திருச்செந்தூர் கோயில் பிரகார மண்டபம் இடிந்து பெண் பலி: நடை அடைப்பு
திருச்செந்தூர் வள்ளிக் குகை அருகில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியானார். முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் உள்ள பிராகார மண்டபம், திடீரென இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி பெண் ஒருவர் பலியானார். இன்னும் எத்தனை பேர் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி கோயிலின் நடை சார்த்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கியமான கோயில், திருச்செந்தூர். தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரும் பிரசித்தி பெற்ற கோயில்களில் இதுவும் ஒன்று. முருகன் கோயிலுக்கு அருகில் வள்ளிக்குகை உள்ளது. இதனை புராணத் தொடர்பு கொண்ட குகை என்பார்கள். இந்த வள்ளி குகைக்கு அருகில், பிரகாரத்தை…
Read More









