தமிழகத்தில் மேலும் 1,568 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் மேலும் 1,568 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் குறைந்து கொண்டு வந்த பாதிப்பு 6  நாட்களுக்கு பிறகு மீண்டும் உயர்ந்துள்ளது. அந்தவகையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,562இல் இருந்து 1,568 ஆக அதிகரித்துள்ளது. 1,60,742 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,568 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக கோவையில் 239 பேருக்கும், சென்னையில் 162 பேருக்கும், ஈரோட்டில் 125 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 1,657 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,68,161 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில்…

Read More

தமிழகத்தில் மேலும் 1,562 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் மேலும் 1,562 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் இன்று  புதிதாக 1 லட்சத்து 60 ஆயிரத்து 523 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.   அதில் 1,562  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 4 கோடியே 26  லட்சத்து 33 ஆயிரத்து 164  பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் இன்று கொரோனாவுக்கு  20 பேர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளனர்.  தமிழகத்தில் இதுவரை 34 ஆயிரத்து 961  பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.  கொரோனா பாதிப்பில் இருந்து  1,684  பேர் இன்று  ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 25 லட்சத்து…

Read More

சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை – தளர்வுகள் அறிவிப்பு

சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை – தளர்வுகள் அறிவிப்பு

கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து மின்சார ரெயிலில்அத்தியாவசிய பணியாளர்கள், பெண்கள், 12 வயது உட்பட்டோர் அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆண் பயணிகள் மட்டும் காலை 7.30 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7.30 மணி வரையும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெற்கு ரயில்வே கட்டுப்பாடு விதித்து இருந்தநிலையில், ஆண் பயணிகளும் அனைத்து நேரமும் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Read More

முதல்-அமைச்சர் .மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்

முதல்-அமைச்சர் .மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 63. நலக்குறைவால் கடந்த 22ம் தேதி ஓ.பன்னீர் செல்வம் மனைவி விஜயலட்சுமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 வார காலமாக அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முதல்-அமைச்சர் .மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அமைச்சர்கள் விஜயலட்சுமி  உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பெருங்குடி தனியார் மருத்துவமனைக்கு வருகை தந்த சசிகலா விஜயலட்சுமி  உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்திற்கு நேரில் ஆறுதல் கூறினார்.  ஓ. பன்னீர்செல்வத்தை நேரில்…

Read More

தமிழகத்தில் மேலும் 1,509-பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 1,509-பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும், 1,509-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று தொற்று பாதிப்பு 1,512- ஆக பதிவாகி இருந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. சென்னையில்  இன்று 177- பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,719- ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 1 லட்சத்து 54 ஆயிரத்து 718- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 16,620- ஆக உள்ளது.

Read More

சுப்ரீம் கோர்ட்: முதல் முறையாக ஒரே நாளில் 9 நீதிபதிகள் பதவி ஏற்பு இந்தியாவில்

சுப்ரீம் கோர்ட்: முதல் முறையாக ஒரே நாளில் 9 நீதிபதிகள் பதவி ஏற்பு இந்தியாவில்

சுப்ரீம் கோர்ட்டில் நியமிக்கப்பட்டுள்ள மூன்று பெண் நீதிபதிகள் உட்பட 9 புதிய நீதிபதிகளும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். உச்ச நீதிமன்றத்துக்கு அதிகப்பட்சமாக 34 நீதிபதிகளை நியமிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த முழு எண்ணிக்கையிலான நீதிபதிகள் நியமிக்கப்படாமல் இருக்கிறது. இந்த மாதத்தில் அடுத்தடுத்து மூத்த நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமனும், நவீன் சின்காவும் ஓய்வு பெற்றதால், 26 ஆக இருந்த நீதிபதிகளின் எண்ணிக்கை 24 ஆக குறைந்தது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டுக்கு புதிதாக 9 நீதிபதிகளை நியமிக்கும்படி, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிசியம் கடந்த 17ம் தேதி ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்தது. சுப்ரீம் கோர்ட்டுக்கு நீதிபதிகளாக நியமிப்பதற்கு தெலுங்கானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி…

Read More

ஞாயிற்றுக் கிழமைகளில் கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை- தமிழக அரசு

ஞாயிற்றுக் கிழமைகளில் கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை- தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு விதித்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் செப்டம்பர்  15 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.   இது குறித்த முக்கிய விவரங்களை காணலாம். *தமிழகத்தில் திட்டமிட்டபடி  செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள்,கல்லூரிகள் திறக்கப்படும். *ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கடற்கரைகளிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை. *வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மத வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி ரத்து தொடரும் *கல்லூரி மாணவர்களுக்கான…

Read More

டோக்கியோ பாரா ஒலிம்பிக்: இந்தியாவுக்கு 2-வது தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக்: இந்தியாவுக்கு 2-வது தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக்  ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அண்டில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதுடன் 68.55 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து உலக சாதனையும் சுமித் அண்டில் படைத்தார். டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியா வெல்லும் 2-வது தங்கம் இதுவாகும்.  23 வயதாகும் சுமித் அண்டில் அரியானா மாநிலம் சோனிபட் பகுதியை சேர்ந்தவர். 2005  ஆம் ஆண்டு நேரிட்ட பைக் விபத்தில் இடது முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதியை இழந்தவர் சுமித் அண்டில்.

Read More

தமிழக கவர்னர் பன்வாரிலாலுக்கு கூடுதல் பொறுப்பு

தமிழக கவர்னர் பன்வாரிலாலுக்கு கூடுதல் பொறுப்பு

கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் தமிழக ஆளுநராக உள்ள பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் ஆலுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். மேலும் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

தமிழகத்தில் 1,542 பேருக்கு கொரோனா: 16-வது நாளாக பாதிப்பு குறைவு

தமிழகத்தில் 1,542 பேருக்கு கொரோனா: 16-வது நாளாக பாதிப்பு குறைவு

தமிழகத்தில் கடந்த 11-ந் தேதி 1,964 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடந்து தமிழகத்தில் பாதிப்பு குறைந்த வண்ணமே இருந்தது. அந்த வகையில் 15-வது நாளாக 1,542-பேருக்கு கொரோனா தாக்கம் இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் இன்று புதிதாக 1 லட்சத்து 62 ஆயிரத்து 487 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,542 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 21 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து இன்று 1,793-பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை17,797 ஆக உள்ளது.

Read More
1 78 79 80 81 82 256