ஈராக்கில் அமெரிக்காவின் போர் நடவடிக்கை இந்த ஆண்டு இறுதியில் நிறைவு – ஜனாதிபதி ஜோ பைடன்

ஈராக்கில் அமெரிக்காவின் போர் நடவடிக்கை இந்த ஆண்டு இறுதியில் நிறைவு – ஜனாதிபதி ஜோ பைடன்

ஐ.எஸ். பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிடுவதற்காக அமெரிக்கா கடந்த 2014-ம் ஆண்டு ஈராக் நாட்டுக்கு தனது படைகளை அனுப்பியது. அமெரிக்க படைகளின் உதவியுடன் ஈராக் ராணுவம் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை கட்டுக்குள் கொண்டுவந்தது. ஐ.எஸ். பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதாக கடந்த 2017-ம் ஆண்டு‌ ஈராக் அறிவித்தது. இருப்பினும் அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் இன்னமும் தொடரும் நிலையில் அவர்களை எதிர்த்து சண்டையிட அமெரிக்க படைகள் ஈராக்கில் தொடர்ந்து முகாமிட்டுள்ளன.இதற்கிடையில் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் ஈராக்கில் இருக்கும் அமெரிக்க படைகளை குறிவைத்து தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் அமெரிக்கா தனது படைகளை திரும்ப பெற வேண்டும் என ஈராக் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.இந்த…

Read More

கேரளாவில் கையை மீறிவிட்டதா கோவிட் பாதிப்பு?

கேரளாவில் கையை மீறிவிட்டதா கோவிட் பாதிப்பு?

இந்திய நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கோவிட் 2வது அலையின் தாக்கம் குறைந்து தொற்று எண்ணிக்கை இரண்டு இலக்கத்தில் உள்ளது. ஆனால், கேரளாவில் மட்டும் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் 10 ஆயிரத்துக்கும் குறைவில்லாமல் தொற்று பாதிப்பு பதிவாகிறது. இதனால் கேரளாவில் கோவிட் தொற்றுப் பரவல், அரசின் கையை மீறிச் சென்றுவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியின் துணைக் கண்காணிப்பாளர் மருத்துவர் சந்தோஷ் குமார் தெரிவித்து உள்ளதாவது:கேரளாவில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 21 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டு உள்ளனர். இது தேசிய சராசரியில் 9.9 சதவீதமாகும். மற்ற எந்த மாநிலத்தையும்விட இது…

Read More

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டால் 3 ஆண்டு காலம் பயண தடை – சவுதி அரேபியா

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டால் 3 ஆண்டு காலம் பயண தடை – சவுதி அரேபியா

கொரோனா அச்சுறுத்தலால் பல நாடுகள் தங்களுடைய சர்வதேச விமான சேவைக்கு தற்காலிக தடை விதித்துள்ளன. சரக்கு விமானம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான விமான போக்குவரத்து தவிர பயணிகள் விமானங்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. சில நாடுகள் கடுமையாக்கியும் உள்ளன. அவற்றில் கொரோனா பாதிப்புகள் அதிகளவில் காணப்படும் நாடுகளில் இருந்து வருவோர், கொரோனா தடுப்பூசி செலுத்திய விவரம், கொரோனா பாதிப்பில்லா சான்றிதழ் ஆகியவற்றை உடன் கொண்டு வருவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், சவுதி அரேபிய அரசு கொரோனா பாதிப்புகள் அதிகளவிலுள்ள நாடுகளை ரெட் லிஸ்ட் எனப்படும் பட்டியலில் வகைப்படுத்தி உள்ளது. அவற்றில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பிரேசில், அமீரகம், எகிப்து உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன….

Read More

தமிழகத்தில் போலி சமூக நீதி !!

தமிழகத்தில் போலி சமூக நீதி !!

தமிழகத்தில் போலி சமூக நீதி பேசுவதாக கூறியுள்ள தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, இணை அமைச்சர் எல்.முருகனுக்கு பிரதிநிதித்துவம் கொடுத்து அவர் சமூகத்தை பா.ஜ., முன்னேற்றி இருப்பதாகவும், திமுக.,வில் இதுபோல் இல்லாமல் சிலரை வளர விடுவதில்லை எனவும் கூறியுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில் அப்துல் கலாம் நினைவு தினத்தையொட்டி அவரது படத்திற்கு பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அப்துல்கலாம் தமிழகத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்தவர்; விஞ்ஞானத்திற்கு பலம் சேர்த்தவர். அவர் இரண்டாவது முறையாக ஜனாதிபதி ஆவதை திமுக தடுத்துவிட்டது. அ.தி.மு.க – பா.ஜ., கூட்டணியில் இருக்கிறது. அதனால் பிரதமருடன், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்,…

Read More

எம்.பி ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய தமிழ் சிறுமி தொடர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை !!

எம்.பி ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய தமிழ் சிறுமி தொடர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை !!

இலங்கை முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.பியுமான ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய இந்திய வம்சாவளி தமிழ் சிறுமி தொடர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு, தீ காயங்களுடன் இறந்த சம்பவத்தை அடுத்து, நாட்டின் பல இடங்களில் சிறார் மற்றும் பெண் உரிமைகள் தொடர்பிலான போராட்டங்கள் வலுப் பெற்றுள்ளன. ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய 16 வயது சிறுமி, கடந்த 3ஆம் தேதி தீ காயங்களுடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண சமீபத்தில் தெரிவித்திருந்தார். கடந்த 15ம் தேதி உயிரிழந்த அந்த சிறுமியின் பிரேதப் பரிசோதனை, கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்டது. அதில், சிறுமி தொடர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கப்பட்டிருந்தது…

Read More

கொங்கு நாடு !! இரண்டாகும் தமிழ் நாடு !! தி மு க ஸ்டாலினுக்கு செக் !!

கொங்கு நாடு !! இரண்டாகும் தமிழ் நாடு !! தி மு க ஸ்டாலினுக்கு செக் !!

கொங்கு மண்டலத்தில், பா.ஜ.,வுக்கென தனியாக ஓட்டு வங்கி உள்ளது. சமீபத்தில் இப்பகுதியில் நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., படுதோல்வியை சந்தித்துஇருந்தது. இதை வைத்து, எதிர்காலத்தில் தி.மு.க.,வுக்கு விளையாட்டு காட்ட, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த வானதி சீனிவாசன், பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மண்டலத்தைச் சேர்ந்த முருகன், மத்திய இணை அமைச்சராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக இந்த பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் வாயிலாக கொங்கு மண்டலத்தில், தி.மு.க.,வுக்கு நேரடி போட்டியாக பா.ஜ.,வை முன்னிறுத்துவதற்கான முயற்சிகள் துவங்கிஉள்ளன.புதிதாக அமையும் யூனியன் பிரதேசத்துக்கு கொங்கு நாடு என, பெயர் சூட்டவும் திட்டம்…

Read More

ஹிந்துக்களையும் … பிரதமர் மோடியையும் அசிங்கமாக பேசிய கிறிஸ்துவ பாதிரி தலைமறைவு !!

ஹிந்துக்களையும் … பிரதமர் மோடியையும் அசிங்கமாக பேசிய கிறிஸ்துவ பாதிரி தலைமறைவு !!

ஹிந்து மதம், பிரதமர் மோடி பற்றி அவதுாறாக பேசிய கிறிஸ்துவ பாதிரி ஜார்ஜ் பொன்னையா தலைமறைவானான். அவர் கடல் வழியாக தீவிற்கு தப்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. குமரி மாவட்டம், அருமனை அருகே பனங்கரையில் கிறிஸ்துவ வழிபாட்டு தலத்துக்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், ‘சீல்’ வைக்கப்பட்டது. இதை கண்டித்து அருமனையில் ஜூலை 18ல் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசுகையில், ‘தி.மு.க., வெற்றி நாங்கள் போட்ட பிச்சை, கிறிஸ்துவ வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. துணி உடுக்காமல் சாமி கும்பிட்டாலும் ஓட்டு கிடைக்காது’ என்றதுடன், பிரதமர் மோடி, அமித் ஷா பற்றி அச்சிட முடியாத வார்த்தைகளாலும் விமர்சித்தார். அவர் மீது தமிழகம்…

Read More

இங்கிலாந்தில் கடந்த 24 மணிநேரத்தில் 39,906 பேருக்கு கொரோனா

இங்கிலாந்தில் கடந்த 24 மணிநேரத்தில் 39,906 பேருக்கு கொரோனா

இங்கிலாந்து நாட்டில் கடந்த 19ந்தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பெருமளவிலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. எனினும், நிபுணர்கள் இந்த தளர்வுகள் ஆபத்து விளைவிக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், அந்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இங்கிலாந்தில் கடந்த 24 மணிநேரத்தில் 39,906 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், மொத்த எண்ணிக்கை 56 லட்சத்து 2 ஆயிரத்து 321 ஆக உயர்வடைந்து உள்ளது. இதேபோன்று 84 பேர் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்து உள்ளனர். இவர்கள், கொரோனா பாதிப்பு முதன்முறையாக ஏற்பட்டு 28 நாட்களில் உயிரிழந்தவர்கள் ஆவர். இதனால், அந்நாட்டில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 980 ஆக…

Read More

நாங்கள் போட்ட பிச்சையால் தான் திமுக வென்றது – கிறிஸ்துவ பாதிரி

நாங்கள் போட்ட பிச்சையால் தான் திமுக வென்றது – கிறிஸ்துவ பாதிரி

பூமாதேவியை செருப்பு போட்டு மிதிக்க மாட்டானாம்.. பாரத மாதா மீது செருப்பு பட்டுவிட கூடாதாம்.. ஆனால் நாம் ஷூ போட்ருக்கோம் எதற்கு… பாரத மாதாவிடம் இருக்கும் அசிங்கம் நம்மிடம் தொற்றிக் கொள்ளக்கூடாது என்பதற்காக நாம் ஷூ போட்டு மிதிக்கிறோம்.. (கைதட்டுகின்றனர்) நமக்கு சொறி, செரங்கு வந்துட கூடாதுனு தமிழக அரசு இலவச செருப்பு கொடுத்தது.. இந்த பூமா தேவி, ரொம்ப டேஞ்சரான ஆளு.. சொறி பிடிக்கும்.. செரங்கு பிடிக்கும்.. அதனால செருப்பு போட்டுக்கங்கனு கொடுக்கிறாங்க – கிறிஸ்துவ பாதிரி ‘நாங்கள் போட்ட பிச்சையால் தான் திமுக வென்றது’ என சர்ச்சையாக கூறியிருக்கும் குமரி மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார், பிரதமர் மோடியையும், பாரத மாதாவையும் கொச்சைப்படுத்தி, மதவெறியை…

Read More

பாகிஸ்தானை சீனாவும் நம்பவில்லை !! தன்னுடைய விசாரணை குழு அனுப்பி தீர விசாரிக்க முடிவு !!

பாகிஸ்தானை சீனாவும் நம்பவில்லை !!  தன்னுடைய விசாரணை குழு அனுப்பி தீர விசாரிக்க முடிவு !!

பாகிஸ்தானில் கடந்த வாரம் சீன பொறியாளர்கள் சென்ற பேருந்தில் குண்டு வெடித்ததாக கூறப்படும் சம்பவத்தில் 9 சீனர்கள் உட்பட 13 பேர் இறந்தனர். இது பற்றி விசாரிக்க சீன குற்ற விசாரணை நிபுணர் குழு பாகிஸ்தான் சென்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 14 அன்று பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் அணை கட்டுமானப் பணிகளுக்காக 30-க்கும் மேற்பட்ட சீன பொறியாளர்கள், அளவையாளர்கள், பாகிஸ்தானியர்கள் சென்றனர். சாலையில் சென்று கொண்டிருந்த போது பேருந்தில் குண்டு வெடித்ததில் 9 சீனர்கள், 3 பாகிஸ்தானியர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இது குண்டுவெடிப்பில்லை என பாகிஸ்தான் கூறுகிறது. இயந்திரக் கோளாறு காரணமாக எரிவாயு கசிந்து…

Read More
1 83 84 85 86 87 256