ஜேவிபியும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் இணைந்து போராடவேண்டிய தேவை உள்ளது என்கிறார் அனுரகுமார திசநாயக்க

ஜேவிபியும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் இணைந்து போராடவேண்டிய தேவை உள்ளது என்கிறார் அனுரகுமார திசநாயக்க

ஜேவிபியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஒடுக்குமுறை அரசாங்கங்களால் பாதிக்கப்பட்ட தரப்பினரை தெற்கிலும் வடக்கிலும் பிரதிநிதித்துவம் செய்கின்றன என்றும், ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக இணைந்து போராடவேண்டிய கடமை எங்களுக்குள்ளது எனவும் ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். இந்து நாளிதழிற்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இரு கட்சிகளும் கொள்கையின் அடிப்படையில் பணியாற்றுகின்றன. அவ்வாறான அணுகுமுறையை கொண்டுள்ள கட்சிகள் இணைந்து பணியாற்ற முடியும். சில விடயங்கள் தொடர்பில் எங்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் உள்ள போதிலும் எதிர்காலத்தில் நாங்கள் இணைந்து பணியாற்ற முடியும். ஜேவிபியிடம் இரகசிய நிகழ்ச்சி நிரல் இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பிடமும் அவ்வாறான இரகசிய நிகழ்ச்சி நிரல் இல்லை. இவ்வாறான வெளிப்படை தன்மை…

Read More

அமெரிக்காவும், இந்தியாவும், மகிந்த ராஜபக்சாவை பிரதமராக ஏற்றுக்கொள்ளாத நிலையில் இலங்கையின் பாதுகாப்புச் செயலரோடு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றன

அமெரிக்காவும், இந்தியாவும், மகிந்த ராஜபக்சாவை பிரதமராக ஏற்றுக்கொள்ளாத நிலையில் இலங்கையின் பாதுகாப்புச் செயலரோடு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றன

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரும், இந்திய துணைத் தூதுவரும், உயர்மட்ட அதிகாரிகளுடன் இணைந்து, பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவைச் சந்தித்து தனித்தனியாக பேச்சுக்களை நடத்தியுள்ளனர். அமெரிக்காவும், இந்தியாவும், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளாத நிலையில், மைத்திரிபால சிறிசேனவினால் அண்மையில் நியமிக்கப்பட்ட பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவுடன், இருதரப்பு பாதுகாப்பு உறவுகள், திட்டங்களின் எதிர்காலம் குறித்தே பேச்சுக்களை நடத்தியிருக்கின்றன. இது எவ்வாறு சாத்தியம் என கொழும்பில் உள்ள வெளிநாட்டு அரசியல் தொடர்பான விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை இந்தச் சந்திப்புகள், பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளன. இந்தியத் துணைத் தூதுவர் கலாநிதி சில்பக் அம்புலே தலைமையிலான இந்தியத் தூதரக உயர் அதிகாரிகள், பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவுடன்…

Read More

‘மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க உறுப்பினர்களை விலை பேசுகிறார் அவர் மகன்’

‘மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க உறுப்பினர்களை விலை பேசுகிறார் அவர் மகன்’

மஹிந்த ராஜபக்ஷவுக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினைப் பெற, ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, எதிரணி உறுப்பினர்களை 3 மில்லியன் அமெரிக்க டாலர் வரையில் விலை பேசி வருவதாக, ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர தனது ட்விட்டர் பதிவொன்றில் குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் ஆதரவுடன் பெரும்பான்மையினை காட்டுவதற்கு, திங்கட்கிழமை வரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைபேசும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ஷ இதனை தலைமை தாங்கி நடத்துவதாகவும்…

Read More

நாடாளுமன்றத்தை அமைதியாக நடத்த தேர்வுக்குழு

நாடாளுமன்றத்தை அமைதியாக நடத்த தேர்வுக்குழு

இலங்கையில் பிரதமராக பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேயை அதிபர் சிறிசேனா கடந்த மாதம் 26-ந்தேதி அதிரடியாக நீக்கினார். பின்னர் முன்னாள் அதிபர் ராஜபக்சேயை பிரதமராக நியமித்தார். ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்த சிறிசேனா ஜனவரி 5-ந்தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தார். இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இதை விசாரித்த கோர்ட்டு சிறிசேனா பிறப்பித்த உத்தரவுக்கு இடைக் கால தடை விதித்தது. இதற்கிடையே கடந்த வாரம் நாடாளுமன்றம் கூடியபோது ராஜபக்சே அரசுக்கு எதிராக 2 முறை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த இரண்டிலுமே ராஜபக்சே தோல்வி கண்டார். இதைத் தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்டுள்ள…

Read More

ஜனாதிபதி தேர்தலை நடத்தி வெற்றி பெற்றுக் காட்டுங்கள் என ஜனாதிபதிக்கு ரவூப் ஹக்கீம் சவால்

ஜனாதிபதி தேர்தலை நடத்தி வெற்றி பெற்றுக் காட்டுங்கள் என ஜனாதிபதிக்கு ரவூப் ஹக்கீம் சவால்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்கு துணிச்சல் இருந்தால், பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடாத்தி, அதில் போட்டியிட்டு வெற்றிபெற்றுக் காட்ட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சவால் விடுத்தார். நேற்று வியாழக்கிழமை கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியில் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றி ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது; ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு முன்னர், உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்றிருக்கலாம். ஆனால், சட்டத்துறையில் போதிய தெளிவில்லாத பாமர சட்டத்தரணிகளின் பேச்சைக் கேட்டு பாராளுமன்றத்தை அவரசரப்பட்டு கலைத்துவிட்டார். அவர் இப்போது பின்நோக்கிச் செல்லமுடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறார். 2ஃ3 பெரும்பான்மையின்றி நான்கரை…

Read More

இலங்கை நாடாளுமன்றத்தில் அடிதடி, எம்.பி. ஒருவர் காயம் – மீண்டும் ஒத்திவைப்பு

இலங்கை நாடாளுமன்றத்தில் அடிதடி, எம்.பி. ஒருவர் காயம் – மீண்டும் ஒத்திவைப்பு

இலங்கை நாடாளுமன்றத்தில் இன்றும் கூச்சல் ஏற்பட்டது. எம்.பிக்களுக்கிடையே மோதல் போக்கு ஏற்பட்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் காயமடைந்தார். சுமார் ஒரு மணி நேரம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூச்சல் குழப்பம் நீடித்தது. ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவப்பெரும கத்தியுடன் திரிந்ததாக காட்டும் படங்கள் வெளியாயின. இத்தகைய படங்களுடன் ரிவிர என்ற இணைய தளம் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றம் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்குக் கூடிய போது, பிரதமருக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் மகிந்த ராஜபக்ஷ அமர்ந்திருந்தார். ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சியினர் பக்கம் இருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தார். சபையை சபாநாயகர் ஆரம்பித்தபோது, மகிந்த ராஜபக்ஷ அணியைச் சேர்ந்த தினேஸ்…

Read More

பார்லிமென்டை கலைத்தும், மறுதேர்தல் அறிவித்தும் அதிபர் மைத்ரிபால சிறிசேன பிறப்பித்த உத்தரவுகள் செல்லாது

பார்லிமென்டை கலைத்தும், மறுதேர்தல் அறிவித்தும் அதிபர் மைத்ரிபால சிறிசேன பிறப்பித்த உத்தரவுகள் செல்லாது

‘பார்லிமென்டை கலைத்தும், மறுதேர்தல் அறிவித்தும், அதிபர் மைத்ரிபால சிறிசேன பிறப்பித்த உத்தரவுகள் செல்லாது’ என, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ரணில் விக்கிரமசிங்கே உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாகவும், அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதாகவும், அதிபர் மைத்ரிபால சிறிசேன, சமீபத்தில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை, புதிய பிரதமராகவும் அவர் அறிவித்தார்.இதனால், அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதற்கிடையே, நவ., 5ல் நடப்பதாக இருந்த, பார்லிமென்ட் கூட்டத் தொடரை, நவ., 14ம் தேதிக்கு, சிறிசேன ஒத்தி வைத்தார். ஆனால், தான் பிரதமராக தொடர்வதாக, ரணில் கூறி வந்தார்.இந்நிலையில், பார்லிமென்டை கலைப்பதாகவும், அடுத்தாண்டு, ஜனவரி, 5ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும், சிறிசேன, சமீபத்தில்…

Read More

ராஜபக்சேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி: சபாநாயகர்

ராஜபக்சேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி: சபாநாயகர்

இலங்கை பார்லியில் இருந்து ராஜபக்சே வெளிநடப்பு செய்ததை அடுத்து கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனால் அவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார் கடும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே இலங்கை பார்லிமென்ட் இன்று கூடியது. அப்போது அதிபர் சிறிசேனாவால் புதிதாக பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜபக்சே அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதனையடுத்து கூச்சல், குழப்பம் நிலவியது. ரணில் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து அவையில் பங்கேற்றனர். எதிர்க்கட்சியை சேர்ந்த சில உறுப்பினர்களும் ரணிலுக்கு ஆதரவாக…

Read More

நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் இலங்கை அரசியல் கட்சிகள் மனு

நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் இலங்கை அரசியல் கட்சிகள் மனு

இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே இருந்து வந்த பனிப்போர் சமீபத்தில் மோதலாக வெடித்தது. பிரதமர் பதவியில் இருந்து ரனில் விக்ரமசிங்கேயை அதிபர் சிறிசேனா கடந்த மாதம் 26-ந் தேதி திடீரென்று நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் ராஜபக்சேயை புதிய பிரதமராக நியமித்தார்.ஆனால் தானே பிரதமர் என்றும், நாடாளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும் ரனில் விக்ரமசிங்கே கூறினார். அத்துடன் பிரதமர் மாளிகையை விட்டு வெளியேறவும் அவர் மறுத்தார்.  நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க இரு தரப்பினருக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆனால், ராஜபக்சேவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவுக்கு எண்ணிக்கை கிடைக்காது என்று கூறப்பட்டது. இந்த…

Read More

கைவசம் இன்னும் துரும்புகளை தேவைப்படும் போது யுஎன்பி க்கு எதிராகப் பயன்படுத்துவேன் என எச்சரிக்கின்றார் ஜனாதிபதி

கைவசம் இன்னும் துரும்புகளை தேவைப்படும் போது யுஎன்பி க்கு எதிராகப் பயன்படுத்துவேன் என எச்சரிக்கின்றார்  ஜனாதிபதி

கைவசம் இன்னும் துரும்புகளை தேவைப்படும் போது யுஎன்பி க்கு எதிராகப் பயன்படுத்துவேன் என எச்சரித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, நான் ஒரு துரும்பை மாத்திரமே பயன்படுத்தியுள்ளேன். இன்னும் துரும்புகள் என்னிடம் இருக்கின்றன. தேவைப்பட்டால் அதனை பயன்படுத்தலாம் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எங்களிடம் தேவையான பெரும்பான்மை இருக்கின்றது. இதனால் எனது தீர்மானங்களை நான் எக்காரணத்திற்காகவும் இடையில் நிறுத்தப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டத்திலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். 14ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் போது அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு ஐக்கிய தேசிய கட்சியினரை கேட்டுக்கொள்வதாகவும் இல்லையென்றால் அரசியலமைப்பிற்கு ஏற்றவாறு செய்யக்…

Read More
1 21 22 23 24 25 45