இந்து கோயில்களில் விலங்குகள் பலியிட தடை

இந்து கோயில்களில் விலங்குகள் பலியிட தடை

இலங்கையில் உள்ள இந்து கோயில்களில் விலங்குகளை பலியிடும் வழக்கத்தை தடை செய்ய அந்நாட்டு அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளது. இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அளித்த பரிந்துரையை ஏற்று இந்த முடிவுக்கு வந்துள்ளது அமைச்சரவை. இந்து சமய விவகார அமைச்சர் முன்மொழிவை ஏற்று இந்து கோயில்களில் விலங்கு பலிக்கு தடை விதிக்க அமைச்சரவை முடிவு செய்ததாக அமைச்சரவை செய்தித்தொடர்பாளர் ரஜித்தா சேனரத்னே பிபிசியிடம் தெரிவித்தார். பெரும்பான்மையான இந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைப்புகளும் இந்த முடிவுக்கு ஆதரவளித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இந்து, முஸ்லிம் மத விழாக்களில் விலங்குகளை கொல்வதை எதிர்த்து விலங்கு உரிமை செயற்பாட்டாளர்களும், புத்தமத நிறுவனங்களும் குரல் கொடுத்துவந்தன. ஆடு, கோழி, எருமைக் கன்றுகள் இவ்விழாக்களில்…

Read More

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேர் விடுதலை: இந்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் – ராஜபக்சே

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேர் விடுதலை: இந்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் – ராஜபக்சே

ராஜிவ் கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை குறித்து இந்தியா தான் முடிவெடுக்க வேண்டும்’ என்று ராஜபக்சே தெரிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டின் அறிவுறுத்தலை தொடர்ந்து, ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரைப்பது என்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியின் சுவாமி அழைப்பின் பேரில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே இந்தியா வந்துள்ளார். இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாங்கள் அவர்களை தண்டித்தோம். ‘ராஜிவ் கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை குறித்து இந்தியா தான் முடிவெடுக்க வேண்டும்’ எனக் கூறினார். விராட் இந்துஸ்தான்…

Read More

இறுதிப் போரில் 23 ஆயிரம் விடுதலைப் புலிகளை இராணுவம் கொன்றது: ஃபொன்சேகா பேட்டி

இறுதிப் போரில் 23 ஆயிரம் விடுதலைப் புலிகளை இராணுவம் கொன்றது: ஃபொன்சேகா பேட்டி

இலங்கை இறுதிப் போரின் போது 23 ஆயிரம் விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவம் கொன்றதாக அப்போது இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் ஃபொன்சேகா தெரிவித்தள்ளார். மேலும், “இறுதிப் போரில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி, மகள் ஆகியோரும் பதுங்கு குழிகளில் இருந்து போரிட்டு மாண்டதாகவே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தது” என்று தற்போது அமைச்சர் பதவி வகிக்கும் சரத் ஃபொன்சேகா தெரிவித்தார். இறுதிப் போரில் 4000 முதல் 5000 வரையிலான பொதுமக்களே கொல்லப்பட்டிருக்கலாம் என தான் கணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வகித்து வரும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா, கொழும்பில் வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்த போது…

Read More

ராஜபக்ஷ தலைமையில் எதிர்க்கட்சியினர் நடத்திய சத்தியாகிரக போராட்டம்

ராஜபக்ஷ தலைமையில் எதிர்க்கட்சியினர் நடத்திய சத்தியாகிரக போராட்டம்

இலங்கையின் வர்த்தகத் தலைநகர் கொழும்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டம் நள்ளிரவு 1 மணியளவில் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சொத்துகள் விற்பனை, விலைவாசி அதிகரிப்புக்கு மக்கள் மீது வரிச் சுமையை சுமத்துதல் உள்ளிட்ட இன்னும் பல பிரச்சனைகளை முன்வைத்து அரசாங்கத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் ‘ஜனபலய கொலம்பட்ட’ (கொழும்புக்கு மக்கள் பலம்) என்ற தொனிபொருளில், இந்த எதிர்ப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். கொழும்பின் மையப்பகுதியான லேக் ஹவுஸ் சுற்று வட்டத்தை நோக்கி நேற்று மதியம் தொடங்கி பேரணியாக வந்த மக்கள் அங்கு வீதியை மறித்து சத்தியக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கம்பஹா,…

Read More

ராஜூவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது-சுப்ரீம் கோர்ட்

ராஜூவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது-சுப்ரீம் கோர்ட்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும், நளினி உள்ளிட்ட மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார்கள். இந்த கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 2014-ம்…

Read More

கடன் கொடுத்து இலங்கையை ஆதிக்கம் செலுத்த நினைக்கிறதா சீனா?

கடன் கொடுத்து இலங்கையை ஆதிக்கம் செலுத்த நினைக்கிறதா சீனா?

இலங்கையில் 30 ஆண்டுகளாக தொடர்ந்த உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்தவராக கருதப்படும் மஹிந்த ராஜபக்ஷ, 2005 முதல் 2015ஆம் ஆண்டு வரை இலங்கை அதிபராக பதவி வகித்தார். சீனாவைப் பொறுத்த வரையில் அந்நாட்டின் எல்லா விஷயத்திலும், ஆம் அல்லது சரி என்று சீனாவுக்கு சாதகமான ஒரே பதிலையே ராஜபக்‌ஷ சொல்லிவந்தார் என பரவலாக கூறப்படுகிறது. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் அறிக்கை இதுபற்றி இவ்வாறு கூறுகிறது: “சீனா கொடுக்கும் கடன் மற்றும் அதன் லட்சிய துறைமுக திட்டத்திற்கு மஹிந்த ராஜபக்ஷவின் பதில் எப்போதும் ‘ஆம்’ என்றே இருந்தது. அம்பாந்தோட்டா துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், அது நிதர்சனத்திற்கு ஒவ்வாத திட்டம் என்று கூறினாலும், சீனாவின் விருப்பத்திற்கு ‘சரி’…

Read More

மகன் உயிருடன் இருக்கிறாரா? தெரியாமலே தேடிக் கொண்டிருக்கும் தாய்மார்கள்

மகன் உயிருடன் இருக்கிறாரா? தெரியாமலே தேடிக் கொண்டிருக்கும் தாய்மார்கள்

”மகனைத் தேடி, போகாத இடமில்லை. காணாமல் போனோர் குறித்து எங்கு கூப்பிட்டாலும் போவேன். எனக்கு எனது மகன் வேண்டும். எனது மகனின் உடல் கிடைக்கவில்லை. மகனுக்கு இறுதிச் சடங்கு எதுவும் செய்யவில்லை. என் மகன் இருக்கிறான் என்ற நம்பிக்கையில் நான் தேடிக்கொண்டிருக்கிறேன். மகன் திரும்பி வருவான்” என்று கூறியபோது அவரது கண்கள் குளமாகியது. மட்டக்களப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் பிபி.சி தமிழிடம் தெரிவித்த ஆதங்கம்தான் இது. “உறவுகளின் பிரிவு என்பது கொடுமையானது. அவர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்விக்கு விடை தெரியாமல் இருப்பது கொடுமையிலும் கொடுமையானது” என்று தனது கணவரைத் தொலைத்துவிட்டு பல வருடங்களாக தேடியலையும் இன்னொரு பெண் கூறினார். 30 வருடங்களுக்கு மேலாக தமது…

Read More

கூட்டமைப்பு தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகளை ஒதுக்கிவிட்டு அரசாங்கத்தை காப்பாற்றும் பயணத்தில் இணைந்து பயணிக்கின்றது : கொழும்பு பேட்டியில் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறுகின்றார்

கூட்டமைப்பு தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகளை ஒதுக்கிவிட்டு அரசாங்கத்தை காப்பாற்றும் பயணத்தில் இணைந்து பயணிக்கின்றது : கொழும்பு பேட்டியில் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறுகின்றார்

அரசாங்கத்துடன் இணக்கமாக செயற்பட்டு வருகின்றோம் என்று கூறிக்கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் வடக்குகிழக்கு அபிவிருத்தி தொடர்பான செயலணியில் புறந்தள்ளிவிட்டு தன்னுடைய அமைச்சர்களையும் முப்படைத்தளபதிகளையும் ஜனாதிபதி உள்வாங்கியதுடன், இன்று கூட்டமைப்பின் உறுப்பினர்களை செயலணியின் கூட்டத்துக்கு அழைத்திருப்பது தமிழ் மக்கள் மத்தியிலும் எங்கள் மத்தியிலும் பல கேள்விகளை எழுப்புகிறது என்று தெரிவித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை கொண்டு செல்வதற்காக கூட்டமைப்பு தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை ஒதுக்கி வைத்துவிட்டு அரசாங்கத்தை காப்பாற்றும் பயணத்தில் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில் வெளிநாட்டு செய்தி நிறுவனம்…

Read More

சர்வதேசத்தை ஏமாற்றவே காணாமல்போனோர் அலுவலகம் செயற்படுகின்றது

சர்வதேசத்தை ஏமாற்றவே காணாமல்போனோர் அலுவலகம் செயற்படுகின்றது

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு கூறுகின்றது காணாமல் போனோரை கண் டறிவதற்கான அலுவலகம் மக்க ளின் நீதிக்கான கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக அமைக்கப் பட்டதல்ல என தெரிவித்துள்ள அர சியல் கைதிகளை விடுதலை செய் வதற்கான தேசிய அமைப்பு, சர் வதேசத்தை ஏமாற்றுவதற்கே அமைக்கப்பட்டுள்ளது என்றும் அதனை சர்வதேசத்துக்கு எடுத்துக் காட்டுவதற்கும் நீதி கோரவும் நாளை இடம்பெறும் போராட்டத் தில் கலந்துகொள்ளுமாறுஅழைப்பு விடுத்துள்ளது. சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நாளை 31 ஆம் திகதி யாழ்.மாவட்ட செயலக முன்றலில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது, அதற்கு ஆதரவு தெரிவித்து மேற் குறித்த அமைப்பின் தலைவர் அருட்தந்தை மா.சத்திவேல் அனுப்பியுள்ள செய்திக்குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை வருமாறு,…

Read More

நீண்ட நாட்களுக்குப் பின்னர் அமைச்சர்களுக்கும் ஜனாபதிக்கும் முன்பாக “வாயைத் திறந்த” எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்

நீண்ட நாட்களுக்குப் பின்னர் அமைச்சர்களுக்கும் ஜனாபதிக்கும் முன்பாக “வாயைத் திறந்த” எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்

இராணுவத்தின் வசமுள்ள அனைத்து காணிகளும் விடுவிக்கப்படவேண்டும்-ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் சம்பந்தன் வலியுறுத்து நாட்டில் நல்லிணக்கமும் தேசிய ஒருமைப்பாடும் ஏற்படவேண்டுமேயாகில் இராணுவத்தின் வசமுள்ள அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இரா சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். சிலநாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற வட-கிழக்கு தொடர்பான அபிவிருத்தி செயலணி கூட்டத்தில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் அன்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர். எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனின் தலைமையில் தமிழ் தேசிய…

Read More
1 26 27 28 29 30 45