ஆப்கனில் இஸ்லாமிய ராஜ்ஜியம் உருவாவதை ஆதரிக்க முடியாது: ஜ.நா., பாதுகாப்பு கவுன்சில்
ஆப்கனில் மீண்டும் இஸ்லாமிய ராஜ்ஜியம் உருவாவதை ஆதரிக்க முடியாது’ என, இந்தியா தலைமையிலான, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கடந்த 1996, செப்.,ல், தலிபான்கள் ஆப்கன் தலைநகர் காபூலை கைப்பற்றி, இஸ்லாமிய ராஜ்ஜியத்தை பிரகடனப்படுத்தினர். இந்நிலையில் 2001 செப்.,11ல் அமெரிக்காவின் நியூயார்க் நகர இரட்டை கோபுரங்களை, அல் – குவைதா பயங்கரவாதிகள் விமானங்களால் மோதி தகர்த்தனர். இதைத் தொடர்ந்து, அல் – குவைதா தலைவர் பின்லேடனை பிடிக்க, அமெரிக்கப் படைகள் ஆப்கன் சென்றன. அங்குள்ள, வடக்கு கூட்டணி கட்சி, அமெரிக்க படையின் ஆதரவுடன், தலிபான்களை விரட்டியடித்தது. இதையடுத்து, தலிபான்களின் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் 2001, டிச., 17ல் முடிவுக்கு வந்தது. தற்போது, ஆப்கனில் 90 சதவீத…
Read More









