மொன்றியால் மாநகரில் “விழிப்புலன் அற்ற ஒரு வழிகாட்டி” கௌரீஸ் வழங்கிய இன்னிசைக் கானங்கள் “விடியலைத் தேடி”

மொன்றியால் மாநகரில் “விழிப்புலன் அற்ற ஒரு வழிகாட்டி” கௌரீஸ் வழங்கிய இன்னிசைக் கானங்கள் “விடியலைத் தேடி”

மொன்றியால் மாநகரில் இயங்கிவரும் விடியலைத் தேடி அமைப்பின் ஆதரவில் இளம் பாடகர் கௌரீஸ் மற்றும் அவரது அன்னை சாரதா ஆகியோர் மொன்றியால் வாழ் வர்த்தக நண்பர்கள் வழங்கிய ஒத்துழைப்போடு நடத்திய “விடியலைத் தேடி” இசை நிகழ்சசி கடந்த சனிக்கிழமை 24ம் திகதி மாலை மொன்றியால் நகரின் மேரி ஆன் உயர் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. மொன்றியால் நகரில் உள்ள ஆற்றல் மிகு பாடக பாடகிகள் மற்றும் நடன மணிகள் அத்துடன் ந◌ாடக நடிகர் ஆகியோர் மேடையில் தங்கள் படைப்புக்களைத் தந்தனர். அத்துடன்; ரொரன்ரொவிலிருந்து கலைவேந்தன் கணபதி ரவீந்திரன் “வைகைப் புயல்” பாலாவோடு இணைந்து நகைச்சுவை நிகழ்ச்சியையும் வழங்கினார். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக உதயன் பத்திரிகையின் பிரதம…

Read More

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஏகாதசி திதியை முன்னிட்டு மூலவர் தன்வந்திரி பகவானுக்கு நெல்லிபொடி அபிஷேகம் நடைபெற்றது

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்  ஏகாதசி திதியை முன்னிட்டு மூலவர் தன்வந்திரி பகவானுக்கு நெல்லிபொடி அபிஷேகம் நடைபெற்றது

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி உலக நலன் கருதி மூலவர் ஸ்ரீதன்வந்திரி பகவானுக்கும் உற்சவர் வைத்தியராஜனுக்கும் 27.03.2018 செவ்வாய் கிழமையில் பங்குனி மாத ஏகாதசி திதியை முன்னிட்டு, காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நட்சத்திர தோஷங்கள் அகலவும், நாள்ப்பட்ட நோய்கள் நீங்கவும், மன நோயிலிருந்து விடுதலை பெறவும், ஒரு கற்ப மருந்தாகத் திகழும் நெல்லிக்காய் பொடிகொண்டு மஹா அபிஷேகம் நடைபெற்றது. நுரையீரல் சார்ந்த காசநோய் வைட்டமின் “சி” சத்து குறைவால் வரும் ஸ்கர்வி போன்ற நோய்கள் உடலில் எதிர்ப்பு சக்தி குறைதல், உடல் சூடு மற்றும் கண்நோய் சர்க்கரை நோய், செரிமான இல்லாமை,…

Read More

அமெரிக்கா விமான நிலையத்தில் சோதனைக்குள்ளாக்கப்பட்ட பாக். பிரதமர்

அமெரிக்கா விமான நிலையத்தில் சோதனைக்குள்ளாக்கப்பட்ட பாக். பிரதமர்

பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸி நியூயார்க் விமான நிலையத்தில் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் தரப்பில், “பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி தனிப்பட்ட பயணமாக அமெரிக்காவுக்கு சென்றிருந்தப்போது நியூயார்க் விமான நிலையத்தில் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது. தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் பாகிஸ்தானின் மெத்தன போக்கை அமெரிக்கா கடந்த சில மாதங்களாகவே கண்டித்து வந்தது. இதன் கராணமாக அமெரிக்கா – பாகிஸ்தான் உறவில் லேசான விரிசல் ஏற்பட்ட நிலையில், விமான நிலையத்தில் அப்பாஸி மீதான இந்தச் சோதனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் கூறும் போது, ”அப்பாஸி எளிமையானவர். பிற பயணிகளுக்கு எந்த நடைமுறை…

Read More

மேலும் ஒரு ஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் போலீஸ் விசாரணை

மேலும் ஒரு ஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் போலீஸ் விசாரணை

ஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இஸ்ரேல் நாட்டில் 4-வது முறையாக பிரதமர் பதவி வகித்து வருபவர் பெஞ்சமின் நெதன்யாகு. இந்த நிலையில் அவர் மீது ஏற்கெனவே 2 ஊழல் வழக்குகள் உள்ளன. இதைத் தொடர்ந்து 3-வது வழக்காக இவர் மீது லஞ்ச ஊழல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக பெசக் இஸ்ரேலி நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் மூலம் தனக்கு ஆதரவாக செய்திகள் வெளியிடுவதற்காக லஞ்சம் கொடுத்ததாக பெஞ்ச மின் நெதன்யாகு மீது ஊழல் புகார் எழுந்துள்ளது. இதனால் டெலிகாம் துறை விதிகளில் பெஞ்சமின் நெதன்யாகு மாற்றம் மேற்கொண்டதாகவும் குற்றச்சாட்டு…

Read More

சீனாவிற்கு வட கொரிய அதிபர் கிம் ஜோங் ரகசிய பயணம்

சீனாவிற்கு வட கொரிய அதிபர் கிம் ஜோங் ரகசிய பயணம்

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், முதன்முறையாக சீனாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வட கொரிய அதிபர் கிம்ஜோங் உன், அவ்வப்போது அணு சோதனை மற்றும் ஏவுகணை சோதனையையும் மேற்கொண்டு வந்தார். இதற்கு ஐ.நா. பொருளாதார தடை விதித்துள்ளது. இந்நிலையில் தென்கொரியா முயற்சியால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை , வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன் அடுத்த மாதம் சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கிம் ஜோங் உன், திடீரென சீனாவிற்கு ரகசிய பயணம் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுவெளியிட்டுள்ள செய்தியில், வட கொரியா அதிபர் ரகசியமாக சீன வந்தார். கடந்த 2011-ம்…

Read More

அமெரிக்கா 60 ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது, சியாட்டில் தூதரகத்தை மூட உத்தரவு

அமெரிக்கா 60 ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது, சியாட்டில் தூதரகத்தை மூட உத்தரவு

ரஷியாவின் உளவாளிகள் என 60 தூதரக அதிகாரிகளை அமெரிக்கா வெளியேற்றியது, சியாட்டில் தூதரகத்தை மூடவும் உத்தரவிடப்பட்டது. அமெரிக்காவில் பணியாற்றிய ரஷியாவின் 60 தூதரக அதிகாரிகள் உளவுத்துறை அதிகாரிகள் என அமெரிக்கா கூறிஉள்ளது. ரஷியாவின் ராணுவ உளவுப்பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). இவர் சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010-ம் ஆண்டு இங்கிலாந்து மீட்டு அடைக்கலம் கொடுத்தது. தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் ஸ்கிர்பால், கடந்த 4-ந் தேதி சாலிஸ்பரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே தனது மகள் யூலியாவுடன்…

Read More

வரலாற்றில் முதல் முறை: பாக்., ராணுவ அணிவகுப்பில் இந்திய அதிகாரிகள்

வரலாற்றில் முதல் முறை: பாக்., ராணுவ அணிவகுப்பில் இந்திய அதிகாரிகள்

வரலாற்றில் முதல் முறையாக, பாகிஸ்தான் ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்திய அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர். 1956 மார்ச் 23இல் உலகின் முதல் இஸ்லாமிய குடியரசாக அறிவிக்கப்பட்டது. அதைக் கொண்டாடும் வகையில் ஆண்டு தோறும் மார்ச் 23-ல் ராணுவ அணிவகுப்பு நடத்துவது வழக்கம். இதில் இந்திய துாதரக அதிகாரிகள் பங்கேற்பது இல்லை. ஆனால் நேற்று முன்தினம் நடந்த கொண்டாட்டத்துக்கு, இந்திய துாதரக அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் அழைப்பு விடுத்தது. நல்லெண்ண உறவுக்கு அழைப்பு விடுவதாக பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவத் பஜ்வா தெரிவித்தார். அவர் கூறும்போது, ‘இந்திய ராணுவ பிரதிநிதிகளை, அழைத்ததற்கு பாகிஸ்தான் எப்போதும் அமைதியையே விரும்புகிறது என காட்டத்தான்’ என்றார். அழைப்பை ஏற்குமாறு இந்திய…

Read More

ஈராக்கில் 3 ஆயிரம் பேருக்கு தூக்கு ஐ.எஸ்., ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை

ஈராக்கில் 3 ஆயிரம் பேருக்கு தூக்கு ஐ.எஸ்., ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை

ஈராக்கில் தீவிரவாத குற்றங்கள் அல்லது ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறை வைக்கப்பட்டுள்ளனர். சிரியாவில் வன்முறையில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள், ஈராக்கிலும் ஆதிக்கம் செலுத்த முயன்று வருகின்றனர். இந்த ஆண்டு ஜனவரி நிலவரப்பட்டி, ஈராக்கில் தீவிரவாதிகளுடன் தொடர்புள்ள 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அவர்களில் 3 ஆயிரம் பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஆயிரம் பேருக்கு மேல் போலீஸ், ராணுவம், குர்து படையினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிகம் பேரை சிறை வைப்பதும், குற்றவாளி என விரைவாக முடிவு செய்வதும், தவறான…

Read More

பிரான்ஸ் ஐ.எஸ். தாக்குதலில் இருவர் உயிரிழப்பு; பயங்கரவாதி சலாக் அப்தேஸ்லாம் விடுவிக்க கோரிக்கை

பிரான்ஸ் ஐ.எஸ். தாக்குதலில் இருவர் உயிரிழப்பு; பயங்கரவாதி சலாக் அப்தேஸ்லாம் விடுவிக்க கோரிக்கை

பிரான்ஸ் நாட்டின் த்ரிபெஸ் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஐ.எஸ். பயங்கரவாதி புகுந்து துப்பாக்கி சூடு நடத்தி உள்ளான். முன்னதாக அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட போலீசாரை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒருவர் காயம் அடைந்து உள்ளார். சூப்பர் மார்க்கெட்டிற்குள் இருந்தவர்கள் துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு உள்ளனர். பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்து உள்ளனர் என முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். பயங்கரவாதி உள்ள சூப்பர் மார்க்கெட் பகுதியை பாதுகாப்பு படை சுற்றி வளைத்து உள்ளது. சூப்பர் மார்க்கெட்டில் தாக்குதல் நடத்தி உள்ள பயங்கரவாதி 2015-ல் தாக்குதல் நடத்தப்பட்டதில் முக்கிய குற்றவாளியான…

Read More

முகமது ஷமி மனைவி ஹசின் ஜஹான் தனது கணவருக்கு எதிராக புதிய குற்றச்சாட்டு

முகமது ஷமி மனைவி ஹசின் ஜஹான் தனது கணவருக்கு எதிராக புதிய குற்றச்சாட்டு

கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மனைவி ஹசின் ஜஹான் தனது கணவருக்கு எதிராக புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான் போலீசில் பரபரப்பு புகார் தெரிவித்தார். முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தகாத தொடர்பு உள்ளது. அவரும், அவருடைய குடும்பத்தினரும் என்னை கடந்த 2 ஆண்டுகளாக கொடுமைப்படுத்தி வருகிறார்கள். என்னை கொலை செய்யக்கூட முயற்சி செய்தார்கள்’ என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி கொல்கத்தா போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. முகமது ஷமி மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாகவும் ஹசின் ஜஹான் கூறியது தொடர்பாக…

Read More
1 208 209 210 211 212 256