தகவல் திருட்டு விவகாரம்: ‘பேஸ்புக்’ நிறுவனரிடம் அமெரிக்க பார்லி. குழு விசாரணை

தகவல் திருட்டு விவகாரம்: ‘பேஸ்புக்’ நிறுவனரிடம் அமெரிக்க பார்லி. குழு விசாரணை

2016 அமெரிக்கா அதிபர் தேர்தலின் போது குடியரசு கட்சி வேட்பாளரான டெனால்டு டிரம்ப் தேர்தல் பிரசாரத்திற்கு கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் சேவை செய்தது. இந்த நிறுவனத்துக்காக பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பயனாளர்கள் பதிவு செய்திருந்தவர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டதாக புகார் எழுந்தது. இதனை ஒப்புக்கொண்ட பேஸ்புக் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஜூக்கர்பெர்க், மன்னிப்பு கோரினார். இந்நிலையில் தகவல்திருட்டு தொடர்பாக மார்க் ஜூக்கர்பெர்க்கிடம் அமெரிக்க பாராளுமன்ற குழு விசாரணை நடத்த உள்ளது. இதையடுத்து ஜூகர்பெர்க் . செனட் சபை, பிரதிநிதிகள் முன்பும், நாளை பிரதிநிதிகள் சபை முன்பும் ஆஜராக உள்ளார். இது தொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், தகவல்திருட்டு என்னுடைய தவறு தான். அதற்காக…

Read More

ஒப்பந்தத்தை மீறினால் வருத்தப்பட நேரிடும்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

ஒப்பந்தத்தை மீறினால் வருத்தப்பட நேரிடும்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சியில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும் இடையே 2015 ஜூலையில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, “ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன்” என்று கூறி வருகிறார். மேலும் ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளையும் விதித்துள்ளார். இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி, தெஹ்ரானில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் பேசும்போது, ‘‘அணு சக்தி ஒப்பந்த விதிகளை ஈரான் மீறாது. அதேநேரம் அமெரிக்கா ஒப்பந்தத்தை மீறினால் அந்த நாடு வருத்தப்பட நேரிடும். ஒரு வாரத்துக்குள் அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். அமெரிக்கா வின் புதிய அதிபரிடம்…

Read More

ரசாயன தாக்குதல் : சிரியாவில் 40 பேர் பலி

ரசாயன தாக்குதல் : சிரியாவில் 40 பேர் பலி

சிரியாவில் நடந்த ரசாயன தாக்குதலில், 40 பேர் பலியாகினர்; இந்த எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.மத்திய கிழக்கில் உள்ள சிரியாவில், எட்டு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. கடந்த, 2011ல் துவங்கிய இந்த போரில், ஏற்கனவே, நான்கு லட்சம் பேர் பலியாகி விட்டனர்; இரண்டு லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டனர். அந்நாட்டின் மக்கள் தொகையே பாதியாக குறைந்துவிட்டது. இருப்பினும், சண்டை தொடர்கிறது.அதிபர் ஆசாத்தின் அரசுப்படை – போராட்டக்காரர்கள் – ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு என, மும்முனை போர் நடக்கிறது. கடந்த ஜனவரியில், இப்போர் உச்சகட்டத்தை எட்டியது. இதில், நுாற்றுக்கணக்கான குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.போராட்டக்காரர்கள் வசமிருந்த பெரும்பாலான பகுதிகளை, அரசுப்படை கைப்பற்றியது. தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கிழக்கு…

Read More

கனடியதமிழ் காங்கிரஸ் ஏற்பாடுசெய்தகனடாவின் பூர்வீகக் குடிகளுடனானபண்பாட்டுப் பகிர்வும் சந்திப்பும்

கனடியதமிழ் காங்கிரஸ் ஏற்பாடுசெய்தகனடாவின் பூர்வீகக் குடிகளுடனானபண்பாட்டுப் பகிர்வும் சந்திப்பும்

கடந்தமார்ச் 30 வெள்ளிக்கிழமை மற்றும் 31 சனிக்கிழமை ஆகிய இரு நாட்களும் தமிழ் சமூகத்திற்கும், பூர்வீகக்குடிகளுகளான மோஹாக் சமூகத்திற்கும் இடையேயான வரலாற்று ரீதியான சந்திப்பு நடைபெற்றது. மொழிமற்றும் கலாச்சாரமையம் (மோஹாக் சமூகம்) மற்றும் தலைமைக்கும் புதுமைக்கு மானநடுவம் அமைப்புக்களுடன் இணைந்து கனடிய தமிழர் பேரவை, இந்த பரிமாற்றத்தை முதன் முதலாக ஏற்பாடு செய்திருந்தது. ஒன்ராறியோவில் இருந்து 135 க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் டீநடடநஎடைட நநகரில் தங்கியிருந்து இந்த இரண்டுநாள் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றனர். முதல் நாளில் டயன்டனாகா மோஹாக் சமூகம் அவர்களின் கலாச்சாரம், கலை, கைவினை, விளையாட்டுகள், மொழி, நடனங்கள் மற்றும் இசைஆகியவற்றை விளக்கமாக காட்சிப்படுத்தி ,அவர்களின் பங்கேற்பாளர்களுக்கு பாரம்பரிய மோஹாக்…

Read More

“பைரவிநுண்கலைக் கூடம்” நடத்திய “இசைச்சாரல்” போட்டிநிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுப் போட்டிகள் சிறப்பாகநிறைவுற்றன

“பைரவிநுண்கலைக் கூடம்” நடத்திய “இசைச்சாரல்” போட்டிநிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுப் போட்டிகள் சிறப்பாகநிறைவுற்றன

கனடாவில் புகழ்பெற்ற இசைப் பயிற்சிநிறுவனங்களில் ஒன்றானபைரவிநுண்கலைக் கூடம்” நடத்திய “இசைச்சாரல்” போட்டிநிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுப் போட்டிகள் கடந்த சனிக்கிழமையன்று சிறப்பாக நிறைவுற்றன. மேற்படிபாடல் போட்டி நிகழ்ச்சியை நடத்துவதற்கு “பைரவி நுண்கலைக் கூடம்” நிறுவனத்தின் அதிபரும் ஆசிரியருமான ஜெயச்சந்திரன் மாஸ்டர் அவர்களுக்கு அவரது துணைவியார் மைத்துனர்மார் மற்றும் வர்த்தகப் பெருமக்கள், பெற்றோர் மாணவமாணவிகள் மறறும் ஊடகவியலாளர்கள் நடுவர்களாக பணியாற்றிய இசைக் கலைஞர்கள் ஆகியோர் மிகவும் ஒத்தாசையாக இருந்தார்கள். போட்டியில் கலந்துகொண்ட பாடகபாடகிகள் அனைவருமே “பைரவிநுண்கலைக் கூடத்தில் வாய்ப்பாட்டு தவிர்ந்த ஏனைய வாத்தியக் கருவிகள் கற்றுக்கொள்ளும் இசை ஆர்வம் கொண்ட மாணவ மாணவிகளே ஆவார்கள். இவர்கள் அனைவரும் அதிபரும் ஆசிரியருமான ஜெயச்சந்திரன் மாஸ்டர் அவர்கள் வழங்கிய நம்பிக்கையும் ஊக்கத்தாலுமே…

Read More

காஸா எல்லையில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: பாலஸ்தீனர் ஒருவர் பலி

காஸா எல்லையில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: பாலஸ்தீனர் ஒருவர் பலி

காஸா எல்லையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீனர் ஒருவர் பலியானார். இதுகுறித்து காசா சுகாதார அமைச்சகம் தரப்பில், “காஸா – இஸ்ரேல் எல்லைப்புறத்தில் இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் பாலஸ்தீன நபர் ஒருவர் பலியாகியிருக்கிறார்” என்று கூறியுள்ளது. பலியான விவரம் குறித்து பாலஸ்தீன அரசு வெளியிடவில்லை. பாலஸ்தீன குற்றச்சாட்டு குறித்து இஸ்ரேல், “வான்வழித் தாக்குதல் ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்டது” என்று விளக்கம் அளித்துள்ளது. காசா – இஸ்ரேல் எல்லையில் இஸ்ரேல் – காசா எல்லையோரத்தில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் இஸ்ரேலை எதிர்த்து கடந்த வெள்ளிக்கிழமை பேரணியாகச் சென்றனர். அவர்களைக் கலைக்க இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பாலஸ்தீனர்களின்…

Read More

சிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா தொடக்கம்: வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது

சிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா தொடக்கம்: வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது

சிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா கடந்த மார்ச் 31-ம் தேதி தொடங்கியது. இவ்விழா வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 58 நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன. சிங்கப்பூரின் 4 அதிகாரபூர்வ மொழிகளில் தமிழும் ஒன்று. அந்த நாட்டில் தமிழ் செழித்தோங்க அரசு ஆதரவுடன் கடந்த 2000-மாவது ஆண்டில் ‘தமிழ் மொழி கவுன்சில்’ தொடங்கப்பட்டது. அந்த அமைப்பு சார்பில் கடந்த 2007 முதல் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முழுவதும் தமிழ் மொழி திருவிழா நடத்தப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான தமிழ் மொழி திருவிழா எம்இஎஸ் தியேட்டர் வளாகத்தில் நடைபெறுகிறது. இவ்விழாவை சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தொடங்கி வைத்தார். வரும்…

Read More

மலேசியாவில் போலி செய்திகள் தடைச் சட்டம்

மலேசியாவில் போலி செய்திகள் தடைச் சட்டம்

போலி செய்திகள் வெளியிட்டால் 6 ஆண்டு சிறைத்தண்டனை என்ற சட்டத்திற்கு மலேசிய பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.பொய்ச்செய்தி, போலிச்செய்தி என்று முத்திரையிட்டு, உண்மையைப் பொய்யாக்கி பொய்யை உண்மையாக்க சட்டத்தின் மூலம் வழிவகை செய்து கருத்துச் சுதந்திரம் பேச்சுச் சுதந்திரத்துக்கு வாய்ப்பூட்டு போடுகிறது ஆளும் மலேசிய அரசு என்று விமர்சகர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர்.இந்தச் சட்டம் உள்நாட்டு ஊடகம் மட்டுமல்லாது அயல்நாட்டு ஊடகங்களையும் இலக்காக்கியுள்ளது. பிரதமர் நஜிப் ரஸாக் மீது மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் எழும்பியுள்ள நிலையில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக விமர்சனங்களை அடக்கி ஒடுக்கும் முயற்சியே இந்த ‘பொய், போலிச் செய்தி சட்டம்’ என்கின்றனர் எதிர்க்கட்சியினர்.3வது முறையாக பிரதமராக நஜிப் ரஸாக் முயற்சிகள்…

Read More

ஒரு நாளைக்கு 50 லிட்டர் தண்ணீர்; உலகின் முதல் தண்ணீர் காவலர்கள்; கேப் டவுனின் மாற்றங்கள்

ஒரு நாளைக்கு 50 லிட்டர் தண்ணீர்; உலகின் முதல் தண்ணீர் காவலர்கள்; கேப் டவுனின் மாற்றங்கள்

‘டே ஜீரோ’ நாளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகருக்கு உலகில் முதல் முறையாக தண்ணீரைப் பாதுகாக்க காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். தென் ஆப்பிரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமான கேப் டவுனில் தொடர்ந்து மூன்று ஆறு ஆண்டுகளாக மழை பொழியா காரணத்தினால், அந்நகரில் இருந்த ஆறு ஏரிகளும் வறண்டு விட்டன. உலகிலேயே தண்ணீர் தீர்ந்து போகும் முதல் நகரமாக இருக்கப் போகிறதா கேப்டவுன்? சுமார் 40 லட்சம் பேர் வசிக்கும் கேப் டவுன் தண்ணீர் இல்லாமல் கடும் வறட்சியை சந்திந்தது. இதனைத் தொடர்ந்து கேப்டவுனில் நிலவும் வறட்சியை தேசியப் பேரிடராக தென் ஆப்பிரிக்க அரசு அறிவித்தது. ஏப்.16-ல் அந்நகரத்தில் குடிநீர் முழுவதும் தீர்ந்துபோய்…

Read More

கருப்பு குழந்தையை சிகப்பாக்க கருங்கல்லை உடலில் தேய்த்த பெண் கைது

கருப்பு குழந்தையை சிகப்பாக்க கருங்கல்லை உடலில் தேய்த்த பெண் கைது

மத்திய பிரதேசத்தின் நிஷத்புரா பகுதியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை சுதா திவாரி. இவரது கணவர் தனியார் மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வருகிறார். சுதா திவாரி ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் உத்தரகாண்டில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் இருந்து ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்துள்ளார். அந்த குழந்தை கருப்பாக இருந்ததால், தத்தெடுத்தது முதல் அதிருப்தியில் இருந்த சுதா, அக்கம் பக்கத்தினரிடம் யோசனை கேட்டுள்ளார். அவர்கள் அளித்த ஆலோசனையின் பேரில், 5 வயதாகும் அந்த குழந்தையின் உடலில் கருங்கல்லை வைத்து தேய்த்துள்ளார். இதனால் அந்த குழந்தை படுகாயம் அடைந்துள்ளது.அந்த குழந்தையை கொடுமைப்படுத்தப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாத சுதாவின் சகோதரியின் மகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அங்கு சென்ற…

Read More
1 207 208 209 210 211 256