இலங்கை தமிழ் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம்

இலங்கை தமிழ் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இலங்கையின் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சாகும் வரையிலான உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள போதிலும், தமக்கெதிராக எவ்வித வழக்குகளும் தொடுக்கப்படவில்லை எனக் கூறியும், தமக்கெதிரான சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தக் கோரியும் அனுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் இந்தப் போராட்டத்தை நடத்துகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு, உடல் நலக்குறைவுடன் இருந்த ஒரு சிறைக்கைதி, கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். தற்போது அவர் கொழும்பிலுள்ள சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தப் போராட்டம் குறித்து,…

Read More

2019ஆம் ஆண்டு தமது கட்சி ஆட்சிக்கு வருவது 100 வீதம் உறுதி என்கிறார் மகிந்த ராஜபக்ச

2019ஆம் ஆண்டு தமது கட்சி ஆட்சிக்கு வருவது 100 வீதம் உறுதி என்கிறார்  மகிந்த ராஜபக்ச

2019ஆம் ஆண்டு தமது கட்சி ஆட்சிக்கு வருவது 100 வீதம் உறுதி என்றும், தாம் பதவிக்கு வந்ததும், பொருளாதார விவகாரங்கள் உள்ளிட்ட இந்தியாவுடனான எல்லா பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான பொறிமுறை ஒன்று முன்மொழியப்படும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ‘திதற்போது இந்தியாவில் தங்கியிருக்கும் மகிந்த அங்கு “த ஹிந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அந்தப் பொறிமுறை, 2008-2009 காலப்பகுதியில், விடுதலைப் புலிகளுடனான போரின் போது, இந்திய- இலங்கை உறவுகளை ஒருங்கிணைப்பதற்காக, இந்தியத் தரப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன்,வெளிவிவகாரச் செயலர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலர் விஜய்சிங் ஆகியோரையும், இலங்கை தரப்பில் பசில் ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச, லலித்…

Read More

அவுஸ்த்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட ஒன்பது இலங்கையர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதானார்கள்

அவுஸ்த்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட ஒன்பது இலங்கையர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதானார்கள்

அவுஸ்ரேலியாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் நாடுகடத்தப்பட்ட ஒன்பது இலங்கையர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த செவ்வாய்கிழமையன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்ரேலியாவில் பல்வேறு காலகட்டங்களில் புகலிடம் கோரிய, 9 இலங்கையர்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் பேர்த் விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் ஒன்றின் மூலம் பலவந்தமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். அன்றைய தினம இந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்ததை அடுத்து, அவுஸ்ரேலிய அதிகாரிகளால் இந்த 9 பேரும் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து இந்த 9 பேரையும் கைது செய்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவர்களைத் தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றனர்….

Read More

இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த  வேண்டுமென வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டுவருவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையைக் கோருதலும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசையின் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்க வேண்டுமென வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வடமாகாண சபையின் 131வது அமர்வு கடந்த புதன்கிழமையன்று கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியது. இதன்போது, கடந்த அமர்வில் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக் கோர வேண்டுமென்பதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் பொது வாக்கெடுப்பிற்கு அழைப்பு விடுக்க வேண்டுமென்றும் கடந்த…

Read More

யாழ்ப்பாணத்தில் ஆயுதங்களுடன் பொலிஸ் வாகனம் ஒன்று கடத்தப்பட்டது

யாழ்ப்பாணத்தில் ஆயுதங்களுடன் பொலிஸ் வாகனம்  ஒன்று கடத்தப்பட்டது

பொலிஸாரின் வாகனமொன்றை இனந்தெரியாதோர் கடத்திச் சென்ற சம்பவம் யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்த நிலையில் நீண்ட நேரத் தேடுதலின் பின்னர் வாகனத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் கொடிகாமம் பாலாவிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. பாலாவிப் பகுதியில் தொடர்ச்சியாக மணல் கடத்தல் இடம்பெற்று வருவதாகவும் அதனைத் தடுப்பதற்கு அங்கு பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தனர். இவ்வாறு அங்கு பொலிஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது பொலிஸாரின் வாகனத்தை இனந்தெரியாதோர் கடத்திச் சென்றுள்ளனர். குறித்த வாகனத்திற்குள் பொலிஸாரின் ஆயுதங்களும் காணப்பட்டதாகவும் அந்த வாகனத்துடன் நின்ற பொலிஸாரைத் தாக்கிவிட்டே வாகனத்தைக் கடத்திச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து ஆயுதங்களுடன்…

Read More

தமிழர்களின் எதிர்காலத்தை காப்பாற்ற வாருங்கள் என அழைப்பு விடுக்கின்றது யாழ்ப்பாண தினசரி “வலம்புரி”

தமிழர்களின் எதிர்காலத்தை காப்பாற்ற வாருங்கள் என அழைப்பு விடுக்கின்றது  யாழ்ப்பாண தினசரி “வலம்புரி”

தமிழர்களின் எதிர்காலத்தை காப்பாற்ற வாருங்கள் என அழைப்பு விடுக்கின்றது யாழ்ப்பாண தினசரி “வலம்புரி” . மேற்படி யாழ்ப்பாண தினசரியின் அண்மைய ஆசிரிய தலையங்கம் ஒன்றில் மேற்கண்டவாறு அழைப்பு விடுத்துள்ளது. மேற்படி ஆசிரிய தலையங்கத்தில் பின்வருமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பா என்றொரு திரைப்படம் வெளிவந்தமை பலருக்கும் ஞாபகம் இருக்கும். அதில் தனது மகனுக்குத் தந்தை கூறு கின்ற ஆலோசனை இருக்கிற இடம்தெரியா மல் இருந்து விட்டுப் போகவேணும் என்பது தான். அந்தக் கருத்து அப்பா படத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல. அது எங்களில் பலருக்கும் பொருத்தமானது. எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அமைதி யாக இருந்துவிட்டுப் போவது என்ற முடிவில் பலர் இருக்கின்றார்கள். இது ஒரு வாழ்க்கையா? என்பதுதான் நம் கேள்வி….

Read More

தமிழர் தேசத்தின் அபிவிருத்தியை இராணுவத்தினர் தீர்மானிக்க முடியாது பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

தமிழர் தேசத்தின் அபிவிருத்தியை இராணுவத்தினர் தீர்மானிக்க முடியாது பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

தமிழர் தேசத்தின் அபி விருத்தியை இலங்கை இராணுவத்தினர் தீர்மானிக்க முடியாது என தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். பூநகரியின் நெற்பிலவுப் பகுதியின் நாரந்தாழ்வு வீதி யின் புனரமைப்பில் இராணு வத் தலையீடு இருப்பது குறித்து கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டினை அடுத்து அந்த வீதி மக்களுடனான சந்திப்பின்போதே பாராளு மன்ற உறுப்பினர் மேற் கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், தமிழர்கள் இந்த மண் ணிலே தங்களைத் தாங் களே ஆள விரும்புகிறார்கள். அதற்காகத்தான் நாம் 70 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகின்றோம். எங்களுடைய தேசம் எவ்வாறு அபிவிருத்தி செய் யப்பட வேண்டும் என்பதை எமது…

Read More

நான் தொடர்ந்து இணைந்திருந்து வாக்குறுதியை காப்பாற்ற முனைவேன் என்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

நான் தொடர்ந்து இணைந்திருந்து வாக்குறுதியை காப்பாற்ற முனைவேன் என்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

எனக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட போது ஆயிரக்கணக்கில் வெகுண்டு திரண்ட எம் மக்களுக்கு அவர்களுடன் நான் இருப்பேன் என கூறியிருந்தேன். என் வாக்கைக் காப்பாற்ற நான் முனைந்துள்ளேன். இறைவன் வழிவிட்டால் நான் அவர்களுடன் இருப்பேன் மக்களுடன் தொடர்ந்தும் நான் தொடர்ந்து இணைந்திருந்து வாக்குறுதியை காப்பாற்ற முனைவேன் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் வெளியிட்ட நான்கு தெரிவுகளில் நான்காவதாக குறிப்பிட்ட தெரிவே மிகச் சிறந்தது என்று தெரிவித்துள்ளார். சிலோன் ருடே ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் தம்மிடம் நான்கு தெரிவுகள் இருப்பதாக கூறியிருந் தமை…

Read More

இந்தியா சென்ற மகிந்த ராஜபக்சாவை புதுடெல்லியில் சுப்பிரமணிய சுவாமி வரவேற்றார்

இந்தியா சென்ற மகிந்த ராஜபக்சாவை புதுடெல்லியில் சுப்பிரமணிய சுவாமி வரவேற்றார்

கடந்த திங்கட்கிழமை மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு சென்றபோது புதுடில்லி விமான நிலையத்தில் வைத்து அவரை பாரதிய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவர் சுப்ரமணியம் சுவாமி வரவேற்றுள்ளார். இந்திய பாரதிய ஜனதா கட்சியின் அழைப்பின் பேரிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சா இந்தியா சென்றார் என்று கொழும்பிலிருந்து எமக்கு கிடைத்த செய்தி ஒன்று தெரிவிக்கின்றது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மகிந்த ராஜபக்சா இலங்கையில் தற்போது ஆட்சி நடத்தும் நல்லிணக்க அரசாங்கத்தின் ஜனாதிபதியும் பிரதமரும் மக்கள் மத்தியில் தங்கள் செல்வாக்கை இழந்துள்ளார்கள் என்று குறிப்பிட்டார். சுப்பிரமணிய சுவாமி மகிந்தாவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் வகையில்…

Read More

சிறுநீரகத்தை விற்று கடனை செலுத்த முயலும் பெண்கள்

சிறுநீரகத்தை விற்று கடனை செலுத்த முயலும் பெண்கள்

இலங்கை போரினால் பாதிக்கப்பட்டு கணவரை இழந்த விதவைகளும், போர் நடந்த பகுதிகளிலுள்ள பெண்களும் தங்களின் சிறப்பு கடன்களை திருப்பிச் செலுத்த சிறுநீரகங்களை (கிட்னிகளை) விற்க முயற்சித்த சம்பவங்களை அறிய வந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை சிறப்பு நிபுணர் ஜூவான் பப்லோ போஹோஸ்லாவ்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் என மனித உரிமைகளில் வெளிநாட்டு கடனின் பாதிப்பு குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் இந்த சுயாதீன நிபுணர் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 3ம் தேதி இலங்கைக்கு வந்த ஜூவான் பப்லோ ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். “கடனை திரும்ப செலுத்த வழியின்றி தங்களது சிறுநீரகங்களை விற்பனை செய்ய முயற்சித்த சம்பவங்களை நான் கேள்வியுற்றேன்”…

Read More
1 25 26 27 28 29 45