தாயகத்தில் தவிக்கும் எமது மூத்தோர்களான பெரியோர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கிய MSS அறக்கட்டளை

தாயகத்தில் தவிக்கும் எமது மூத்தோர்களான பெரியோர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கிய MSS அறக்கட்டளை

யாழ் குடாநாட்டின் கைதடி அரச முதியோர் இல்லத்திற்கான அவசர மருந்துப்பொருட்கள ஆளுளுஅறக்கட்டளையினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.இந்த முதியோர் இல்லத்திற்கு அவசரமாக பல மருந்துகள் இல்லாது பல நோயாளர்கள் அவதியுறுவதாகவும் அந்த மருந்துப்பொருட்களை தந்துதவுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனை ஏற்று யாழ் பல்கலைக்கழக முன்னைநாள் பேராசிரியர் குகபாலன் அவர்கள் முன்னின்று ஒரு தொகுதி மருந்துப்பொருட்களை கொள்வனவு செய்து இன்றைய தினம் பொறுப்பதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். இந்த நிகழ்வில் வடமாகாண சமூக சேவை பிரதிப்பணிப்பாளர் திருமதி. வனஜா செல்வரட்ணம், வைத்திய கலாநிதி அருள்நேசன் ஆகியோர் பங்குபற்றிச் சிறப்பித்ததுடன் ஒரு தொகுதி மருந்துப்பொருட்களை முதியோர் இல்லம் சார்பாக பெற்றுக்கொண்டார்கள். அறக்கட்டளையின் சார்பாக ஆளுளு இலங்கை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் குகபாலன், உதவி ஒருங்கிணைப்பாளர் சந்திரா…

Read More

உரிமையாளர் குடும்பத்தினை காப்பாற்ற நாகபாம்புடன் சண்டையிட்ட வளர்ப்பு நாய் உயிரிழப்பு

உரிமையாளர் குடும்பத்தினை காப்பாற்ற நாகபாம்புடன் சண்டையிட்ட வளர்ப்பு நாய் உயிரிழப்பு

குர்டா நகரில் ஜாத்னி என்ற பகுதியை சேர்ந்தவர் அமன் ஷெரீப்.  இவர் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் ஒன்றாக வசித்து வருகிறார்.  தனது வீட்டில் டைசன் என பெயரிட்ட ஒன்றரை வயது கொண்ட டால்மேசியன் வகை நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நாயானது இரவில் தொடர்ந்து குரைத்துள்ளது.  இதனால் ஷெரீப் ஓடி சென்று என்னவென்று கவனித்துள்ளார்.  அவர்கள் வீட்டு வாசலில் நாகபாம்பு ஒன்று இறந்து கிடந்துள்ளது.  அதன் அருகில் நின்றிருந்த டைசன் ஒரு சில நிமிடங்களில் சரிந்து விழுந்துள்ளது.  அதனை பரிசோதித்த ஷெரீப் வாலிலும் முகத்திலும் நாகபாம்பு கடித்த காயத்தினை கண்டுள்ளார். அவர் உடனடியாக கால்நடை மருத்துவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.  ஆனால் அங்கு யாரும்…

Read More

மன்னார் மாவட்ட சர்வமத பேரவையிலிருந்து இந்து குருமார் சங்கம் வெளியேறியது

மன்னார் மாவட்ட சர்வமத பேரவையிலிருந்து இந்து குருமார் சங்கம் வெளியேறியது

திருக்கேதீஸ்வரம் ஆலய வரவேற்பு அலங்கார பலகையை தற்காலிகமாக மீள அமைப்பதற்கு மன்னார் மாவட்ட நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். மன்னார் போலீசார் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே, மன்னார் நீதவான் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார். இதன்படி, திருக்கேதீஸ்வரம் ஆலய நுழைவாயிலில் நான்கு நாள்களுக்குள் இந்த அலங்காரப் பலகையை தற்காலிகமாக அமைக்கும்படி நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தை அடுத்து, மன்னார் மாவட்ட சர்வமத பேரவையிலிருந்து, இந்து குருமார் சங்கம் வெளியேறியது. திருக்கேதீஸ்வரம் ஆலயத்தை அடுத்துள்ள பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார வரவேற்புப் பலகை, சேதமாக்கப்பட்ட சம்பவத்தை கண்டிக்கும் வகையிலேயே இந்து குருமார்கள் சங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது. சர்வமத பேரவையில் தமக்கான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காத நிலையிலேயே, தாம் இந்த தீர்மானத்தை…

Read More

இந்தியாவுக்கு வழங்கப்பட்ட 42 ஆண்டுகால வர்த்தக சலுகை ரத்து – டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

இந்தியாவுக்கு வழங்கப்பட்ட 42 ஆண்டுகால வர்த்தக சலுகை ரத்து – டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு சுங்கவரி விதிப்பின்றி பல பில்லியன்கணக்கான அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்யும் திட்டத்தை நிறுத்துவதற்கு உத்தேசித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதால் இந்தியா மீது அந்நாட்டு அதிபர் கோபம் கொண்டுள்ளார். மேலும் இந்தியாவின் சிறப்பு வர்த்தக நாடு என்ற அந்தஸ்தையும் அவர் ரத்து செய்ய முடிவு செய்துள்ளார். அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் மதுபானங்கள், ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு இந்தியா 100 முதல் 150 சதவீதம் வரை கடுமையான வரி விதிப்பதாக அண்மையில் டிரம்ப் புகார் கூறியிருந்தார். இருநாடுகள் இடையில் இறக்குமதி, ஏற்றுமதி வரி வேறுபாட்டால்…

Read More

அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் சூறாவளி தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 23 ஆக உயர்வு

அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் சூறாவளி தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 23 ஆக உயர்வு

அமெரிக்காவின் தென்கிழக்கு அலபாமாவில் கடுமையான சூறாவளி காற்று வீசியது. மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் காற்று வீசியது. பேரிடர் நிவாரண படையினர் உடனடியாக அங்கு சென்று தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூறாவளியானது ஜார்ஜியா, தெற்கு கரோலினா மற்றும் புளோரிடா ஆகிய நகரங்களிலும் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது. இதில் 14 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியான நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் குழந்தைகளும் உள்ளனர். பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. படுகாயமடைந்த பலர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்….

Read More

ஈஷா மைய சிவராத்திரி விழா; உற்சாக கொண்டாட்டம்

ஈஷா மைய சிவராத்திரி விழா; உற்சாக கொண்டாட்டம்

கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழா கொண்டாட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். ஆடல், பாடல் என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. மக்கள் திரளாக பங்கேற்று விடிய, விடிய கொண்டாடினர். ஈஷா யோகா மையத்தில், மஹா சிவராத்திரி விழா, இன்று (4 ம் தேதி ) மாலை, 6:00 மணிக்கு துவங்கியது; காலை, 6:00 மணி வரை நடக்கிறது. விழாவில் ஜனாதிபரதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முதல் நிகழ்வாக லிங்க பைரவி கோவிலில், தீபாராதனை நடந்த பின், காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த, 40 ராணுவ வீரர்களின் நினைவாக, ஜனாதிபதி மற்றும் சத்குரு இருவரும் இணைந்து ஈஷா…

Read More

இரவு இந்திய மணி 9.17 க்கு இந்திய மண்ணை தொட்டார் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன்

இரவு இந்திய மணி 9.17 க்கு இந்திய மண்ணை தொட்டார் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன்

இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் இன்று(மார்ச் 1) இரவு 9.17 மணிக்கு ஒப்படைக்கப்பட்டார். அவரை ராணுவம் மற்றும் விமானப்படை அதிகாரிகள் வரவேற்று அழைத்து சென்றனர். இந்தியாவிடம் அபிநந்தனை ஒப்படைப்பதில், பாகிஸ்தான் இருமுறை காலதாமதம் செய்து இரவில் தான் ஒப்படைத்தது. ஜம்மு – காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானின், பாலகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம் மீது, இந்திய விமான படை தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, பாகிஸ்தான் போர் விமானங்கள், நேற்று முன்தினம், இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சித்தன. பாக்., விமானங்களை விரட்டிச் சென்ற, இந்திய விமானப்படையின், ‘மிக் – 21’ ரக விமானம், பாக்.,எல்லைக்குள் விழுந்தது….

Read More

தற்கால நவீன மருத்துவம் நோயாளருக்கு வரப்பிரசாதம் என்பதே உண்மை

தற்கால நவீன மருத்துவம் நோயாளருக்கு வரப்பிரசாதம் என்பதே உண்மை

இன்றைய காலகட்டத்தில் நவீன தொழில்நுட்பம் கொடிகட்டிப் பறக்கிறது. இதனால் தற்போது அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளரை பரிசோதனைக்கு உட்படுத்த அதிதொழில்நுட்பம் பொருந்திய மருத்துவ சாதனங்கள் உள்ளன. ஆனாலும் உலக மக்களை அச்சுறுத்தும் தொற்று நோய்கள், தொற்றா நோய்கள் இன்னும் இருந்து கொண்டே இருக்கின்றன. 1987ம் ஆண்டு அமெரிக்காவில் எய்ட்ஸ் நோய் உள்ளவர்கள் இனங்காணப்பட்டனர். அதே ஆண்டில் ஐரோப்பாவிலும் இந்த நோய் பரவியுள்ளமை தெரியவந்தது. எவ்வாறாயினும் இந்நோய் முதன் முதலில் உகண்டா, எதியோப்பியா, சோமாலியா போன்ற நாடுகளில்தான் தோன்றியது எனக் கண்டறியப்பட்டுள்ளது. விசேடமாக நகர்ப்புறங்களில் இயங்கும் விபசார விடுகளுக்குச் செல்பவர்கள் எச்.ஐ.வி வைரஸ் தாக்கத்துக்குள்ளாகின்றனர் எனலாம். ஆட்கொல்லி நோயான எய்ட்ஸை முழுமையாக இல்லாவிட்டாலும் அது பரவும்…

Read More

மனிதத்தைத் தங்கள் மனங்களிலிருந்து அகற்றி விட்ட தமிழ் மணணின் மைந்தர்கள்

மனிதத்தைத் தங்கள் மனங்களிலிருந்து அகற்றி விட்ட தமிழ் மணணின்  மைந்தர்கள்

தமிழ் மொழியும் தமிழர்களின் கலாச்சாரமும் பண்பாடும் உலக நாடுகளில் போற்றிக் கொண்டாடப்படுகின்றது. அந்தக் கொண்டாட்டங்களுக்காக கனடாவில் மத்திய மாநில அரசுகள் நிதி உதவிகள் வழங்குகின்றன. எமது மொழியை கொண்டாடவும் எமது கலைகளை மேடையேற்றவும் சுதந்த்pரமாகவும் உரத்தும் எங்கள்; மொழியில் பேசவும் பாடவும் இங்கே வெளிப்படையான அங்கீகாரம் உண்டு. ஆனால் எமது பிறப்பிடமாகக் கருதப்படுகின்றன வடக்கு என்னும் தமிழர் பூமியில் மனிதம் தொலைந்து விட்டதாலும் அங்கு வாழும் பலர் தங்கள் மனங்களிலிருந்து மனிதம் என்னும் பண்பாட்டுப் போர்வையை எடுத்து தெருவில் வீசிவிட்டதாலும் அங்கு வாழும் ஒரு பூவுள்ளம் (பெண்) எவ்வாறு அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கின்றது என்பதை அந்த பெண் மனம் அழுதபயும் கொதி;க்கும் உள்ளத்துடனும்…

Read More

அமெரிக்காவின் சிக்காக்கோ மாநகரில் ஜூலை மாதம் நடைபெறவுள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாடு!!!

அமெரிக்காவின் சிக்காக்கோ மாநகரில்  ஜூலை மாதம் நடைபெறவுள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாடு!!!

பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு எதிர்வரும் ஜூலை மாதம் 6ம், 7ம் (தொடக்க விழா 5-ம் திகதி) திகதிகளில், அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகரில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டை உலகத் தமிழாராய்ச்சி மன்றத்துடன் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, சிக்காகோ தமிழ்ச் சங்கம் ஆகிய தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன. தனிநாயகம் அடிகள் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் வண.சேவியர் தனிநாயகம் என்னும் ஈழத்து தமிழறிஞரால் 1964-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதுதான் உலகத் தமிழாராய்ச்சி மன்றம். தமிழறிஞராக மட்டும் அல்லாமல் மிகச் சிறந்த கல்வியாளராகவும் திகழ்ந்தவர் அவர். ஆங்கிலம்,ரோமம், போர்ச்சுக்கீஸ், பிரெஞ்ச், ஜப்பனிஷ் ஆகிய மொழிகளில் பேசவும், எழுதவும் வல்லமை பெற்றவர் தனிநாயகம் அடிகளார்….

Read More
1 177 178 179 180 181 256