பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரண்டாவது முறையாக கனடா பிரதமராகிறார்

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரண்டாவது முறையாக கனடா பிரதமராகிறார்

கனடாவின் 43ஆவது மக்களவை பொதுத் தேர்தலின் முடிவுகள் வெளிவர தொடங்கிய நிலையில், அந்நாட்டின் தேசிய ஊடகமான சிபிசி ஊடகத்தின் கணிப்பின்படி அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரண்டாவது முறையாக பிரதமராக வெல்லக்கூடும் என்ற நிலையில், அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. லிப்ரல் கட்சியின் ஆதரவாளர்கள் இதனை விமரிசையாக கொண்டாட தொடங்கியுள்ளனர். நிலப்பரப்பில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடாக விளங்கும் கனடாவில் நடந்த மக்களவை தேர்தல் முடிவுகளை உலகம் உன்னிப்பாக கவனித்துவரும் வேளையில், மீண்டும் ஜஸ்டின் ட்ரூடோ வென்றால் அது சிறுபான்மை ஆட்சியாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் முடிவுகள், ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு சாதகமாக வருவதை அறிந்தவுடன், மத்திய கனடாவில்…

Read More

நீண்ட தூரம் பயணிக்கும் விமானம்: குவாண்டாஸ் நிறுவனத்தின் உலக சாதனைப் பயணம்

நீண்ட தூரம் பயணிக்கும் விமானம்: குவாண்டாஸ் நிறுவனத்தின் உலக சாதனைப் பயணம்

ஆஸ்திரேலியாவின் கேரியர் குவாண்டாஸ் விமான போக்குவரத்து சேவை இடைவிடாது மிக நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகள் விமானத்தின் சோதனையை முடித்துள்ளது. இந்த சோதனையில் பயணிகள், விமான ஓட்டுனர்கள்,மற்றும் பணியாளர்களின் பயணம் எந்த விதத்தில் பாதிக்கிறது என்பது குறித்து கண்டறியப்பட்டுள்ளது. போயிங் 787-9 ரக விமானம் 49 பயணிகளுடன் 19 மணிநேரம் 16 நிமிடங்கள் நியூயார்கில் இருந்து சிட்னி வரை 16,200 கிலோ மீட்டர் தூரம் பயணித்துள்ளது. அடுத்த மாதம் இதே நிறுவனம் லண்டனில் இருந்து சிட்னி வரை இடைவிடாமல் விமானத்தை இயக்கும் சோதனையில் ஈடுபடவுள்ளது. 2019 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இடைவிடாது இயங்கும் விமான சேவையை துவங்குவது குறித்து குவாண்டாஸ் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது….

Read More

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 7 சதவீதமாக உயரும் – பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 7 சதவீதமாக உயரும் – பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத்

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும் என ஏற்கனவே ஐஎம்எஃப் கூறியிருந்தது. தற்போதுள்ள மந்தநிலை சுழற்சி முறையில் ஏற்படக் கூடியதுதான். இந்தியாவில் பல துறைகள் பாதிக்கப்பட்டிருப்பதால், பொருளாதார வளர்ச்சி விகித முன்கணிப்பை 6.1 சதவீதமாகக் குறைத்துள்ளது. ஊரக வருவாய் வளர்ச்சி பலவீனமாக உள்ளதோடு, வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட் துறைகளில் பாதிப்புகள் உள்ளன. இந்த காரணிகள் முதலீடு, நுகர்வு ஆகிய இரு அம்சங்களிலும் உள்நாட்டு பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அரசு அறிவித்த கார்ப்பரேட் வரி விகித குறைப்பு மற்றும் பல்வேறு கொள்கை முடிவுகள் சரியான திசையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று கூறியுள்ளார்.

Read More

கணவனை ரூ.5 லட்சத்திற்கு விற்ற மனைவி ! !

கணவனை ரூ.5 லட்சத்திற்கு விற்ற மனைவி ! !

கர்நாடக மாநிலம் மாண்டியா அருகே கணவரை மனைவி வேறொரு பெண்ணிடம் விற்ற சம்பவம் நடந்துள்ளது. சில ஆண்டுகளாகவே கணவர் தனது வீட்டை விட்டு வெளியேறி, அந்த பெண்ணுடன் வசித்து வந்துள்ளார். இது தெரிந்திருந்தும் மனைவி அடிக்கடி சென்று கண்டித்து வந்துள்ளார். மேலும், தன்னுடன் வந்துவிடுமாறும் கணவரை கேட்டுள்ளார். முதலில் இந்த ஆஃபரை ஏற்றுக்கொள்ளாத மனைவி, பின்னர் தொகையை உயர்த்தியுள்ளார். ரூ.17 லட்சம் தொடங்கி பேரம் நடந்து ஒருவழியாக ரூ.5 லட்சத்தில் பேரம் முடிந்துள்ளது. கணவரை திரும்ப அழைத்து தொந்தரவு செய்ய மாட்டேன் என்று அந்தப் பெண்ணிடம் மனைவி கூறியுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மனைவியான அந்த பெண்ணுக்கு கடன் இருப்பதை…

Read More

சென்சார் என்ற பெயரில் உண்மையை மறைக்க சீன அரசின் கையாளாக டிக்டாக் – பேஸ்புக்

சென்சார் என்ற பெயரில் உண்மையை மறைக்க சீன அரசின் கையாளாக டிக்டாக் – பேஸ்புக்

சென்சார் என்ற பெயரில் உண்மையை மறைக்க சீன அரசின் கையாளாக டிக்டாக் பணியாற்றுகிறது என பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க் விமர்சித்துள்ளார். சீனாவை சேர்ந்த டிக்டாக் செயலியை பல்வேறு தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் மட்டுமல்லாது அமெரிக்காவிலும் பிரபலமடைந்து வருகிறது. இதில் சிலர் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கில் கலாசாரத்தை கேள்விகுறியாக்கும் வகையிலும், ஆபாசமாகவும் வீடியோ பதிவிட்டு சர்ச்சையில் சிக்குகின்றனர். அதே நேரத்தில் அரசியல், பொதுமக்கள் போராட்டங்கள், அரசுக்கு எதிரான விமர்சனங்கள் என அனைத்தையும் டிக்டாக் செயலி, சென்சார் செய்துவிடுவதால் அவ்வாறான பதிவுகளை வெளியிட முடிவதில்லை எனக் கூறப்படுகிறது. உதாரணமாக ஹாங்காங் போராட்டம் குறித்து ஒரு சிறு வரி கூட டிக்டாக்…

Read More

பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையில் ஒரு புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம்

பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையில் ஒரு புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், “நம்மிடம் மீண்டும் கட்டுப்பாடு வரும் வகையில் ஒரு புதிய ஒப்பந்தம் கிடைத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ஒப்பந்தத்திற்கான சட்ட ஆவணங்கள் தயாரிக்கும் பணியை இரு தரப்பும் செய்து வருகிறது. எனினும், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றங்களின் ஒப்புதல் இதற்கு வேண்டும். பிரதான எதிர்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பின் இதுதொடர்பாக கூறுகையில், முன்னாள் பிரதமர் தெரீசா மே கலந்து பேசி முடிவெடுத்த ஒப்பந்தத்தைவிட இது மிகவும் மோசமானது என்று தெரிவித்தார். இதனை எம்பிக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இது வெற்றி பெறுமா என்பது சந்தேகம்தான் என்று கூறும் ஐக்கிய ஜனநாயக கட்சி, இதற்கு ஆதரவளிக்க முடியாது என்று கூறுகிறது….

Read More

துருக்கி ‘ஒருபோதும் போர் நிறுத்தத்தை அறிவிக்காது’ -அதிபர் எர்டோகன்

துருக்கி ‘ஒருபோதும் போர் நிறுத்தத்தை அறிவிக்காது’ -அதிபர் எர்டோகன்

துருக்கியின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. போர் நடவடிக்கைகளை நிறுத்தாவிடில், துருக்கியின் பொருளாதாரம் முற்றிலும் அழிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்தார். ஆனால் எதற்கும் அஞ்சப்போவதில்லை என்றும், சிரியாவில் குர்து போராளிகள் மீதான போர் நடவடிக்கைகளை நிறுத்தப்போவதில்லை என்றும் துருக்கி அரசு தெரிவித்தது. வடகிழக்கு சிரியாவில் குர்திஷ் போராளிகளுக்கு எதிராக துருக்கி ஒன்பதாவது நாளாக தனது இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அங்கு தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப், துருக்கி பிரதமர் எர்டோகனுக்கு கடந்த 9-ம் தேதி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை நேற்று வெள்ளை மாளிகை வெளியிட்டது. ஆனால் டிரம்ப் எழுதிய கடிதம்…

Read More

பிப்ரவரி 2020 வரை நிதி கண்காணிப்புக் குழுவின் கறுப்பு பட்டியலில் பாகிஸ்தான் இருக்கும்

பிப்ரவரி 2020 வரை நிதி கண்காணிப்புக் குழுவின் கறுப்பு பட்டியலில் பாகிஸ்தான் இருக்கும்

பணமோசடி, பயங்கரவாத குழுக்களுக்கு  நிதியுதவி அளிப்பது  மற்றும் சர்வதேச நிதி அமைப்பிற்கான பிற அச்சுறுத்தல்களை எதிர்த்து 1989 ஆம் ஆண்டில்  நிறுவப்பட்ட ஒரு அமைப்பு  நிதி கண்காணிப்புக் குழு (எஃப்ஏடிஎஃப்)  ஆகும். இந்த அமைப்பு பாரீசை தலைமை இடமாக கொண்டு இயங்கி வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த நிதி கண்காணிப்புக் குழுவால் பாகிஸ்தான் கறுப்பு  பட்டியலில் இடம்பிடித்தது. பயங்கரவாதிகளுக்கு  நிதி வழங்குவது  மற்றும் பணமோசடிகளை முற்றிலுமாக நிறுத்தும் நடவடிக்கைகளை  2019 அக்டோபருக்குள் நிறுத்த வேண்டும். இல்லை என்றால்  ஈரான் மற்றும் வட கொரியாவுடன் கறுப்புப் பட்டியலில் இடம் பெறும் அபாயத்தை எதிர்கொள்ளும் என நித அமைப்பு பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்த…

Read More

துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை – டிரம்ப் அதிரடி

துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை – டிரம்ப் அதிரடி

சிரியாவின் குர்தீஷ் படைகள் மீது தாக்குதல் நடத்தியதற்காக, துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அந்நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க தயாராக உள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். சிரியாவின் வடக்குப் பகுதியில் அமெரிக்கப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து அங்கு குர்தீஷ் படையினர் மீது துருக்கி போர் தொடுத்துள்ளது. குர்தீஷ் படையினர் கட்டுப்பாட்டில் இருந்தது ரக்கா நகருக்கு அருகே உள்ள அய்ன் இஸ்ஸா என்ற இடத்தில் ஏராளமான ஐஎஸ் பயங்கரவாதிகள் சிறைவைக்கப்பட்டிருந்தனர். அந்த பகுதியில் துருக்கியின் தாக்குதலைத் தொடர்ந்து இந்த முகாமில் இருந்த ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்த ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என 800க்கும் மேற்பட்ட ஐஎஸ் பயங்கரவாதிகள் தப்பிச் சென்று விட்டதாக குர்தீஷ் நிர்வாகம் தெரிவித்துள்ளது….

Read More

மலேசியாவில் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் கைது

மலேசியாவில் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் கைது

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை இந்தியாவைச் சேர்ந்த மத போதகர் ஜாகிர் நாயக்கை மையப்படுத்தி உருவான சர்ச்சை குறித்தே மலேசியாவில் பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்த சர்ச்சையைப் பின்னுக்குத் தள்ளும் வகையில் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது. மலேசியாவில் மட்டுமல்லாமல், உலகத் தமிழர்கள் மத்தியிலும் இது பரபரப்பையும் புதிய விவாதங்களையும் ஏற்படுத்தி உள்ளது. ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் எனும் கோரிக்கையைப் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். அதனை திசைதிரும்பும் வகையிலேயே இந்த புதிய விவகாரம் திட்டமிட்டு எழுப்பப்பட்டுள்ளதாக சிலர் மலேசிய அரசை மறைமுகமாக விமர்சிக்கின்றனர். இந்நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு புத்துயிரூட்டும் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில்…

Read More
1 156 157 158 159 160 256