மக்கள் மீது மைத்திரி அரசுக்கு குறைந்தளவு கூட அக்கறையில்லை என்கிறார் மகிந்த

மக்கள் மீது மைத்திரி அரசுக்கு குறைந்தளவு கூட அக்கறையில்லை என்கிறார் மகிந்த

மக்கள் மீது மைத்திரி அரசுக்கு குறைந்தளவு கூட அக்கறையில்லை.தற்போதைய அரசாங்கத்தினால் மக்களுக்கு அதிக நிவாரணங்களை வழங்க முடியும் என்று எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சா தெரிவித்துள்ளார். ஆனமடுவ பகுதியில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.மக்களுக்கு அதிக நிவாரணங்களை வழங்க தற்போதைய அரசாங்கத்தினால் முடியும். ஆனால் அந்த விடயத்தில் அரசாங்கம் எந்த அக்கறையும் இல்லாது இருப்பதாக மகிந்தராஜபக்சா சுட்டிக்காட்டியுள்ளார். கடன் பெற்றதாக எம்மீது குற்றம் சமத்தப்படுகின்ற போதும், அந்த கடன்கள் பாரிய வேலைத்திட்டங்களுக்காகவே பயன்படுத்தப்பட்டன. ஆனால் இந்த அரசாங்கம் பெற்றக் கடன்கள் அனைத்தும் சுயலாபத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்த போதும், அரசாங்கம் அதனைக் குறைக்கவில்லை.ஆனால் தாம்…

Read More

ஜனாதிபதி மைத்திரி பதவியேற்பின் நான்காண்டு பூர்த்தியை முன்னிட்டு பிரித் ஓதும் வைபவம் இடம்பெற்றது

ஜனாதிபதி மைத்திரி பதவியேற்பின் நான்காண்டு பூர்த்தியை முன்னிட்டு பிரித் ஓதும் வைபவம் இடம்பெற்றது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று நான்கு வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி ஏற்பாடு செய்யப்பட்ட பிரித் பாராயண நிகழ்வு கடந்த செவ்வாய் அன்று இரவு முதல் புதன் அதிகாலை வரை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஹ_ணுபிட்டிய கங்கா ராம விகாராதிபதி சங்கைக்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜிதேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரின் பங்கு பற்றுதலுடன் இந்த பிரித்பாராயண நிகழ்வு இடம் பெற்றது. ஜனாதிபதி மைத்ரிபாலசிறிசேன இங்கு இடம் பெற்ற சமய உரையை செவிமடுத்தார். புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா உள்ளிட்ட அமைச்சர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இதேநேரம் புதன் காலை மகாசங்கத்தினருக்கான அன்னதான நிகழ் வொன்றும் இடம்பெற்றது. சியம் நிக்காயவின் கோட்டே ஸ்ரீ…

Read More

சுமந்திரன் எம்பியை எச்சரிக்கை செய்த இலங்கையின் உயர் நீதி மன்றம்

சுமந்திரன் எம்பியை எச்சரிக்கை செய்த  இலங்கையின் உயர் நீதி மன்றம்

இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு ஏன் தடையை ஏற்படுத்துகிறீர்கள். அவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்குவது அவசியம் தானே என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனிடம் கொழும்பு உயர் நீதி மன்றம் நேற்று கேள்வி எழுப்பி, எச்சரிக்கையும் செய்தது யாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் தாம் பங்கேற்க மேன்முறையீட்டு நீதிமன்றால் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவுக்கு ஆட்சேபனை தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போதே உயர் நீதிமன்ற அமர்வு இந்தக் கேள்வியை எழுப்பியது. “மேன்முறையீட்டு மனுதாரர் என்னுடன் இல்லை. அவர் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர். அதனால்தான் இந்த வழக்கை மேன்முறையீட்டு நீதிமன்றில்…

Read More

தமிழ் மக்களுக்கு இனி அநியாயங்கள் நடக்கக்கூடாது

தமிழ் மக்களுக்கு இனி அநியாயங்கள் நடக்கக்கூடாது

மாகாண நிர்வாகத்தில் தமிழ் மக்களுக்கு கடந்த காலங்களில் அநியாயங்கள் இடம்பெற்றதாகவும்,  அவ்வாறான அநியாயங்களும் எதிர்காலத்தில் நடந்துவிடக் கூடாது எனவும் இலங்கை கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவிடம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரா. சம்பந்தன் கேட்டுக் கொண்டார். கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டதன் பின்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை, இன்று வியாழக்கிழமை ஹிஸ்புல்லா கொழும்பில் சந்தித்தார். இதன்போது எந்தவொரு இனத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் நீதியாகவும், நேர்மையாகவும் தனது பணிகளை முன்னெடுக்கப் போவதாக, சம்பந்தனிடம் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். கிழக்கு மாகாண ஆளுநராக செயற்படுவதற்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதாக ஹிஸ்புல்லாவிடம் இந்த சந்திப்பின்போது…

Read More

இலங்கை வட மாகாண ஆளுநராக முதன்முதலாக தமிழர் நியமனம்

இலங்கை வட மாகாண ஆளுநராக முதன்முதலாக தமிழர் நியமனம்

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவால் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முனைவர் சுரேன் ராகவன், திங்கட்கிழமை பிற்பகல் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார். இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு, இலங்கை ஜனாதிபதியின் செயலகத்தில் இடம்பெற்றது. ரெஜினோல்ட் குரேவினால் வகிக்கப்பட்டு வந்த வட மாகாண ஆளுநர் பதவிக்கே, முனைவர் சுரேன் ராகவன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் கென்ட் பல்கலைக்கழகத்தின், அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் கல்லூரியில் தனது முதுமானிப்பட்டத்தை நிறைவு செய்த அவர், “இனத் தேசியவாதத்தில் மதத்தின் பங்கு” என்ற தலைப்பின் கீழ் தனது, தனது முனைவர் பட்ட ஆய்வினை அதே பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்துள்ளார். 2008 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் மடிசன் அறக்கட்டளையினால் வழங்கப்பட்ட புலமைப்பரிசில், மற்றும் கனடாவின் ஒன்டாரியோ மாகாண…

Read More

இலங்கையில் நள்ளிரவில் வெளியிடப்பட்ட அமைச்சரவை விவரங்கள்

இலங்கையில் நள்ளிரவில் வெளியிடப்பட்ட அமைச்சரவை விவரங்கள்

இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சார்பான அமைச்சரவை உருவாக்கப்பட்டு ஒன்பது நாட்கள் கடந்த நிலையில், நீண்ட இழுத்தடிப்புக்குப் பின்னர், அமைச்சர்களுக்கான கடமைகள் மற்றும் அமைச்சுக்களின் கீழ் வரும் நிறுவனங்கள் போன்றவற்றினை தெரியப்படுத்தும், விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 20ஆம் தேதி, 29 பேரைக் கொண்ட அமைச்சரவை அமைக்கப்பட்ட போதிலும், அவர்களுக்கான கடமைகள், விடயதானங்கள் மற்றும் அவரவருக்குரிய அமைச்சுக்களின் கீழ்வரும் நிறுவனங்கள் ஆகிய விபரங்களைத் தெரியப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் வரை வெளியிடப்படவில்லை. அமைச்சர்களுக்கான கடமைகள், விடயதானங்கள் மற்றும் அமைச்சுக்களின் கீழ்வரும் நிறுவனங்கள் ஆகிய விபரங்களைத் தெரியப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதியே வெளியிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, 20ஆம்…

Read More

மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதில் சிக்கல்

மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதில் சிக்கல்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் பதவியேற்று 50 நாட்களின் பின்னர் அந்தப் பதவியை ராஜிநாமா செய்த நிலையில், தற்போது அவர் சட்டப்படி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கவே முடியாது என்கிற வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவராக இருந்த நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்பின் வேட்பாளராக 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்திலிருந்து போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றார். இந்த நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அவர் கடந்த நவம்பர் மாதம் இணைந்து அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டார். இதனையடுத்தே, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மஹிந்த…

Read More

இலங்கை எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு

இலங்கை எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், சமீபத்திய அரசியல் நிகழ்வுகளில் பிரதமராக நியமிக்கப்பட்டு, பதவி விலக நேர்ந்தவருமான மஹிந்த ராஜபக்ஷ தற்போது நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இலங்கை அரசியலில் அதிரடித் திருப்பமாக, கடந்த அக்டோபர் 26-ம் தேதி பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க-வை அந்தப் பதவியில் இருந்து அகற்றிவிட்டு தமது எதிர்த் தரப்பில் இருந்துவந்த முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன. அதன் பிறகு நடந்த பரபரப்பான அரசியல் நிகழ்வுகளின் முடிவில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ராஜபக்ஷவால் முடியவில்லை. இதையடுத்து மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார். இந்நிலையில் இன்று நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில்…

Read More

இலங்கை பார்லிமென்ட் கலைப்பு செல்லாது: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

இலங்கை பார்லிமென்ட் கலைப்பு செல்லாது: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

இலங்கை பார்லிமென்ட்டை கலைத்தது செல்லாது ; அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. இலங்கையில், 2015ல் நடந்த அதிபர் தேர்தலின் போது, யு.பி.எப்.ஏ., எனப்படும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி வேட்பாளரான மைத்ரிபால சிறிசேனவுக்கு, ரணில் விக்கிரம சிங்கேவின், யு.என்.பி., எனப்படும், ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு அளித்தது.தேர்தலில் வெற்றி பெற்ற சிறிசேன, அதிபராகவும், ரணில், பிரதமராகவும் பதவியேற்றனர். ரணிலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை தொடர்ந்து, யு.என்.பி., உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாகவும், பிரதமர் பதவியில் இருந்து ரணிலை நீக்கி, புதிய பிரதமராக, ராஜபக்சேவை நியமிப்பதாகவும், அதிபர் சிறிசேன அறிவித்தார். ஆனால், ராஜபக்சேவுக்கு போதிய, எம்.பி.,க்கள் பலம் இல்லாததை அடுத்து,…

Read More

இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிப்பு

இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிப்பு

இலங்கை நாடாளுமன்றில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளமையை நிரூபிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட யோசனைக்கு ஆதரவாக 117 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றில் பெரும்பான்மையினை நிரூபிக்கும் பொருட்டு 113 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றால் போதுமானதாகும். ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை உள்ளமையினை நிரூபிப்பதற்கான மேற்படி யோசனையினை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்வைத்திருந்தார். இதன்போது ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அதன் கூட்டுக் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவையும் வாக்களித்தன. அதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ரணில் விக்ரமசிங்கவுக்கு…

Read More
1 19 20 21 22 23 45