ஆப்கனில் இஸ்லாமிய ராஜ்ஜியம் உருவாவதை ஆதரிக்க முடியாது: ஜ.நா., பாதுகாப்பு கவுன்சில்

ஆப்கனில் இஸ்லாமிய ராஜ்ஜியம் உருவாவதை ஆதரிக்க முடியாது: ஜ.நா., பாதுகாப்பு கவுன்சில்

ஆப்கனில் மீண்டும் இஸ்லாமிய ராஜ்ஜியம் உருவாவதை ஆதரிக்க முடியாது’ என, இந்தியா தலைமையிலான, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கடந்த 1996, செப்.,ல், தலிபான்கள் ஆப்கன் தலைநகர் காபூலை கைப்பற்றி, இஸ்லாமிய ராஜ்ஜியத்தை பிரகடனப்படுத்தினர். இந்நிலையில் 2001 செப்.,11ல் அமெரிக்காவின் நியூயார்க் நகர இரட்டை கோபுரங்களை, அல் – குவைதா பயங்கரவாதிகள் விமானங்களால் மோதி தகர்த்தனர். இதைத் தொடர்ந்து, அல் – குவைதா தலைவர் பின்லேடனை பிடிக்க, அமெரிக்கப் படைகள் ஆப்கன் சென்றன. அங்குள்ள, வடக்கு கூட்டணி கட்சி, அமெரிக்க படையின் ஆதரவுடன், தலிபான்களை விரட்டியடித்தது. இதையடுத்து, தலிபான்களின் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் 2001, டிச., 17ல் முடிவுக்கு வந்தது. தற்போது, ஆப்கனில் 90 சதவீத…

Read More

மல்யுத்தத்தில் இந்தியா அசத்தல்; ரவிகுமார் தாஹியா, தீபக் புனியா அரையிறுதிக்கு தகுதி

மல்யுத்தத்தில் இந்தியா அசத்தல்; ரவிகுமார் தாஹியா, தீபக் புனியா அரையிறுதிக்கு தகுதி

ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் ரவிகுமார் தாஹியா, தீபக் புனியா ஆகியோர் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. 12வது நாளான இன்று (ஆக.,04) மல்யுத்தத்தில் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிகுமார் தாஹியா, கொலம்பியா வீரரை எதிர்கொண்டார். இதில், 13-2 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிப்பெற்றார். காலிறுதியில் பல்கேரியா வீரருடன் மோதியதில் 14-4 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிப்பெற்று அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார். மல்யுத்தத்தில் 86 கிலோ எடைப்பிரிவில் மற்றொரு இந்திய வீரர் தீபக் புனியா, நைஜீரிய வீரரை 12-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி…

Read More

நாடாளுமன்றத்தில் அமளி: மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸின் 6 உறுப்பினர்கள் இடைநீக்கம்

நாடாளுமன்றத்தில் அமளி: மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸின் 6 உறுப்பினர்கள் இடைநீக்கம்

பெகாசஸ் வேவு பார்க்கும் மென்பொருள் பயன்பாடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி எதிர்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வரும் வேளையில், மாநிலங்களவையில் விதிகளை மீறி அவையின் மையப்பகுதிக்கு வந்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறி 6 உறுப்பினர்களை இன்று நாள் முழுவதுமாக இடைநீக்கம் செய்திருக்கிறார் மாநிலங்களவை தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு. டோலா சென், நடிமுல் ஹக், அபிர் ரஞ்சன் பிஸ்வாஸ், ஷாந்தா சேத்ரி, அர்பிதா கோஷ், மெளசம் நூர் ஆகிய இந்த ஆறு உறுப்பினர்களும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

Read More

இந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறி சாதனை

இந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறி சாதனை

டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கியில் காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி, முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதில் பெண்கள் ஹாக்கி காலிறுதிப்போட்டியில் இந்திய அணி, மூன்று முறை தங்கம் வென்ற ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இதில், சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனைகள், ஆட்டநேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதிப்பெறுவது இதுவே முதன்முறையாகும். அரையிறுதியில் அர்ஜென்டினா உடன் மோதுகிறது.

Read More

நடப்பு மாதத்தில் 3வது அலை: ஐஐடி வல்லுநர்கள் எச்சரிக்கை

நடப்பு மாதத்தில் 3வது அலை: ஐஐடி வல்லுநர்கள் எச்சரிக்கை

பஇந்தியாவில் நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் கோவிட் 3வது அலை தொடங்க வாய்ப்புள்ளது. தினமும் ஒரு லட்சம் பேருக்கு குறையாமல் பாதிக்கப்படுவர்; அதிகபட்சமாக 1.50 லட்சம் வரை பாதிக்கப்படலாம்’ என, ஐஐடி வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். ஐதராபாத் ஐஐடி ஆய்வாளர்கள் மதுகுமளி வித்யாசாகர், கான்பூர் ஐஐடி ஆய்வாளர் மனிந்திரா அகர்வால் இருவரும் கணித முறை அடிப்படையில், கோவிட் 3வது அலையை கணித்துள்ளனர். இதுகுறித்து ஆய்வாளர் மதுகுமளி வித்யாசாகர் கூறுகையில், ‘கேரளா, மஹாராஷ்டிராவில் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதைப் பார்க்கும்போது, 3வது அலை நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் வருவதற்கான சாத்தியங்கள் உள்ளன. அவ்வாறு ஏற்பட்டால் அக்டோபரில் உச்சத்தை அடையும். ஆனால், 2வது அலையைப் போல், 3வது அலையில் பாதிப்பு, உயிரிழப்பு…

Read More

உபி தேர்தல் உண்மை நிலவரம் – தேர்தல் கவரேஜ்

உபி தேர்தல் உண்மை நிலவரம் – தேர்தல் கவரேஜ்

உபி தேர்தல் உண்மை நிலவரம் – பாரத் மார்க் உத்திரப்பிரதேசம் முழுவதிலுமிருந்து மக்கள் மண துடிப்பை உங்களுக்காக ஒரு சிறப்பு தேர்தல் கவரேஜ் கொண்டு வருகிறோம் !! மிக பெரிய பெரும்பான்மை பெற்று பிஜேபி யின் ” உ பி யின் முதல்வர் யோகி ” மீண்டும் வரும் தேர்தலில் வெல்வாரா ? உபி யாரைத் தேர்ந்தெடுக்கும்? பாரத் மார்க் யூடியூப் சேனலை சப்சிகிரைப் செய்து உபி மக்களின் துடிப்பை இப்போது அறிந்து கொள்ளுங்கள் ? https://www.youtube.com/bharatmarg ? எங்கள் வேலையை ஆதரித்து நன்கொடை அளித்து “உபி தேர்தல் உண்மை நிலவரம்” நிகழ்சியில் உங்கள் கேள்விகளை கேட்கவும் இந்த லிங்கை கிளிக் செய்யவும் ? https://bharatmarg.com/donate-now/…

Read More

டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் குத்து சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை வெற்றி; பதக்கம் உறுதி

டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் குத்து சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை வெற்றி; பதக்கம் உறுதி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் மகளிர் குத்து சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெற்றி பெற்று பதக்கம் உறுதி செய்துள்ளார். டோக்கியோ, 32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8வது நாளான மகளிர் வெல்டர்வெயிட் குத்து சண்டை காலிறுதியில் 64-69 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெயின் மற்றும் சீன தைபேவின் சின்-சென் நியென் விளையாடினர். இந்த போட்டியில் லவ்லினா 4-1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றுள்ளார். காலிறுதியில் வெற்றியடைந்து முன்னேறியுள்ள லவ்லினா இந்தியாவுக்கு பதக்கம் ஒன்றை உறுதி செய்துள்ளார்.

Read More

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை: தமிழக அரசு

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை: தமிழக அரசு

தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாததால் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கோவிட் பரவல் 2வது அலையின் போது ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது. இதனையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனால், அங்குள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த மே மாதம் முதல் ஆக்சிஜன் உற்பத்தி துவங்கியது. இங்கு உற்பத்தியாகும் மருத்துவப் பயன்பாட்டுக்கான திரவ மற்றும் வாயு ஆக்சிஜன் தமிழகம் முழுவதும் தொடர்ந்து அனுப்பப்பட்டது. ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்ச நீதிமன்றம்…

Read More

இந்திய ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க குழு

இந்திய ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க குழு

இந்திய ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள, கோவை மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களை மீட்க, குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்குச் சொந்தமாக நன்செய், புண்செய் நிலங்கள் மட்டுமின்றி வர்த்தக கட்டடங்கள், வீடுகள், மனையிடங்கள் உள்ளன. வாடகை அடிப்படையில் பயன்படுத்தி வரும் குத்தகைதாரர்கள், நியாயமான வாடகை செலுத்தாமல் காலம் கடத்தி வருகின்றனர். பலர் ஆக்கிரமிப்பும் செய்துள்ளனர்.ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பதற்காக, மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் செந்தில்வேலவன், உதவி கமிஷனர்கள் தலைமையில் மூன்று குழுக்கள் உருவாக்கியுள்ளார். இத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ஆக்கிரமிப்பாளர்கள் பலரும் இதுவரை அதிகாரிகளை சரிக்கட்டியும், அரசியல்வாதிகளை பயன்படுத்தி சமாளித்து வந்தனர். ஆக்கிரமிப்பு…

Read More

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தோல்விக்குக் காரணமான 3 விஷயங்கள்’ சீண்டும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தோல்விக்குக் காரணமான 3 விஷயங்கள்’  சீண்டும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள்

சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வியடைந்ததற்கு கட்சிக்காரர்கள் யாரும் வருத்தப்படவில்லை’ என அக்கட்சியின் மூத்த நிர்வாகி பேசியுள்ளது, அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடக்கிறது அ.தி.மு.கவில்? தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க அடைந்த தோல்விக்குப் பிறகு அக்கட்சியின் நிர்வாகிகள் பலரும் பல்வேறு கருத்துகளைக் கூறி வருகின்றனர். அந்த வரிசையில் 7ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் வானூரில் நடந்த அ.தி.மு.க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்துகள், பா.ஜ.கவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தின. அ.தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் பேசிய சி.வி.சண்முகம், “பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்த காரணத்தால் சிறுபான்மையினர் வாக்குகளை முழுமையாக இழந்தோம். கடந்த 10 ஆண்டுகளாக நல்ல திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சென்ற காரணத்தால் நமக்கு நல்ல…

Read More
1 82 83 84 85 86 256