மீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம்-பொய்யான வாக்குறுதிகளை உங்களுக்கு நான் வழங்கமாட்டேன் : யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு

மீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம்-பொய்யான வாக்குறுதிகளை உங்களுக்கு நான் வழங்கமாட்டேன் : யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு

நாடு முழுவதும் போதைப்பொருள் போதைப் பொருள் விடயமானது ஒரு வி~மாக பரவி வருகின்றது. இந்த போதைப் பொருள் விடயத்தில் கடுமையான சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்தவுள்ளேன். வடபகுதியில் குடிநீர் மற்றும் விவ சாயம் தொடர்பான பிரச்சினைகள் பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. இரணைமடு விற்கான குடிநீர் விநியோகம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக் கப்பட்டு வருகின்றன. உடனடியாக நடைமுறைப்படுத்த முடியுமென நான் பொய்யான வாக்குறுதிகளைத் தர மாட்டேன். 10 வருடங்களின்போதுதான் குடிநீர் இரணைமடுவை நோக்கி வழிந் தோடும். வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்கள் மட்டுமன்றி போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றியும் சிந்தித்து நீர்ப்பாசன திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின் றோம். மேலும் நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாத வகையில்…

Read More

யாழ்ப்பாண சிங்கள மகா வித்தியாலயத்தை மீண்டும் ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன??

யாழ்ப்பாண சிங்கள மகா வித்தியாலயத்தை மீண்டும் ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன??

யாழ்ப்பாணத்தில் ஆஸ்பத்திரி வீதியில் யாழ்ப்ப்பாண புகையிரத நிலையத்திற்கு மிக அருகில் அமைந்திருந்த, சிங்கள மகாவித்தியால யம் 33 வருடங்களுக்கு முன்னர் சேதமாக்கப்பட்டு அங்கிருந்து பெறுமதியான பொருட்களை யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஆக்கிரமித்த தமிழ் மக்கள் அபகரித்துச் சென்றார்கள். இவ் வாறு சேதமாக்கப்பட்ட சிங்கள மகா வித்தியாலயத்தை மீண்டும் ஆரம்பிக்கப்படுவதற்கான ஏற்பாடு கள் இடம்பெற்றுள்ளன என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. 33 வருடங்களுக்கு முன்னர் பல இனங்கள் சார்ந்த மாணவர்கள் கல்வி கற்ற யாழ்ப்பாணம் சிங்கள மகா வித்தியாலயத்தில் மீண்டும் அனைத்து இன மாணவர்களுக்கும் சிங்கள மொழியை கற்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ளது என்று கல்வித்திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1985ஆம் ஆண்டு யுத்த காலப்…

Read More

வடபகுதியில் விடுவிக்கப்படாத காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் – மயிலிட்டி துறைமுக விழாவில் ஜனாதிபதி மைத்திரி

வடபகுதியில் விடுவிக்கப்படாத  காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் –  மயிலிட்டி துறைமுக விழாவில் ஜனாதிபதி மைத்திரி

இனப் பிரச்சினைக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி பலமாகவும், உறுதியானதுமான முடிவுகளை எடுக்க வேண்டும். இல்லாவிடின் அபிவிருத்தி செய்து பிரியோசனம் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார். மயிலிட்டி துறைமுக புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் ( மயிலிட்டி துறைமுக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, எமது மக்கள் போரின் காரணமாக இந்தப் பிரதேசங்களில் இருந்து வெளியேறிய பின்னர் இன்று மயிலிட்டி துறைமுகத்தினை புனரமைப்புச் செய்வதற்கான வரலாற்று…

Read More

முன்னாள் போராளிகளுடன் இணைய மக்கள் அஞ்சுகின்றார்களள் என்கிறார் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன்

முன்னாள் போராளிகளுடன் இணைய மக்கள் அஞ்சுகின்றார்களள் என்கிறார் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன்

சிறையில் இருக்கும் போது இராணுவத்தினர் வசம் ஆக்கப்பட்ட முன்னாள் போராளிகளுடன் இணைவதற்கு ஊர்மக்கள் அஞ்சுகிறார்கள் என தெரிவித்த வடக்கு மாகாண முதலமைச்சர், அந்த நிலை தொடராமல் இருப்பதற்கு முன்னாள் போரா ளிகளுக்கான அனைத்து செயற்திட்டங்க ளையும் அரசும் நாமும் இணைந்து முன் னெடுக்க வேண்டும் எனவும் வெளிநாட்டு பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார் சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சுமார் நாற்பதிற்கும் மேற்பட்ட பிரதி நிதிகள் வடக்கு மாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் நேற்று முன்தினம் சந்தித்து கல ந்துரையாடினார்கள். குறித்த சந்திப்பின் பின் னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், முன்னாள் போராளிகள் பலர் சிறையில்…

Read More

யாழ்ப்பாணத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றுலா தளமாக மாற்ற யாழ்.மாநகர சபையில் தீர்மானம்

யாழ்ப்பாணத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றுலா தளமாக மாற்ற யாழ்.மாநகர சபையில் தீர்மானம்

இலங்கையில் மத்திய அரசினால் கையகப்படு த்தப்படும் யாழ்.மாநகர சபை எல் லைக்குட்பட்ட புராதன சின்னங் களை சுற்றுலா தளமாக மாற்றி சபையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என மாநகர சபையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் மாதா ந்த அமர்வு அண்மையில் நடைபெற்றது. அதில் மேற்குறித்த பிரேரணையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் வை.கிருபாகரன் முன்மொழிந்தார். அதில் வடக்கில் உள்ள முக்கிய உள்;ராட்சி நிர்வாகமாக யாழ்.மாநகர சபை திகழ்கின்றது. எனவே இச் சபைக்கு வருமானத்தை ஈட்டிக் கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது. எனவே யாழ்.மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள புராதான சின்னங்களை சபையின் நிர்வாகத்தின் கீழ் எடுத்து, அதனை சுற்றுலா தளமாக…

Read More

தையிலிட்டி திஸ்ஸ விகாரையின் புனர்நிர்மாணம் நலிவுற்ற தமிழ் மக்களின் துயர்துடைக்கும்; பணியை ஆற்றும்; என்கிறார் வட மாகாண ஆளுனர்

தையிலிட்டி திஸ்ஸ விகாரையின் புனர்நிர்மாணம் நலிவுற்ற தமிழ் மக்களின் துயர்துடைக்கும்; பணியை ஆற்றும்; என்கிறார் வட மாகாண ஆளுனர்

உள்நாட்டு யுத்தம் காரணமாக அழிவடைந்த காங்கேசன்துறை தையிலிட்டி திஸ்ஸ விகாரையினை மீள்புனர்நிர்மாணம் செய்வதற்கான தொடக்க விழாவில் நேற்று முன்தினம் புதன்கிழமை கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டிவைத்து உரையாற்றும்போது வடக்கு மாகாண ஆளுனர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் “இன்று இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுவதற்கும் தேவையாக இருப்பது புத்த பெருமான் சொன்ன தர்மம். மீழ் புனர்நிர்மாணம் செய்வதற்காக அடிக்கல் நாட்டப்பட்ட இந்த விகாரை சாந்தி சமாதானம் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான மத்தியஸ்தலமாக அமைய வேண்டும் என்பது எனது வேண்கோளாக இருக்கின்றது. இந்த விகாரை ஒரு தனிப்பட்ட விகாரையாக இருக்க முடியாது சிங்கள பௌத்த சமயம், சீன பௌத்தம் சமய, கொறிய பௌத்த சமயம் என்று…

Read More

வடகிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்தி செயலணியில் கலந்து கொள்ள வேண்டாம் என வடமாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்;வரன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது

வடகிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்தி செயலணியில் கலந்து கொள்ள வேண்டாம் என வடமாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்;வரன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது

வடகிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி அடுத்த வாரம் கூடவுள்ளது. இந்நிலையில் அரசியல் தீர்வு ஒன்று எட்டப்படும் வரை அபிவிருத்தி செயலணியில் தாம் கலத்து கொள்ளப் போவதில்லை எனவும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டாம் எனக்கோரி முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன், கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்மந்தனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று முன்தினம் கூடி ஆராய்ந்துள்ளது. இதன்போது வடகிழக்கு மாகாணங்களில் மக்களுக்கு பல்வேறு அபிவிருத்தி சார் பிரச்சினைகள் உள்ளது. இதற்கும் மேல் நில ஆக்கிரமிப்பு, சிங்கள குடியேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்புக்கள் என பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவை குறித்து…

Read More

இலங்கையின் நாணயத்தாள்களை அச்சிட சீன நிறுவனத்தில் முற்பதிவு: மத்திய வங்கி மறுப்பு

இலங்கையின் நாணயத்தாள்களை அச்சிட சீன நிறுவனத்தில் முற்பதிவு: மத்திய வங்கி மறுப்பு

இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் நாணயத்தாள்களை அச்சிட தமது அரசாங்கத்தின் நிதி அச்சிடும் நிறுவனத்தில் முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு பல நாடுகள் முற்பதிவு செய்துள்ளதாக, சீன வங்கியின் நாணயத்தாள் அச்சிடும் நிறுவனத்தின் தலைவர் லீ குயிஷென்க், சீன வங்கியினால் தயாரிக்கப்படும் மாதாந்த சஞ்சிகை ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். அவற்றில் இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், மலேசியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சீன வங்கியின் நாணயத்தாள் அச்சிடும் நிறுவனம், உலகின் பாரிய நாணயத்தாள் அச்சிடும் நிறுவனமாகக் கருதப்படுகின்றது. இலங்கைக்கு தேவையான எவ்வித பணமும் சீனாவில் அச்சிடப்படுவதில்லை என இது தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் வினவியபோது இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டது….

Read More

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவுடன் சுப்பிரமணியசாமி சந்திப்பு

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவுடன் சுப்பிரமணியசாமி சந்திப்பு

இலங்கை சென்றுள்ள பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி மடமுலனாவில் உள்ள ராஜபக்சேவின் முன்னோர்கள் இல்லத்துக்கு சென்று அங்கு ராஜபக்சேவை சந்தித்தும் பேசினார். அப்போது டெல்லிக்கு வருமாறு சுப்பிரமணியசாமி அவருக்கு அழைப்பும் விடுத்தார். மேலும், மரணம் அடைந்த ராஜபக்சேவின் இளைய சகோதர சந்திர ராஜபக்சேவின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். இதுபற்றி சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் பதிவில், ‘‘இலங்கையின் தென்பகுதிக்கு சென்று முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவை சந்தித்து பேசியது மிகவும் மகிழ்ச்சி தரும் நிகழ்வாக இருந்தது. விடுதலைப்புலிகள் இயக்கத்தை அடியோடு ஒழித்துக் கட்டுவது என்ற உறுதியான முடிவை எடுத்தவர் என்ற வகையில் அவர் பாராட்டுக்குரியவர். அதேபோல் ராஜீவ்காந்தியை விடுதலைப்புலிகள் படுகொலை…

Read More

தமிழர் தாயகப்பகுதியில் இடம்பெறும் அசம்பாவிதங் கள் மத்திய அரசின் ஆதரவுடன் இடம் பெறுவதாகவே சந்தேகம் என்கிறார் வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன்

தமிழர் தாயகப்பகுதியில்  இடம்பெறும் அசம்பாவிதங் கள் மத்திய அரசின்  ஆதரவுடன் இடம் பெறுவதாகவே  சந்தேகம் என்கிறார்  வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன்

தமிழர் தாயகப்பகுதியில் தொடர்ச்சி யாக இடம்பெறும் அசம்பாவிதங் கள் மத்திய அரசின் ஆதரவுடன் இடம் பெறுவதாகவே சந்தேகம் எழுந்துள் ளது என தெரிவித்த வடக்கு மாகாண மகளிர் விவகாரம் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன், இந்த அநீதிகளுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் தெரி வித்துள்ளார். சமகால நிலைமைகள் தொடர்பாக வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் அலு வலகத்தில் ஊடகவியலாளார் சந்திப்பு இடம்பெற்றது. அதன் போது கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், முல்லைத்தீவு நாயாறுப் பகுதியில் எமது மக்களின் வாடிகள் எரிக்கப்பட்டமை மிகவும் கண்டிக்கத்தக்க விடயம். இதே போன்று வட மராட்சி…

Read More
1 27 28 29 30 31 45