பெண்களின் இடுப்பை வர்ணித்து கண்டனங்களுக்கு உள்ளான லியோனிக்கு தி.மு.க.,வின் கல்வித் துறைக்கு பொறுப்பு !!
தமிழக பாடநுால் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக லியோனி நியமிக்கப்பட்டது, பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. லியோனி ஆசிரியராக பணியாற்றியவர் தான். பட்டிமன்றம் வாயிலாக பிரபலமாகி, பின் தி.மு.க.,வில் இணைந்தவர். இவரது அரசியல் பேச்சு ரசிக்கத்தக்கதாக இருக்காது; அநாகரிகமாக இருக்கும். இதனால் தேர்தல் காலத்தில் இவர் மீது அவமதிப்பு வழக்குகள் நிறைய போடப்படும். கடந்த தேர்தல் பிரசாரத்தில், பெண்களின் இடுப்பை பற்றி வர்ணித்து பலரின் கண்டனங்களுக்கு உள்ளானார். இப்படிப்பட்ட ஒருவரை, பாடநுால் நிறுவனத்துக்கு தலைவராக நியமித்தால் கல்வித் துறையின் நிலை என்னவாகும்? பாடநுால் நிறுவனத்தின் பணி, அறிவை வளர்க்கும் புத்தகங்களை தயாரிப்பது. புதிதாக பொறுப்பேற்றுள்ள லியோனி, ‘பாட புத்தகங்களில் இடம்பெற்றுள்ள ‘மத்திய அரசு’ என்ற…
Read More









