வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். அப்போது, அமெரிக்காவின் அறிவியல், மருத்துவம், தொழில் மற்றும் கல்வியில் ஆற்றிய பங்கிற்காக இந்திய வம்சாவளியினருக்கு பாராட்டு தெரிவித்தார். அமெரிக்க அதிபராக ஜார்ஜ் புஷ் இருந்த காலம் முதல் வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அப்போது மாளிகையில் உள்ள அறை ஒன்றில் நடக்கும் விழாவில் புஷ் கலந்து கொண்டது இல்லை. ஆனால், கடந்த 2016ல் அதிபராக ஒபாமா இருந்த போது, வெள்ளை மாளிகையில் உள்ள கிழக்கு அறையில் தீபாவளி கொண்டாடப்பட்டது. ஒபாமா குத்துவிளக்கேற்றி தீபாவளியை கொண்டாடினார். அதேபோல், இந்த வருடம், வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நடந்த தீபாவளி பண்டிகையில், அதிபர் டிரம்ப் உடன்,…

Read More

இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்

இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்

ஒட்டோவா: கனடாவில் கனடாவாழ் இந்தியர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியூ. கனடாவின் ஒட்டோவா நகரில் இந்தியர்கள் பெருமளவு வசித்துவருகின்றனர். இந்தாண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாட கனடா பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஒட்டோவா நகர் வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியூ, இந்தியர்களின் உடையான ஷர்வானி அணிந்திருந்தார். பின்னர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் குத்துவிளக்கேற்றி இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். அதன் பின்னர் தபால் தலையும் வெளியிட்டார். இந்த விழாவில் கனடாவிற்கான இந்திய ஹை கமிஷனர் விகாஸ் ஸ்வரூப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா தொடர்பான புகைப்படங்கள் கனடா பிரதமரின் டுவீட்டரில் வெளியாகியுள்ளன.

Read More

ப்ளூவேல் விளையாட்டு: சிவகாசி அருகே இளைஞர் தற்கொலை முயற்சி

ப்ளூவேல் விளையாட்டு: சிவகாசி அருகே இளைஞர் தற்கொலை முயற்சி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில் நீலத்திமிங்கல் விளையாட்டு விளையாடிய ஜெகதீஸ்வரன் (வயது 18) பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. தற்கொலைக்கு முயன்ற ஜெகதீஸ்வரன் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாகவே அவர் வீட்டில் யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்ததாகவும் அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர். கடந்த சில மாதங்களாக இந்த விளையாட்டு பற்றிய செய்திகள் வெளியாகாமல் இருந்தன. தற்போது சிவகாசியில் இளைஞர் ஜெகதீஷ் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read More

மறைந்த பிரபல பின்னணிப் பாடகர் திரு ரி. எம். சௌந்தரராஜன் அவர்களது புதல்வர்

மறைந்த பிரபல பின்னணிப் பாடகர் திரு ரி. எம். சௌந்தரராஜன் அவர்களது புதல்வர்

எதிர்வரும் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு ஸ்காபுறோவில் அமைந்துள்ள தமிழிசைக் கலாமன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ள Easy Entertainment Canada வழங்கும் Easy Entertaining Night பல்சுவை நிகழ்வில் மேகாரியுனர்ஸ் அரவிந்தனின் இசைக்குழுவின் இசையில் பாடல்களைப் பாடவென வந்துள்ள ரிஎம்எஸ் செல்வகுமார் அவர்கள் இன்று மாலை ரொரென்ரோ பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கினார். இவர் மறைந்த பிரபல பின்னணிப் பாடகர் திரு ரி. எம். சௌந்தரராஜன் அவர்களது புதல்வர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இன்று மாலை விமான நிலையத்தில் Easy Entertaining Night பல்சுவை நிகழ்வினை ந டத்தும் Easy Entertainment Canada நிறுவனத்தின் இயக்குனர் திரு கிருபா கிசான் மற்றும் பல நண்பர்கள்…

Read More

ஈழவேந்தன் அவர்களுக்கு கனடிய தேசத்தில் எடுக்கப்பட்ட பாராட்டு விழா

ஈழவேந்தன் அவர்களுக்கு கனடிய தேசத்தில் எடுக்கப்பட்ட பாராட்டு விழா

இணையில்லா அரசியல் செயற்பாட்டாளர் ஈழவேந்தன் அவர்களுக்கு கனடிய தேசத்தில் எடுக்கப்பட்ட பாராட்டு விழா ஈழத்தின் மூத்த அறிஞரும் அரசியல் ஈடுபாட்டுடனும் எழுத்து துறை மற்றும் பேச்சு வல்லமையுடனும் தமிழே மூச்சு என “ஈழம் வெல்லும் அதை காலம் சொல்லும்” என்ற தனது தாரக மந்திர வாக்கியங்களுடனும் இளமை முதல் முதுமை வரை எழிமையான வாழ்வுடனும் தனது அறிவாற்றலாலும் விடாது பிடியாய் 85வயதிலும் இளமையில் கற்றதையும் கண்டதையும் உணர்வுடன் உண்மைகளை எடுத்து இயம்பும் தமிழ் ஈழ மறவரான ஈழவேந்தன் ஐயாவுக்கு கனடாவில் தமிழ் தாய் மன்றத்தின் ஏற்ப்பாட்டில் 07 – 10 – 2017 அன்று ஸ்காபுரோவில் அமைந்துள்ள செல்வ சன்னிதி ஆலய விழா மண்டபத்தில் மதிப்பளிப்பும்…

Read More

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த “கலையரசி” கலாச்சார விழா

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த “கலையரசி” கலாச்சார விழா

Jaffna Hindu College Association- Canada, presented its Annual Cultural Show, named “Kalaiyarasi”. today at Chinese Cultural Centre, located in Scarborough.As usual, the show was fantastic and Hall was “fully packed” until the end. We enjoyed the comedy Drama, produced and staged by the Canada- Jaffna Hindu Ladies College old Girls Association. கனடாவில் இயங்கிவரும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த “கலையரசி” கலாச்சார விழா இன்று மாலை ஸ்காபுறோவில் அமைந்துள்ள சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. மேற்படி விழா இன்று மாலை…

Read More

திருமணமான 15 நாளிலேயே காவலர் டெங்குவால் பலி

திருமணமான 15 நாளிலேயே காவலர் டெங்குவால் பலி

டெங்கு காய்ச்சல் பாதிப்பால், மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காவலர் நேற்று உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகில் உள்ள உலக்குடியைச் சேர்ந்தவர் தங்கச்சாமி(27). இவர், நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் உள்ள சிறப்பு பட்டாலியன் பிரிவில் காவலராக பணிபுரிந்தார். சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், காய்ச்சல் அதிகரித்ததால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனையில் அவருக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது தெரியவந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். டெங்கு காய்ச்சல் அதிகரிப்பால் அவரது உடல்நிலை மோசமடைந்து, சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்ததாக தனியார் மருத்துவமனை நிர்வாகம்…

Read More

இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பால் சிற்றுண்டிச்சாலைகளில் உணவுப் பொருட்கள் விலைகளையும் அதிகரிக்கரிக்கலாம்

இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பால்   சிற்றுண்டிச்சாலைகளில் உணவுப் பொருட்கள் விலைகளையும் அதிகரிக்கரிக்கலாம்

இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை கடந்த திங்கட்கிழமை முதல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளையும் அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் பிரதானமாக சோற்று பார்சல்,தேநீர் மற்றும் சிறிய வகை உணவு பொருட்கள் சிலவற்றின் விலைகளை அதிகரிக்க வேண்டியுள்ளதாக அந்தச் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்து தெரிவித்துள்ளார். இந்தப் பொருட்களின் விலைகளை எத்தனை ரூபாவினால் அதிகரிப்பது என்பது தொடர்பாக இது வரை தீர்மானிக்கவில்லையெனவும் இது தொடர்பாக விரைவில் தீர்மானம் மேற்கொண்டு அறிவிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த திங்களன்று நள்ளிரவு…

Read More

இந்தியா முழுவதும் நோக்கியா 6 ஸ்மார்ட்போனினை வாங்க சுமார் பத்து லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்

இந்தியா முழுவதும் நோக்கியா 6 ஸ்மார்ட்போனினை வாங்க சுமார் பத்து லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்

சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியாவின் ரீஎன்ட்ரி ஸ்மார்ட்போன் சந்தையில் நோக்கியா பீச்சர் போன் மற்றும் மூன்று ஸ்மார்ட்போன்களால் துவங்கியுள்ளது. சர்வதேச சந்தையை தொடர்ந்து நோக்கியா 3310 (2017), நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் அறிமுகம் செய்யப்பட்டு நோக்கியா 6 தவிர மற்ற சாதனங்கள் ஏற்கனவே விற்பனை செய்யப்படுகின்றன. அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் நோக்கியா 6 முன்பதிவுகள் ஜூலை 14ம் தேதி துவங்கியது. ஆகஸ்டு 23ம் தேதி விற்பனைக்கு வர இருக்கும் நோக்கியா 6 ஸ்மார்ட்போனினை வாங்க சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் வாங்க முன்பதிவு செய்துள்ளனர் என அமேசான் இந்தியா…

Read More

இந்தியாவிலேயே சிறந்த தூய்மையான கோயில்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு மத்திய அரசு சிறப்பு விருது

இந்தியாவிலேயே சிறந்த தூய்மையான கோயில்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு மத்திய அரசு சிறப்பு விருது

தூய்மை இந்தியா என்ற ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இந்தியாவிலேயே சிறந்த தூய்மையான கோயில் என்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருதை மத்திய அரசிடமிருந்து மதுரை நகராட்சி பெறவுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தூய்மை இந்தியா சிறந்த கோயிலுக்கான தேர்வு தொடங்கப்பட்டு 10 இடங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டன. இதில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேர்வாகியுள்ளது. நாளை (அக்டோபர் 2, 2017) மதுரை மாவட்ட ஆட்சியர் கே.வீர ராகவ ராவ், நகராட்சி ஆணையர் எஸ்.அனீஷ் சேகர் ஆகியோர் மத்திய அமைச்சர் உமா பாரதியிடமிருந்து விருதைப் பெறுகின்றனர். இது குறித்து அனீஷ் சேகர் கூறும்போது, முதலில் கோயிலின் சுற்றுப்புறத்தைத்…

Read More
1 223 224 225 226 227 256