப்புகள் குறித்த ஆய்வு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடியும், மேற்கு வங்க கவர்னர் ஜக்தீப் தன்கரும் வந்தபோது, அம்மாநில அரசு சார்பில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள வேண்டும். ஆனால் அவர் வரவில்லை. இதனால் பிரதமர் அரை மணி நேரம் காத்திருந்தார். திடீரென…

Read More

கட்சி காரர்களாலும்… வதந்தி பரப்பி பணம் செய்யும் இந்திய டிவி கம்பனிகளுக்கு ஆப்பு ?

கட்சி காரர்களாலும்… வதந்தி பரப்பி பணம் செய்யும் இந்திய டிவி கம்பனிகளுக்கு ஆப்பு ?

பழைய சட்டங்களையே தொடர் வேண்டும் கடந்த இருபது வருஷங்களாக தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகளை சட்டத்தின் பிடியில் இருந்து விலக்கிக் கொள்ள வேண்டும். அரசாங்கம் தேமே என்று வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.நன்றாயிருக்கிறது உங்கள் வேண்டுகோள் …. பாரம்பரிய, ‘டிவி’ செய்தி நிறுவனங்கள் மற்றும் அவற்றின், ‘டிஜிட்டல் செய்தி’ தளங்களுக்கு என, ஏற்கனவே பல சட்டங்கள், ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள், வழிகாட்டு விதிமுறைகள் உள்ளன. இந்த நிலையில், 2021ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ், டிஜிட்டல் செய்தி தளங்கள் வைத்துள்ள பாரம்பரிய, ‘டிவி’ செய்தி நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது, 2000ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்திற்கு எதிரானது. அத்துடன், புதிய சட்டத்தை பின்பற்றுவதற்கு தேவையான…

Read More

இஸ்ரேலிடம் இருந்து வாங்கும் உளவு விமானங்களை சீன எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் : இந்தியா

இஸ்ரேலிடம் இருந்து வாங்கும் உளவு விமானங்களை சீன எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் :  இந்தியா

லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் சில வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்தது. இரு நாடுகளும் எல்லை முழுவதும் படைகளை குவித்தன. இதனால், இந்திய-சீன எல்லையில் தொடர்ந்து அசாதாரண சூழல் நிலவி வந்தது. இதற்கிடையில், போர் பதற்றத்தை தணிக்கும் விதமாக இந்திய-சீன ராணுவ மட்டத்தில் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டத்தை தொடர்ந்து இரு நாடுகளும் எல்லையில் குவித்து வைத்திருந்த படைகளை திரும்பப்பெற்றுள்ளன. ஆனாலும், பதற்றம்…

Read More

கிறிஸ்துவ மிஷினரிகள் சார்பாக சத்குரு ஜக்கி வாசுதேவ் மீது பொய் குற்றம் சுமத்தும் தி.மு.க – ஹிந்து முன்னணி

கிறிஸ்துவ மிஷினரிகள் சார்பாக சத்குரு ஜக்கி வாசுதேவ் மீது பொய் குற்றம் சுமத்தும் தி.மு.க – ஹிந்து முன்னணி

‘சத்குரு ஜக்கி வாசுதேவ் மீது பொய் குற்றம் சுமத்தும், தி.மு.க., அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:கோடிக்கணக்கான மக்கள், குருவாக ஏற்ற சத்குருவை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அவன், இவன் என பேசி, சில மாதங்களுக்கு முன் காணொலி வெளியிட்டதை மக்கள் கண்டுள்ளனர். கொரோனா இரண்டாம் அலையில் மக்கள் துன்பப்படும் சூழலில், அவர்கள் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்யலாம், மூடப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு என்ன நிவாரணம் தரலாம் என யோசிக்காமல், ஈஷா, சத்குருவை சாடுவதும், கைதுசெய்வோம் என கூறுவதும் காழ்ப்புணர்வை காட்டுகிறது. சத்குருவின் கோவில் அடிமை…

Read More
1 54 55 56 57 58 181