‘கர்த்தாவிண்டே நாமத்தில்! – கிறிஸ்துவ சபைகளில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள்
கிறிஸ்துவ சபைகளில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களை, ‘கர்த்தாவிண்டே நாமத்தில்!’ என்ற தலைப்பில், மலையாளத்தில், புத்தகமாக எழுதியுள்ள, கன்னியாஸ்திரி லுாசி கலப்புரா: எனக்கு பூர்வீகம், கேரளா. உடன் பிறந்தோர், 11 பேர்; ஏழாவதாக பிறந்தவள் நான். சிறு வயது முதலே, ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதற்காக, கன்னியாஸ்திரியாக மாறினேன்.அதற்காக, முறையான பயிற்சிகள் பெற்று, 20 வயதில் கன்னியாஸ்திரி ஆனேன்; இப்போது வயது, 54. கர்த்தருக்கு பயந்த, நேர்மையான கன்னியாஸ்திரியாக இருக்கிறேன்; ஆசிரியையாகவும் பணியாற்றுகிறேன்.நான் மிகவும் வெகுளியாக இருந்த காலத்தில், கிறிஸ்துவ சபைகளில், கன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் இருக்காது என, நினைத்தேன். ஆனால், காலப் போக்கில், கன்னியாஸ்திரிகள் மீது நடத்தப்படும் பாலியல் பலாத்காரங்கள், அத்துமீறல்கள், வன்முறைகள் குறித்து…
Read More








