“ஹிட்லர்” போல நடந்து கொள்ளாதீர்கள் – இலங்கை அதிபர் மீது விக்ரமசிங்கே தாக்கு

“ஹிட்லர்” போல நடந்து கொள்ளாதீர்கள் – இலங்கை அதிபர் மீது விக்ரமசிங்கே தாக்கு

இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி விட்டு புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா நியமித்தார். ராஜபக்சேவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு பொதுத் தேர்தல் நடத்தவும் சிறிசேனா உத்தரவிட்டார். ஆனால் அதிபரின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில் ரனில் விக்ரமசிங்கேயை மீண்டும் பிரதமர் பதவியில் நியமிக்க முடியாது என்று சிறிசேனா பிடிவாதமாக கூறி வருகிறார். இதுபற்றி விக்ரமசிங்கே கூறுகையில், “அரசாங்கத்தில் உள்ள நாம் அனைவரும் அரசியல் சட்டத்தை காப்போம். அரசியலமைப்புடன் யாரும் விளையாட வேண்டாம். நீங்கள்(சிறிசேனா) சர்வாதிகாரி ஹிட்லர் போல நடந்து கொள்ளக் கூடாது. நாடாளுமன்ற தேர்தலை நடத்தவேண்டும்…

Read More

இலங்கை பிரதமராக மகிந்த பதவி வகிக்க நீதிமன்றம் இடைக்காலத் தடை

இலங்கை பிரதமராக மகிந்த பதவி வகிக்க நீதிமன்றம் இடைக்காலத் தடை

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள், அந்தப் பதவிகளை வகிப்பதற்கு கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி மகிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டார். இதன்பின்னர் அமைச்சர்களும் தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டனர். பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்‌ஷ மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிக்க சட்டரீதியான அங்கீகாரமில்லை எனத் தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது. “இலங்கை மீது சீனாவும் இந்தியாவும் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்யலாம்” இலங்கை வவுணதீவில் இரு போலீசார் சுட்டுக் கொலை…

Read More

இலங்கையில் ரணில் மீண்டும் பிரதமராக ஆதரவு – ஜனாதிபதிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடிதம்

இலங்கையில் ரணில் மீண்டும் பிரதமராக ஆதரவு – ஜனாதிபதிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடிதம்

ரணில் விக்ரமசிங்க தலைமையில் அக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்பிருந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை மீளமைப்பதற்கு தாம் ஆதரவளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் ஜனாதிபதிக்கு இன்று வியாழக்கிழமை, இக்கூட்டமைப்பு அனுப்பி வைத்த கடிதத்திலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ள போதும், மேற்படி கடிதத்தில் நாடளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் எஸ். வியாழேந்திரன் ஆகியோர் கையெழுத்திடவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் பொருட்டு அண்மையில் அணி மாறி, பிரதியமைச்சுப் பதவியினைப் பெற்றுக் கொண்டார். அதேவேளை,…

Read More

நிபந்தனைகளை ரணிலிடம் மட்டும் விதிக்காமல் மஹிந்த ராஜபக்சாவுக்கும் கூட விதிக்கலாமே என்கிறார் சிவாஜிலிங்கம்

நிபந்தனைகளை ரணிலிடம் மட்டும் விதிக்காமல் மஹிந்த ராஜபக்சாவுக்கும் கூட விதிக்கலாமே என்கிறார் சிவாஜிலிங்கம்

நிபந்தனையை ரணில் விக்கிரமசிங்கவிடம் மட்டும் விதிக்க வேண்டும் என அவசியம் இல்லை. மஹிந்த ராஜபக்சாவுக்கும் கூட விதிக்கலாம். அதைவிடுத்து கண்ணை மூடி கொண்டு எவரையும் ஆதரிக்க வேண்டிய அவசியம் கிடையாது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக மையத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நிபந்தனையற்ற ஆதரவினால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு பயனும் இல்லை. சமகாலத்தில் உள்ள அரசியல் நிலமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேரம் பேச கூடிய சக்தியுடன் இருந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மஹிந்த ராஜபக்சாவை ஆதரிப்பதா? ரணிலை ஆதரிப்பதா? என்பதல்ல இப்போதுள்ள பிரச்சினை. எவரை ஆதரித்தால்…

Read More

ஜனாதிபதி தேர்தலுக்கு மைத்திரி தயாரா என்று சவால் விடுக்கின்றது, ஐதேக.

ஜனாதிபதி தேர்தலுக்கு மைத்திரி  தயாரா என்று சவால் விடுக்கின்றது,  ஐதேக.

ஜனாதிபதித் தேர்தலை உடனடியாக நடத்த தயாரா என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான நவீன் திஸாநாயக்க சவால் விடுத்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தமது கட்சியில் தயாராகவே இருக்கிறார்கள் என்றும் அவர்களில் யார் பொதுவேட்பாளர் என்ற விடயம் இறுதி நேரத்திலேயே அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலை உடனடியாக நடத்த தயாரா என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான நவீன் திஸாநாயக்க சவால் விடுத்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தமது கட்சியில் தயாராகவே இருக்கிறார்கள் என்றும் அவர்களில் யார் பொதுவேட்பாளர் என்ற விடயம் இறுதி நேரத்திலேயே அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மல்வத்து மகாநாயக்கத் தேரரை நேற்று முன்தினம் சந்தித்ததையடுத்து ஊடகங்களுக்கு…

Read More

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் சுமந்திரனுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியலில் இடம் கிடைக்கும் என்கிறார் தயாசிறி ஜயசேகர

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் சுமந்திரனுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியலில் இடம் கிடைக்கும் என்கிறார் தயாசிறி ஜயசேகர

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட மாட்டார் என்றும், சுமந்திரனுக்கு ஐக்கிய தேசிய கட்சியில் தேசியபட்டியல் வழங்கப்படும் எனவும் அதன் பின்னர் சுமந்திரன் அமைச்சரவையையும் அலங்கரிப்பார் என்று அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “தேசிய பட்டியல் வழங்கப்படும் என்பதாலேயே அவர் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக அதிகம் முன்னிலையாகிறார்.அவர் தமிழ் மக்களுக்காகவோ, நாட்டுக்காகவோ முன்னிலையாகவில்லை. தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காகவே எம்.ஏ.சுமந்திரன் முயற்சிக்கிறார். மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசிய முன்னணியோடு இணைந்து அன்னப்பறவை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர…

Read More

இலங்கைக்கான கனேடிய தூதுவர், நாமல் ராஜபக்சா ஆகியோர்க்கிடையில் டுவிட்டரில் மோதல்

இலங்கைக்கான கனேடிய தூதுவர்,   நாமல் ராஜபக்சா ஆகியோர்க்கிடையில் டுவிட்டரில் மோதல்

இந்த கட்சிகள் தங்கள் மக்கள் மற்றும் சமூகத்தவர்களை சந்திப்பது குறித்து அதிக அக்கறை செலுத்தினால், தேர்தலிற்கான மக்களின் எதிர்பார்ப்பினை செவிமடுத்தால் இலங்கை நன்மையடையும்” என நாமல் ராஜபக்ஷ டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். நாமலின் இந்த கருத்துக்கு பதிலளித்த கனடாவிற்கான தூதுவர், “நீங்கள் உங்கள் பொதுஜன பெரமுன கட்சியின் பிரமுகர்கள் சிலர் யாரை சந்திக்கின்றனர் என்பதை அவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்” என குறிப்பிட்டுள்ளார். இதற்கு மீண்டும் பதிலளித்த நாமல் ராஜபக்சாஷ “இலங்கை ஒரு இறையாண்மை நாடாகவும் மக்களின் சிறந்த உறைவிடமாகவும் காணப்படுகின்றது. அந்த இறையாண்மையை பேணுவது அனைத்து தலைவர்களின் கடமையாகும், இதில் தேர்தலும் அடங்கும்” என கூறியுள்ளார். இந்த டுவீட்டர் கருத்துப் பரிமாற்றம் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் மிகுந்த…

Read More

வெளிநாட்டு தூதுவர்களைச் சந்தித்த சம்பந்தன், அவர்களிடம் என்ன கூறினார்?

வெளிநாட்டு தூதுவர்களைச் சந்தித்த சம்பந்தன், அவர்களிடம்  என்ன கூறினார்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் 15 நாடுகளின் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளைச் சந்தித்து இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடிகள் தொடர்பாகவும், இது தொடர்பான தமது நிலைப்பாடு குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் அன்று மாலை 4.30 மணிக்கு ஆரம்பித்த இந்தச் சந்திப்பில் இரா.சம்பந்தன் தலைமையிலான 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பின் போது, தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு விரைவான தீர்வைக் காண்பதன் அவசியத்தை இரா.சம்பந்தன் வலியுறுத்திக் கூறியுள்ளார். கடந்த ஒக்ரோபர் 26ஆம் திகதிக்கு பின்னரான நிலைமைகளை எடுத்துக் கூறிய இரா.சம்பந்தன், இதனால் தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்தும்…

Read More

ரணிலின் ஆட்சியைக் காப்பாற்றுவதில் ஐக்கிய தேசியக் கட்சியைவிட அதிகமாகப் பாடுபடுகின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தான்

ரணிலின் ஆட்சியைக் காப்பாற்றுவதில் ஐக்கிய தேசியக் கட்சியைவிட அதிகமாகப் பாடுபடுகின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தான்

ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியைக் காப்பாற்றுவதில் ஐக்கிய தேசியக் கட்சியைவிட அதிகமாகப் பாடுபடுகின்ற கட்சி தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு என்றால் அதுமிகையன்று யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் “வலம்புரி” நாளிதழ் தனது ஆசிரிய தலையங்கம் ஒன்றில்டி தெரிவித்துள்ளது மேற்படி ஆசிரிய தலையங்கத்தில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இலங்கையின் ஆட்சிப்பீடத்தில் யார் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்ப தென்பது வேறு. ஆட்சிப்பீடத்தில் இருப்பவர் களால் தமிழ் இனத்துக்கு என்ன நன்மை என்று பார்ப்பது வேறு. அந்தவகையில் சிங்கள ஆட்சியாளர்கள் எவரும் தமிழ் மக்களுக்கு எதுவும் தரமாட்டார் கள் என்பது நிறுதிட்டமான உண்மை. இந்த உண்மையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இன்னமும் உணர வில்லை என்றால், அவர்கள் தமிழ்…

Read More

இலங்கையின் அரசியல் குழப்பத்தைத் தீர்ப்பதற்கு, ஜனாதிபதி தலைமையில் மஹிந்த ரணில் இணைய வேண்டும் என்கிறார் விக்னேஸ்வரன்

இலங்கையின் அரசியல் குழப்பத்தைத் தீர்ப்பதற்கு, ஜனாதிபதி தலைமையில் மஹிந்த ரணில்  இணைய வேண்டும் என்கிறார் விக்னேஸ்வரன்

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பத்தைத் தீர்ப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மஹிந்த ராஜபக்சாவும், ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்த தேசிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் யோசனை தெரிவித்துள்ளார். அவுஸ்தரேலியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் விக்டோரியா கோக்லியைச் சந்தித்தபோதே அவர் இந்த யோசனையை முன்வைத்தார். தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் கலந்துரையாடிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அவுஸ்திரேலிய பிரதி உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் கலந்துரையாடியவை பற்றி விக்னேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் 40 ஆண்டு காலமாக பதவி வகித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரென ஐ.தே.கவைச் சேர்ந்த ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒரு ஒப்பந்த அடிப்படையில் 2015…

Read More
1 20 21 22 23 24 45