யேசுதாசுக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து !!

யேசுதாசுக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து !!

பாடகர் யேசுதாஸ் இன்று தனது 80 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு மோடி இன்று (ஜன.,10) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் கே.ஜே.யேசுதாசுக்கு அவரது 80 வது பிறந்தநாளில் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் இனிமையான இசை மற்றும் ஆத்மார்த்தமான குரல்வளம் அனைத்து வயதினரிடமும் புகழ்பெற்றுள்ளது. இந்திய கலாச்சாரத்திற்கு மதிப்புமிக்க பங்களிப்பை அவர் அளித்துள்ளார். அவர் நலமுடன், நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு மோடி குறிப்பிட்டுள்ளார்.   Narendra Modi ✔@narendramodi On the special occasion of his 80th birthday, greetings to the versatile K. J. Yesudas Ji. His melodious music…

Read More

ஹிந்து பெண்கள் அமெரிக்க நீதிபதிகளாக நியமனம் !!

ஹிந்து பெண்கள் அமெரிக்க நீதிபதிகளாக நியமனம் !!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹிந்து, இரு பெண்கள், அமெரிக்காவில் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர், பில் டி பிளாசியோ, குற்றவியல், சிவில் மற்றும் குடும்பவியல் நீதிமன்றங்களுக்கு, 28 நீதிபதிகளை நியமித்தார்.அவர்களில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, அர்ச்சனா ராவ், தீபா அம்பேகர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். நியூயார்க் இடைக்கால சிவில் நீதிமன்ற நீதிபதியாக உள்ள, அர்ச்சனா ராவ், தற்போது, நியூயார்க் சிவில் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 17 ஆண்டுகளாக, நியூயார்க் மாவட்ட வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர். சமீபத்தில், நிதி முறைகேடு தடுப்பு பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார். தீபா அம்பேகர், 2018, மே மாதம், இடைக்கால சிவில் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு, தற்போது…

Read More

நியூயார்க் யூத மத குருவின் வீட்டில் கத்திக்குத்து – ஐவர் காயம்

நியூயார்க் யூத மத குருவின் வீட்டில் கத்திக்குத்து – ஐவர் காயம்

வடக்கு நியூயார்க்கில் உள்ள மோன்சியில் ஒரு மத கொண்டாட்டத்தின்போது, தாக்குதல்தாரிகள் உள்ளே புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கியதாக யூத பொது விவகாரங்களுக்கான சபை (OJPAC) கூறுகிறது. சந்தேக நபர் அங்கிருந்து தப்பியதாகவும், ஆனால் காவல்துறையினர் அவரை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர் என்றும் தெரிவித்தனர். தாக்குதலுக்கான காரணம் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை. நகரத்தில், யூத எதிர்ப்பு அச்சுறுத்தல்கள் தொடர்ந்து நிலவுவதால், யூத மக்கள் வாழும் பல பகுதிகளில், காவல் துறையினர் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருவதாக நியூயார்க் நகரய யூதர்கள் அதிகம் வசிக்கும் மோன்சியில் ஒரு மத குருவின் இல்லத்தில், ஹனுக்கா கொண்டாட்டத்தின்போது முக மூடி அணிந்த நபர் தாக்குதல் நடத்தினார். படத்தின் காப்புரிமைREUTERS தாக்குதலின்போது,…

Read More

:உபி மாநிலம், அயோத்தியில் தாக்குதல் – பாக்.,கில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பு திட்டம்

:உபி மாநிலம், அயோத்தியில் தாக்குதல் – பாக்.,கில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பு திட்டம்

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் தாக்குதல் நடத்த, பாக்.,கில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதற்கான உத்தரவை அதன் தலைவர், மசூத் அசார் பிறப்பித்துள்ளது தெரிய வந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. இங்குள்ள, ‘அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தில், ஹிந்துக் கடவுள் ராமருக்கு கோவில் கட்டலாம்’ என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு, அண்டை நாடான, பாக்., எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதால், எவ்வித தாக்குதலிலும், பாக்., ராணுவமோ, அதன் ஆதரவு பெற்ற பயங்கரவாத…

Read More

‘கர்த்தாவிண்டே நாமத்தில்! – கிறிஸ்துவ சபைகளில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள்

‘கர்த்தாவிண்டே நாமத்தில்! – கிறிஸ்துவ சபைகளில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள்

கிறிஸ்துவ சபைகளில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களை, ‘கர்த்தாவிண்டே நாமத்தில்!’ என்ற தலைப்பில், மலையாளத்தில், புத்தகமாக எழுதியுள்ள, கன்னியாஸ்திரி லுாசி கலப்புரா: எனக்கு பூர்வீகம், கேரளா. உடன் பிறந்தோர், 11 பேர்; ஏழாவதாக பிறந்தவள் நான். சிறு வயது முதலே, ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதற்காக, கன்னியாஸ்திரியாக மாறினேன்.அதற்காக, முறையான பயிற்சிகள் பெற்று, 20 வயதில் கன்னியாஸ்திரி ஆனேன்; இப்போது வயது, 54. கர்த்தருக்கு பயந்த, நேர்மையான கன்னியாஸ்திரியாக இருக்கிறேன்; ஆசிரியையாகவும் பணியாற்றுகிறேன்.நான் மிகவும் வெகுளியாக இருந்த காலத்தில், கிறிஸ்துவ சபைகளில், கன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் இருக்காது என, நினைத்தேன். ஆனால், காலப் போக்கில், கன்னியாஸ்திரிகள் மீது நடத்தப்படும் பாலியல் பலாத்காரங்கள், அத்துமீறல்கள், வன்முறைகள் குறித்து…

Read More

34 பாதிரியார்கள், 175 குழந்தைகளிடம் அத்துமீறி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல்

34 பாதிரியார்கள், 175 குழந்தைகளிடம் அத்துமீறி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல்

வடஅமெரிக்க நாடான மெக்சிகோவில் உள்ள ரோமன் கத்தோலிக்க சர்ச்சில், 1941ல் இருந்து பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்ததாக கூறப்பட்டுள்ள புகார் தொடர்பாக விசாரிக்கப்பட்டது. அதில், 175 குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளானது தெரியவந்துள்ளது. அந்த சர்ச்சை உருவாக்கிய மார்சியல் மேசியல் என்ற பாதிரியார் மட்டும், 60 குழந்தைகளிடம் அத்துமீறி நடந்துள்ளார். அவரைத் தவிர மேலும் 33 பாதிரியார்களும் இந்தக் கொடூரத்தில் ஈடுபட்டுள்ளனர். பல ஆண்டுகள் பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட பாதிரியார் மேசியலை, போப் பதினாறாம் பெனடிக், கடந்த 2006ம் ஆண்டு ஓய்வு பெற உத்தரவிட்டார். குற்றச்சாட்டுகளை எதிர் கொள்ளாமலேயே மேசியல் கடந்த 2008ம் ஆண்டு மறைந்தார்.

Read More

நித்தியானந்தாவிற்கு போட்டியாக இப்போது ‛‛சீமானந்தா” !!

நித்தியானந்தாவிற்கு போட்டியாக இப்போது  ‛‛சீமானந்தா” !!

நித்தியானந்தாவுக்கு போட்டியாக ஸ்ரீஸ்ரீசீமானந்தாவாக மாறி ஆசிரமம் அமைக்க போவதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது வைரலாகி உள்ளது. எவ்வளவு விமர்சனங்கள், சர்ச்சைகள் வந்தாலும் அசராத சாமியார் நித்தியானந்தா கூலாக தன் யூடியூப் சேனலில் அவ்வபோது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதற்கிடையே தனித்தீவு ஒன்றை வாங்கி ஹிந்துக்களுக்கு என ‘கைலாசா’ என்ற நாட்டை உருவாக்கி வருவதாகவும் கூறி ஆச்சரியப்படுத்தினார். இதற்கென தனி இணையதளமும் உருவாக்கி அதில், 10 துறைகள் உள்ளடக்கிய கைலாசா நாட்டிற்கு நித்தியானந்தா தான் பிரதமர் எனவும் குறிப்பிட்டப்பட்டார். அத்துடன் நிற்காமல் கைலாசாவில் குடியுரிமை கேட்டு 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், கைலாசாவை அமைத்தே தீருவேன் எனவும் தெரிவித்தார். பல்வேறு புகார்களில் தலைமறைவாக உள்ள…

Read More

நித்யானந்தா ‘குஷி’ – கைலாசா செல்ல 40 லட்சம் பேர் ரெடி

நித்யானந்தா ‘குஷி’ – கைலாசா செல்ல 40 லட்சம் பேர் ரெடி

கைலாசாவில் குடியுரிமை கேட்டு 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், கைலாசாவை அமைத்தே தீருவேன் எனவும் நித்யானந்தா தெரிவித்துள்ளார். பல்வேறு புகார்களை அடுத்து சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா தலைமறைவாக உள்ளார். ஆனாலும் அவர், சமூக வலைதளம் மூலம் பக்தர்களுக்கு சமூக சொற்பொழிவு ஆற்றி வருகிறார். தன் மீதான குற்றச்சாட்டுகளை கேலி செய்யும் அவர், கைலாசா என்ற நாட்டை அமைக்க போவதாக கூறி வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளம் மூலம் நித்யானந்தா ஆற்றிய சொற்பொழிவில் கூறியதாவது: கடந்த 2003 ம் ஆண்டு முதல் நான் சந்திக்காத குற்றப்பிரிவுகளே இல்லை. என் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளிலும் நான் நிரபராதி என நிரூபித்துள்ளேன். ஆன்மிக துறையில் என்றோ நான் தலைவனாகிவிட்டேன். கைலாசாவில்…

Read More

ஆசியாவின் திருமதி அழகி பட்டத்தை வென்ற இலங்கை பெண்

ஆசியாவின் திருமதி அழகி பட்டத்தை வென்ற இலங்கை பெண்

2019 ஆசிய திருமதி அழகியாக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட சமந்திகா குமாரசிங்க தெரிவாகியுள்ளார். மியான்மரில் நேற்றைய தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியிலேயே அவர் இந்த கிரீடத்தை தனதாக்கிக் கொண்டதாக மிஷிஸ் ஏசியா இன்டர்நெஷனல் அமைப்பின் இலங்கை தேசிய பணப்பாளர் சமந்த குணசேகர பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். 21 நாடுகளை சேர்ந்தோர் இம்முறை போட்டியில் போட்டியிட்டுள்ளனர். வெயங்கொடை பகுதியைச் சேர்ந்த 38 வயதானவரே சமந்திகா குமாரசிங்க, ஒரு பிள்ளையின் தாயாவார். 2006ஆம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றிற்காக அழகு கலை கலைஞராக முதல் முதலில் இந்த துறைக்குள் சமந்திகா குமாரசிங்க பிரவேசித்தார். அதனைத் தொடர்ந்து, இலங்கையின் பல முன்னணி விளம்பரங்களிலும் அவர் நடித்துள்ளார். விளம்பரங்கள் மாத்திரமன்றி சில தொலைக்காட்சி…

Read More

எனக்கு எய்ட்ஸ் உங்கள் மகளுக்கு வேண்டுமா? கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் கிரண் குமார்

எனக்கு எய்ட்ஸ் உங்கள் மகளுக்கு வேண்டுமா? கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் கிரண் குமார்

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் கிரண் குமார் (வயது 30) இவர் அமெரிக்காவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் பெங்களூரை சேர்ந்த பெண்ணிற்கு திருமணம் ஏற்பாடு நடைபெற்றது. கடந்த ஜூன் மாதம் இருவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில், டிசம்பர் 1-ம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில்,  தன்னுடைய பெயருக்கு களங்கம் வந்தாலும் பரவாயில்லை என, பெண் வீட்டாருக்கு போன் செய்து தனக்கு எய்ட்ஸ் இருக்கிறது. என்னை உங்கள் வீட்டு பெண் திருமணம் செய்து கொண்டால் அவளுக்குத்தான் பாதிப்பு என்று சொல்லி விட்டார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மணமகள் குடும்பத்தார் பெண் பார்க்கும்போதே சொல்லி இருந்தால் எந்த…

Read More
1 53 54 55 56 57 77