யோகி ஆதித்யநாத் அரசை கவிழ்க்க சர்வதேச அளவில் “ஹத்ராஸ்” சதித்திட்டம் – உத்தர பிரதேச போலீசார்
ஹத்ராஸ் சம்பவத்தை பயன்படுத்தி, மாநிலத்தில் கலவரத்தை துாண்டிவிட்டு, யோகி ஆதித்யநாத் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த, சர்வதேச அளவில் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக, உத்தர பிரதேச போலீசார் தெரிவித்து உள்ளனர். உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த, தலித் பெண், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி, படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அம்மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், சந்த்பா போலீஸ் ஸ்டேஷனில், அடையாளம் தெரியாத நபர்கள் மீது, பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சதித்திட்டம் தீட்டுதல், தேச துரோகம், ஜாதி மற்றும் மத கலவரங்களை துாண்டிவிடுதல், நாட்டின் ஒருமைபாட்டுக்கு ஊறு விளைவித்தல் உட்பட, பல்வேறு கடுமையான…
Read More









