விராட் கோலியின் இளம்படியுடன் இந்தியா டி20 கிரிக்கெட் தொடரை வென்றது – 5 முக்கிய காரணங்கள்

விராட் கோலியின் இளம்படியுடன் இந்தியா டி20 கிரிக்கெட் தொடரை வென்றது – 5 முக்கிய காரணங்கள்

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா தொடரை 2-1 என வென்றது. புதன்கிழமை மும்பையில் நடைபெற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா அதிரடி ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 240 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் மட்டுமே எடுக்க, போட்டியையும், தொடரையும் இந்தியா வென்றது. கே. எல். ராகுல் ஆட்டநாயகனாகவும், விராட் கோலி தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர். இந்த போட்டியையும், தொடரையும் இந்தியா வெல்ல 5 முக்கிய…

Read More

வங்காளதேசத்திற்கு எதிரான 2வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி

வங்காளதேசத்திற்கு எதிரான 2வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டெல்லியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் வங்காளதேச அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி, வங்காளதேச அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் விக்கெட்டுக்கு அந்த ஜோடி…

Read More

‘சகோ… இந்தத தொடரில் ஏதாவது இருக்கிறதா? என ஷகிப் அல் ஹசனுடன் புக்கி பேசிய உரையாடல்

‘சகோ… இந்தத தொடரில் ஏதாவது இருக்கிறதா? என ஷகிப் அல் ஹசனுடன் புக்கி பேசிய உரையாடல்

வங்காள தேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் (வயது 32), வங்காளதேச கிரிக்கெட் வாரிய விதிகளை மீறி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் விளம்பர தூதராக ஒப்பந்தம் மேற்கொண்டதால், அவருக்கு வங்காளதேச கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியது. கடந்த இரு நாட்களாக வங்காளதேச அணியினர் மேற்கொள்ளும் பயிற்சியிலும் ஷகிப் அல் ஹசன் பங்கேற்கவில்லை. அவருக்கு தடை விதிக்கப்பட்டால், மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹ்மான் அணியில் சேர்க்கப்படுவார் என கூறப்பட்டது. இந்நிலையில், அவரை இடைத்தரகர்கள் அணுகியது பற்றி உரிய தகவல் தெரிவிக்கவில்லை என கூறி ஒரு வருட முழு தடை மற்றும் 12 மாத கால தற்காலிக நீக்கம் ஆகியவற்றை ஐ.சி.சி. விதித்துள்ளது. இதனால் அவர்…

Read More

மயங்க் அகர்வால் முதல் இரட்டை சதம் – ரோகித் சர்மா 176 ரன்கள்

மயங்க் அகர்வால் முதல் இரட்டை சதம் – ரோகித் சர்மா 176 ரன்கள்

விசாகப்பட்டினத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் இரட்டை சதமடித்துளார். இவருடன் மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மாவும் ஆட்டமிழக்கும் முன் 176 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளை முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 450 ரன்கள் எடுத்து விளையாடிவருகிறது. தொடக்க வீரராக முதல்முறையாக களமிறங்கி அசத்திய ரோகித் சர்மா – 5 முக்கிய அம்சங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் மயங்க் அகர்வாலுக்கு இது வெறும் எட்டாவது இன்னிங்க்ஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுதான் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அவரைப்…

Read More

முதல் டெஸ்ட் போட்டி: ரோகித் சதம் விளாசல்; இந்திய அணி 179/0 (54.0 ஓவர்கள்)

முதல் டெஸ்ட் போட்டி: ரோகித் சதம் விளாசல்; இந்திய அணி 179/0 (54.0 ஓவர்கள்)

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான முதல் டெஸ்ட் ஆட்டம் விசாகப்பட்டினம் நகரில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தது. இதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் விளையாட தொடங்கினர். இதில் உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 91 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா (5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள்) 84 பந்துகளில் அரை சதம் பூர்த்தி செய்துள்ளார். இதன்பின் இந்திய அணி 35.3 ஓவர்களில் 100 ரன்களும் 47.5 ஓவர்களில் 150 ரன்களும் எடுத்திருந்தது. இந்நிலையில்,…

Read More

IND Vs SA: சமனில் முடிந்த தென்னாப்பிரிக்கா டி20 தொடர்

IND Vs SA: சமனில் முடிந்த தென்னாப்பிரிக்கா டி20 தொடர்

இந்திய – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே ஞாயிறன்று பெங்களூருவில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதன் மூலம், 1-1 என்ற கணக்கில் இந்த தொடர் சமனில் முடிவடைந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் – ரோகித் சர்மா இணை வந்த வேகத்தில் பிரிந்தது. தென்னாப்பிரிக்க வீரர் ரீஜாவின் பந்துவீச்சில் பியூரனிடம் கேட்ச் கொடுத்து ஒன்பது ரன்களில் ரோகித் ஆட்டமிழந்து அணிக்கு ஏமாற்றமளித்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கோலி, ஷ்ரேயாஸ், குர்ணால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர்…

Read More

கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீதான புகாரில் தற்போதைய நிலையில் நடவடிக்கை எடுக்க முடியாது: பிசிசிஐ

கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீதான புகாரில் தற்போதைய நிலையில் நடவடிக்கை எடுக்க முடியாது: பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு எதிராக அவர் மனைவி கொடுத்த புகாரில் அவருக்கு எதிராக கைது வாரண்ட் தரப்பட்டுள்ளது. அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. பிற பெண்களோடு தொடர்பு, உடல் மற்றும் மனரீதியிலான துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவரது மனைவி ஹாசின் ஜஹான் வைத்ததை அடுத்து ஷமி மீது 2018 மார்ச் மாதம் வழக்குத் தொடரப்பட்டது. தற்போது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் 15 நாள்களுக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகி பிணை பெற்றுக்கொள்ளலாம். இந்திய கிரிக்கெட் அணியின் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப் பயணம் திங்கள்கிழமை முடிவுக்கு வந்தது….

Read More

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று பி.வி.சிந்து சாதனை

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று பி.வி.சிந்து சாதனை

ஜப்பானை சேர்ந்த நசோமி ஒகுஹாராவை 21-7, 21-7 என்ற கணக்கில் வீழ்த்தி உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் பி.வி. சிந்து. “இந்த பதக்கத்தை இன்று பிறந்தநாள் கொண்டாடும் எனது அம்மாவிற்கு சமர்ப்பிக்கிறேன்” என பதக்கம் வென்றபின் சிந்து தெரிவித்தார். இதன் மூலம், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றுள்ளார் பி.வி. சிந்து. 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் உலகின் முன்னிலை ஆட்டக்காரரும் ஸ்பெயின் வீராங்கனையுமான கரோலின் மெரினுக்கு எதிராக 3 செட்களில் இறுதி வரை போராடிய இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதியில்…

Read More

ஆடைகளின்றி விக்கெட் கீப்பிங் : பிரபல கிரிக்கெட் வீராங்கனை வெளியிட்ட புகைப்படம்

ஆடைகளின்றி விக்கெட் கீப்பிங் : பிரபல கிரிக்கெட் வீராங்கனை வெளியிட்ட புகைப்படம்

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை சாரா டெய்லர் பேட்டிங் மட்டுமல்லாது சிறந்த விக்கெட் கீப்பரும் ஆவார். ஆனால், சில பிரச்சினைகள் காரணமாக, சமீப காலங்களில் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. 2006 ஆம் ஆண்டு, இந்தியாவுக்கு எதிரான T-20 போட்டியில் அறிமுகமானார். இதுவரை இவர் இங்கிலாந்து அணிக்காக 10 டெஸ்ட் (300 ரன்கள்), 126 ஒருநாள் (4056 ரன்கள்) 90 டி-20 (2177 ரன்கள்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், மன அழுத்தம் மற்றும் கவலைகளில் இருந்து எவ்வாறு வெளிவர வேண்டும் என்று விழிப்புணர்வு பரப்பி வரும் இதழ் ஒன்றுக்கு இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை சாரா டைலர் போட்டோ ஒன்றை அனுப்பி உள்ளார்….

Read More

ராணுவ உடையில் எம்.எஸ். டோனி

ராணுவ உடையில் எம்.எஸ். டோனி

இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். டோனி காஷ்மீரில் ராணுவப் பணியில் ஈடுபட்டுள்ளார். கிரிக்கெட்டிலிருந்து இருமாத காலம் ஓய்வு பெற்றுள்ள டோனி ராணுவத்தில் பணியாற்ற அனுமதி பெற்று அதற்கான பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார். செவ்வாயன்று காஷ்மீரில் ராணுவப்படையில் சேர்ந்த அவர், ராணுவ சீருடையில் அவர் கிரிக்கெட் மட்டையில் கையெழுத்திடும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தெற்குக் காஷ்மீரில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ராணுவப் படையினருடன் டோனி பணியாற்றி வருகிறார். வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் வரை பணியாற்றுவார் என்று தெரிகிறது.

Read More
1 2 3 4 5 15