பசுமை விநாயகர்” போட்டி வெற்றியாளர் மற்றும் சான்றளிக்கப்பட்ட “கணேஷா ஷில்பி” மோகனா சாந்தி மொல்லெட்டி

பசுமை விநாயகர்” போட்டி வெற்றியாளர் மற்றும் சான்றளிக்கப்பட்ட “கணேஷா ஷில்பி” மோகனா சாந்தி மொல்லெட்டி

பசுமை விநாயகர்” போட்டி வெற்றியாளர் மற்றும் சான்றளிக்கப்பட்ட “கணேஷா ஷில்பி” மோகனா சாந்தி மொல்லெட்டி உங்கள் சொந்த சுற்றுச்சூழல் நட்பு கணேஷாவை உருவாக்குவதற்கான முறையை படிப்படியாக செய்து காட்டுகிறார். பசுமை விநாயகர் போட்டியில் வெற்றிபெற சொந்த விநாயகரை உருவாக்கும் வீடியோவைக் கிளிக் செய்க…பார்க்க… வெல்க …பகிர்க இந்த வீடியோக்களைப் பார்த்த பிறகு நீங்கள் இன்னும் உங்கள் சொந்த விநாயகரைச் செய்து எளிதாக போட்டியில் பங்கேற்கலாம். இந்த கணேஷ் சதுர்த்தியில் நீங்கள் உங்களின் சிறந்த குடும்ப நேரத்தை உங்களின் குழந்தைகளுடன் பகிர்ந்து போட்டியில் பங்கேற்கலாம். இந்த லிங்கை https://bharatmarg.com/green-ganesha-competition-for-ganesh-chaturthi/ கிளிக் செய்து கட் ஆப் நாள் செப்டம்பர் 1 ஆம் தேதிக்கு முன் நீங்கள் செய்த விநாயகரின்…

Read More

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் இல்லை !!

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் இல்லை !!

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலையில் நேற்று பெரியளவில் மாற்றம் இல்லை என்றாலும் உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்குகின்றன என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது. பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் 75 கொரோனா தொற்று காரணமாக சென்னை எம்.ஜி.எம். ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு ‘எக்மோ’ உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை: கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது. ‘எக்மோ’ போன்ற உயிர்காக்கும் உபகரணங்கள் அவருக்கு தேவைப்படுகிறது. செயற்கை சுவாசம் வழியாக ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது, என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எஸ்.பி.பி. உடல்நிலை…

Read More

கணேஷ் சதுர்த்தியின் “பசுமை விநாயகர் போட்டி” !!

கணேஷ் சதுர்த்தியின் “பசுமை விநாயகர் போட்டி” !!

ஸ்ரீ கணேஷ் சதுர்த்தி ஆகஸ்ட் 22 ஆம் தேதி கொண்டாடப்படும். இந்த புனித தினத்தை முன்னின்ட்டு நமது “பசுமை விநாயகர்” போட்டியை நாம் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். இந்த போட்டியில் வெற்றிபெற நீங்கள் ஒரு சூழல் நட்புடய பிள்ளையாரை உருவாக்க வேண்டும். இந்த பிள்ளையார் செய்யும்போது படிப்படியாக புகைப்படங்கள் / வீடியோவை எடுத்து நீங்கள் சமர்ப்பிப்பீர்கள் .. நீங்களே உருவாக்கிய இந்த அன்பு விநாயகரிடம், உங்கள் சொந்த விநாயகரிடம் குடும்பத்துடன் பிரார்த்தனை செய்வதும் அடங்கும். புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்புங்கள். வெற்றிபெறுவோர் பாரத் மார்க் சான்றளிக்கப்பட்ட “கணேஷ் சிற்பி” அறிவிக்கப்படுவார்கள். உங்கள் திறமையைக் காட்டவும் நிரூபிக்கவும் இந்த அற்புதமான போட்டியில் பங்கேற்க இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்: 1)…

Read More

அதிரவைக்கும் செய்தி : பிராம்ப்டனில் உள்ள ஹிந்து கோவிலின் தலைமை பூசாரியின் மனைவியை கொன்றது யார்? ஏன் ?

அதிரவைக்கும் செய்தி :  பிராம்ப்டனில் உள்ள ஹிந்து கோவிலின் தலைமை பூசாரியின் மனைவியை கொன்றது யார்? ஏன் ?

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து கோவிலின் தலைமை பூசாரியாக இருக்கும் பண்டிட் அபய் தேவ் சாஸ்திரியின் மனைவி வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் அவரது வீட்டின் கேரேஜில் சுட்டுக் கொல்லப்பட்டார். கான்ஸ்டபில் சாரா பாட்டன் கூரூஹையில், ஒரு குடும்ப உறுப்பினர் வீட்டிற்கு வந்தபோது மோசமாக காயமடைந்ததைக் கண்டார் என்று கூறினார். அவர் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு இரவு 9:30 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பீல் போலிஸின் குற்றவியல் புலனாய்வுப் பணியகம் (சிஐபி) தற்போது அந்தப் பெண்ணின் காயங்களின் சூழ்நிலைகளை ஆராய்ந்து வருகிறது. இந்த கொலையைபற்றிய செய்தி தெரிந்த எவரும் 21 பிரிவில் CIB ஐ அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Read More

சப்பாத்திக்கு செஞ்ச உருளைக்கிழங்கு மசாலாவை வேணம்னா சொல்லுவ? கணவன் எலும்பை உடைத்த மனைவி

சப்பாத்திக்கு செஞ்ச உருளைக்கிழங்கு மசாலாவை வேணம்னா சொல்லுவ? கணவன் எலும்பை உடைத்த மனைவி

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கணவன், சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு மசாலாவை சாப்பிட மறுத்ததால், அவரை மனைவி கடுமையாக தாக்கியுள்ளார். இதில் அவரது கை எலும்பு உடைந்தது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் வசிக்கும் ஹர்சத் (40), தனது மனைவி தாராவுடன் வசித்து வந்தார். இந்நிலையில், சண்டையின் போது தனது மனைவி தாக்கியதில் தனது கை எலும்பு உடைந்ததாக ஹர்சத், போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரில் அவர் கூறியதாவது: கடந்து வெள்ளிக்கிழமை வேலை முடிந்து வீட்டிற்கு வந்த நான் மனைவியிடம் இரவு உணவு கேட்டேன். அவர் சப்பாத்தி, உருளைகிழங்கு மசாலா சாப்பிட கொண்டு வந்தார். எனக்கு நீரிழிவு (டயாபடிக்) நோய் உள்ளதால், உருளைக்கிழங்கு சாப்பிட மறுத்தேன்.   அதற்கு தகாத…

Read More

அடையாளத்தை மாற்றி இந்தியாவில் பதுங்கிய இலங்கை தாதா பிடிபட்டான் !!

அடையாளத்தை மாற்றி இந்தியாவில் பதுங்கிய இலங்கை தாதா பிடிபட்டான் !!

இலங்கை தாதா அங்கொட லொக்கா, 36. தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இவர் கோவையில் தங்கியிருந்தான். இவரது மர்ம மரணம் குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் ஏழு தனிப்படைகள் விசாரித்து வருகின்றன. இந்நிலையில், தன்னை யாரும் அடையாளம் காண முடியாத அளவுக்கு உருவத்தை மாற்ற அங்கொட லொக்கா திட்டமிட்டுள்ளார். இதையடுத்து கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையை அவர் அணுகியுள்ளார். அங்கு தான் சினிமாவில் நடிக்க உள்ளதாகவும் அதற்காக தனது மூக்கை சற்று பெரிதாக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவரது பேச்சை உண்மை என, நம்பிய டாக்டர்கள் அவருக்கு மூக்கில் கடந்த, பிப்., மாதம் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். அறுவை சிகிச்சைக்கு பின் மாறுபட்ட முகத்துடன் அங்கொட லொக்கா உலா…

Read More

பாலியல் பலாத்கார வழக்கிலிருந்து கேரள பிஷப்பை விடுவிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு !!

பாலியல் பலாத்கார வழக்கிலிருந்து கேரள பிஷப்பை விடுவிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு !!

கேரளாவில், கோட்டயம் அருகே குருவிளங்காடு தேவாலயத்தில் பிஷப்பாக இருந்தவர், பிராங்கோ மூலக்கல், 55. குருவிளங்காடு தேவாலயத்தில் பணியாற்றிய காலத்தில், கன்னியாஸ்திரி ஒருவரை, பிராங்கோ மூலக்கல் மிரட்டி, பலமுறை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. பாதிக்கப் பட்ட கன்னியாஸ்திரி, குருவிளங்காடு போலீசில் புகார் செய்தார். பிரச்னை பெரிதானதையடுத்து, கோட்டயம் போலீசார் 2018-ல் கைது செய்து 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில், மூலக்கல்லுக்கு, கேரள உயர் நீதிமன்றம், நிபந்தனை ஜாமின் வழங்கியது. தன்னை வழக்கிலிருந்து விடுவிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியான நிலையில், உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தன் மீது கன்னியாஸ்திரி பணம் பறிக்கும் நோக்குடன்…

Read More

ராம் கோவில் நாட்டின் கலாச்சார தேசியவாதம்: ஆர்.எஸ்.எஸ்

ராம் கோவில் நாட்டின் கலாச்சார தேசியவாதம்: ஆர்.எஸ்.எஸ்

அயோத்தியில் ராம் கோவில் கட்டப்பபடுவது காலாச்சார தேசியவாதம் என ஆர்.எஸ்.எஸ்., மூத்த செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: அயோத்தியில் கோவில் உருவாவது ஒரு மத விவகாரம் அல்ல. அதே நேரத்தி்ல் கலாச்சார விழிப்புணர்வுக்கானது.ராம் கோவில் நாட்டின் கலாச்சார தேசிய வாத்திற்கானது. கோவில் கட்டப்படுவதை உறுதி செய்வதற்கான பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது என்றார். மேலும் மதச்சார்பின்மைக்காக கோவில் கட்டுவதை எதிர்ப்பவர்கள் குறித்து அவர் கூறுகையில் மதசார்பின்மை என்ற பெயரில் தேசியவாதத்தையும், கலாச்சார தேசிய வாதத்தையும் அடக்க முடியாது . ராம் கோவிலின் கட்டுமானம் இந்தியாவில் கலாச்சார தேசியவாதத்தில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் எனவும் நாட்டின் மேற்கத்திய மனநிலையை மாற்றும் எனவும் கூறினார்.

Read More

வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் நடத்திய ‘ஆன்-லைன்’ கந்த சஷ்டி பாராயணத்தில் 2 கோடி தமிழர்கள் பங்கேற்பு

வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் நடத்திய ‘ஆன்-லைன்’ கந்த சஷ்டி பாராயணத்தில் 2 கோடி தமிழர்கள் பங்கேற்பு

தமிழ் வரலாற்றில், முதல் முறையாக, வாழும் கலை நிறுவனர், ஸ்ரீஸ்ரீரவிசங்கர் முன்னிலையில் ‘ஆன்-லைன்’ மூலம் நேற்று நடந்த கந்த சஷ்டி பாராயணத்தில் 2 கோடி தமிழர்கள் பங்கேற்றனர். வாழும் கலை அமைப்பின் நிறுவனர்,ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் சீடர்கள் மூலம் ஒரு குழு அமைத்து, உலக நன்மைக்காவும், மன அமைதிக்காகவும், தமிழகம் முழுதும் உள்ள கோவில்கள், பள்ளிகள், பொது இடங்களில், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது.வடபழநிஇந்த சஷ்டி பாராயணம், முதலில், கடந்த ஆண்டு, சென்னை, வடபழநி முருகன் கோவிலில் துவக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவ., 15ல் நடந்த பாராயணத்தில், 30 லட்சம் பேர் நேரலையில் பங்கேற்றனர். இந்நிலையில், ஸ்ரீஸ்ரீரவிசங்கர் முன்னிலையில், கந்த சஷ்டி பாராயணம் நேற்று மாலை…

Read More

இந்தாண்டு ரக்ஷா பந்தனுக்கு மோடி ராக்கி – சீன ராக்கிகளை வாங்க மாட்டோம்

இந்தாண்டு ரக்ஷா பந்தனுக்கு மோடி ராக்கி – சீன ராக்கிகளை வாங்க மாட்டோம்

வரும் ஆக., 3 ம் தேதி நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்பட உள்ளது. கடந்தாண்டு வரையில் ரக்ஷா பந்தன் விழாவில் முக்கிய பங்குபெறும் கைகளில் கட்டப்படும் கயிறு சீனா தயாரிப்புகளாகவே இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் லடாக்கின் கல்வான் பகுதியல் இந்தியா-சீன படையினரிடையே நிகழ்ந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இச்சம்பவத்தை அடுத்து பிரதமர் மோடி தன்னம்பிக்கை இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தார். இதனையடுத்து இந்திய வர்த்தக அமைப்பான அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (சிஐஐடி) இந்துஸ்தானி ராக்கியை பயன்படுத்தி நாடுமுழுவதும் ரக்ஷா பந்தனை கொண்டாட வேண்டும் என அழைப்பு விடுத்தது. இதனையடுத்து இந்தியாவிலேயே ராக்கி…

Read More
1 43 44 45 46 47 77